ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலாட்டு

+3
kalaimoon70
பிளேடு பக்கிரி
சிவா
7 posters

Go down

தாலாட்டு Empty தாலாட்டு

Post by சிவா Thu Aug 05, 2010 1:29 pm

ஏட்டு இலக்கியங்களுக்கெல்லாம் தாய்மை இலக்கியமாகத் திகழ்வது வாய்மொழி இலக்கியம் இதனை "எழுதாக் கிளவி" என்பர். நாட்டுப்புறப் பாடல்கள் எளிமையானவை, இனிமையானவை. வாயில், பிறந்து செவிகளில் உலவி, காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவை. இது நாட்டுப்புற மக்களின் சொத்து. இந்த இலக்கியம் என்று பிறந்தது எவரால் பிறந்தது என எடுத்துச் சொல்ல இயலாத பண்பும் பாங்கும் கொண்டவை.

"ஏட்டிலே எழுதவில்லை
எழுதிநான் படிக்கவில்லை
வாயிலே வந்தபடி
வகையுடனே நான் படிப்பேன்"


என்ற வரிகள் இதனை மெய்ப்பிக்கும். நாட்டுப்புறப் பாடல்கள் பல வகைகளில் இருந்தாலும் தாலாட்டுக்கென்று தனிச் சிறப்பு உண்டு. தாயன்பின் வெளிப்பாடாகத் திகழும் தாலாட்டுப்பற்றி இவண் காண்போம்.

சொல் விளக்கம்:-

தாலாட்டு என்ற இப்பெயர் காரணம் பற்றி அமைந்ததாகும் "தால்" என்றால் நாக்கு "ஆட்டுதல்" என்பது அசைத்தல், நாவினை அசைத்து, சுழித்து, குரவையிட்டு, ஆட்டிப் பாடுவதால் தால்+ஆட்டு=தாலாட்டு எனப் பெயர் பெற்றது. அதனைத் தொடர்ந்து இசைக்கும் பாடலையும் தாலாட்டு என்கிறோம்.

இதனை தாலாட்டு, ஓராட்டு எனத் தாய்மார்கள் வழங்கினாலும் இத் தாலாட்டுப் பாடல்களைத் தலைமையாகக் கொண்டு எழுந்த இடைக்கால இலக்கியங்கள் "தாராட்டு" என்றும் பிள்ளைத்தமிழ் நூல்கள் "தாலேலோ" என்றும் குறிப்பிடுகின்றன.

தாலாட்டின் அளவும், பண்ணும்:-


தாயின் அன்பு வெளிப்பாடே தாலாட்டு. அவர்கள் தங்கள் மனத்தின் பாரங்களான மகிழ்ச்சி, துக்கம் இவைகளை வெளிப்படுத்த தாலாட்டு அவர்களுக்கு ஒரு ஊடகமாகப் பயன்படுகிறது. தாலாட்டுப் பாடல்கள் குறிப்பிட்ட கடவுளையோ, உறவினரையோ, பாடவேண்டும் என்ற வரையறை இல்லை. தாயின் மன இயல்புக்கு ஏற்றவாறும், குழந்தையின் உறக்கத்திற்கு ஏற்றவாறும் தாலாட்டின் அளவும், ஓசையும் கூடுதலும் குறைதலும் உண்டு.

தாலாட்டின் பண் "நீலாம்பரி" என்று கூறுவார்கள். தாலாட்டுப் பாடும் பெண்கள், ஒரே பண்ணிலே பாடுவது இல்லை ஒவ்வொருவருடைய பேச்சு ஒலிக்கு ஏற்பவும் மாறுபாடு அடைவதுண்டு. இவ்வாறே பல்வேறு விதமாகத் தாலாட்டின் அளவும் பண்ணும் அமைந்துள்ளன.

குழந்தைப் பேறு:-

ஒரு பெண் முழுமையடைவது தாய்மை அடைந்தபிறகுதான் என்பர். அத்தகைய சிறப்பிற்குத் தன்னை ஆளாக்கிய குழந்தையின்மீது தாய் அளவுகடந்த அன்பு பாராட்டுகிறாள். அதனால் ஒரு குழந்தையின் சிறப்பு என்ன என்று சொல்ல நினைத்த வள்ளுவன்

"குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்"


என்ற ஒரு குழந்தையின் மழலைப் பேச்சு என்பது இனிமையாக ஒலிக்கக் கூடிய குழலும், யாழும் கூட ஒரு குழந்தையின் மழலையின் இனிமைக்கு ஈடாகா என உரைக்கிறார். குழந்தைப் பேற்றுக்காக எவ்வாறெல்லாம் கடவுளை வேண்டுகிறாள் என்பதை

"அரசே உனை வேண்டி
ஆடாத தீர்த்த மில்லை
பொருளே உனை வேண்டி
போகாத கோயிலில்லை"


எனத் தொடங்கி ஆடிய தீர்த்தங்களையும் பாடல் வரிகளாக உரைக்கும் விதத்தில் குழந்தைப் பேற்றின் அவசியத்தையும் தான் தாலாட்டுகின்ற அந்தக் குழந்தைப் பேற்றிற்காக அவள் பட்ட துன்பங்களைத் தாலாட்டின் வாயிலாகவே உரைக்கிறாள்.

தாலாட்டில் ஏழ்மை:-


எல்லாத் தாயும் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் சிறப்போடு வளர்க்க வேண்டும் என்று எண்ணுகிறாள். ஆனால் அவளின் ஏழ்மை நிலை அவளின் ஆசையைக் செயலாற்ற முடியாத நிலை ஏற்படும். தன் குழந்தையை ராஜ குமாரனாகவே கற்பனை செய்யும் தாயின் உள்ளம் சில வேளைகளில் ஏழ்மையின் தாக்குதலால் அதனைத் தாலாட்டின் போது வெளிப்படுத்துதலும் உண்டு.

"முத்துச் சிரிப்பழகா
முல்லைப்பூ பல்லழகா
வெத்துக் குடிசையிலே
விளையாட வந்தாயோ?
ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே
தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ
தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ
பச்சரிசி சோளம்
பாதிநாள் பட்டினிதான்
பசும்பால் கொடுத்துந்தன்
பசி தீர்க்கப் பார்த்தாலும்
பருத்திவிதை இல்லையடா
பசு பாலை தரலையடா
பிள்ளைப்பால் ஊட்டியுனைப்
போசனைகள் செய்திடவே
கொள்ளையுத்தம் பஞ்சங்
குரங்காகிப் போனேண்டா"


என தன் ஏழ்மையின் தாக்கத்தைத் தாலாட்டில் வெளிப்படுத்துகிறாள். உள்ளத்துத் துன்பம் தாங்கவியலாத நிலையில் அதனை எடுத்துப் புறத்தே சொல்லுவது ஆறுதல் பெறும் வழியாகும் என்ற மனவியலே இதற்கடிப்படையாகும்.

தாலாட்டில் கற்பனை:-


குழந்தையைத் தாலாட்டும்போது பல்வேறு வகையாகக் கற்பனை செய்து தாலாட்டுவது இயல்பு அவ்வகையில் இயைபுக் கற்பனையும், மிகைக்கற்பனையும் உண்டு. மனம் உணரும் உணர்ச்சியில் மிகை தோன்றி வளரும், கற்பனையை மிகைக் கற்பனை என்பர். குழந்தை அழும் கண்ணீர் ஆறாகப் பெருகி அதில் முந்நூறுபேர் குளித்தனர். ஐநூறு பேர் கைகழுவினர். அதன்பிறகு அது குளத்தை நிறைத்து, வாய்க்கால் வழியோடி, வழிப்போக்கர் வருத்தம் தீர்த்தது, இஞ்சி, இருவாட்சி, மஞ்சள், மருதாணி, தாழைகட்குப் பாய்ந்து வாழைக் கொல்லையில் வற்றுவதாக அந்தக் கற்பனை அமைந்திருக்கும்.

தாலாட்டில் உறவினர்:-


பெண் திருமணமாகி கணவன் வீடு சென்றாலும் தன் தாய்வீட்டின் பற்று சிறிது அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகக் குழந்தையைத் தாலாட்டும் போது தன் பிறந்தவர்களின் பெருமையை உரைக்கும் விதத்தில் நாட்டுப்புற இலக்கியத்தில் பல்வேறு வகையான பாடல்கள் வழங்கி வருகின்றன.

"வெள்ளியால் செய்த ஏட்டில்
வைர எழுத்தாணி கொண்டெழுத
பள்ளியில் சேர்க்க மாமன்
பணிவுடன் வந்திடுவான்"


என்ற பாடலில் ஒரு குழந்தைக்குக் கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு, மாமனின் உதவி உரைக்கப்படுகிறது.

குழந்தையை உறங்க வைக்க மட்டும் தாலாட்டு என்ற இந்த நாட்டுப்புற இலக்கியவகை உதவாமல் அக்குழந்தைக்கு முதலில் இசையின் பெருமையை உணர்த்தியும் வளரும் பருவத்தே எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்பதைச் சொல்லும் விதத்திலும், கல்வியின் சிறப்பை உணர்த்தும் பாடல்களும், உறவின் பெருமைகளைச் சொல்லும் பாடல்களும் சமுதாயச் சிர்கேடுகள் சொல்லும் பாடல்களும் எனப் பல்வேறு பொருள்களில் இந்தத் தாலாட்டு எனும் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றிருக்கிறது.

முனைவர் அரங்க. அன்பில்நாதன்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாலாட்டு Empty Re: தாலாட்டு

Post by பிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 1:49 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தாலாட்டு Empty Re: தாலாட்டு

Post by kalaimoon70 Thu Aug 05, 2010 2:06 pm

அறிய தந்தமைக்கு நன்றி தலை ......


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தாலாட்டு Empty Re: தாலாட்டு

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Aug 05, 2010 2:13 pm

இலக்கிய சான்றுகளுடன், நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் ஒரு நல்ல தகவல். நன்றி நண்பரே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

தாலாட்டு Empty Re: தாலாட்டு

Post by சபீர் Thu Aug 05, 2010 2:30 pm

Kaa Na Kalyanasundaram wrote:இலக்கிய சான்றுகளுடன், நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் ஒரு நல்ல தகவல். நன்றி நண்பரே.
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தாலாட்டு Empty Re: தாலாட்டு

Post by உமா Thu Aug 05, 2010 2:34 pm

நன்றி மகிழ்ச்சி அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தாலாட்டு Empty Re: தாலாட்டு

Post by மஞ்சுபாஷிணி Thu Aug 05, 2010 2:41 pm

தாலாட்டு தந்த சுகத்தில்
குழந்தைகள் நிம்மதியாய் உறக்கத்தில்....

அழகிய பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தாலாட்டு Empty Re: தாலாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum