ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துக்கள் பற்றி பேச்சு-கருணாநிதிக்கு எதிரான மனு தள்ளுபடி

Go down

இந்துக்கள் பற்றி பேச்சு-கருணாநிதிக்கு எதிரான மனு தள்ளுபடி Empty இந்துக்கள் பற்றி பேச்சு-கருணாநிதிக்கு எதிரான மனு தள்ளுபடி

Post by ரபீக் Wed Jul 14, 2010 12:01 pm

இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில்,

சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார். அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார்.

எனவே அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால், வக்கீல் ஆர்.பிரேம்நாத் என்பவர் கருணாநிதி மீது எழும்பூர் 14வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மீது வழக்கு தொடர்வதற்கான அனுமதியும் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்டது.

அதைத்தொடர்ந்து சாட்சி விசாரணைக்காக அந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. விசாரணைக்கு வரும்போதெல்லாம் வழக்கு பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.

இந் நிலையில் 21.5.07 அன்று அந்த கோர்ட்டுக்குச் சென்று வழக்கின் டைரியை பார்த்தபோது, திமுக தலைவர் கருணாநிதியை வழக்கில் இருந்து விடுதலை செய்து 17.8.06 அன்று தீர்ப்பளிக்கப்பட்டதாக தெரியவந்தது.

வழக்கை திரும்பப்பெறுவதாக உதவி அரசு வக்கீல் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஜராகி வாதிடுவதற்கு மனுதாரர் தரப்பினருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு தகுந்த காரணமும் சொல்லப்படவில்லை.

திமுக தலைவர் கருணாநிதி மீது வழக்கு தொடரலாம் என்று அப்போதிருந்த அரசு (ஜெயலலிதா அரசு) அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டு இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி முதல்வரான பிறகு, அந்த அரசாணையை திரும்பப் பெறுவதற்காக 27.5.06 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் பாலசுப்பிரமணியம் கூறியிருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் இந்த மனு விசாரிக்கப்பட்டபோது மனுதாரர் தரப்பில் சம்பந்தப்பட்ட யாரும் ஆஜராகவில்லை. இதனால் கடந்த 12.10.09 அன்று அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந் நிலையில் பழைய மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 25 நாட்கள் காலதாமதமாக இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. காலதாமதமாக மனு தாக்கல் செய்வதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பழைய மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் இன்னொரு மனுவும் பாலசுப்பிரமணியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனுவுக்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் கூறுகையில் 21.7.09, 23.7.09, 11.9.09 ஆகிய தேதிகளில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போதிய சந்தர்ப்பம் தரப்பட்டும் அதை மனுதாரர் தரப்பு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில், பழைய மனுவை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட வேண்டிய மனு, காலதாமதமாக தாக்கல் செய்யப்படுவதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மனுதாரர் கூறியிருக்கிறார். ஆனால் அப்படி பொறுத்துக் கொள்வதற்கு போதிய காரணங்கள் இல்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மந்திரி ராஜாவுக்கு எதிரான மனு தள்ளுபடி
» இறையாண்மைக்கு எதிரான பேச்சு-வைகோ மீதான வழக்கு ஒத்திவைப்பு
» தமிழர்கள், சீனர்களுக்கு எதிரான பேச்சு-மலேசிய பிரதமரின் உதவியாளர் விலகல்
» ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்ய அமெரிக்கா விருப்பம்
» கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சை: ஸ்மிருதி இரானிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum