ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி

Go down

இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Empty இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி

Post by ரபீக் Sun Jun 20, 2010 11:26 am

ராகுலுக்கு இன்று வயது 41.

இந்தியா முழுவதும் இளைஞர்கள் தங்கள் இளந்தலைவரின் பிறந்த நாளை உற் சாகமாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். நேருவின் கொள்ளுப் பேரன், இந்திராவின் பேரன், ராஜீவ்வின் மகன் என்ற அரசியல் பாரம்பரியத்தக்கு சொந்தக்காரர்.

100 கோடி மக்கள் வாழும் இந்தியாவை ஆளும் குடும் பத்தின் வாரிசாக இருந்தும் எளிமையான வாழ்க்கை யிலும், முதிர்ந்த அனுபவ சாலி போன்ற பேச்சாலும் இந்திய மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளார். எனவே அவரை வாழ்த்து வதில் நாடு முழுவதும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள ராகு லின் இன்னொரு பக்கம் சோகம் நிறைந்தது.

பாட்டி இந்திராவின் கையை பிடித்து ராகுல் உற்சாகமாக திரிந்தகாலம். திடீரென்று ஒரு நாள் சீக்கிய பாதுகாவலரால் வீட்டு முன்பே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது ராகுலுக்கு வயது 17. துள்ளித்திரியும் இளமைப்பருவம் அது. ஆனால் பாதுகாப்பு காரணங் களுக்காக ராகுலும், பிரியங் காவும் பாதுகாப்பு வளைத் துக்குள் கொண்டு வரப்பட்டனர். இதனால் அவரது இளமைக்கால சந்தோஷம் பறிபோனது.

அடுத்த 7 ஆண்டுகளில் தந்தை ராஜீவையும் இழக்க வேண்டியதாயிற்று. விமா னியாக இருந்து கொண்டு மனைவி, குழந்தைகளுடன் குதூகலமாக வாழ்ந்த ராஜீவ் இந்திரா மறைவுக்கு பிறகு அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார்.

1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடி குண்டால் ராஜீவ் உயிர் பறிக்கப்பட்டது. வீட்டில் இருந்து உற்சாகமாக தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்பிய ராஜீவ் சிதறடிக்கப்பட்டது சோனியா குடும்பத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதனால் ராகுலின் பாது காப்பு மேலும் பல மடங்கு அதிகமானது. பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளி விட்டு பள்ளி மாற்றி மாற்றி படிக்க வைக்கப்பட்டார். அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார்.

அம்மா, தங்கை என்ற பந்தங்களோடு ஒதுங்கியே வாழ்ந்தார்.

ஆனால் ராஜீவைப் போல் சோனியாவும் அரசியல் களத்துக்குள் இழுத்து வரப்பட்டார். பிரதமர் பதவி தேடி வந்ததையும் சோனியா ஏற்கவில்லை. தாயின் தியாகத்தையும், உள் உணர்வையும் ராகுல் புரிந்து கொண்டார்.

மகன் பதவி ஏற்க தயாராகும் வரையில் அந்த பதவியை தனது விசுவாசி யான மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தார் சோனியா. ராகுல் எப்போது விரும் பினாலும் பிரதமர் பதவியை விட்டு கொடுக்க தயார் என்று மன்மோகன்சிங்கும் அறிவித்தாயிற்று. அப்படியும் ராகுல் பிரதமர் பதவியை ஏற்கவில்லை ஏன்?

தான் ஒரு பயிற்சி மாணவன் போல் அரசியலின் அனைத்து நெளிவு சுளிவு களையும் கற்று தேர்ந்து வருகிறார். இந்தியாவை கண்டறிவோம் என்ற தலைப்புடன் கடந்த 3 ஆண்டுகளாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். குக்கிராமங்களுக்கு செல்லும் ராகுல் காந்தி புழுதி படிந்த தரையில் காலை மடித்து உட்கார்ந்து கிராமத்து மக்களுடன் பேசுகிறார். அவர்களின் வாழ்க்கை முறைகளை பார்க்கிறார். குறைகளையும் கேட்கிறார்.

அரண்மனை வாசி களுக்கு குடிசைகளின் நிலை தெரிவதில்லை என்பார்கள். ஆனால் ராகுல் குடிசைகளிலும் தங்கி ஏழ்மையின் அனுபவத்தை உணர்ந்து வருகிறார். ராகுலின் சுற்றுப் பயணம் பயன் தராது என்று பல மட்டங்களில் இருந்தும் விமர்சனம் எழுந்தது. அவர் தொட்டியில் வாழும் மீன் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிந்து விட்டார். தனது சுற்றுப்பயணத் தாலேயே காங்கிரசின் செல்வாக்கை தலை நிமிர செய்தார். கடந்த பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் தான் முக்கிய காரணம் என்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

மிக சாதாரணமாக பைஜாமா, குர்தா அணிந்து கொண்டு சராசரி இளை ஞனை போல் ராகுல் வலம் வருவது அவருக்கே உரிய பாணி. ஆடம்பரத்தை அவர் விரும்புவதில்லை. உணவு விசயத்திலும் மிகவும் கட்டுப்பாடானவர். காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வதிலும் தவறுவதில்லை.

தன்னை சந்திக்கும் இளைஞர்களிடம் உடல் ஆரோக்கியம், உணவு விசயங்கள் பற்றி ஒரு ஆசிரியர் போல் பாடம் சொல்லி கொடுக்கிறார்.

நாடு முழுவதும் ஒரு கோடி இளைஞர்களை காங்கிரஸ் பக்கம் இழுத்துள்ளார். இந்த இளைஞர்களில் தகுதி வாய்ந்தவர்களை பதவியில் அமர்த்துவதே அவரது நோக்கம். கட்சி யில் நியமனம் இருக்க கூடாது. திறமையானவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

பதவி ஆசை பிடித்தவர் களை அருகில் நெருங்க விடுவதில்லை. சுய நலம் இல்லாமல் உழைக்கும் சில இளைஞர் வட்டாரத்தை தன் அருகில் வைத்துள்ளார்.

நாடு முழுவதும் திறமை சாலிகள் என்று ஒரு இளைஞர் பட்டாளத்தை தேர்வு செய்து வைத்துள்ளார். கட்சிக்கு அப்பாற்ப்பட்டு செயல்படும் இவர்கள் நாட்டு நடப்புகளையும், கட்சி செயல்பாடுகளையும் அவ்வப் போது இ-மெயிலில் தகவல் தெரிவிக்கிறார்கள். அந்த மெயில்களை பார்த்து உடனுக்குடன் பதில் அளித்து வருகிறார்.

இந்திய பிரதமராகும் வாய்ப்பு உள்ளவர் என்ற தகுதியோடு இருக்கிறார். ஆனாலும் இந்த இலக்கை எட்ட பல தடைகள் உள்ளன.

முதியவர்களை ஒதுக்கி வைக்கும் அவரது முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பும். ஆனால் அதையெல்லாம் மீறி இளைஞர்கள் மத்தியில் கட்சியை வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்.

தன்னை நோக்கி இழுக்கும் சவால்களை அவர் கண்டு கொள்வதில்லை. குடும்ப பாரம்பரியம், அதிகரித்து வரும் செல்வாக்கு இவை யெல்லாம் அவருக்கு சாதகமாக மாறி உள்ளது. இதுவே அவரை தலைமை பீடத்துக்கு அழைத்து செல்லும்.

புத்தக பிரியர்

ராகுல் காந்தி புத்தக பிரியர். அரசியல், பொருளா தாரம், இலக்கிய புத்தகங் களை விரும்பி படிப்பார்.

முதுபெரும் எழுத்தா ளரான குஷ்வந்த்சிங் ராகுலை பற்றி கூறும் போது, அவர் புத்திசாலி, நிறைய விசயங்களை தெரிந்து வைத்துள்ளார். யாரிடமும் விருப்பு வெறுப்பு இல்லாமல் பேசுகிறார். அவரை சந்தித்ததுசம அறிவுள்ள இருவர் கலந்து உரையாடியது போல் இருந்தது என்கிறார்.

பிரியங்கா மீது தனி பிரியம்

ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா மீது தனி பிரியம் உடையவர். சுற்றுப் பயணத்தில் இருந்தாலும் தினமும் பிரியங்காவிடம் பேச தவறுவதில்லை.

எனது சகோதரியை விட எனக்கு நெருக்கமாக யாரும் இல்லை என்று ராகுல் காந்தி பெருமையுடன் கூறுகிறார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum