Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 2:08 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 12:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
4 posters
Page 1 of 1
சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
சரித்திரத்தில் பெண்கள் எனும் மலாய் நூல் ஒன்று தட்டுபட்டது. 320 பக்கங்களை கொண்ட சிறிய புத்தகம் தான். இப்புத்தகத்தில் பல தகவல் பரிமாற்றங்கள் சிறப்பாக கொடுக்கப்பட்டிருந்தாலும், ஆண்கள் மீதான வெறுப்புணர்ச்சியை ஆசிரியர் ஆங்காங்கே காட்டியிருப்பதை போன்ற எண்ணமும் எழுகிறது.
'சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது. பெண்களின் உணர்ச்சிக்கு அங்கே இடமளிக்கப்படவில்லை.' ஒரு பகுதியில் ஆசிரியர் இப்படி எழுதி இருந்தார். பல சரித்திர சாதனை பெண்களை பற்றி எழுதிய அவர் எழுத்துகளுக்கு மறைவில் தென்படும் வெறுப்புணர்ச்சியின் காரணம் என்னவாக இருக்கும்.
சொந்த பிரச்சனையாக இருக்கலாம். சரித்திரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் கூட அதற்கு ஒரு காரணமாய் அமையலாம். சரித்திர ஏடுகளில் பெண்களுக்கு பல கொடுமைகளும் நிகழ்ந்திருக்கிறது. அதை பற்றிய தகவல்கள் சிலவற்றை இங்க கொடுக்க முயற்சிக்கிறேன்.
4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை ‘பாரோ’ என நாம் அழைப்போம். ‘பாரோ’ என்றால் ஆண்டவன் எனப் பொருள்படும். மன்னனை கடவுள் என ஏற்க மறுத்த பெண்ணை, பேழையில் வைத்துக் கொதிக்கும் நீரில் விட்டு, வேகவைத்துக் கொலை செய்தார்கள். தன்னைக் கடவுள் எனக் கருதும் ஒரு ஆணால் தண்டனைக் கொடுக்கப்பட்டு, மற்றொரு ஆணின் கையில் கொலையுண்டு போகிறாள் கொடூர முறையில்.
எகிப்திய சரித்திரத்தில் மீண்டும் இக்கொடுரம் ஏற்பட்டது. இம்முறை இரண்டாம் ராம்சேஸ் எகிப்திய ‘பாரோ’வாக இருக்கிறான். அவன் ஒரு கொடுங்கோலன். ராம்சேஸின் மனைவியான ‘ஆசியா’ அவனை எதிர்க்கும் பொருட்டு அவளுக்கு பல கொடுமைகளை விளைவிக்கிறான். ஆசியாவை சிறையெடுத்துக் கொடுமைச் செய்கிறான். கடைசியாக குத்துயிரும் கொலை உயிருமாய் இருந்த அவள் மார்பில் ஈட்டியை எய்தி கொல்கிறார்கள்.
மனிதனுக்கு சிந்தனைத் திறன் இருந்தும் அவன் உணர்ச்சிக்கே அதிகமாக இடம் கொடுக்கிறான்.நாம் நாகரீகத்தில் எவ்வளவோ வளர்ச்சியடைந்து இருப்பினும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளன. மனிதர்களிடையே பாசம், நேசம், அன்பு என அனைத்தும் குருட்டு நம்பிக்கைகளாகவே இருக்கின்றன.
நம் மூதாதைகளின் அணுக்களின் தாக்கம் இருப்பதாலோ என்னவோ நம்மில் இன்னமும் பழமையின் எண்ணக் கோடுகள் உள்ளன. ஆண்களிடையே இவள் பெண்தானே என நினைக்க வைக்கும் செற்ப எண்ணமும், பெண்களிடையே நாம் பெண்தானே என்ன செய்துவிட முடியும் எனும் தாழ்வு மனப்பான்மையும் காணப்படுகிறது.
'சரித்திரம் ஆண்களின் விந்தணுக்களால் எழுதப்பட்டது. பெண்களின் உணர்ச்சிக்கு அங்கே இடமளிக்கப்படவில்லை.' ஒரு பகுதியில் ஆசிரியர் இப்படி எழுதி இருந்தார். பல சரித்திர சாதனை பெண்களை பற்றி எழுதிய அவர் எழுத்துகளுக்கு மறைவில் தென்படும் வெறுப்புணர்ச்சியின் காரணம் என்னவாக இருக்கும்.
சொந்த பிரச்சனையாக இருக்கலாம். சரித்திரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் கூட அதற்கு ஒரு காரணமாய் அமையலாம். சரித்திர ஏடுகளில் பெண்களுக்கு பல கொடுமைகளும் நிகழ்ந்திருக்கிறது. அதை பற்றிய தகவல்கள் சிலவற்றை இங்க கொடுக்க முயற்சிக்கிறேன்.
4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை ‘பாரோ’ என நாம் அழைப்போம். ‘பாரோ’ என்றால் ஆண்டவன் எனப் பொருள்படும். மன்னனை கடவுள் என ஏற்க மறுத்த பெண்ணை, பேழையில் வைத்துக் கொதிக்கும் நீரில் விட்டு, வேகவைத்துக் கொலை செய்தார்கள். தன்னைக் கடவுள் எனக் கருதும் ஒரு ஆணால் தண்டனைக் கொடுக்கப்பட்டு, மற்றொரு ஆணின் கையில் கொலையுண்டு போகிறாள் கொடூர முறையில்.
எகிப்திய சரித்திரத்தில் மீண்டும் இக்கொடுரம் ஏற்பட்டது. இம்முறை இரண்டாம் ராம்சேஸ் எகிப்திய ‘பாரோ’வாக இருக்கிறான். அவன் ஒரு கொடுங்கோலன். ராம்சேஸின் மனைவியான ‘ஆசியா’ அவனை எதிர்க்கும் பொருட்டு அவளுக்கு பல கொடுமைகளை விளைவிக்கிறான். ஆசியாவை சிறையெடுத்துக் கொடுமைச் செய்கிறான். கடைசியாக குத்துயிரும் கொலை உயிருமாய் இருந்த அவள் மார்பில் ஈட்டியை எய்தி கொல்கிறார்கள்.
மனிதனுக்கு சிந்தனைத் திறன் இருந்தும் அவன் உணர்ச்சிக்கே அதிகமாக இடம் கொடுக்கிறான்.நாம் நாகரீகத்தில் எவ்வளவோ வளர்ச்சியடைந்து இருப்பினும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளன. மனிதர்களிடையே பாசம், நேசம், அன்பு என அனைத்தும் குருட்டு நம்பிக்கைகளாகவே இருக்கின்றன.
நம் மூதாதைகளின் அணுக்களின் தாக்கம் இருப்பதாலோ என்னவோ நம்மில் இன்னமும் பழமையின் எண்ணக் கோடுகள் உள்ளன. ஆண்களிடையே இவள் பெண்தானே என நினைக்க வைக்கும் செற்ப எண்ணமும், பெண்களிடையே நாம் பெண்தானே என்ன செய்துவிட முடியும் எனும் தாழ்வு மனப்பான்மையும் காணப்படுகிறது.
Last edited by sherin on Mon Jul 20, 2009 3:17 pm; edited 1 time in total
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
![சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!! Violence](https://2img.net/h/1.bp.blogspot.com/_78s09nohJVk/SJ_GsSgulnI/AAAAAAAAAUM/bHXQqo-An0s/s400/violence.jpg)
கிரேக்க நாகரீகத்தில் ஏறக் குறைய கி.மு 850 முதல் 480க்குள் பரவலாக நடந்த சம்பவம் உள்ளது. அக்காலகட்டத்தில் பெண் குழந்தைகளை கொலை செய்வது சாதாரண ஒன்றாக இருந்தது. ‘எதென்ஸ்’ மக்கள் பெண் என்பவளை ஒரு மதிப்பற்ற பொருளாகவே கருதினார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாகவும், குழந்தைகளை பெற்றுப் போடவும் மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள்.
கிரேக்கர்களின் பார்வையில், பெண்ணானவள் வீட்டு வேலை செய்பவளாகவும், திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்பவளாகவும் மட்டுமே தெரிந்தாள். கிரேக்க அரசாங்கமும் பெண்களை நாட்டின் சுமை எனக் கருதியது. இதற்கு காரணம் பெண்களால் போரிட முடியாமல் இருந்தது, அரசாங்கத்தை தேர்வு செய்ய ஓட்டு போடும் உரிமையும் பெண்களுக்கு இல்லை. இது போக சொத்துகளை வாரிசு வகிக்கும் தகுதியும் பெண்களுக்கு இல்லை. ‘டெல்பி’யில் இருந்த 6000 குடும்பங்களில் 1 சதவீகிதத்திற்கு குறைவான பெண்களே இருந்தார்கள்.
நபிகள் நாயகத்தின் தோன்றலுக்கு முன் அரேபிய மக்கள் பண்பினால் மிகவும் பின்தங்கி இருந்தார்கள். அவர்களை ஜாஹிலியா காலத்து மக்கள் எனக் கூறுவார்கள். ஜாஹிலியா காலத்து ஆண்கள் மிகக் கொடுரமானவர்களாகவும், ஒழுக்கங் கெட்டவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். பெண்களை தங்களது காம இச்சையை தீர்க்கும் போக பொருளாக பயன்படுத்தினார்கள்.
அவர்களின் உடல் பசியை தீர்த்துக் கொண்ட பின் அப்பெண்ணை அடித்துத் துன்புறுத்துவார்கள். பல இன்னல்களுக்குப் பிறகு அப்பெண்ணிற்கு மிக மலிவான பணத்தைக் கொடுப்பார்கள். அப்பணம் அவளது ஒருவேளை உணவை வாங்குவதற்கே போதுமானதாக இருக்கும். அடுத்த வேளை உணவுக்காக அவள் மீண்டும் ஆணை நோக்கி போவாள். உடலை விற்பனை செய்து, கூடவே வேதனைகளையும் வாங்கிக் கொண்டு பணம் புரட்டுவாள்.
தனது சந்ததியினர் இப்படிபட்ட இழி நிலையினால் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதையே பெற்றோர்களும் நினைப்பார்கள். அதனால் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்துவிடுவார்கள்.
கி.மு 580களில் சீன தேசம் ‘கம்பூசியஸ்’ மதத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. அக்காலகட்டத்தில் பெண்களை உயிருடன் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். நாட்டின் முக்கிய தலைவர்கள் இறந்து போவாராயின் அவர் மனைவியை புதைக்க மாட்டார்கள் மாறாக அப்பெண்ணின் தொப்புள் முதல் தொடை வரை இரும்பு கலசங்களைக் கொண்டு பூட்டிவிடுவார்கள். தனது வாழ்நாள் முடியும் வரை அப்பெண் மற்ற ஆடவரோடு எந்தத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை பொருட்டு இப்படி செய்வார்கள்.
Last edited by sherin on Mon Jul 20, 2009 3:18 pm; edited 1 time in total
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
![சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!! 4e](https://2img.net/h/2.bp.blogspot.com/_78s09nohJVk/SJ_Bee4LEwI/AAAAAAAAAT8/1hJRyM_NADs/s400/4e.jpg)
‘ஜேக் தீ ரீப்பர்’ பல மர்மக் கொலைகளை செய்த ஆசாமி. 19ஆம் நூற்றாண்டில் பிரிடானிய அரசாங்கத்திற்குத் தலைவலி கொடுத்ததில்லாமல் மக்களையும் பீதியில் ஆழ்த்தியவன். யார் இவன்? ‘ஜேக்’ விலைமாது பித்தன் என அறியப்பட்டான். இவனே நவீன சரித்திரத்தில் முதன் முதலாக பல மர்மக் கொலைகளை செய்தவனாகவும் கருதப்படுகிறான். பெண்களை அனுபவித்த பின் அவர்களின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக நறுக்கி போட்டுவிடுவான்.
இதனை அடுத்தாற் போல் ‘எட்வட் கெய்ன்’ என்பவனும் பெண்களுக்கெதிராக பல கொடூர கொலைகளை செய்திருக்கிறான். அவற்றுள் இரண்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவனது மர்மமான வாழ்வை அடிப்படையாகக் கொண்டு ‘தீ சைக்கோ’ மற்றும் ‘சைலன்ஸ் ஆப் தீ லேம்ப்’ எனும் இரு ஆங்கில படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது.
‘கேய்ன்’ இறந்த பெண்களை தோண்டி எடுத்து அவர்களின் உறுப்புகளை வெட்டி தனது அழகு சாதனமாக வைத்துக் கொள்வானாம். அவன் பிடிபட்ட சமயம் பெண்களின் மர்ம உறுப்புகளை கொண்டு அவன் உருவாக்கிய பல அழகு சாதனப் பொருட்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளார்கள். ஜேக் மற்றும் கேய்ன் இருவரும் பைத்தியக்காரர்களாக இருந்தாலும் அவர்களின் செயல்கள் பெண் வர்கத்தினருக்கு பெரும் கேடாகவே கருதப்படுகிறது.
முதல் மற்றும் இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் பெண்களின் நிலையை சற்று அலசி பார்த்தோமேயானால் சோகத்தின் சாயல் அங்கும் ஒட்டி இருப்பதைக் காணலாம். பெண்களின் நிலை கேவலப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் வேதனைப்படச் செய்கிறது. பல நூறு சீன, கொரிய மற்றும் பிலிபீன்ஸ் தேச பெண்கள் ஜப்பானிய இராணுவத்தின் காம பசிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் அதிகம் பாதிகப்பட்டது சீனர்களே. இதற்குக் காரணம் சீனர்கள் மீது ஜப்பானியர்களுக்கு இருந்த தனிபட்ட வீரோதமேயாகும்.
போரில் ஈடுபடுவது இராணுவமாக(ஆண்கள்) இருந்தாலும் அதில் பெரும் பாதிப்பு பெண்களுக்கே உரித்ததாய் அமைந்தது. பிள்ளைகளுடன் கைவிடபட்ட தாய் வறுமையில் வாடினாள். அப்படிபட்ட தாய்மார்கள் கொலையுண்ட போது அவர்களின் பிள்ளைகளும் தவிப்புக்குள்ளாகினர்.
1993ஆம் ஆண்டு போஸ்னியாவில் நிகழ்ந்த இன ஒழிப்புப் போர், ‘சேச்னீயயாவில் 1994ஆம் ஆண்டும் மற்றும் 1996ஆம் ஆண்டு ‘கோசோவோ’வில் நடந்த போர்களிலும் பெண்களே மிகவும் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் தான் என்ன? பெண்கள் அழிக்கப்பட்டால் சந்ததியனர் உருவாவதை தடுக்க முடியும் என்ற எண்ணமே முக்கிய காரணமாகும்.
![சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!! Girl](https://2img.net/h/2.bp.blogspot.com/_78s09nohJVk/SJ_HxzJ98UI/AAAAAAAAAUc/Fuew5WnTDpE/s400/girl.jpg)
Last edited by sherin on Mon Jul 20, 2009 3:16 pm; edited 1 time in total
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
இப்போர்களின் சமயம் பெண்கள் மீது வெடி குண்டெறிந்தார்கள், மாதமாய் இருந்தவர்களை உதைத்தார்கள், அவர்கள் வயிற்றைச் சுட்டும் வெட்டியும் கொன்று போட்டார்கள். உதாரணமாக போஸ்னிய போரின் போது பல போஸ்னிய பெண்களை சைபீரியர்கள் கற்பழித்தார்கள். பிறக்கும் குழந்தையின் உடலில் சைபீரியர்களின் இரத்தமும் கலந்திருக்க வேண்டும் என்ற இன வெறியே இதற்குக் காரணம்.
தமிழ் நாட்டில் சில கிராமப் பகுதிகளில் வரதட்சணை பிரச்சனை அதிகமாக இருந்தது. ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை கொலைசெய்துவிடுவார்கள். பிறக்கும் குழந்தைகளுக்கு விவசாய உரமோ அல்லது நெல் மணிகளோ கொடுப்பார்கள், முகத்தை ஈர துணியால் மூடிவிடுவார்கள், கழுத்தை நெறித்தும் அல்லது பசியால் வாட வைத்தும் சாக விட்டுவிடுவார்கள்.
சீன தேசத்தில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை எனும் சட்டம் அமல்படுத்தப்பட்ட போது பெண் சிசு கரு கலைப்பு அதிகம் நடந்தது. கருவிலேயே சாகடிக்கப்பட்ட சிசுவை சீன உணவகங்களுக்கு மருத்துவ உணவு செய்யும் பொருட்டு விற்பனை செய்துவிடுவது கொடுமையினும் கொடுமை.
2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாக்கிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் தனது சகோதரன் ஒரு உயர் ஜாதி பெண்ணுடன் ஓடி விட்டான் என்ற குற்றத்திற்காக முக்தார் எனப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணை உயர் ஜாதி ஆண்கள் பலர் ஒன்று கூடி கற்பழித்திருக்கிறார்கள்.
இப்படியாக சரித்திரம் தொட்டே பெண்களுக்கெதிரான கொடுமைச் செயல்கள் நடந்து வந்திருக்கிறது. இப்போது நவநாகரிக உலகில் நாம் வாழ்ந்து வந்தாலும் பாலியல் கொடுமைகள் ஆங்காங்கெ நடந்த வண்ணமே உள்ளன. மனதின் ஏதோ ஒரு மூலையில் லேசாக ஒட்டிய பயத்துடனே பெண்கள் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள் எனக் கூறினால் மிகையாகாது.
![சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!! Vaw7](https://2img.net/h/1.bp.blogspot.com/_78s09nohJVk/SJ_Bns5R67I/AAAAAAAAAUE/YnQ1QrjhVPQ/s400/vaw7.jpg)
பெண்களை பொம்மை எனக் கருதுவதை தவிர்க்க வேண்டும். அவர்களும் உலக வாழ்க்கையின் முக்கிய அங்கமென கருதப்பட வேண்டும். நம் குடும்ப உறுப்பினராகவும், உறவினராகவும் பார்க்கப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும்.
நாமும் ஒரு தாயின் வயிற்றில் தான் பிறந்திருக்கிறோம் என்பதை நினைவு கொள்வோமாக.
தமிழ் நாட்டில் சில கிராமப் பகுதிகளில் வரதட்சணை பிரச்சனை அதிகமாக இருந்தது. ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளை கொலைசெய்துவிடுவார்கள். பிறக்கும் குழந்தைகளுக்கு விவசாய உரமோ அல்லது நெல் மணிகளோ கொடுப்பார்கள், முகத்தை ஈர துணியால் மூடிவிடுவார்கள், கழுத்தை நெறித்தும் அல்லது பசியால் வாட வைத்தும் சாக விட்டுவிடுவார்கள்.
சீன தேசத்தில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை எனும் சட்டம் அமல்படுத்தப்பட்ட போது பெண் சிசு கரு கலைப்பு அதிகம் நடந்தது. கருவிலேயே சாகடிக்கப்பட்ட சிசுவை சீன உணவகங்களுக்கு மருத்துவ உணவு செய்யும் பொருட்டு விற்பனை செய்துவிடுவது கொடுமையினும் கொடுமை.
2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாக்கிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் தனது சகோதரன் ஒரு உயர் ஜாதி பெண்ணுடன் ஓடி விட்டான் என்ற குற்றத்திற்காக முக்தார் எனப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணை உயர் ஜாதி ஆண்கள் பலர் ஒன்று கூடி கற்பழித்திருக்கிறார்கள்.
இப்படியாக சரித்திரம் தொட்டே பெண்களுக்கெதிரான கொடுமைச் செயல்கள் நடந்து வந்திருக்கிறது. இப்போது நவநாகரிக உலகில் நாம் வாழ்ந்து வந்தாலும் பாலியல் கொடுமைகள் ஆங்காங்கெ நடந்த வண்ணமே உள்ளன. மனதின் ஏதோ ஒரு மூலையில் லேசாக ஒட்டிய பயத்துடனே பெண்கள் வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள் எனக் கூறினால் மிகையாகாது.
![சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!! Vaw7](https://2img.net/h/1.bp.blogspot.com/_78s09nohJVk/SJ_Bns5R67I/AAAAAAAAAUE/YnQ1QrjhVPQ/s400/vaw7.jpg)
பெண்களை பொம்மை எனக் கருதுவதை தவிர்க்க வேண்டும். அவர்களும் உலக வாழ்க்கையின் முக்கிய அங்கமென கருதப்பட வேண்டும். நம் குடும்ப உறுப்பினராகவும், உறவினராகவும் பார்க்கப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும்.
நாமும் ஒரு தாயின் வயிற்றில் தான் பிறந்திருக்கிறோம் என்பதை நினைவு கொள்வோமாக.
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
இது என்ன கொடுமை பாவம் பெண்கள் எத்தனை சந்ததிகளாக கொடுமைப்படுகிறனர்
வெளிநாட்டில் இன்றும் பல கொடுமைகள் நடக்கின்றது. அன்று ஒரு செய்தி பார்த்தேன் ஒரு மினிஸ்டர் தன் மகளை 15 வருடமாக அடைத்துவைத்து பாலியல் கொருரம் செய்து இருக்கிறார் அவருக்குப்பிறந்த குழந்தையையும் கொன்று இருக்கிறார். என்ன உலகம் இது
தமிழீழம் என்ன ஒருநாட்டில் தான் இவை அனைத்தும் துடைத்தளிக்கப்பட்டது ஆனால் இன்று அங்கெ ஐயோ ...........
வெளிநாட்டில் இன்றும் பல கொடுமைகள் நடக்கின்றது. அன்று ஒரு செய்தி பார்த்தேன் ஒரு மினிஸ்டர் தன் மகளை 15 வருடமாக அடைத்துவைத்து பாலியல் கொருரம் செய்து இருக்கிறார் அவருக்குப்பிறந்த குழந்தையையும் கொன்று இருக்கிறார். என்ன உலகம் இது
தமிழீழம் என்ன ஒருநாட்டில் தான் இவை அனைத்தும் துடைத்தளிக்கப்பட்டது ஆனால் இன்று அங்கெ ஐயோ ...........
Re: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
இந்தக்கட்டுரை உங்களின் கட்டுரைகளின் உச்சம் என்று கருதுகிறேன் அருமை அருமை ![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
நாம் மட்டும் தான் பெண்மையை தெய்வமாக போற்றியவர்கள் , மற்ற அனைத்து நாடுகளிலும் பெண்கள் அடிமைகளாக தான் இருக்கவைக்க பட்டார்கள்.
நம் புராண , வரலாற்றுக்கு செய்திகளை படியுங்கள் பெண்மைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுதுருக்கிறோம் என்று தெரியும். அதை விட்டு விட்டு நாகரீகம் என்றல் என்னவென்றே தெரியாத மேல்நாட்டு கதை புத்தகங்களை ஏன் படிகிறீர்கள் தம்பி
(எகிப்தில் கிளியோபட்ரா பண்ணாத கொடுமைகளா , )
நம் புராண , வரலாற்றுக்கு செய்திகளை படியுங்கள் பெண்மைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுதுருக்கிறோம் என்று தெரியும். அதை விட்டு விட்டு நாகரீகம் என்றல் என்னவென்றே தெரியாத மேல்நாட்டு கதை புத்தகங்களை ஏன் படிகிறீர்கள் தம்பி
(எகிப்தில் கிளியோபட்ரா பண்ணாத கொடுமைகளா , )
Re: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
சாியாக சொன்னீர்கள் அண்ணா பெண்களுக்கு முதல் எதிாி பெண்கள் தான்
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!
sherin wrote:சாியாக சொன்னீர்கள் அண்ணா பெண்களுக்கு முதல் எதிாி பெண்கள் தான்
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜன்னலோர இருக்கையின் வன்மங்கள்!...
» சரித்திரத்தில் பெண்கள்`
» சரித்திரத்தில் ஒருநாள்..!
» உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்?
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு}
» சரித்திரத்தில் பெண்கள்`
» சரித்திரத்தில் ஒருநாள்..!
» உலக சரித்திரத்தில் என்றென்றும் நிலைப்பெற்றிருக்கும் அந்த 3 பேரழகிகள் யார்?
» சரித்திரத்தில் என்றென்றும் நீங்காது நிலைபெற்ற பேரழகி – சம்யுக்தா {12ம் நூற்றாண்டு}
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|