Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பதவி விலகலா?
2 posters
Page 1 of 1
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பதவி விலகலா?
ஜம்மு-காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் தனது நிர்வாகத்துக்கு ஏற்பட்ட சரிவு என்று முதல்வர் ஓமர் அப்துல்லா ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும் பிரச்னைகளைக் கண்டு பயந்து பதவி விலக மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு மேல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீஸார் காயமடைந்தனர். மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த நான்கு நாள்களாக மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தெருக்களில் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.
மாநிலத்தில் நிகழும் வன்முறை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஓமர் அப்துல்லா வெள்ளிக்கிழமை காலை ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஓமர் கூறியுள்ளதாவது:
வன்முறை பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், ஏற்கெனவே பல பகுதிகளுக்கு மாநில அமைச்சர்கள் சென்று நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர்.
ஸ்ரீநகரில் சோபூர், பாரமுல்லா மற்றும் அனந்த்நாக் உள்ளிட்ட 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்தான் வன்முறை பரவியுள்ளது.
ஆனால் மாநிலத்தின் முக்கிய பகுதிகளான குப்வாரா, கந்தர்பல், சோபியான், குல்காம், பட்காம், ரந்திர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை ஏதும் நடைபெறவில்லை. மாநிலத்தின் சில பகுதியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை வைத்து மதிப்பீடு செய்ய வேண்டாம்.
கல்லெறிதல் சம்பவங்கள், பயங்கரவாதிகளின் தாக்குதல் ஆகியவை பிரச்னைக்கான அறிகுறியே. காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல்ரீதியான தீர்வு காணப்பட வேண்டும்.
இப்போதும் நிலைமை கைமீறிப் போகவில்லை. முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போதைய பிரச்னையால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பிரச்னையைக் கண்டு பயந்து நான் ஓட மாட்டேன். அந்த அளவுக்கு நான் பலவீனமானவன் அல்ல. என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என்றார் ஓமர்.
இந்நிலையில் பொதுமக்கள் வழிபாடு நடத்துவதற்கு வசதியாக படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, அனைத்து கட்சிக் கூட்டத்தை திங்கள்கிழமை (ஜூலை 12) முதல்வர் கூட்டியுள்ளார். மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து இக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
பங்கேற்கமாட்டோம்- பிடிபி: முதல்வர் ஓமர் அப்துல்லா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தினால் பயன் எதுவும் விளையப் போவதில்லை என்பதால் இதில் பங்கேற்கப் போவதில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) அறிவித்துள்ளது.
3 இடங்களில் தாக்குதல்: சோபூர் புறநகர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸ் வாகனம் மீது வியாழக்கிழமை இரவு 12.30 மணியளவில் கையெறி குண்டுகளை வீசினர். கையெறி குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கியாலும் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் எவருக்கும் காயமேற்படவில்லை. இரண்டாவதாக இரவு 1.30 மணிக்கு சோபூர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்தார்.
மூன்றாவதாக சோபூர்-பாரமுல்லா சாலையில் இரவு 2.30 மணிக்கு போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் வாகன ஓட்டுநர் காயமடைந்தார்.
கூடுதல் படை: நிலைமையைச் சமாளிக்க மேலும் கூடுதலாக 8 பிரிவுகள் அடங்கிய ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது 2,500 ராணுவ வீரர்கள் அங்கு பணியில் உள்ளனர்.
காங்கிரஸ் உயர் தலைவர்கள் ஆலோசனை: இதனிடையே காஷ்மீர் நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் உயர்நிலைத் தலைவர்கள் புது தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், கட்சித் தலைவர் சோனியா காந்தி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் பங்கேற்றனர். காஷ்மீர் நிலைமை குறித்து சோனியா காந்தியிடம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் விவரித்தார்.
ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தொண்டர் கைது: இதனிடையே காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறையைத் தூண்ட முயற்சித்ததாக ஹுரியத் மாநாட்டு அமைப்பின் மாவட்டத் தலைவர் ஷபீர் அகமது வாணி கைது செய்யப்பட்டார்.
ஜூலை 7-ல் ஸ்ரீநகரில் நடைபெற்ற பேரணியில் வன்முறையைத் தூண்டுவது தொடர்பாக குலாம் அகமது தர் என்பவருடன் ஷபீர் அகமது தொலைபேசியில் பேசியுள்ளார். இதை இடைமறித்து கேட்ட போலீஸார், ஷபீர் அகமதுவை கைது செய்தனர். குலாம் அகமதுவைத் தேடி வருகின்றனர்.
மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு மேல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீஸார் காயமடைந்தனர். மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த நான்கு நாள்களாக மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தெருக்களில் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர்.
மாநிலத்தில் நிகழும் வன்முறை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஓமர் அப்துல்லா வெள்ளிக்கிழமை காலை ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஓமர் கூறியுள்ளதாவது:
வன்முறை பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், ஏற்கெனவே பல பகுதிகளுக்கு மாநில அமைச்சர்கள் சென்று நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர்.
ஸ்ரீநகரில் சோபூர், பாரமுல்லா மற்றும் அனந்த்நாக் உள்ளிட்ட 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்தான் வன்முறை பரவியுள்ளது.
ஆனால் மாநிலத்தின் முக்கிய பகுதிகளான குப்வாரா, கந்தர்பல், சோபியான், குல்காம், பட்காம், ரந்திர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை ஏதும் நடைபெறவில்லை. மாநிலத்தின் சில பகுதியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை வைத்து மதிப்பீடு செய்ய வேண்டாம்.
கல்லெறிதல் சம்பவங்கள், பயங்கரவாதிகளின் தாக்குதல் ஆகியவை பிரச்னைக்கான அறிகுறியே. காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல்ரீதியான தீர்வு காணப்பட வேண்டும்.
இப்போதும் நிலைமை கைமீறிப் போகவில்லை. முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போதைய பிரச்னையால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பிரச்னையைக் கண்டு பயந்து நான் ஓட மாட்டேன். அந்த அளவுக்கு நான் பலவீனமானவன் அல்ல. என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என்றார் ஓமர்.
இந்நிலையில் பொதுமக்கள் வழிபாடு நடத்துவதற்கு வசதியாக படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, அனைத்து கட்சிக் கூட்டத்தை திங்கள்கிழமை (ஜூலை 12) முதல்வர் கூட்டியுள்ளார். மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து இக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
பங்கேற்கமாட்டோம்- பிடிபி: முதல்வர் ஓமர் அப்துல்லா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தினால் பயன் எதுவும் விளையப் போவதில்லை என்பதால் இதில் பங்கேற்கப் போவதில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) அறிவித்துள்ளது.
3 இடங்களில் தாக்குதல்: சோபூர் புறநகர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸ் வாகனம் மீது வியாழக்கிழமை இரவு 12.30 மணியளவில் கையெறி குண்டுகளை வீசினர். கையெறி குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கியாலும் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் எவருக்கும் காயமேற்படவில்லை. இரண்டாவதாக இரவு 1.30 மணிக்கு சோபூர் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்தார்.
மூன்றாவதாக சோபூர்-பாரமுல்லா சாலையில் இரவு 2.30 மணிக்கு போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் வாகன ஓட்டுநர் காயமடைந்தார்.
கூடுதல் படை: நிலைமையைச் சமாளிக்க மேலும் கூடுதலாக 8 பிரிவுகள் அடங்கிய ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது 2,500 ராணுவ வீரர்கள் அங்கு பணியில் உள்ளனர்.
காங்கிரஸ் உயர் தலைவர்கள் ஆலோசனை: இதனிடையே காஷ்மீர் நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் உயர்நிலைத் தலைவர்கள் புது தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், கட்சித் தலைவர் சோனியா காந்தி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் பங்கேற்றனர். காஷ்மீர் நிலைமை குறித்து சோனியா காந்தியிடம் உள்துறை அமைச்சர் சிதம்பரம் விவரித்தார்.
ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தொண்டர் கைது: இதனிடையே காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறையைத் தூண்ட முயற்சித்ததாக ஹுரியத் மாநாட்டு அமைப்பின் மாவட்டத் தலைவர் ஷபீர் அகமது வாணி கைது செய்யப்பட்டார்.
ஜூலை 7-ல் ஸ்ரீநகரில் நடைபெற்ற பேரணியில் வன்முறையைத் தூண்டுவது தொடர்பாக குலாம் அகமது தர் என்பவருடன் ஷபீர் அகமது தொலைபேசியில் பேசியுள்ளார். இதை இடைமறித்து கேட்ட போலீஸார், ஷபீர் அகமதுவை கைது செய்தனர். குலாம் அகமதுவைத் தேடி வருகின்றனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
» ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்
» மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்: அமித் ஷா அறிவிப்பின் சாராம்சம்
» காய்கறி சாகுபடி செய்வதின் முக்கியத்துவத்தை விளக்கும் சமையலறை தோட்டம்: ஜம்மு-காஷ்மீர் அரசு அறிமுகம்
» காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை வைகோ தேடுவதற்கு என்ன காரணம்?
» ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்
» மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்: அமித் ஷா அறிவிப்பின் சாராம்சம்
» காய்கறி சாகுபடி செய்வதின் முக்கியத்துவத்தை விளக்கும் சமையலறை தோட்டம்: ஜம்மு-காஷ்மீர் அரசு அறிமுகம்
» காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை வைகோ தேடுவதற்கு என்ன காரணம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|