Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி
+2
கலைவேந்தன்
ரபீக்
6 posters
Page 1 of 1
தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர், தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான் என்று மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- ஜெயலலிதா அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் உங்களை "சதிச் செயல் புரியும் மரண வியாபாரி'' என்று வர்ணித்து மற்றும் இலங்கை ராணுவத்தில் பணி புரிந்தோர்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்களோ, அதைப் போல கருணாநிதியும் ஒரு "போர்க்குற்றவாளி'' என்றும் குறிப்பிட்டிருக்கிறாரே, அந்த அறிக்கையைப் பார்த்தீர்களா?
பதில்:- பார்த்தேன். இதயம் உள்ளவர்கள் என்று நான் கருதியிருக்கிற பத்திரிகையாளர்கள் நடத்துகிற ஏடுகளில் அந்த அம்மையாரின் அறிக்கையை பெரிய தலைப்புகளில் பார்த்தேன். தொடர்ந்து உள்ளே படித்தும் பார்த்தேன். அறிக்கை வெளியிட்டுள்ள அம்மையாரும், அதற்கு ஒளிïட்டியுள்ள பத்திரிகை நண்பர்களும் என் இதயமார்ந்த நன்றிக்குரியவர்கள். ஏனென்றால் அந்த அறிக்கையின் கர்த்தாவாகிய அம்மையார் ஜெயலலிதா-இலங்கைப் பிரச்சினையில் ஏடாகூடமாக என்னென்ன பேசியிருக்கிறார், எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறார் என்பதை விளக்குவதற்காக விரிவான பதிலைச் சொல்ல வாய்ப்பளித்திருக்கிறார்கள் அல்லவா? அந்த வாய்ப்பை எண்ணித்தான் அவர்களை நன்றிக்குரியவர்கள் என்று குறிப்பிடுகிறேன்.
"படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்திய நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது'' என்று தமிழகச் சட்டப்பேரவையில் 16-4-2002 அன்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பதை இதயம் என ஒன்றிருப்போர் இதற்குள் மறந்துவிட முடியுமா?
இலங்கையில் ராஜபக்சேயின் சிங்களப்படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், மனிதச்சங்கிலிகளும் பொதுக்கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றபோது, "இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டு மென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப்பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்'' என்று 17-1-2009 அன்று அறிக்கை விடுத்த ஜெயலலிதாவின் பேனா முனையின் ஈரம் கூட இன்னும் காய்ந்திருக்காது.
அது மட்டுமா? இலங்கையில் தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது - இதே ஜெயலலிதாதான் "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள்மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள் நாட்டுப்போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை'' என்று கூறியதோடு - ``இலங்கையில் நடக்கும் யுத்தம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும்-அதனால்தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு கருணாநிதி இரங்கற்பா எழுதுகிறார்'' என்றும் ஜெயலலிதா அறிக்கை விடுத்து-அந்த அறிக்கையை இன்றைக்கு ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுகின்ற ஏடுகள் அல்லது ஏடுகளின் எழுத்தாளர்கள்-எம்மான்கள் - பெம்மான்கள் ஏனோ மறந்துவிட்டனர்.
இலங்கையில் வாழுகின்ற ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும்-இரண்டாம் நிலை குடிமக்கள் என்று ஒதுக்கப்படுவதிலிருந்து அந்த மக்கள் இலங்கையில் - எல்லா உரிமைகளையும் பெற்று சமத்துவமாகவும், சமநீதியும் பெற்று வாழும் வகை வகுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் தி.மு.கழகத்தையும் -அந்தக் கழகத்தின் தலைவனாக இருக்கின்ற என்னையும்- வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவர் உரக்க உரக்கக் கூறிய "சூன்யக்காரி'', "சூழ்ச்சிக்காரி'', "சண்டாளி'', "சதிகாரி'' என்ற பட்டங்களுக்கு அன்றின்றெனாதபடி என்றென்றும் உரியவரான ஒருவர்-நல்லோர் நாவில் வராத இத்தகைய நச்சுமொழிகளால் அர்ச்சிப்பதை நான் பொருட்படுத்தவில்லை.
2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது -இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் நான் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் உணருவார்கள்.
அதனால் தான் ஈழத்தந்தை செல்வாவின் அன்புமகன் சந்திரஹாசன் எனக்கெழுதிய கடிதத்தில் "ஈழத் தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம். ஆயினும் தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத்தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகின்றது'' என்று எழுதினார். இதனை மனதிலே கொண்டுதான் சில "ஜீவன்''களின் விமர்சனங்களை மறந்துவிடுகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- ஜெயலலிதா அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில் உங்களை "சதிச் செயல் புரியும் மரண வியாபாரி'' என்று வர்ணித்து மற்றும் இலங்கை ராணுவத்தில் பணி புரிந்தோர்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்களோ, அதைப் போல கருணாநிதியும் ஒரு "போர்க்குற்றவாளி'' என்றும் குறிப்பிட்டிருக்கிறாரே, அந்த அறிக்கையைப் பார்த்தீர்களா?
பதில்:- பார்த்தேன். இதயம் உள்ளவர்கள் என்று நான் கருதியிருக்கிற பத்திரிகையாளர்கள் நடத்துகிற ஏடுகளில் அந்த அம்மையாரின் அறிக்கையை பெரிய தலைப்புகளில் பார்த்தேன். தொடர்ந்து உள்ளே படித்தும் பார்த்தேன். அறிக்கை வெளியிட்டுள்ள அம்மையாரும், அதற்கு ஒளிïட்டியுள்ள பத்திரிகை நண்பர்களும் என் இதயமார்ந்த நன்றிக்குரியவர்கள். ஏனென்றால் அந்த அறிக்கையின் கர்த்தாவாகிய அம்மையார் ஜெயலலிதா-இலங்கைப் பிரச்சினையில் ஏடாகூடமாக என்னென்ன பேசியிருக்கிறார், எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறார் என்பதை விளக்குவதற்காக விரிவான பதிலைச் சொல்ல வாய்ப்பளித்திருக்கிறார்கள் அல்லவா? அந்த வாய்ப்பை எண்ணித்தான் அவர்களை நன்றிக்குரியவர்கள் என்று குறிப்பிடுகிறேன்.
"படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்திய நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது'' என்று தமிழகச் சட்டப்பேரவையில் 16-4-2002 அன்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பதை இதயம் என ஒன்றிருப்போர் இதற்குள் மறந்துவிட முடியுமா?
இலங்கையில் ராஜபக்சேயின் சிங்களப்படையினர் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த போது, அதனைக் கண்டித்து தமிழகத்தில் ஊர்வலங்களும், மனிதச்சங்கிலிகளும் பொதுக்கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றபோது, "இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டு மென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப்பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்'' என்று 17-1-2009 அன்று அறிக்கை விடுத்த ஜெயலலிதாவின் பேனா முனையின் ஈரம் கூட இன்னும் காய்ந்திருக்காது.
அது மட்டுமா? இலங்கையில் தமிழ் இனப்படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது - இதே ஜெயலலிதாதான் "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள்மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள் நாட்டுப்போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை'' என்று கூறியதோடு - ``இலங்கையில் நடக்கும் யுத்தம் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் என்னும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும்-அதனால்தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு கருணாநிதி இரங்கற்பா எழுதுகிறார்'' என்றும் ஜெயலலிதா அறிக்கை விடுத்து-அந்த அறிக்கையை இன்றைக்கு ஜெயலலிதாவின் அறிக்கையை வெளியிடுகின்ற ஏடுகள் அல்லது ஏடுகளின் எழுத்தாளர்கள்-எம்மான்கள் - பெம்மான்கள் ஏனோ மறந்துவிட்டனர்.
இலங்கையில் வாழுகின்ற ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும்-இரண்டாம் நிலை குடிமக்கள் என்று ஒதுக்கப்படுவதிலிருந்து அந்த மக்கள் இலங்கையில் - எல்லா உரிமைகளையும் பெற்று சமத்துவமாகவும், சமநீதியும் பெற்று வாழும் வகை வகுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக 1956 முதல் குரல் கொடுத்து வரும் தி.மு.கழகத்தையும் -அந்தக் கழகத்தின் தலைவனாக இருக்கின்ற என்னையும்- வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவர் உரக்க உரக்கக் கூறிய "சூன்யக்காரி'', "சூழ்ச்சிக்காரி'', "சண்டாளி'', "சதிகாரி'' என்ற பட்டங்களுக்கு அன்றின்றெனாதபடி என்றென்றும் உரியவரான ஒருவர்-நல்லோர் நாவில் வராத இத்தகைய நச்சுமொழிகளால் அர்ச்சிப்பதை நான் பொருட்படுத்தவில்லை.
2009-ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது -இலங்கையிலே தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் நான் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் உணருவார்கள்.
அதனால் தான் ஈழத்தந்தை செல்வாவின் அன்புமகன் சந்திரஹாசன் எனக்கெழுதிய கடிதத்தில் "ஈழத் தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம். ஆயினும் தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத்தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகின்றது'' என்று எழுதினார். இதனை மனதிலே கொண்டுதான் சில "ஜீவன்''களின் விமர்சனங்களை மறந்துவிடுகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி
வாய்ப்பேச்சு வித்தகன்...! ![தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
![தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி
தமிழர்கள் சாகும்போது டெல்லி போகாமல் தன் மகனுக்கு மந்திரி பதவி வேண்டி டெல்லி சென்ற தமிழின தலைவர் (துரோகி). ![தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
![தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
antokkuly- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010
Re: தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி
கலை wrote:வாய்ப்பேச்சு வித்தகன்...!
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி
antokkuly wrote:தமிழர்கள் சாகும்போது டெல்லி போகாமல் தன் மகனுக்கு மந்திரி பதவி வேண்டி டெல்லி சென்ற தமிழின தலைவர் (துரோகி).
அவன் எல்லாம் ஒரு ஆளா...?அவனக்கு பாராட்டு விழா நடத்தவே நேரம் இல்ல
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தமிழ் ஈழம் மலரும் என்றால் அதற்காக ஆட்சியை இழக்க தயார் என்றவன் நான்: மு.கருணாநிதி
இப்படி பேசி பேசியே தமிழர்கள் தலையில மிளகா அரைப்பதில் இவரை மிஞ்ச வேறு எவரும் இல்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈழம் மலரும் எனில் ஆட்சியை இழக்கத் தயார் என அறிவித்தவன் நான்: கருணாநிதி!!!
» பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு!
» ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும்
» ஈழம் மலரும்
» ஈழம் மலரும்
» பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு!
» ஐ.பி.எல்.லால் ஜெயலலிதா தனது ஆட்சியை இழக்க வேண்டிவரும்
» ஈழம் மலரும்
» ஈழம் மலரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|