ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலை​யா​கும் செம்​மொழி நிலம்

2 posters

Go down

பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Empty பாலை​யா​கும் செம்​மொழி நிலம்

Post by குடந்தை மணி Thu Jul 01, 2010 12:45 pm

பாலை​யா​கும் செம்​மொழி
நிலம்







ப.​ குண​சே​க​ரன்

First Published : 01 Jul 2010 12:21:00 AM
IST





தமி​ழுக்​குச் செம்​மொழி
எனும் தகு​திப்​பாடு உரு​வாக முழு​மு​தற் கார​ண​மாக இருப்​பது சங்க
இலக்​கி​யம்​தான்.​ அந்​தச் சங்க இலக்​கி​யங்​கள் திணைக்​கோட்​பா​டு​களை
அடிப்​ப​டை​யா​கக் கொண்​டவை.​​ தமிழ் நிலம் குறிஞ்சி,​​ முல்லை,​​
மரு​தம்,​​ நெய்​தல்,​​ பாலை என ஐவ​கைத் திணை​க​ளா​கப்
பகுக்​கப்​பட்​டுள்​ளன.​ இந்த ஐவ​கைத் திணை​க​ளுக்​கும் நிலம் என்​பது
பொதுக் கூறாக உள்​ளது.​ அவற்​றோடு நீர் சேரு​கிற அள​வைப் பொறுத்தே திணை
வேறு​பாடு உண​ரப்​ப​டு​கி​றது.​ ​​

நீரே இல்​லாத வறண்ட நிலம்
பாலை​யா​க​வும்,​​ நீர் வளம் நிரம்​பிய வயல் சூழ்ந்த நிலம்
மரு​த​மா​க​வும்,​​ அலை​மே​வும் கடற்​கரை நிலம் நெய்​த​லா​க​வும்,​​
மழைப்​பொ​ழிவு மிகுந்த வனப்​ப​குதி முல்​லை​யா​க​வும்,​​ மழைப்​பொ​ழி​வும்
பனி​யும் கொண்ட மலை நிலம் குறிஞ்​சி​யா​க​வும் கொள்​ளப்​ப​டு​கி​றது.​
இங்கு திணை​யைத் தீர்​மா​னிக்​கும் சிறப்​புக்​கூ​றாக இருப்​பது
நீர்​தான்.​தமி​ழைச் செம்​மொ​ழி​யா​கக் கொண்​டா​டு​கிற அரசு,​​
தமிழ் நிலத்​தை​யும் அதன் நீர்​வள ஆதா​ரங்​க​ளை​யும் பாது​காக்க என்ன
செய்​தி​ருக்​கி​றது என்​பது விடை​யற்ற கேள்​வி​யாக நம்​முன் விரி​கி​றது.​​
இரண்​டா​யி​ரம் ஆண்​டு​க​ளுக்கு முந்​தைய தமி​ழ​ரின் நீர்​வள மேலாண்​மைத்
திறனை வியந்து போற்​றிய தமி​ழக முதல்​வர்,​​ தமது ஆட்​சி​யில்
நிகழ்த்​தப்​ப​டும் நீர்​வள ஆதா​ரங்​க​ளின் மீதான வன்​முறை எத்​த​கைய
வர​லாற்று எதிர்​வி​ளை​வு​களை ஏற்​ப​டுத்​தும் என்​ப​தைக் கவ​னிக்​கத்
தவ​றி​விட்​டார்.​ இப்​பொ​ழுது அரசு மேற்​கொண்​டு​வ​ரும் நீர்​வள ஆதா​ரப்
பரா​ம​ரிப்​புத் திட்​டங்​க​ளெல்​லாம் கைப்​புண்​ணுக்கு மருந்து போடும்
தாற்​கா​லிக வேலையே தவிர,​​ புரை​யோ​டிப்​போன புற்​று​நோ​யைக்
குணப்​ப​டுத்​தக் கூடி​ய​தல்ல.​​ தமி​ழ​கத்​தின் முக்​கி​ய​மான
நீர்​வள ஆதா​ரங்​க​ளான நதி​கள் அனைத்​தும் மிகக் கடு​மை​யான
சுற்​றுச்​சூ​ழல் பாதிப்​புக்கு ஆட்​பட்​டுள்​ளன.​ அவற்றி​லி​ருந்து
நதி​களை மீட்​டெ​டுக்​கக்​கூ​டிய தொலை நோக்​குத்​திட்​டம் எது​வும்
அர​சி​டம் இல்லை என்​பது மிக​வும் வருத்​தத்​துக்​கு​ரி​யது.​

​​தொழிற்​சா​லைக் கழி​வு​க​ளால் நதி​கள் நஞ்​சாக்​கப்​ப​டு​வது
ஒரு​பு​ற​மென்​றால் மறு​பு​றம் மணற்​கொள்ளை தொட​ரு​வ​தால் நதி​கள் தமது
அடை​யா​ளத்தை இழந்து நிற்​கின்​றன.​ ​​ முல்​லைப் பெரி​யாறு
பிரச்​னை​யில் கேரள அர​சும்,​​ காவிரி நதி​நீர்ப் பங்​கீட்​டில் கர்​நா​டக
அர​சும் உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை அவ​ம​தித்​து​விட்​ட​தா​கக்
கூறி​வ​ரும் தமி​ழக முதல்​வர் ​ மட்​டும் என்ன உச்ச நீதி​மன்​றத்​தின்
தீர்ப்பை மதிக்​கவா செய்​கி​றார்?​ கடந்த ஜன​வரி 6-ம் தேதி முதல்
நொய்​ய​லாற்​றில் திருப்​பூர் சாயக்​க​ழிவை வெளி​யேற்​றா​வண்​ணம் தடுக்க
​(ழங்ழ்ர்​ ஈண்ள்​ஸ்ரீட்​ஹழ்ஞ்ங்)​​ முறையை அமல்​ப​டுத்த உச்ச நீதி​மன்​றம்
தீர்ப்​பு​ரைத்​தது.​ அந்​தத் தீர்ப்பு சாக்​க​டை​யில் கரைத்த சந்​த​ன​மாக
மாறி​விட்​டது.​ இன்​ற​ள​வும் நொய்​ய​லாற்​றில் திருப்​பூர் சாயக்​க​ழிவு
நீர் வெளி​யேற்​றப்​ப​டு​வது உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை
அலட்​சி​யப்​ப​டுத்​து​கிற மாநில அர​சின் மெüன சம்​ம​தத்​தோ​டு​தான்
என்​றால் அது மிகை​யா​காது.அண்​மை​யில் மத்​திய ஜவு​ளித்​துறை அமைச்​சர்
தயா​நிதி மாறன் தென்​னிந்​திய நதி​களை இணைக்க வேண்​டி​ய​தன் அவ​சி​யம்
குறித்​துப் பேசி​னார்.​ நதி​களை இணைப்​ப​தற்கு முன்​னர் நதி​க​ளில்
கலக்​கப்​பட்​டு​வ​ரும் தொழிற்​சா​லைக் கழி​வு​க​ளைத் தடுக்க வேண்​டி​யது
அவ​சி​யம் என்​ப​தனை தயா​நிதி புரிந்​து​கொள்ள வேண்​டும்.​ இப்​போ​தைய
சூழ​லில் தமி​ழ​கத்​தின் எந்த நதி​யும் இணைப்​புக்கு ஏற்​ற​தாக இல்லை.​
அந்த அள​வுக்கு நதி​க​ளின் சுற்​றுச்​சூ​ழல் கடு​மை​யா​கப்
பாதிக்​கப்​பட்​டுள்​ளது.​ பவானி-​நொய்​யல் இணைப்பு தோல்​வி​ய​டைந்​த​தன்
பின்​னணி இதற்​குத் தக்க சான்​றாக உள்​ளது.​​ 1953-ம் ஆண்டு
கட்​டப்​பட்ட கீழ்​ப​வானி அணை​யின் நீர்,​​ பாச​னத்​துக்​குப்
பயன்​ப​டுத்​தி​யது போக உப​ரி​யாக உள்ள நீர் நொய்​ய​லாற்​றுக்​குத்
திருப்​பி​வி​டப்​பட்​டது.​ இவ்​வாறு நொய்​ய​லாற்​றில்
திருப்​பி​வி​டப்​பட்ட நீரின் அளவு 2.76 டிஎம்சி ஆகும்.​ இந்த 2.76 டிஎம்சி
நீரை​யும் சின்​ன​முத்​தூர் அருகே கட்​டப்​பட்​டுள்ள தடுப்​ப​ணை​யில்
தடுத்து ஒன்​பது கி.மீ.​ நீள​முள்ள இணைப்​புக் கால்​வா​யின் மூல​மாக
ஆத்​துப்​பா​ளை​யம் நீர்த்​தேக்​கத்​தில் சேமிக்​கப்​பட்டு,​​ கரூர்
மாவட்​டத்​தி​லுள்ள அஞ்​சூர்,​​ துக்​காட்சி,​​ அத்​திப்​பா​ளை​யம்,​​
தென்​னிலை,​​ மண்​மங்​க​ளம்,​​ புஞ்​சைப்​பு​க​ழூர்,​​ மின்​னம்​பள்ளி,​​
குப்​பச்​சி​பா​ளை​யம் முத​லிய இரு​ப​துக்​கும் மேற்​பட்ட வரு​வாய்
கிரா​மங்​க​ளி​லுள்ள 19,406 ஏக்​கர் நிலங்​கள் பாசன வசதி பெற்​று​வந்​தன.​​
ஆனால் திருப்​பூர் சாயக்​க​ழிவு நீர் தொடர்ந்து நொய்​ய​லாற்​றில்
வெளி​யேற்​றப்​ப​டு​வ​த​னால் கீழ்​ப​வா​னி​யின் உபரி நீர் நொய்​ய​லாற்​றில்
திருப்​பி​வி​டப்​ப​டு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ளது.​ மேலும்
ஆத்​துப்​பா​ளை​யம் நீர்த்​தேக்​கத்​தின் பய​னா​ளி​க​ளான விவ​சா​யி​களே
கழிவு நீர் கலந்​துள்ள நொய்​ய​லாற்று நீரை ஆத்​துப்​பா​ளை​யம் அணைக்கு
வரு​வ​தைத் தடுத்து வைத்​தி​ருக்​கிற அவ​லம் நிகழ்ந்​துள்​ளது.​
ஆத்​துப்​பா​ளை​யம் நீர்த்​தேக்​கம் எந்த நோக்​கத்​துக்​கா​கக்
கட்​டப்​பட்​டதோ,​​ அந்த நோக்​கம் நிறை​வே​றா​ம​லேயே சீமைக் கரு​வே​லன்
புதர்​கள் மண்​டிப்​போ​யுள்​ளன.​​

புவி அமைப்​பி​யல்​படி பூமி​யின்
மேற்​ப​ரப்​பில் ஒரு செ.மீ.​ மணல் உரு​வா​வ​தற்கு 100 முதல் 200
ஆண்​டு​க​ளா​கும்.​ இவ்​வாறு ஆயி​ரக்​க​ணக்​கான ஆண்​டு​க​ளாக உரு​வான
மணற்​ப​ரப்பு தொடர்ந்து அள்​ளப்​பட்டு வரு​கி​றது.​ இன்​னும் ஒரு சில
ஆண்​டு​க​ளில் அள்ளி முடிக்​கப்​பட்​டு​வி​டும் என்​ப​தில் எவ்​வித
சந்​தே​க​மு​மில்லை.​ மேட்​டூர் அணையி​லி​ருந்து கல்​லணை வரை காவி​ரி​யின்
நீர்​வ​ழித்​த​டம் கடந்த இரு​பது ஆண்​டு​க​ளுக்கு முன்​பி​ருந்​ததை விட
இப்​பொ​ழுது சரா​ச​ரி​யாக 12 அடி பள்​ள​மா​கி​விட்​டது.​ இதன்​கா​ர​ண​மாக
காவி​ரி​யாற்​றின் இரு​க​ரை​க​ளி​லு​முள்ள பல்​வேறு பாச​னக்
கால்​வாய்​க​ளுக்கு நதி​யின் நீர் செல்​வது தடை​பட்​டுள்​ளது.​​
கரூர்,​​ திருச்சி,​​ புதுக்​கோட்டை ஆகிய மாவட்​டங்​க​ளின் பல்​லா​யி​ரம்
ஏக்​கர் விளை நிலங்​க​ளின் பாச​னத் தேவையை நிறைவு செய்த கட்​ட​ளைத்
தென்​கரை கால்​வா​யைக் காட்​டி​லும் காவிரி ஆறு இப்​பொ​ழுது
பள்​ள​மா​கி​விட்​டது.​ இப்​பி​ரச்​னை​யைச் சமா​ளிக்க தமி​ழக அரசு,​​ கரூர்
மாவட்​டம் மாய​னூர் அருகே 180 கோடி ரூபாய் செல​வில் கத​வணை அமைத்து
வரு​கி​றது.

​​ "ஆற்​றுப் பெருக்​கற்று அடி​சு​டும் அந்​நா​ளும்
ஊற்​றுப் பெருக்​கால் உல​கூட்​டும்' என்று ஆற்று மண​லின் நீர்
பிடிப்​புத்​தன்​மை​யைப் போற்​று​கி​றது செம்​மொ​ழித் தமிழ் இலக்​கி​ய​மான
மூதுரை.​ இத்​த​கைய அருமை வாய்ந்த ஆற்று மணல் தொடர்ந்து
அள்​ளப்​ப​டு​வ​த​னால் காவி​ரிப் படு​கை​யின் நிலத்​தடி நீர் மட்​டம்
வெகு​வா​கக் குறைந்து கொண்டே வரு​கி​றது.​ ​ ​ ​ ​ இந்​நி​லை​யில் மதுரை,​​
திண்​டுக்​கல்,​​ சிவ​கங்கை,​​ ராம​நா​த​பு​ரம் முத​லிய பல்​வேறு
மாவட்​டங்​க​ளுக்​கான கூட்​டுக் குடி​நீர்த் திட்​டங்​கள் காவி​ரி​யின்
கரையி​லி​ருந்து செயல்​ப​டுத்​தப்​பட்டு வரு​கின்​றன.​ மணல்
அள்​ளப்​ப​டு​வது உட​ன​டி​யாக நிறுத்​தப்​பட்டு நிலத்​தடி நீர்​மட்​டம்
பாது​காக்​கப்​ப​டா​விட்​டால் பல நூறு கோடி ரூபாய் செல​வில்
தொடங்​கப்​பட்​டுள்ள கூட்​டுக் குடி​நீர்த் திட்​டங்​க​ளெல்​லாம்
பய​னற்​றுப் போகும்.​ ​​
பல்​வேறு மாநி​லங்​க​ளில் மண​லுக்கு
மாற்​றான கட்​டு​மா​னப் பொரு​ளாக பாறைத் துக​ளைப் பயன்​ப​டுத்​து​வது
அதி​க​ரித்​துள்​ளது.​ ஆனால்,​​ தமி​ழ​கத்​தில் மட்​டும் மணல்
விற்​ப​னை​யைத் தொட​ரும் அர​சின் கொள்கை நிலைப்​பாடு நீர்​வள
ஆதா​ரங்​க​ளைப் பாது​காக்க வேண்​டி​யது பற்​றிய தொலை நோக்​கின்​மை​யையே
காட்​டு​கி​றது.​
நாக​ரி​கம் வளர்த்த நம் நதி​க​ளை​யெல்​லாம் வெறும் மணற்
குவா​ரி​க​ளாக மாற்​றிய பெருமை திரா​விட ஆட்​சி​யா​ளர்​க​ளையே சாரும்.​அரசு
நடத்​தும் டாஸ்​மாக் நிறு​வ​னத்​துக்​காக தமிழ்​நாட்​டி​லுள்ள ஒன்​பது
மது​பா​னத் ​ தொழிற்​சா​லை​கள் தயா​ரித்​த​ளிக்​கும் மது​பா​னங்​கள்
போதா​மல் பத்​தா​வ​தா​கத் தஞ்சை வட​சே​ரி​யில் மது​பா​னத் தொழிற்​சாலை
அமைக்​கத் தீவிர முயற்சி நடை​பெற்று வரு​கி​றது.​

விவ​சா​யத்​தையே
வாழ்​வா​தா​ர​மா​கக் கொண்​டுள்ள வட​சேரி கிரா​மத்​தி​ன​ரின் கடு​மை​யான
எதிர்ப்​பை​யும் பொருள்​ப​டுத்​தா​மல் அதற்கு அரசு நிர்​வா​கம்
அனு​ம​தி​ய​ளித்​தி​ருப்​ப​தன் பின்​னணி மக்​கள் ​ நலமா?​ சுய நலமா?​​
உள்​ளூர் மக்​களை காவல்​து​றையை ஏவி விரட்​டி​ய​டித்​து​விட்டு வெளி​யூர்
மக்​க​ளைக் கொண்டு ஆலை வளா​கத்​துக்​குள்​ளேயே தமக்கு ஆத​ர​வான ஒரு
கருத்​துக்​கேட்பு நாட​கத்தை அரங்​கேற்​றி​யுள்​ள​னர்.​ முப்​போ​கம் நெல்
விளை​கிற வட​சேரி கிரா​மத்​தின் சிறப்பே ஐந்​தடி ஆழத்​தில் நிலத்​தடி
நீர்​மட்​டம் இருப்​ப​து​தான்.​

சரா​ச​ரி​யாக இரண்டு ஏக்​க​ருக்கு ஓர்
ஆழ்​து​ளைக் கிணறு அமைத்து விவ​சா​யத்​துக்கு நிலத்​தடி நீரைப்
பயன்​ப​டுத்​து​வ​தைக் காட்​டி​லும் நாற்​பது ஏக்​கர் பரப்​ப​ள​வில்
அமைந்​துள்ள மது​பா​னத் தொழிற்​சா​லைக்கு மூன்று ஆழ்​து​ளைக்​கி​ண​று​கள்
மட்​டுமே அமைத்து நாளொன்​றுக்கு 17 லட்​சம் லிட்​டர் நீரைப்
பயன்​ப​டுத்​து​வ​தா​கக் கூறும் ஆலை நிர்​வா​க​மும் அதற்கு ஒப்​பு​தல்
அளித்​துள்ள தமிழ்​நாடு நிலத்​தடி நீர் வாரி​ய​மும் ஓர் உண்​மையை
மறைத்​து​விட்​டன.​​ விவ​சா​யி​கள் எவ்​வ​ளவு நீரைப்
பாச​னத்​துக்​காக நிலத்​தின் அடியி​லி​ருந்து எடுத்​தா​லும் பயி​ருக்​குத்
தேவை​யா​னது போக மீத​முள்ள நீர் மீண்​டும் நிலத்​துக்​க​டி​யில்
செல்​வ​தால் நிலத்​தடி நீர்​மட்​டம் குறை​வு​ப​டா​மல்
பாது​காக்​கப்​ப​டும்.​ இது சாதா​ரண அறி​வுக்​கும் எட்​டக்​கூ​டிய
அறி​வி​யல் உண்மை.​

ஆனால்,​​ மது​பா​னத் தொழிற்​சாலை உறிஞ்சி எடுக்​கும் 17
லட்​சம் லிட்​டர் நீரும் மது​பா​ன​மாக மாற்​றப்​பட்டு,​​ பாட்​டில்​க​ளில்
அடைக்​கப்​பட்டு செந்​த​மி​ழர் நாடு முழு​வ​தும் விற்​ப​னைக்கு
அனுப்​பப்​ப​டும்.​ இத​னால் இப்​ப​கு​தி​யின் நிலத்​தடி நீர்​மட்​டம்
ஒரு​சில ஆண்​டு​க​ளில் பல நூறு அடி கீழே சென்​று​வி​டும் என்​ப​தில்
ஐய​மில்லை.​


நன்றி : தினமணி


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Empty Re: பாலை​யா​கும் செம்​மொழி நிலம்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 1:05 pm

அருமையான பதிவு பாலை​யா​கும் செம்​மொழி நிலம் 678642



பாலை​யா​கும் செம்​மொழி நிலம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum