ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்

5 posters

Go down

ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர் Empty ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்

Post by ரபீக் Tue Aug 03, 2010 10:44 am

தனது வேலையைப் பார்ப்பதற்காக ஒரு ஆசிரியையை சட்டவிரோதமாக நியமித்து அவர் மூலம் பாடம் நடத்தி வந்துள்ளார் ஒரு உதவித் தலைமை ஆசிரியர்.

ஆசிரியர் பணி புனிதமானது என்பார்கள். அப்படித்தான் அந்தக் காலத்து ஆசிரியர்கள் கருதினார்கள், பணியாற்றினார்கள். ஆனால் இன்று ஆசிரியர்களைப் பார்த்து பொதுமக்கள் நக்கலாக சிரிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகள்தான்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் இப்படித்தான் ஒரு உதவித் தலைமை ஆசிரியர் தனது வேலையை தான் செய்யாமல், இன்னொரு ஆளைப் போட்டு செய்து பெரும் மோசடி செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கோபி நகரசபை ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 490 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு வணிகவியல் ஆசிரியராக கடந்த 31 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் வேலுச்சாமி. இவர் உதவி தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

ஆசிரியர் வேலுச்சாமி தினமும் பள்ளிக்கூடத்துக்கு வந்து வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டு விட்டு வீட்டுக்குப் போய் விடுவாராம். அதை விடக் கொடுமையாக, லதா என்ற ஆசிரியை ஒருவரை நியமித்து தனக்கு பதிலாக அவர் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார்.

இதுகுறித்துத் தகவல் கிடைத்தவுடன், அந்தப் பள்ளிக்கு ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொன்குமார் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, ஆசிரிய-ஆசிரியைகளின் வருகை பதிவேட்டை அவர் ஆய்வு செய்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.எம்.நடராஜமூர்த்தி மற்றும் பள்ளிக்கூட ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். மாணவர்களின் நோட்டுப்புத்தகத்தை வாங்கிப் பார்த்தார்.

நோட்டுப் புத்தகத்தில், ஆசிரியர் வேலுச்சாமிக்கு பதிலாக பெண் ஆசிரியை லதா கையெழுத்து போட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த நோட்டுக்களை முதன்மை கல்வி அதிகாரி கைப்பற்றினார்.

தலைமை ஆசிரியர் வி.எம்.நடராஜமூர்த்தி மற்றும் மாணவ-மாணவிகளிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கி கொண்டார்.

இதுகுறித்து பொன் குமார் கூறுகையில், கோபி நகரசபை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் வணிகவியல் ஆசிரியரும், உதவி தலைமை ஆசிரியருமான வேலுச்சாமி என்பவர் தனக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியையை நியமித்து பாடம் நடத்துவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தது. அதன்பேரில், விசாரணை நடத்தப்பட்டது.

மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களுக்கு வணிகவியல் பாடத்தை நடத்துவது லதா என்ற ஆசிரியைதான் என்று மாணவர்கள் கூறினார்கள்.

நான் பள்ளிக்கூடத்துக்கு விசாரணை நடத்த சென்ற போது, ஆசிரியர் வேலுச்சாமிக்கு வகுப்பு இருந்தது. ஆனால், அவர் வகுப்பில் பாடம் நடத்தாமல் தலைமை ஆசிரியரின் அறையில் இருந்தார். அவருக்கு பதிலாக ஆசிரியை லதா என்பவர் பாடம் நடத்தி உள்ளார். நான் சென்றதும், அவர் வகுப்பை விட்டு வெளியே தப்பி ஓடி விட்டார்.

எனவே, ஆசிரியர் வேலுச்சாமி தானாகவே ஆசிரியையை நியமித்து கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். எனவே, இந்த சம்பவத்துக்கும், அவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.

கோபி கல்வி மாவட்ட அதிகாரியின் விசாரணை அறிக்கை வந்தவுடன் ஆசிரியர் வேலுச்சாமியின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

அவுட்சோர்சிங் ரேஞ்சுக்கு ஆசிரியர்கள் போயிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர் Empty Re: ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்

Post by அருண் Tue Aug 03, 2010 10:55 am

ஆசிரியர் பணி கிடைக்கலன்னு மக்கள் பலர் உள்ளனர் அப்படி இருந்தும் பதவி ய வைத்து கோல்மால் பண்ணி உள்ளார் உடனே வேலைவிட்டு தூக்க வேண்டும்.....
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர் Empty Re: ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்

Post by ராஜா Tue Aug 03, 2010 10:57 am

ரபீக் wrote: தனது வேலையைப் பார்ப்பதற்காக ஒரு ஆசிரியையை சட்டவிரோதமாக நியமித்து அவர் மூலம் பாடம் நடத்தி வந்துள்ளார் ஒரு உதவித் தலைமை ஆசிரியர்.
அவுட்சோர்சிங் ரேஞ்சுக்கு ஆசிரியர்கள் போயிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
என்னப்பா இது கொடுமை , இதே அவுட்சோர்ஸிங் வேலையை அமெரிக்கா காரன் நமக்கு கொடுத்தா சந்தோஷமா செய்யுறோம் , நம்ம ஊரு ஆளு செஞ்சா சட்டவிரோதம்ன்னு சொல்லுறோம் . ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர் 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர் Empty Re: ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்

Post by நவீன் Tue Aug 03, 2010 12:30 pm

ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர் 56667 ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர் 56667 ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர் 56667 ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர் 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர் Empty Re: ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்

Post by தஞ்சை.முரளி Tue Aug 03, 2010 12:43 pm

இந்த மாதிரி ஆளுங்களுக்கு சரியான பாடம் புகட்ட வேணும்...... என்ன பண்ணலாம்னு எல்லருமா சொல்லுங்க......
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர் Empty Re: ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாடம் சொல்லி தர ஒலி பெருக்கியை பயன்படுத்திய தலைமை ஆசிரியர்
» சுகாதாரமே எனது முதல் பாடம்: பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர் கில்பர்ட்
» ஆசிரியையை கொல்ல மாணவனை ஏவிய உதவி தலைமை ஆசிரியர் கைது
» காரைக்குடி அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதால் தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum