ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
VENKUSADAS
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 
VENKUSADAS
ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_m10ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

+2
மஞ்சுபாஷிணி
eraeravi
6 posters

Go down

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Empty ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

Post by eraeravi Wed Jul 14, 2010 1:50 pm

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி




ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Ravi








ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை
உலகிற்கு பறைசாற்றியது நமது தமிழகம்
கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்
கற்பித்தான் முண்டாசுக்கவி பாரதி
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உயர்த்தினார்
உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர்
கல்விக்கு இரண்டாம் இடம் தந்தார்
ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார் திருவள்ளுவர்
வெள்ளை காகிதத்தில் சிறு கரும்புள்ளி இருந்தால்
கரும்புள்ளி மட்டுமே கண்ணில் படும்
எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்
நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம்
கெட்ட பெயரை விரைவாக பெற்றுத்தரும் ஒழுக்கக்கேடு
கண்ணகியும் சீதையும் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால்
கணினியுகத்திலும் போற்றுகின்றோம் அவர்களை
மாதவியும் சூர்ப்பநகையும் ஒழுக்கம் தவறியதால்
மண்ணில் இன்றும் பழிக்கிறார்கள் அவர்களை
இராமன் ஒழுக்கமுடன் வாழ்ந்ததால் கடவுள் ஆனான்
இராவணன் ஒழுக்கம் தவறியதால் அரக்கன் ஆனான்
பறவைகள் கூட ஒழுக்கத்தோடு வாழும் போது
பகுத்தறி பெற்ற மனிதன் ஒழுக்கம் தவறலாமா?
விலங்குகள் கூட ஒழுக்கத்தோடு வாழும்போது
விவேகமான மனிதன் ஒழுக்கம் தவறலாமா?
தவறு செய்ய வாய்ப்பு வந்த போதும்
தவறு செய்யாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்
ஆறறிவு பெற்ற மனிதனுக்கு இன்று
அவசியம் தேவை நல் ஒழுக்கம்
ஒழுக்கத்தோடு வாழ்பவனுக்குப் பெயர்தான் மனிதன்
ஒழுக்கம் தவறி வாழ்பவன் மனிதனா? சிந்தியுங்கள்
இனிய ஒழுக்கம் தவறி நடப்பன் பெயர்
இரண்டு கால் மிருகம் என்று உணர்
மனம் போன போக்கில் வாழ்வது வாழ்வன்று
மனத்தை கட்டுக்கோப்பில் வைத்து வாழ்வதே வாழ்வாகும்
கணவன் ஒழுக்கத்தோடு வாழ்ந்து வந்தால்தான்
மனைவியிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் உரிமை உண்டு
கணவன் ஒழுக்கம் கெட்டு வாழ்ந்து கொண்டு
மனைவியிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பது மூடத்தனம்
ஒழுக்கம் என்து பண்பாடு மட்டும் அன்று
ஒழுக்கம் என்பது உயிர் சார்ந்தது இன்று
நூற்றாண்டுகள் கடந்த பின்னும் நிலைத்தார்
நம் காந்தியடிகள் காரணம் நல்ஒழுக்கம்
கர்மவீரர் காமராசர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்
கல்வி வள்ளல் ஒழுக்கச்சீலராக வாழ்ந்தார்.
ஒருவருக்கு எல்லாம் இருந்தும் உயர்ந்த
ஒழுக்கம் இல்லை என்றால் பயனில்லை
ஒழுக்கம் இருந்து ஏழையாக இருந்தாலும்
உயர்ந்த புகழ் தேடி வந்து சேரும்
எய்ட்ஸ் நோய் கொடிய நோய் உயிர்க்கொல்லி நோய்
ஒருவனுக்கு ஒருத்தி உணர்த்தவந்த உன்னதநோய்
தமிழ்ப்பண்பாட்டை கடைபிடித்து நடந்தால்
தரணியில் எய்ட்ஸை இல்லாமல் ஒழித்திடலாம்
ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
உலகம் முழுவதும் பல்கிப் பெருகியது எய்ட்ஸ்
ஒழுக்கம் இல்லாததால் தான் இன்று
மேலை நாடுகளில் வன்முறை வளர்ந்தது
மேலை நாட்டு நாகரீகத்தைக் கடைபிடித்ததால் தான்
நம் நாட்டில் பண்பாடு சிதைந்தது
உலகிற்கே விளக்காகத் திகழ்வது நம்நாடு
பண்பாட்டுச் சீரழிவால் சிதைகின்றது நம்நாடு
அந்நியரிடமுள்ள நல்ல பழக்கம் கடை பிடிப்போம்
அந்நியரிடமுள்ள கெட்ட பழக்கம் விட்டொழிப்போம்
உயிர் மேல் ஆசை இருந்தால்
ஒழுக்கத்தோடு வாழ்வது நல்லது
நீண்ட ஆயுள் வேண்டும் என்றால்
நல்ஒழுக்கம் நாளும் வேண்டும்
உடல்நலனுக்கு ஒழுக்கம் அவசியம்
உள்ளம் நலனுக்கு உடல் நலம் அவசியம்
நல்லவர்களைப் பாடமாகக் கொள்ளுங்கள்
கெட்டவர்களை கவனிக்காமல் விட்டுவிடுங்கள்
ஒழுக்கம் என்பது பால் போன்றது
ஒழுக்கக்கேடு என்பது விசம் போன்றது
ஒருகுடம் பாலில் ஒரு துளி விசம் கலந்தாலும் விசம்
ஒழுக்கமாக வாழ்க்கையில் ஒருநிமிடம் சபலப்பட்டாலும் சஞ்சலம்
இப்படித்தான் வாழவேண்டுமென்பது ஒழுக்கம்
எப்படியும் வாழலாம் என்பது மூடப்பழக்கம்
பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வது மனித இனம்
பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வாழ்வது விலங்கினம்
விலங்கை விலங்காக இருக்க வலியுறுத்துவதில்லை
மனிதனை மனிதனாக இருக்க வலியுறுத்துவது ஒழுக்கம்
உலகமே வியக்கும் உயர்ந்த நம்பண்பாடு
ஒழுக்கத்தை போற்றிப் பாதுகாப்பது கண்கூடு
எதை இழந்தாலும் திரும்ப பெற்றுவிடலாம்
ஒழுக்கத்தை இழந்தால் எல்லாம் போய்விடும்
நல்லவர் என்ற பெயரை பெற்றுத்தருவது
நாடு போற்றும் நல்ஒழுக்கம் ஆகும்
கோடிப்பணம் கொட்டிக்கிடந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் ஏழைதான் அவன்
பணம் எதுவுமின்றி ஏழையாக இருந்தாலும்
ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் அவன் குபேரன்தான்
பண்புகளில் சிறந்த பண்பு ஒழுக்கம்
பண்பாட்டைப் பறை சாற்றுவது உயர்ந்த ஒழுக்கம்
வாழ்க்கைத்துறை தேடி அலையத்தேவை இல்லை
வாழ்க்கைத்துணை தேடிவரும் ஒழுக்கத்தோடு இருந்தால்
தனி மனித ஒழுக்கம் சமுதாய ஒழுக்கமாகும்
சமுதாய ஒழுக்கம் நாட்டின் ஒழுக்கமாகும்
மனம் ஒரு குரங்கு என்றார்கள் நம்
மனத்தை கட்டுப்படுத்தக் கற்க வேண்டும்
முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை
முடிந்தளவு ஒழுக்கத்தோடு வாழ்ந்து காட்டுவோம்
ஒழுக்கமாக வாழும் வாழ்க்கை தவம்
ஒழுக்கம் கெட்டு வாழும் வாழ்க்கை சவம்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Empty Re: ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 14, 2010 2:28 pm

ஒழுக்கத்திற்கான இந்த கவிதை மிக மிக அருமை ரவி...

தனிமனித ஒழுக்கமே சமுதாய ஒழுக்கமாகும் அருமையான வரிகள்.....

உடல்நலனுக்கு மட்டுமல்லாது உள்ள நலனுக்காகவும் ஒழுக்கம் அவசியம் என்று சொன்னது மிக அருமை....

விலங்குகள் இப்படி இரு என்று நாம் சொல்லாமலேயே தனக்கென ஒரு கட்டுப்பாட்டுடன் தான் வாழ்கிறது...

ஆனால் மனிதன் தனக்கு தானே கட்டுப்பாட்டை விதித்து ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம் என்பதை மிக அருமையான வரிகளில் சொல்லி இருக்கீங்க....

அன்பு பாராட்டுக்கள்பா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Empty Re: ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

Post by திவா Wed Jul 14, 2010 2:29 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒழுக்கத்திற்கான இந்த கவிதை மிக மிக அருமை ரவி...

தனிமனித ஒழுக்கமே சமுதாய ஒழுக்கமாகும் அருமையான வரிகள்.....

உடல்நலனுக்கு மட்டுமல்லாது உள்ள நலனுக்காகவும் ஒழுக்கம் அவசியம் என்று சொன்னது மிக அருமை....

விலங்குகள் இப்படி இரு என்று நாம் சொல்லாமலேயே தனக்கென ஒரு கட்டுப்பாட்டுடன் தான் வாழ்கிறது...

ஆனால் மனிதன் தனக்கு தானே கட்டுப்பாட்டை விதித்து ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம் என்பதை மிக அருமையான வரிகளில் சொல்லி இருக்கீங்க....

அன்பு பாராட்டுக்கள்பா..
சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Empty Re: ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

Post by kalaimoon70 Wed Jul 14, 2010 3:03 pm

எத்துணை பெருமைகள், திறமைகள் இருந்தாலும்
ஒழுக்கம் இல்லை என்றால் மதிப்பதில்லை யாரும்
நல்ல பெயர் வாங்குவது மிகவும் கடினம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Empty Re: ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 5:08 pm

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி 677196 ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி 677196 ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி 677196



ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Empty Re: ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

Post by eraeravi Wed Jul 14, 2010 9:32 pm

வணக்கம் கவிதை பற்றிய பாராட்டுக்கு மிக்க நன்றி

அன்புடன்

இரா .இரவி
www.kavimalar.com
http://wtrfm.com/?cat=3

http://eraeravi.wordpress.com/
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Empty Re: ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

Post by eraeravi Tue Nov 13, 2012 10:59 am

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Empty Re: ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

Post by அசுரன் Tue Nov 13, 2012 7:13 pm

ஒழுக்கமான வாழ்வே சிறந்தது ... அருமை கவிஞர் ரவி அவர்களே
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Empty Re: ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

Post by eraeravi Tue Nov 13, 2012 10:18 pm


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி Empty Re: ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum