ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை கடல் குடிநீர்த் திட்டம்-முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

2 posters

Go down

சென்னை கடல் குடிநீர்த் திட்டம்-முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் Empty சென்னை கடல் குடிநீர்த் திட்டம்-முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

Post by ரபீக் Sat Jul 31, 2010 11:52 am

சென்னைக்கு கடல் குடிநீர் வழங்கும் திட்டத்தை இன்று மாலை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இதன் மூலம் சென்னைக்கு தினசரி 10 கோடி லிட்டர் கடல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியமும், சென்னை கடல் நீர் குடிநீராக்கல் நிறுவனம் (வாட்டர் டிசாலிநேசன் லிமிடெட்) இணைந்து சென்னை மாநகரின் தேவைக்காக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றன. இந்தத் திட்டப் பணிகள் முடிவடைந்து தற்போது பயன்பாட்டுக்குத் தயாராகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி கிராமத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் கையெழுத்தானது. தற்போது திமுக ஆட்சியில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரூ. 600 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. வடிவமைப்பின் பொறியியல் பணிகளை மேற் கொள்ளுதல், நிதியினை திரட்டுதல், உபகரணங்களை வாங்குதல், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், திட்டத்தை செயல்படுத்துதல், தொடர்ந்து 25 ஆண்டுகள் நிர்வகித்தல் பின்னர் பெருநகர குடிநீர் வாரியத்திடம் ஒப்படைத்தல் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கடல் நீரிலிருந்து தினந்தோறும் 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இந்த குடிநீர் வழங்கும் பணிகளை 25 ஆண்டுகள் சென்னை வாட்டர் டிசாலிநேசன் லிமிடெட் நிறுவனம் மேற்கொள்ளும்.

இத்திட்டத்தின் தொடக்க விழா இன்று மாலை 5மணிக்கு காட்டுப்பள்ளியில் நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தைத் திறந்து வைத்து விழாப் பேருரையாற்றுகிறார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மீன்வளத்துறை அமைச்சர்க கே.பி.பி.சாமி வாழ்த்துரை வழங்குகிறார். தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி முன்னிலை வகிக்கிறார்.

திட்டம் தொடர்பாக சென்னை வாட்டர் டிசாலிநேசன் நிறுவன இயக்குனர் எஸ்.ராமச்சந்திரன் கூறுகையில், கூறுகையில், கடல்நீரை குடிநீராக்கும் இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்து விட்டது. சென்னை பெருநகரின் குடிநீர் தேவைகள் இதன் மூலம் பூர்த்தியாகும். மாநகரில் அவ்வப்போது ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த திட்டம் பெரிதும் உதவும்.

இத்திட்டத்தின் மூலம் சென்னை நகரில் 20 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள். குடிநீர் வாரியத்திற்கு லிட்டருக்கு 4.8 பைசா என்ற அடிப்படையில் குடிநீர் வழங்கப்படும்

திட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து கடந்த 25ம் தேதி முதல் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்துக்கு இத் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 4 கோடி லிட்டர், 6 கோடி லிட்டர் என உயர்ந்து தற்போது 8 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. முதல்வர் கருணாநிதி
இத்திட்டத்தை துவக்கும்போது 10 கோடி லிட்டராக விநியோகிக்கப்படும் என்றார்.

இத்திட்டத்திற்காக காட்டுப்பள்ளியில், 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையம், மணலியில் 2.5 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி, மாதவரத்தில் 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையம், செங்குன்றத்தில் 6 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதை தவிர, சுமார் 38 கிலோ மீட்டர் நீளத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கப்பட்டு, சென்னை நகர விநியோகத்திற்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னை கடல் குடிநீர்த் திட்டம்-முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் Empty Re: சென்னை கடல் குடிநீர்த் திட்டம்-முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

Post by balakarthik Sat Jul 31, 2010 12:40 pm

அது சரி ஒரு பக்கம் கழிவு நீர கடலோட கலக்கவைது இநோருபக்கம் அதா கொடிநீரா வேற கொடுக்கறாங்களாம், அருமைடா சாமி


ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னை கடல் குடிநீர்த் திட்டம்-முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum