ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 
Dr.S.Soundarapandian
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 
heezulia
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 
i6appar
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல்

Go down

எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Empty எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல்

Post by ganie006 Wed Jul 28, 2010 9:03 am

புதுடில்லி :விலைவாசி பிரச்னையை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் ஒட்டு
மொத்தமாக பார்லிமென்டில் அமளியில் இறங்கின. "ஒத்திவைப்பு தீர்மானத்தை
ஏற்றுக்கொண்டு, விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து அவையில் விவாதம் நடத்த
அனுமதிக்க வேண்டும்' என, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் போர்க்கோலம்
பூண்டன. இதனால், ஆளுங்கட்சி செய்வதறியாது திணறியது. இதையடுத்து,
பார்லிமென்டின் இரு சபைகளும், அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன.
மழைக்கால கூட்டத்தொடருக்காக, பார்லிமென்ட் நேற்று முன்தினம் கூடியது.
முதல் நாளில், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் இறந்தவர்களுக்கு
அஞ்சலி என அலுவல்கள் முடிந்து, இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி
வைக்கப்பட்டன. இது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், இரண்டாம் நாளான
நேற்று, கொந்தளிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.எதிர்பார்ப்பு
நிஜமாகும் வகையில் நேற்று முழுவதும் பார்லிமென்டின் இரு அவைகளிலும் அனல்
பறந்தது.காலை 11 மணிக்கு லோக்சபா அலுவல்கள் துவங்கியதும் பா.ஜ.,
இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதாதளம், சமாஜ்வாடி, அ.தி.மு.க.,
தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் என முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள்,
ஒட்டு மொத்தமாக எழுந்தனர்.
விலைவாசி பிரச்னை குறித்து, சபையில் விவாதம் நடத்தி விட்டுத்தான்
மறுவேலை பார்க்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து
வலியுறுத்தினர். சில எம்.பி.,க்கள், சபாநாயகர் இருக்கை அருகே வந்து
கோஷங்கள் எழுப்பினர். ஆளும் தரப்பு எம்.பி.,க்கள் அமைதியாக கவனித்தபடி
இருக்க, கூச்சல் குழப்பம் அதிகமானது.சபாநாயகர் மீரா குமார் தலையிட்டு,
எதிர்க்கட்சி எம்.பி.,க்களை சமாதானப்படுத்தினார். இந்த அமளிக்கு மத்தியில்
எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் எழுந்து பேசினார்.
அவர் பேசியதாவது:அனைத்துப் பொருட்களின் விலை, விஷம் போல
ஏறியுள்ளது. சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சுவது போல, டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்
ஆகியவற்றின் விலைகளை அரசு உயர்த்தியுள்ளது.கடந்த மாதம் தான் இந்த விலை
உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை காரணம் காட்டி, ஒத்திவைப்பு
தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமை உள்ளது.இப்பிரச்னை,
ஒத்திவைப்பு தீர்மானத்திற்குண்டான விதிகளுக்குள் பொருந்தி வருகிறது. எனவே,
சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு,
விலைவாசி பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.
இது குறித்து, சபாநாயகர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அமளி அதிகரித்துக்
கொண்டே போனதால், சபை, 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோது,
அமளி ஆரம்பமானது. இருப்பினும், பிரணாப் முகர்ஜி ஒரு மசோதாவை தாக்கல்
செய்தார்.பின், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கான காரணங்களை
பட்டியலிட்டு, அமைச்சர் முரளி தியோரா ஒரு அறிக்கை வாசித்தார். கடும்
அமளிக்கு மத்தியில் அவர் பேசியது யாருக்குமே கேட்கவில்லை.ஒரு கட்டத்தில்,
லாலுவும், முலாயமும், சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷமிட்டனர். நிலைமை
மோசமாகவே, சபை, 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும் இதே
நிலை நீடிக்கவே, வேறு வழியின்றி நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்ய சபாவிலும் அமளி:ராஜ்ய சபாவில் காலையில் சபை கூடியதும்,
புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி
நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடனே, கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்வதாக
ராஜ்ய சபா தலைவர் அன்சாரி அறிவித்தார். பிரச்னை துவங்கியது. பா.ஜ.,
இடதுசாரிகள், அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ரகளையில்
இறங்கின.இந்த நேரத்தில், பாப்லி அணை பிரச்னையை வலியுறுத்தி, சிவசேனா கட்சி
எம்.பி.,க்கள், பேனர் ஒன்றை உயர்த்தி பிடித்தபடி கோஷமிட்டனர். இதைப்
பார்த்த சபை தலைவர் அன்சாரி, அதிருப்தி அடைந்தார்.
அவர் கூறுகையில், "சபைக்குள் பேனர்களைக் காட்டுவது சரியான
நடவடிக்கை அல்ல. இது, விதிமுறைகளை மீறிய செயல்; இதை அனுமதிக்க முடியாது.
எம்.பி.,க்கள் அவரவர் இருக்கையில் அமர வேண்டும்' என்றார்.இருந்தாலும்,
"விலைவாசி உயர்வு பிரச்னையை பேசிவிட்டு, பிறகு வேறு பணிகளைப் பார்க்கலாம்'
என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனால், சபை ஒரு மணி
நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியதும், தொடர்ந்து அமளி
ஏற்பட்டது. வேறு வழியின்றி நாள் முழுவதும் ராஜ்ய சபாவை ஒத்தி வைப்பதாக
அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பதவியேற்றனர் : நேற்று முன்தினம்
ராஜ்ய சபாவில் பதவியேற்றுக் கொள்ளாதவர்கள், நேற்று பதவியேற்க
வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்திலிருந்து தேர்வு
செய்யப்பட்டிருந்த அ.தி.மு.க., எம்.பி.,க்கள் இரண்டு பேரும்
பதவியேற்றனர்.முதலில் மனோஜ் பாண்டியன் அழைக்கப்பட்டார். தமிழில் பதவிப்
பிரமாணத்தை வாசித்து பதவியேற்றுக் கொண்டார். பின்னர் ராமலிங்கமும்
தமிழிலேயே வாசித்து, கடவுளின் பெயரால் பதவியேற்றுக் கொண்டார். நல்ல நாளாக
இல்லை என்பதால், இவர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொள்ளவில்லை.
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உ.பி., துப்பாக்கி சூட்டில் விவசாயிகள் பலி;பார்லிமென்ட் அலுவல் முடங்கியது
» அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்
» 14வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
» பார்லிமென்ட் வளாகத்தை சுற்றிப் பார்க்க அனுமதி கொடுத்த BJP MP

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum