ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திர தோஷம்

Go down

புத்திர தோஷம் Empty புத்திர தோஷம்

Post by சிவா Mon Jul 13, 2009 7:04 am

ஒருவருக்கு அனைத்து வகையான செல்வம், வீடு, மனை ஆடம்பர வசதிகள் இருந்தாலும், ஒரு பிள்ளை கூட இல்லை என்றால் அவரது வாழ்வில் நிம்மதி இருக்காது. வேறு சிலருக்கு பிள்ளைகள் பல இருந்தும் நிம்மதி இல்லாமல் பிள்ளை கள் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடுவதும், தற்கொலை செய்து கொள்ளும் இன்றைய வழக்கமாக இருக்கிறது. இதற்கு சாதகரீதியாக என்ன காரணம் என்று தெளிவாக காணலாம். 1, 5, 9 இந்த ஸ்தானங்கள் திரிகோனம் என்று சொல்லப்படுகிறது. இந்த திரிகோண ஸ்தானம் ஒருவருக்கு பலமாக அமைந்து இருந் தால் அவர் வாழ்க்கையில் பல விதத்திலும் முன்னேற்றம் காண்பார்;

சந்தோசமான வாழ்க்கை அமையும். இதில் 5-ஆம் இடம் புத்திர ஸ்தானம் என்று கருதப்படுகிறது. இந்த வீட்டில் இரண்டு பாபர் அமர்ந்து அந்த வீட்டிற்குறியோன் பலம் இழந்தால் புத் திரபாக்கியம் இருக்காது. குரு பார்த்தால் பரிகாரம் மூலம் ஒரு குழந்தை ஏற்படும். ஐந்தாம் இடத்தில் குரு இருப்பது பத்தி காரக தோசம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பலன் அனுபவ ரிதியா ஒத்துவரவில்லை. இருப்பினும் 5-ம் வீட்டில் குரு இருந்து அந்த வீட்டிற்கு உரிய கிரகம் மறைந்து விட்டால், புத்திரர் இருந்தும் அதனால் நன்மை இல்லை. 5-ம் இடம் முழுவதும் கெட்டு போய் இருப்பினும் லக்கினாதிபதியும் குருவும் வலதுப் பெற்றால் பரிகாரம் மூலம் குழந்தை ஏற்படும். ஏதேனும் ஒரு இடத்தில் குருபலம் பெற்று குருவிற்கு 5-ல் ஒரு சுபகிரகம் பலமாக அமைந்தால் அவர்களுக்கு தாமதமாக ஒரு குழந்தை பிறக்கும். இவை இல்லாமல் 9, 10-க்குடையே கிரகம்; பலம் பெற்றால், தன்னை கர்மம் செய்வதற்காக 42 வயதுக்கு மேல் ஒரு குழந்தை பிறக்கும்.

ஐந்து உடைய கிரகம் 11-ஆம் வீட்டில் இருந்தால் ஐந்து குழந்தை களுக்கு மேல் இருக் கும். 10-ஆம் இடத்தில் இருந்தால் நான்கு குழந் தைகள் இருக்கும். 9-ஆம் இடத் தில் இருந்தால் நான்கு குழந்தைகள் இருக்கும். 7-ஆம் இடத்தில் இருந்தால் 6 குழந்தைகள் இருக்கும். 5-ஆம் இடத்தில் இருந்தால் 5 குழந்தைகள் இருக்கும். 4-ஆம் இடத்தில் இருந்தால் 4 குழந்தைகள் இருக்கும். 3-ஆம் இடத்தில் இருந்தால் 2 குழந்தைகள் இருக்கும். 2-ஆம் இடத்தில் இருந்தால் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கும். லக்கினத்தில் இருந்தால் மூன்று குழந்தைகள் இருக்கும். இருப்பினும் 5ஆம் இடத்தில் பாபகிரகம் இருந்தால் இந்த குழந்தைகளின் எண் ணிக்கை பாதியாக குறைந்து விடும். 5ஆம் இடத்து கிரகம் 6, 8, 12-ல் இருந்தால் ஒரு குழந்தை மட்டும் இருக்கும். ஆனால் குரு பகவான் 5-ஆம் இடத்தையோ, அவ்வீட்டிற்கு உரியோனை பார்த்தால் இரண்டு குழந்தைகள் வரை இருக்கும். ஒரு சாதகத்தில் குரு பகவான் பலம்பெற்று இருந்தால் பரிகாரம் மூலம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். குருவின் அனுக்கிரகம் இல்லாவிட்டால் காசி, ராமேஸ்வரத்தில் மூழ்கினாலும் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தாலும் குழந்தை ஏற்படாது.

ஒருவருக்கு புத்திர தோசம் ஏற் பட்டால் அவரது நட்சத்திரமும் அமா வாசையும் கூடும் ஒருநாளில் கணவர்- மனைவி இருவரும் இராமேஸ்வரம் கடலில் 21 தடவை மூழ்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் ஒம்பவசிவ என்று 10 தடவை செபித்து மூழ்க வேண்டும். பின்பு கோவில் பிரகாரத்தில் உள்ள 21 தீர்த்தத்திலும் மூழ்கி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். பின்பு புத்திர பாக்கியம் வேண்டி சுவாமியை மனதில் நிறுத்தி ஒரு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும். பின்பு அடுத்து வரும் அமாவாசை அன்று தனது சாதகம் சம்பந்தப்பட்ட கோவில் களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

ஐந்தாம் இடத்தில் ராகு இருந் தால் அல்லது கேது இருந்தால் திருநாகேஸ் வரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இராகுவை தரி சனம் செய்து அங்கு இராகுவை ஒரு மணி நேரம் தியானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் உடனே குழந்தை பிறக்கும்.

சனி ஈஸ்வரன் 5-ம் இடத்தில் இருந்தால் திருநள்ளாறு சென்று அங்கு தீர்த்தமாடி சனி பகவானை தியானித்து ஒரு மணி நேரம் கோவிலில் தியானம் செய்ய வேண்டும். செவ்வாய் பகவான் 5-ம் இடத்தில் இருந்தால் வைத்தீஸ்வரன் கோவில் சென்று தீர்த்தமாடி அங்கு கோவிலில் ஒருமணி நேரம் தியானம் செய்ய வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புத்திர தோஷம் Empty Re: புத்திர தோஷம்

Post by சிவா Mon Jul 13, 2009 7:06 am

இனி லக்கின வாரியாக இந்த தோசத்தைப் பற்றி பார்க்கலாம்.

மேஷம்: இந்த லக்கினத்திற்கு 5-க்குடைய சூரியன் ஆறில் மறைந்தால் தோசம் இல்லை. 8-ல் மறைந்தால் அற்ப புத்திரம், 12ல் இருந்தால் உதவாத புத்தரம் ஏற்படும். 5-ஆம் இடத்தில் இரண்டு மூன்று பாபக்கிரகம் இருந்தால் புத்திரர் இல்லை. ஐந்தாம் இடத்தை குரு பார்த்தால் பரிகாரம் மூலம் குழந்தை ஏற்படும்.

ரிஷபம்: இந்த லக்கின காரர்களுக்கு புதன் 6, 8, 12ல் மறைந்தாலும் தோச மில்லை. தோசமாகியிருந்தால் கால் தோசம் தான் ஏற்படும். சூரியன் கூட அதிக தோசத்தை ஏற்படுத்தாது. இராகு செவ்வாய் இருப்பதுதான் கடுமையான தோசம். இருப்பினும் குரு பார்த்தால் தோசம் விலகும்.

மிதுனம்: சுக்கிரன்தான் இந்த சாதகருக்கு புத்திர ஸ்தானாதி பதி சுக்கிரன் 4ல் நிசம் பெற்றால் புத்திரத்தடை வரும். 5ல் இரண்டுக்கு மேற்பட்ட பாபக்கிகரம் இருந்தால் குழந்தை இருக்காது. செவ் வாய், சனி, ராகு, சூரியன் போன்ற கிரகங்கள் ஐந்தாம் இடத்தில் இருந்தால் கடுமை யான தோசம் ஏற் படுத்தும்.

கடகம்: இந்த லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் 6-ல் இருந்து தோசம் தராது. ஆனால் 8, 12ல் செவ்வாய் மறைந்தால் புத்திர தோசம் ஏற்படுத்தும். 5-ம் இடத்தில் சூரியன் ராகு, சனி போன்ற கிரகங்கள் இருப்பது கடுமையான தோசத்தை ஏற்படுத்தும். குரு பார்த்தால் கூட புத்திர பாக்கியம் ஏற்படாது.

சிம்மம்: இந்த லக்கினகாரர்களுக்கு குரு 6, 8ல் மறைந்தால் கடுமையான தோசம் 12ல் தோசம் இல்லை. ஐந்தில் இராகு, சனி இருந்தால் கடுமையான தோசம் ஏற்படும்;. குரு பகவான் 5-ம் இடத்தை பார்த்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும்.

கன்னி: இந்த லக்கினகாரர்களுக்கு சனி 8, 12ல் இருப்பது புத்திர தோசம் ஏற்படும். 5ல் சூரியன் ராகு, செவ்வாய் இருப்பது புத்திர தோசமாகும். இதன் மூலம் புத்திர தடை உருவாகும்;. குரு பார்த்தால் பரிகாரம் மூலம் குழந்தைப் பிறக்கும்.

துலாம்: இந்த லக்கினகாரர்களுக்கு சனி 12ல் இருப்பது புத்திரதோசம். ஐந்தில் இராகு சூரியன் செவ்வாய் இருப்பதும் புத்திர தோசமாகும். இந்த இடத்தை குரு சுக்கிரன் பார்த்தால் பரிகாரம் மூலம் குழந்தை பிறக்கும்.

விருச்சிகம்: இந்த லக்கினகாரர்களுக்கு குரு மூன்றில் நீசம் பெறுவது புத்திர தோசமாகும். சனி செவ்வாய் இராகு இருப்பது கடுமையான புத்திர தோஷமா கும். ஆகவே குரு பார்த்தால் தோசம் நிவர்த்தியாகும்.

தனுசு: ஐந்துக்குடைய செவ்வாய் 8-ல் இருப்பது தோசமாகும். ஐந்தில் சனி சூரி யன் இருப்பது கடுமையான தோசத்தை ஏற்படுத்தும். குரு பார்த்தால் பரிகாரம் மூலம் குழந்தை பிறக்கும்.

மகரம்: இந்த லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் 8ல் மறைவது தோசமாகும். 5-ல் இராகு சனி சூரியன் இருப்பது தோசம் உண்டாகும். குரு பார்த்தால் தோசம் விலகும்.

கும்பம்: இந்த லக்கினகாரர்களுக்கு புதனால் தோசம் இல்லை. ஐந்தில் சனி சூரியன் ராகு, செவ்வாய் போன்ற கிரகம் இருப்பது தோசமாகும். பரிகாரம் மூலம் சரியாகும்.

மீனம்: இந்த லக்கினகாரர்களுக்கு சந்திரன் 8ல் இருப்பது கடுமையான புத்திர தோசமாகும். 6ல் இருப்பது சாதாரண தோசத்தை தரும். ஐந்தாம் இடத்தில்; இராகு சூரியன் செவ்வாய் சனி போன்ற கிரகங் களில் இரண்டு இருந்தால்கூட குழந்தை பிறக்காது. பரிகாரம் மூலம் குழந்தை பிறக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum