ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Poll_c10ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Poll_m10ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Poll_c10 
VENKUSADAS
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Poll_c10ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Poll_m10ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Poll_c10ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Poll_m10ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Poll_c10 
VENKUSADAS
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Poll_c10ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Poll_m10ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி

3 posters

Go down

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Empty ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி

Post by ரபீக் Tue Aug 03, 2010 10:40 am

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும். கோப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோவையில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,

இங்கு அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழா பெரும் சீரும் சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த தகவல் தொழில் நுட்ப பூங்கா உருவாவதற்கு நான் தான் காரணம் என்று இங்கு பேசியவர்கள் கூறினார்கள்.

முரசொலி மாறன்தான் காரணம்

ஆனால் 1988-1989-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நான் வரவு-செலவு திட்டத்தை பேரவையில் வைத்த போது டெல்லியிலிருந்து முரசொலி மாறன் தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும் தொடர்பு கொண்டு தகவல் தொழில் நுட்ப கொள்கை வகுத்தல் பற்றிய அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்பேரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொள்கை அறிவிக்கப்பட்டது. அதை இந்த நேரத்தில் நான் நினைவு கொள்கிறேன்.

தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பபூங்கா அமைவதற்கு காரண கர்த்தாவாக விளங்கியவர் மறைந்து முரசொலி மாறன் தான். இது போன்ற தகவல் தொழில்நுட்ப பூங்கா சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் வளர வேண்டும். இந்தியா முழுவதும் தகவல் தொழில்நுட்பபூங்காக்கள் வளர்ந்து உள்ளன. அவரை நான் இந்த நேரத்தில் நினைவில் கொள்கிறேன். இந்தியா முழுவதும் தகவல் தொழில்நுட்ப பூங்கா தற்போது வளர்ந்து வருகிறது.

என்னை வளர்த்த நகரம் கோவை

கோவை எனக்கு புதிது அல்ல. கடந்த 1947-ம் ஆண்டிலேயே கோவை நகரில் நான் வளர்ந்தவன். கோவை என்னை வளர்த்து ஆளாக்கிய நகரம். திரைப்படத்துறை மூலமாகவும் எனக்கு கோவையுடன் தொடர்பு உண்டு. அந்த வகையில் கோவையில் உள்ளவர்களுக்கு நான் சொந்தக்காரன் தான். கோவைக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் அப்போதே நினைத்திருந்தேன்.

பஞ்சாப் மாநில முதல்-அமைச்சராக இருந்த குர்னால் சிங் என்னை அந்த மாநிலத்துக்கு அழைத்திருந்தார். அப்போது நான் அங்கு சென்று பஞ்சாப் மாநிலத்தில் அமைந்திருந்த விவசாய பல்கலைக்கழகத்தை பார்த்தேன். அதை பார்த்து விட்டு அது போன்ற விவசாய பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது என் நினைவுக்கு வந்தது கோவை தான். அதன்பேரில் தான் கோவையில் விவசாய பல்கலைக்கழகம் அமைத்தேன். அந்த பல்கலைக்கழக மாணவிகள் தர்மபுரியில் சுற்றி பார்க்க சென்ற போது எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

கோவை என்னை வளர்த்து ஆளாக்கிய நகரம் ஆகும். எனக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்தது கோவை தான். கோவையில் டைடல் பார்க்கை திறந்து வைத்தது எனது கடமைகளில் ஒன்று. உலகம் போற்றும் வகையில் கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.

இங்கு பேசிய தகவல் தொழில்துறை முதன்மை செயலாளர் தமிழில் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் பேசினார். அது செம்மொழி மாநாடு தந்த ஊக்கம் ஆகும். இங்கு நான், துணை முதல்வர், தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் இருக்கும் போது தமிழில் பேசாமல் வேறு மொழியில் பேசினால் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்தில் அவர் தமிழில் பேசினார்.

ஆனால் அவர் பேசிய தமிழை பார்த்து மாணவர்கள் வேறு விதமான கைதட்டினார்கள். எனவே தான் நான் அவரை காப்பாற்றுவதற்காக உங்கள் மொழியிலேயே பேசுங்கள் என்று கூறினேன். தமிழை கொல்வதற்கு வேறு ஆள் யாராக வருவார்கள். எனவே நீங்கள் உங்கள் மொழியிலேயே பேசுங்கள் என்று நான் தான் கூறினேன்.

தமிழில் பேச முயற்சியுங்கள்

ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் நீங்கள் வேறு மொழிகளில் பேசினால் பரவாயில்லை. எல்லா நிகழ்ச்சிகளிலுமே வேறு மொழியில் பேசலாம் என்று நினைக்காதீர்கள். இது போன்று ஒவ்வொரு விழாவிலும் நீங்கள் முயற்சி செய்யுங்கள். தொடர்ந்து முயற்சி செய்து தமிழில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதிகாரிகள் மேடையில் தமிழில் பேசி அரசின் திட்டங்களை மக்களிடம் எளிதாக கொண்டு செல்ல வேண்டும்.

இங்கு தலைமை செயலாளர் இருக்கிறார். எல்லா கோப்புகளும் தமிழில் வருகிறது என்றாலும் ஒன்றிரண்டு கோப்புகள் ஆங்கிலத்தில் வருகிறது. அந்த நிலை மாறி இனி எல்லா கோப்புகளும் தமிழில் தான் இருக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமல்லாமல் யாராக இருந்தாலும் இனி தமிழில் பேச வேண்டும். அதற்கேற்ப தமிழில் பேச பழகி கொள்ள வேண்டும்.

செம்மொழி மாநாட்டுக்குப் பலன் இல்லாமல் போய் விடும்

செம்மொழி மாநாட்டுக்கு பிறகாவது அதிகாரிகள் தமிழில் பேச தயக்கம் கொள்ள வேண்டாம். அகில இந்திய பணிகளில் தேறும் அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வந்தால் அவர்கள் ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசுவது தமிழ் மொழிக்கு நல்லது அல்ல. இல்லையென்றால் எத்தனை தமிழ் மாநாடுகள் நடத்தினாலும் பலன் இல்லாமல் போய்விடும். கூடுமானவரை அதிகாரிகள் தமிழில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பபூங்கா பற்றி இங்கு பேசியவர்கள் நிறைய விளக்கி இருக்கிறார்கள். இந்த பூங்கா மேலும் வளர வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பு இல்லை என்ற தொல்லை ஒழியட்டும். சென்னை தரமணியில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் டைடல் பார்க்கை திறந்து வைத்தார். அதன் பின்னர் இப்போது கோவையில் தகவல் தொழில்நுட்பபூங்கா திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளதை நான் பெருமையாக கருதுகிறேன் என்றார் கருணாநிதி.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Empty Re: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி

Post by நவீன் Tue Aug 03, 2010 12:33 pm

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Empty Re: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி

Post by ரபீக் Tue Aug 03, 2010 12:35 pm

இன்னும் நீ வாயை மூட‌ல‌யா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Empty Re: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி

Post by செந்தில் Tue Aug 03, 2010 12:40 pm

ஏன் தாத்தா இங்கிலிபீசு ஒன்னும் புரியலையா ? ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி 755837


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி Empty Re: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» தேர்தல் பணி: தமிழக ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தடையா?-நரேஷ் குப்தா மறுப்பு
» ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
»  சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 343 ஐஏஎஸ் அதிகாரிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum