ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்!

Go down

 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Empty நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்!

Post by சிவா Sat Aug 07, 2010 9:11 am

ஒரு முதியவருக்கு மூன்று மகன்கள்.​ மூத்தவர்கள் இருவரும் திறமைசாலிகள்.​ அவர்கள்,​​ இளையவன் சிவாவை முட்டாளாகக் கருதினர்.​ ஏனெனில்,​​ அவன் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவன்.​ மற்றவர்களின் துயரத்தைத் தன் துயரம்போல் கருதி அதைத் துடைக்கப் பாடுபடுபவன்.​ இப்படிப்பட்ட ​ "முட்டாளுடன்' வாழ முடியாது என்று மூத்த மகன்கள் இருவரும் அவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள்.

மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல்,​​ தொலைவில் வாழ்ந்த ஒரு துறவியிடம் அறிவுரை பெறவேண்டும் என்று சிவா புறப்பட்டான்.​ ஒரு பிரதேசத்தை அடைந்தபோது,​​ அங்குள்ள மக்களும்,​​ கால்நடைகளும் மிகவும் பலவீனமாய் இருப்பதைக் கண்டான்.​ அந்த மக்கள் ""எங்கள் நீரோடை வற்றிப் பல நாட்களாகிவிட்டன.​ நாங்கள் நீரின்றி வாடுகிறோம்.​ எங்களுக்கு உதவி செய்!'' என்று சிவாவிடம் முறையிட்டனர்.​ ​

அங்கிருந்து புறப்பட்ட சிவா,​​ குன்றின் மீது இருந்த ஒரு குகையை அடைந்தான்.​ அங்கே ஒரு முதியவளும்,​​ ஒரு இளம் பெண்ணும் இருந்தார்கள்.​ இளம் பெண் கண் தெரியாமல் துன்பப்படுவதாகச் சொன்னாள் முதியவள்.​ பிறகு சிவா,​​ ஏழு நாட்கள் பயணம் செய்து, துறவி வசித்து வந்த குகைக்குப் போய்ச் சேர்ந்தான்.

அவனைப் பார்த்த உடனே,​​ வந்த காரணத்தைக் கேட்டார் துறவி.​ நீரோடை வற்றிப்போனதால் மக்கள் படும் துன்பத்தையும்,​​ இளம் பெண் கண் பார்வையின்றி அனுபவிக்கும் வேதனையையும் சிவா சொன்னான்.​ துறவி சொன்னார்:​ ""நீரோடை உற்பத்தியாகும் இடத்திற்குச் சென்றால்,​​ என்ன பிரச்னை என்று தெரிந்துகொள்ளலாம்.​ அந்தக் குருட்டுப் பெண் பார்வை பெற வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பத்தோடு யாரேனும் அவள் விழிகளைத் தொட்டால், அவள் பார்வை பெற்றுவிடுவாள்.​ ஆனால்,​​ நாளை சூரியன் மறைவதற்குள் இவையெல்லாம் நடக்க வேண்டும்.​ இல்லையென்றால் அவர்கள் நிலை என்றுமே மாறாது.''

ஒரே நாளில் எப்படி அவ்வளவு தூரம் செல்வது?​ சிவா திகைத்து நின்றான்.​ அவனுக்கு உதவி செய்ய நினைத்த துறவி,​​ தன் கையை அசைத்தார்.​ உடனே அங்கே ஒரு அற்புதமான குதிரை தோன்றியது.​ துறவிக்கு நன்றி சொல்லிவிட்டு,​​ சிவா குதிரையில் ஏறி விரைந்தான்.​ தன் பிரச்னைக்கு துறவியிடம் ஆலோசனை பெறவில்லையே என்று அவனுக்கு நினைவு வந்தது.​ ஆயினும் இதற்காக மீண்டும் துறவியிடம் சென்றால்,​​ மற்றவர்களின் பிரச்னைகளை உரிய நேரத்தில் தீர்க்க முடியாது என்றும் அவனுக்குத் தெரிந்தது.​ எனவே அவன் முன்னோக்கி மின்னல் வேகத்தில் விரைந்தான்.

விரைவிலேயே, குன்றின் மீது வசித்து வந்த முதியவளையும் இளம் பெண்ணையும் அடைந்தான்.​ அந்தப் பெண்,​​ கண்பார்வை பெற வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பத்துடன் சிவா அவள் விழிகளைத் தொட்டான்.​ உடனே அந்தப் பெண்,​​ ""இப்போது எனக்குக் கண் தெரிகிறது.​ எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க முடிகிறது.'' என்று மகிழ்ச்சிக் கூச்சலிட்டாள்.​ பிறகு சிவா,​​ நீரோடை வற்றிய பிரதேசத்தை நோக்கிப் பாய்ந்து சென்றான்.

அங்கே நீரின்றி நலிந்த மக்கள் இறக்கும் நிலையில் இருந்தனர்.​ உடனே சிவா,​​ நீரோடை உருவாகும் இடத்திற்குச் சென்றான்.​ அங்கே ஒரு பெரிய யானை,​​ தும்பிக்கையை நீட்டி நீர் வரும் வழியைத் தடுத்துக்கொண்டிருந்தது.​ தும்பிக்கையை அவன் தூக்கி நகர்த்தினான்.​ உடனே தண்ணீர் பாய்ந்து சென்றது.​ மக்களெல்லாம் மகிழ்ந்தார்கள்.​ ​

சிவா வீட்டை விட்டுச் சென்றதற்கு,​​ அவன் சகோதரர்கள்தான் காரணம் என்று அறிந்துகொண்டார் சிவாவின் அப்பா.​ சிவா செய்த நற்செயல்களை மக்கள் புகழ்ந்து பேசுவதையும் அவர் கேள்விப்பட்டார்.​ அவர் தன் மூத்த மகன்களை அழைத்துக் கண்டித்தார்:​ ""நீங்கள் சென்று எங்கிருந்தாலும் உங்கள் தம்பியை அழைத்துக்கொண்டு வாருங்கள்.​ மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவே மனிதர்கள் பிறக்கிறார்கள்.​ தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக அல்ல.'' ​ ​ ​ ​


 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum