ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்

Go down

மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர் Empty மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்

Post by சிவா Fri Jul 17, 2009 7:41 pm

தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்:துணைப்பிரதமர் வேண்டுகோள்


நேற்றிரவு ஷா ஆலமில் நிகழ்ந்த அரசியல்வாதி ஒருவரின் உதவியாளரான தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில், உணர்ச்சி வசப்பட்டு நடந்துகொள்ள வேண்டாம் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அந்த மரணத்தை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டுமென்ற மாற்றுக்கட்சியினரின் கோரிக்கையையும் அவர் புறந்தள்ளினார்.

போலீசார் அதை விசாரணை செய்து வருவதாக அவர் சொன்னார்.

“போலீசார் முழுமையாகவும் வெளிப்படையாகவும் ஆய்வு செய்வார்கள். யாரும் உண்மையை மூடிமறைப்பதை நாங்கள் விரும்பவில்லை”, என்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் முகைதின் தெரிவித்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றிருந்த தியோ, இரவு நெடுநேர விசாரணைக்குப் பின்னர், பக்கத்துக் கட்டிடத்தின் மேல்மாடியில் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.

இச்சம்பவம் எம்ஏசிசி யின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

விசாரணைக்கு உதவியாக எம்ஏசிசி அதிகாரிகளையும் மற்றவர்களையும் அழைக்கும் அதிகாரம் போலீசாருக்கு உண்டு என்றாரவர்.

“அவர்களுக்கு அந்த உரிமை உண்டு, அதை நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம்”, என்று முகைதின் குறிப்பிட்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர் Empty Re: மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்

Post by சிவா Fri Jul 17, 2009 7:42 pm

தியோவை கடைசியாக பார்த்தவர்:

“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் என்னைத் துன்புறுத்தியது”

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் புதன் கிழமை விசாரிக்கப்பட்ட காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர் தான் பூன் ஹுவா, அந்த ஊழல் கண்காணிப்பு அமைப்பு பின்பற்றும் கேள்விக்குரிய விசாரணை முறைகள் பற்றி இன்று தகவல் அளித்துள்ளார்.

தம்மை விசாரித்த இரண்டு அதிகாரிகள் தம்மிடமிருந்து பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்ததாக அவர் சொன்னார்.

ஸ்ரீகெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற மெர்தேக்கா நிகழ்ச்சி ஒன்றுக்கு 1500 தேசியக் கொடிகளை விநியோகம் செய்ததை மறுக்குமாறு தம்மை அவர்கள் நெருக்கியதாக அவர் தெரிவித்தார்.

விசாரனையின் போது அந்த அதிகாரிகள் நல்ல போலீஸ், கெட்ட போலீஸ் என்ற நுட்பத்தைப் பயன்படுத்தியதாக தான் பூன் கூறினார். தொடக்கத்தில் மிகவும் மரியாதையாக இருந்த அவர்கள், பின்னர் வாய்மொழியாக என்னைத் திட்டியதாகவும் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நான்கு மணி நேரத்திற்கு தம்மை நிற்க வைத்ததாகவும் அவர் சொன்னார்.

உடல் ரீதியாக துன்புறுத்தப்படாலம் என்று தாம் பல முறை மிரட்டப்பட்டதாகவும் தான் பூன் தெரிவித்தார். ஓர் அதிகாரி, தமது நெற்றியை சுட்டிக்காட்டி நீ பொய் சொல்ல வேண்டாம். இது எனது இடம். நான் உன்னைத் தாக்க முடியும். என்னை நம்பு!”, என்று கூறியதாக தான் பூன் குற்றம் சாட்டினார்.

விசாரணை நடக்கும் போது மற்ற அதிகாரிகள் அவ்வப்போது உள்ளே நுழைந்து தமது மோசமான பாஹாசா மலேசியா பாண்டித்தியம் குறித்து கிண்டல் செய்வதுடன் “சீனா போடோ” (முட்டாள் சீனர்கள்) போன்ற இழிவுபடுத்தும் சொற்களால் தம்மை அழைத்ததாகவும் தாம் சீனக் குடிமகனா என்று கேட்டதாகவும் அவர் சொன்னார்.

தமது குடும்பத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் மிகவும் மோசமான அச்சுறுத்தல் என்று தான் பூன் குறிப்பிட்டார். அதனை “மனதளவிலான துன்புறுத்தல்” என அவர் வருணித்தார்.

“நான் ‘உண்மையைக் கூறாவிட்டால்’ அவர்கள் என்னுடைய மனைவியை எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அப்போது பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றும் அவர்கள் கூறினார். ஆனால் நான் மசியவில்லை,” என்றார் தான் பூன்.

அவர் இன்று சிலாங்கூர் மாநிலச் செயலகத்தில் நிருபர்கள் கூட்டத்தில் பேசினார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர் Empty Re: மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்

Post by சிவா Fri Jul 17, 2009 7:42 pm

.

உணவுப் பொருள் அறையில் தியோ காணப்பட்டார்

எல்லாவற்றுக்கும் மேலாக, தாம் மறு நாள் பிற்பகல் மணி 1.30 க்கு விடுவிக்கப்பட்ட போது, விசாரணை முறைகளை பிரச்னையாக ஆக்க வேண்டாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஊழியர்கள் தம்மைக் கேட்டுக் கொண்டதாக தான் பூன் தெரிவித்தார்.

“ஆனால் என்னால் இப்போது மௌனமாக இருக்க முடியாது. ஏனெனில் ஓர் உயிர் இழக்கப்பட்டுள்ளது”, என்றார் தான். அது சிலாங்கூர் மாநில ஆட்சிமன்ற உறுப்பினர் இயான் யோங் ஹியான் வாவின் அரசியல் செயலாளர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதைக் குறிப்பதாகும்.

வாரண்டு எதுவும் இல்லாமல் புதன் கிழமை மாலை தமது வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை நடத்தியதாக தான் பூன் குறிப்பிட்டார். பின்னர் இரவு 9 மணி வாக்கில் அந்த ஆணையத்தின் சிலாங்கூர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

30 வயதான தியோ, அவரும் தான் பூனும் விசாரிக்கப்பட்ட சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு 9 தளங்கள் கீழே ஷா அலாம் பிளாசா மாசாலாமின் ஐந்தாவது தளத்தில் உள்ள பால்கனியில் நேற்று இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

தியோ அதே கட்டிடத்தில் இருந்தது தமக்குத் தெரியாது என்று கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த போது தான் பூன் கூறினார். மறுநாள் காலை 6 மணிக்கு தாம் எழுந்து கழிப்பறைக்குச் சென்று கொண்டிருந்த போதுதான், அவர்கள் இருவரும் சந்தித்தனர்.

“அவர் அறையில் இருந்தார். நான் அவருக்கு வாழ்த்துக் கூறினேன், ஆனால் அவர் ‘உம்’ என்று மட்டும் பதிலளித்தார். நான் கழிப்பறையிலிருந்து வெளியே வந்த போது அவர் போய் விட்டார். அவர் சிறிது களைப்படைந்திருப்பதாக தெரிந்தது”, என்று தான் பூன் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை மணி 3.45 அளவில் தியோ விடுவிக்கப்பட்டதாகவும் ஆனால் அங்கு தங்கி சோபாவில் உறங்க முடிவு செய்ததாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறுகிறது. அங்கு அவர் கடைசியாக காலை 6 மணிக்குக் காணப்பட்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர் Empty Re: மலேசியா: தியோ பெங் ஹொக்-கின் சர்ச்சைக்குரிய மரணம் - அமைதி காப்பீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum