ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.

Go down

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Empty அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.

Post by balagkkl Tue Jul 21, 2009 12:10 pm

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.

சுவாமி சரவணானந்தா.

54. தாயினும் தயவான்ற சபை



    1. ஈன்ற நற்றாயினும் இனிய பெருந்தய
    2. வான்றசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி


(உ-வி) உலகில் நற்றாய் என்று பெற்ற அன்னையையும், செவிலித்தாய் என்று வளர்ப்பவளையும் குறிப்பர். ஏனெனில் ஈன்ற என்ற சொல்லே முன் வந்து, பெற்ற என்ற பொருளை வழங்கி நிற்கின்றதால், நற்றாய் என்பதில் நல் என்ற பகுதிக்கு நன்மை என்ற பண்பு குறிப்பதாய் இருக்கின்றது. ஈன்றவள் சிறப்புமிக்க நல்லவளாக இருக்க வேண்டுமென்பது உணர்த்தப் பெறுகின்றோம். இவ்வுலகில், ஈன்றவள் பொல்லாதவளாய் இருக்கவும் காண்கிறோம். அது போலல்லாது நற்குண சீலமிக்க அன்னையையே குறிக்க இங்கு இந்த நற்றாய் வந்துள்ளதாம். அந்த நல்ல பெற்றவளை விட எவ்வளவோ அதிகமான தயவு நிரம்பியவர் நம் கடவுள் என்பதைக் கூற இக் குறிப்பு முன் வழங்கப்பட்டுள்ளதாம். அன்னையிலும் தயவுடையாய் என்று ஆண்டவரைத் துதிக்கின்றவர் அடியார்கள்.

கடவுள் தயவு எல்லை கடந்தது, பெருமை மிக்கது. பேரின்பமே பயப்பது. உடலீன்ற அன்னைக்குப் பாசம் அல்லது பற்று காரணமாகத் தன் குழந்தையிடத்து அன்பு ஏற்படும். இத்தாய் அன்பு அல்லது தயவு, கடவுள் தயவுக்கு எவ்வளவோ அற்பமானது. கடவுளே ஆன்மாவுக்குத் தேவையான உயிரையும், உடலையும் போகப் பொருள்களையும் தடையறாது உதவிப் பக்குவப்படுத்தி மெய்யின்ப வாழ்வையே வழங்கி விடுகின்றார். இதனால் அந்தக் கடவுள் செயலின் ஒரு கூறே ஒருவனுக்கு உடலின் அன்னையாய்த் தோன்றி, ஏகதேச அன்பைக் காட்டி ஒருவாறு சிலகாலம் வளர்த்துச் செல்கின்றதுமாம். ஆதலின் ஈன்ற தாயின் அந்தச் சிறதளவு தயவுகூட நம் பதியின் ஏகதேச வெளியீடே என்று அறிகின்றோம்.

ஆகவே கடவுளர் தயவு ஒன்றே நிறைவுடையது எனவும், அது இனியதும், பெரியதும் உள்ளும் புறமும் நீங்காதிருந்து வாழ்விப்பதும் என்று உணரப்படும். ஆன்ற என்பது அகன்ற, விசாலமான எனவும், அடங்கிய தெனவும் பொருளாம். அதாவது கடவுள் தயவு உண்மை, அகண்டவெளி முழுவதும் நிரம்பியுள்ளது என்பதையும், அம்முழுத் தன்மையும் ஆன்ம சிற்றணுவிடத்தே அடங்கியிருந்து, பக்குவத்தே அனுபவப்படுகின்றது என்பதையும் குறிக்கின்றதாம். நமது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர், அவர் அச் சிற்சபையில் சுத்த தயவு வண்ணமாக வெளிப்பட்டிலங்க உள்ளதுதான் இன்று நாம் காணும் புதுமையாம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் தயவும்
அகண்ட வெளிநிறை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கும் பூரணமாயுள்ளவர். ஒவ்வொரு அணுவிலிருந்தும் பரிபூரண அனுபவம் வெளிப்படத் திகழ்கின்றவராவர். அந்த அருட்பெருஞ் ஜோதியையே நம் சிற்றம்பலத்தே இன்று கண்டு கொள்ளுகிறோம். இப்போது அவ்வாண்டவர் அனுபவம் தயவாக விளங்குவதை இங்கு காணலாகின்றது. நமது ஆன்ம சிற்சபையே யகர வண்ணமானதாம். இந்த யகரான்மாவின் அகத்தும் புறத்தும் தகராகாசக்கடவுள் விளக்கமும், வுகரத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ள உயிர் உடல் வண்ணமுமாக உள்ளதால் தயவு என்பதுதான் நமக்குக் கடவுள். இதுவே கடவுள் அனுபவத்தை உணர்த்தவந்ததாய்ச் சிற்சபையிலிருந்து தெளிவு பெறலாகின்றதாம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மை, சுத்த சன்மார்க்கியின் அனுபவத்தில் உள்ளும் புறமும் நிரம்பிய சுத்த தயவு மயமாகவே திகழ்கின்றதை இன்று காண்கிறோம். கடவுள் தயவின் பெருமை என்னே! இவ்விறை தயவு உண்மையை அறிந்து கொள்ளும்போது இறை பரம்பொருளை இச் சொல்லுக்குரிய அனுபவப் பொருளாகத் தெளியலாகின்றது. இத்தெளிவு பெறாது காலத்து, தயவு என்ற சொல்லுக்கு, அன்பு, கருணை, இரக்கம், கிருபை என்றெல்லாம் புனைப் பொருள்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றான் மனிதன். இது முதல் நாம் நமது அருட்பெருஞ் ஜோதி சிற்சபையிலிருந்து தயவு வண்ணமாகக் கடவுளை உணர்ந்தும், போற்றியும் அடைந்தும் பேரின்பமுறுவோமாக.

நன்றி : http://www.vallalarspace.com/
புன்னகை புன்னகை புன்னகை
balagkkl
balagkkl
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum