ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு?

3 posters

Go down

ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Empty ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு?

Post by ரபீக் Sat Jun 12, 2010 10:59 am

இலங்கை சிறுபான்மை கட்சிகள் அனைத்தையும் நேரடியாக அழைத்துப் பேசி நீண்டகால ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண இந்தியா முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையிலும் ஈழத்தமிழர் பிரச்னைக்கு அந்நாட்டு அரசால் தீர்வு காண முடியவில்லை. அங்கு தொடர்ந்து தமிழர்கள் துயரம் அடைவது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. இது இந்திய அரசுக்கு பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தாங்களே நேரடியாக களத்தில் இறங்கி ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஆசியான் டிரிபியூன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சிறுபான்மை கட்சிகளை தனித்தனியாக தில்லிக்கு அழைத்துப் பேச்சு நடத்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அந்தவகையில் ஈழத்தமிழர்கள் நலனுக்காகப் போராடிவரும் தமிழ் தேசிய கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளை முதலில் அழைத்துப் பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டறிய திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிற சிறுபான்மை கட்சிகளை தனித்தனியே அழைத்துப் பேசுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியதும் இலங்கையின் சிறுபான்மை கட்சிகளை அழைத்துப் பேசும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளும்.

இந்த ஆலோசனையின் போது கட்சிகளிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை தொகுத்து இந்திய அரசு வரைவை தயாரிக்கும். பின்னர் அதை இலங்கை அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு: இலங்கை சிறுபான்மை கட்சிகளை அழைத்துப் பேசி ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இந்திய அரசு முடிவெடுத்துள்ளதை தாங்கள் வரவேற்பதாக இலங்கையை சேர்ந்த முஸ்லிம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

எதிர்ப்பு: ஈழத்தமிழர் பிரச்னையை தீர்க்க இந்திய அரசே நேரடியாகத் தலையிட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளதற்கு இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல் குறித்து அதிபர் மகிந்த ராஜபட்ச தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்தக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பி பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி கருணநாயகே, ஒருவேளை இந்திய அரசு ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாகத் தலையி விரும்பினால், சிறுபான்மை கட்சிகளை மட்டும் அழைத்துப் பேசக்கூடாது. அப்படி பேசுவது சிறந்த பலனைத் தராது. நாட்டின் பிரதான கட்சிகளையும் அழைத்துப் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விடுதலைப் புலிகளுடனான போர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச முதல் முறையாக இந்தியா வந்து சென்றுள்ளார். அவரது பயணத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து மனிதப் படுகொலையை அரங்கேற்றிய ராஜபட்சவை இந்திய மண்ணில் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதா என்று தமிழ் ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர். புலிகளுடனான போர் முடிவடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஈழத்தமிழர்களை அவர்களது பகுதியிலேயே குடியமர்த்துவது, மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக அளித்த வாக்குறுதியை ராஜபட்ச இதுவரை காப்பாற்றவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழித்து வருகிறார்.

ராஜபட்சவின் இந்த மெத்தனத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னும் முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாம்களில் அவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது. இலங்கையில் இப்படி தமிழர்கள் சித்திரவதைபடும் போது அந்த நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சவை இந்தியாவுக்கு அழைத்து அவருடன் ஒட்டி உறவாடுவது ஏற்கத்தக்கதல்ல. இந்திய அரசின் இந்த நடவடிக்கை ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளது என்று சர்வதேசம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Empty Re: ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு?

Post by கலைவேந்தன் Sat Jun 12, 2010 11:11 am

நல்ல தீர்வு கண்டால் சரி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Empty Re: ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு?

Post by ராஜா Sat Jun 12, 2010 12:11 pm

ஆஹா ..... ஆட்டத்த கலைச்சிட்டு திரும்பவும் மொதல்ல இருந்து ஆரம்பிக்க போரானுங்களா ???
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Empty Re: ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திபெத்திய மடாலயம்: சீனா தலையிட முடிவு
» கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு
» பிரான்சில் சீக்கியக்குழந்தைகள் தலைப்பாகை அணியத்தடை: இந்தியா தலையிட வேண்டுகோள்
» ஈழத்தமிழர் விடயத்தில் பாலுக்கும் காவல்! பூனைக்கும் தோழன் ஆகும் இந்தியா
» எல்லை பிரச்னையில் தவறான தகவலை பரப்புகிறது இந்தியா: சீனா புலம்பல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum