Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியிடம் சிறந்தவரெ மனிதர்களில் சிறந்தவர்....
5 posters
Page 1 of 1
மனைவியிடம் சிறந்தவரெ மனிதர்களில் சிறந்தவர்....
பிஸ்மில்லஹீர் ரஹ்மானிர் ரஹீம்
மனைவியெனில்படுக்கையில்பாலுணர்வைப்பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட
இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது?
இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச்
சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று சிலர் எண்ணுகின்றனர்.
ஆனால் மனைவியின் உணவு,உடை,அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்பது இஸ்லாம் நமக்கு கற்றுத்தரும் பாடம்.
''இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை
நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள்மனைவியரிடம்
நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் :அபூஹுரைரா ரளியல்லாஹு
அன்ஹு, நூல் : திர்மிதி எண்: 1082)
ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம்.ஆனால் வீட்டுக்கு
நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள். இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக்
கொண்டிருக்கின்றோம்.
இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம்
முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட
வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி
எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன்
எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக்
கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது.
மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன?
ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய
வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது,
''நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை
கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே
தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக்
காட்டக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா ரளியல்லாஹு
அன்ஹு, நூல் : அபூதாவூத் 1830)
நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கட்டளையிடுகின்றார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில்
தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும்
என்று உத்தரவிடுகின்றார்கள்.
உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு அத்துடன் மட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி
விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப்
பார்க்கிறோம்.
''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப் படுவீர்.
உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள
உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ்
ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 56)
மனைவியருக்கும் சுயமரியாதை உண்டு சுய மரியாதையைப்
போற்றுதல் மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.
அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல்
அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 4942, 5204)
மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய்
படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா?
என்று இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது
மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும். அடுத்ததாக ''பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.
இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள்.
அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில்
திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல
பண்பல்ல! இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து
எறிந்து விட வேண்டும்.
மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு
இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது. பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயர்ந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல்
அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல்கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும்
காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத்
தொடர்கின்றது.
மனைவியின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்
இதோ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையைப்
பாருங்கள்! ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த
தமது மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா
அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு
அன்ஹா உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம்
சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃலிக்கு செல்கின்றார்கள்.
உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா எழுந்து, நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பகீஃ
வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு
முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள்.
மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக
சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு
உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
உடனே ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நடந்த நிகழ்வைக்
கூறுகின்றார்கள். ''பகீஃலிக்கு சென்று பாவமன்னிப்பு
தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து
என்னிடம் கூறினார்கள்.
அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய்
என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்'' என்று
தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது
மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள்.
(ஹதீஸின் சுருக்கம்) (நூல் : முஸ்லிம் 1619)
இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும்
எழுப்பவில்லை. அதன் பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் நம் நாட்டிலோ
''பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி'' என்று பதிகம் பாடிக்
கொண்டிருக்கின்றார்கள். தனது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைப்பிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல! அது அவர்களின் அன்றாட
வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ்
உணர்த்துகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது
அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர்
ஸஜ்தச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக்கொண்டிருந்தால்என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால்
அவர்களும் படுத்துவிடுவார்கள்.
(அறிவிப்பவர் : ஆயிஷா
ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 1119)
மனைவியின் ரசனைக்கு மதிப்பளியுங்கள் ஒரு
பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து
விளையாடினார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள்தாமாகவோ அல்லது நான்
கேட்டுக்கொண்டதற்காகவோ, ''நீபார்க்கஆசைப்படுகின்றாயா?''
என்று கேட்டார்கள்.நான் ஆம் என்றேன்.அவர்கள் என்னைத்
தமக்குப் பின்புறமாகஎன் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறுநிற்க வைத்தனர்.
(பிறகுஅவர்களைநோக்கி)''அர்பிதாவின்
மக்களே! விளையாட்டைத்தொடருங்கள்'' என்றுகூறினார்கள். நான்பார்த்துச் சலித்த போது, ''உனக்குப் போதுமா?'' என்று
கேட்டார்கள். நான் ஆம் என்றேன்.''அப்படியானால் செல்'' என்று கூறினார்கள்.(அறிவிப்பவர் :ஆயிஷா ரளியல்லாஹு
அன்ஹா, நூல் : புகாரி950)
இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு
சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில்
அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட
இயந்திரம்! இவளிடம்என்ன பேச்சுவேண்டியிருக்கின்றது?
இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச்
சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம்.நன்மையல்லாத காரியத்தையா நபிகள்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மனைவியின் உணவு, உடை,அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக! மாநபி வழியில் நடை
போடுவோமாக!
மனைவியெனில்படுக்கையில்பாலுணர்வைப்பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட
இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது?
இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச்
சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று சிலர் எண்ணுகின்றனர்.
ஆனால் மனைவியின் உணவு,உடை,அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்பது இஸ்லாம் நமக்கு கற்றுத்தரும் பாடம்.
''இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை
நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள்மனைவியரிடம்
நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் :அபூஹுரைரா ரளியல்லாஹு
அன்ஹு, நூல் : திர்மிதி எண்: 1082)
ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம்.ஆனால் வீட்டுக்கு
நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள். இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக்
கொண்டிருக்கின்றோம்.
இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம்
முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட
வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி
எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன்
எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக்
கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது.
மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன?
ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய
வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது,
''நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை
கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே
தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக்
காட்டக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா ரளியல்லாஹு
அன்ஹு, நூல் : அபூதாவூத் 1830)
நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கட்டளையிடுகின்றார்கள். கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில்
தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள். நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும்
என்று உத்தரவிடுகின்றார்கள்.
உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு அத்துடன் மட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிற்கவில்லை. உனது மனைவிக்கு நீ ஊட்டி
விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப்
பார்க்கிறோம்.
''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப் படுவீர்.
உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள
உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ்
ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 56)
மனைவியருக்கும் சுயமரியாதை உண்டு சுய மரியாதையைப்
போற்றுதல் மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும். இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.
அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல்
அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 4942, 5204)
மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய்
படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா?
என்று இந்த ஹதீஸ் கேட்கின்றது. அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது
மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும். அடுத்ததாக ''பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.
இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள்.
அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில்
திட்டித் தீர்த்து விடுகின்றார்கள். நிச்சயமாக இது ஒரு நல்ல
பண்பல்ல! இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து
எறிந்து விட வேண்டும்.
மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு
இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது. பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயர்ந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது. வேலைக்காரியை எழுப்புவது போல்
அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல்கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும்
காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத்
தொடர்கின்றது.
மனைவியின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம்
இதோ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையைப்
பாருங்கள்! ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த
தமது மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா
அருகில் வந்து படுக்கின்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு
அன்ஹா உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம்
சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃலிக்கு செல்கின்றார்கள்.
உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா எழுந்து, நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பகீஃ
வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு
முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள்.
மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
விசாரிக்கின்றார்கள். அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக
சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு
உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
உடனே ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நடந்த நிகழ்வைக்
கூறுகின்றார்கள். ''பகீஃலிக்கு சென்று பாவமன்னிப்பு
தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து
என்னிடம் கூறினார்கள்.
அதற்காக நான் புறப்பட்டேன். அப்போது நீ உறங்குகின்றாய்
என்றெண்ணினேன். உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன். அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்'' என்று
தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது
மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள்.
(ஹதீஸின் சுருக்கம்) (நூல் : முஸ்லிம் 1619)
இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும்
எழுப்பவில்லை. அதன் பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை. காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான். ஆனால் நம் நாட்டிலோ
''பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி'' என்று பதிகம் பாடிக்
கொண்டிருக்கின்றார்கள். தனது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதர்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைப்பிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல! அது அவர்களின் அன்றாட
வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ்
உணர்த்துகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது
அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர்
ஸஜ்தச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக்கொண்டிருந்தால்என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கி விட்டால்
அவர்களும் படுத்துவிடுவார்கள்.
(அறிவிப்பவர் : ஆயிஷா
ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 1119)
மனைவியின் ரசனைக்கு மதிப்பளியுங்கள் ஒரு
பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து
விளையாடினார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்கள்தாமாகவோ அல்லது நான்
கேட்டுக்கொண்டதற்காகவோ, ''நீபார்க்கஆசைப்படுகின்றாயா?''
என்று கேட்டார்கள்.நான் ஆம் என்றேன்.அவர்கள் என்னைத்
தமக்குப் பின்புறமாகஎன் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறுநிற்க வைத்தனர்.
(பிறகுஅவர்களைநோக்கி)''அர்பிதாவின்
மக்களே! விளையாட்டைத்தொடருங்கள்'' என்றுகூறினார்கள். நான்பார்த்துச் சலித்த போது, ''உனக்குப் போதுமா?'' என்று
கேட்டார்கள். நான் ஆம் என்றேன்.''அப்படியானால் செல்'' என்று கூறினார்கள்.(அறிவிப்பவர் :ஆயிஷா ரளியல்லாஹு
அன்ஹா, நூல் : புகாரி950)
இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு
சதைப் பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில்
அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட
இயந்திரம்! இவளிடம்என்ன பேச்சுவேண்டியிருக்கின்றது?
இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச்
சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம்.நன்மையல்லாத காரியத்தையா நபிகள்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மனைவியின் உணவு, உடை,அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக! மாநபி வழியில் நடை
போடுவோமாக!
asksulthan- இளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
Re: மனைவியிடம் சிறந்தவரெ மனிதர்களில் சிறந்தவர்....
படிக்கவே ரொம்ப அருமையா இருக்கு....
பெண்களையும் மதிக்கச்சொல்லி இறைவன் சொல்லுவது எத்தனை அன்பான விஷயம்.... மிக அருமையான பதிவு....
அன்பு நன்றிகள் சுல்தான்
பெண்களையும் மதிக்கச்சொல்லி இறைவன் சொல்லுவது எத்தனை அன்பான விஷயம்.... மிக அருமையான பதிவு....
அன்பு நன்றிகள் சுல்தான்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மனைவியிடம் சிறந்தவரெ மனிதர்களில் சிறந்தவர்....
மிகத்தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் நண்பரே நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: மனைவியிடம் சிறந்தவரெ மனிதர்களில் சிறந்தவர்....
நல்லதோர் விளக்கம் நண்பா வாழ்த்துக்கள் மேலும் தொடருங்கள்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Similar topics
» உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் தோனிக்கு 52-வது இடம்
» நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர்
» நம்மைவிடச் சிறந்தவர்!
» நண்பர்களில் சிறந்தவர்
» உலகில் சிறந்தவர்...
» நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர்
» நம்மைவிடச் சிறந்தவர்!
» நண்பர்களில் சிறந்தவர்
» உலகில் சிறந்தவர்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|