ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் தாய்

Go down

குழந்தையின் தாய் Empty குழந்தையின் தாய்

Post by குடந்தை மணி Fri Jun 11, 2010 5:08 pm

குழந்தையின் தாய் Story1
கையில இருக்கிற கல்யாண அழைப்பிதழ பாக்கறச்ச, கண்ல ஜலம் முட்டிண்டு வர்றது.இப்பதான் ஜானு மாமி, தன் பொண்ணுக்கு கல்யாணம் கட்டாயம் வந்துடுன்னு சொல்லிக் குடுத்துட்டுப் போறா. அதைப் பார்த்ததும் ஏனோ எனக்கு அழுகை வந்துடுத்து. பசங்கல்லாம் ஒரு மாதிரிப் பார்க்கறதப் பார்த்துட்டு,கண்ணைத் தொடைச்சுட்டு பாடத்தை ஆரம்பிக்கிறேன்.

இந்த டீச்சர் உத்தியோகத்தை ஏத்துண்டு, இன்னியோட பதினஞ்சு வருசமாறது. அதே பாடத்தைத் திருப்பி திருப்பி சொல்லித் தரதுல ஆரம்பத்துல கொஞ்சம் வெறுப்பா கூடத் தோணித்து. பின் நானே ஒரு மாதிரி சமாளிச்சுண்டேன். சுறுசுறுப்பான பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கறச்ச சந்தோசமா இருக்கும். ஏழாம்
வகுப்புதான். இருந்தாலும் இந்த பசங்களுக்கு இண்டரஸ்ட் ஜாஸ்தி போலருக்கு.ஏதாவது சந்தேகம் கேட்டுண்டே இருப்பா. நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் சமாளிச்சுண்டு வர்றேன்.

ஸ்கூல் பெல் அடிக்கறது. நான் என் தோல் பைய எடுத்துண்டு கிளம்பறேன். ஒரு கிலோமீட்டர் நடந்தாதான் வீடு போய்ச் சேர முடியும். வேலைல சேர்ந்த புதுசில

நடக்கறது கஷ்டமா தோணித்து. போகப்போக பழகிடுத்து. எதிரே ஒரு ஜோடி உரசிண்டே, சந்தோசமா பேசி சிரிச்சிண்டே போறா. எதிரே இருக்கிறவாள்ளாம் என்ன நினைப்பான்னு ஒரு நினைப்பே இல்லாம, எப்படித்தான் இவாளால இப்படி இருக்க முடியுதோ? ஒருவேளை கல்யாணம் ஆயிருந்தா நானும் இப்படித்தான் நடந்துண்டு
இருப்போனோ? அதெல்லாம் இனிமே எங்கே நடக்கப் போறது? பின்னே இந்த முப்பத்தெட்டு வயசுலே யாராவது கட்டிக்குவாளா என்ன? முப்பத்தெட்டு எல்லாம்

ஒரு வயசே இல்லேங்கறேளா? அப்படீனா ஏன் வரவாள்ளாம் ஏதாவது சொல்லி நிராகரிச்சுண்டு இருக்கா?. ஒருவேளை நான் அழகாப் படலையோ அவாளுக்கு? நான் அழகா இல்லைனா, ஏன் அந்த டீக்கடைக்காரர் அப்படி முறைச்சுப் பாக்கறார்? ஒருவேளை அவருக்கு மாத்திரம் நான் அழகாப் படற னோ என்னெவோ? வரவர இந்த பெண் பார்க்க வரவாள்ளாம் வேற வேலையே இல்லாம, இதே ஒரு வேலையா வச்சுண்டு இருப்பளோன்னு தோணுது. சந்தைல மாட்டைப் பாக்கறா மாதிரி பாத்துண்டு, சொஜ்ஜி

பஜ்ஜில்லாம் திண்ணுண்டு, என்ன ஜென்மம் இவாள்ளாம்? இன்னக்கி கூட அக்கா யாரோ பெண் பார்க்க வர்றதா சொல்லி சீக்கிரம் வரச் சொல்லி இருக்கா. அஞ்சு மணிக்கு வர்றாளாம். வாட்ச்சை பார்க்கிறேன். மணி நாலரை. போய்ச் சேர்ந்திடலாம்.இனிமே கல்யாணம்லாம் நடக்குமான்னு எனக்குள்ளே கேட்டுண்டாலும் மனசுல ஒரு மூலைல சின்னதா ஒரு நம்பிக்கை எட்டிப் பார்க்கத்தான் செய்யுது. இந்த வரனாச்சும் கனிஞ்சுதுன்னா அப்புறம் நானும் எல்லார் மாதிரி "அவரோட" இடிச்சுண்டே சினிமா போலாம். "அவர்" ஆபீஸ் போறச்சே, வாசல்ல நின்னு டாட்டா காட்டலாம். அவர் ஆபீஸ் விட்டு வரச்சே, சிரிச்ச முகத்தோட வரவேற்கலாம். ஹும்... நடக்குமா
இதெல்லாம்? பார்க்கலாம்.

யோசிச்சிண்டே வந்ததுல வீடு வந்துடுத்து. வாசல்ல அக்கா பொண்ணு உஷா என்னைப்

பார்த்து சிரிக்கிறா. ஆச்சு. இவளுக்கும் வயசு பதினெட்டு நடந்திண்டிருக்கு.இன்னும் மூணு நாலு வருசத்துல இவளும் என்னை மாதிரியே சிங்காரிச்சுண்டு,வர்றவா எதிர்ல நிக்கணும். ஆனா கடவுளே, இவளுக்கு என்னை மாதிரி நடக்கக்கூடாது. வயசுப் பொண்ணு வீட்ல இருக்கறப்போ, நான் இந்த மாதிரி பெண் பார்க்கற படலத்துல இருக்கறது, எனக்கே கஷ்டமாத்தான் தோன்றது. சில சமயம் விஷத்தைக் குடிச்சுட்டு செத்துரலாம்னு கூடத் தோணும். சே. அப்படி என்ன கோழைத்தனம்னு என்னை நானே சமாதானம் பண்ணிப்பேன். வாழ்க்கைனா கல்யாணம் ஒண்ணுதானா? வேற எதுவுமே இல்லையா? சின்ன குழந்தையோட சிரிப்பில்லையா?
இயற்கைல இருக்கற அழகெல்லாம் ரசிக்கிறதுலேயே நம்ம வாழ்க்கைய கழிக்க முடியாதா?
அப்படின்னு தோணும். ஆனா, அக்கம்பக்கத்தில இருக்கிறவா எல்லாம் நான் தெருவில நடந்து போறச்ச, ஒரு மாதிரியா பாக்கறச்ச, ஏன் என் காதுபடவே 'இவ பாவம்னு' பேசறச்ச மனசு உடைஞ்சிதான் போறது. இன்னக்கி வர்றவாளோட முடிவு சாதகமா இல்லன்னா இனிமே இந்தமாதிரி எதுவும் வேண்டாம்னு அக்காக்கிட்ட சொல்லிடணும்.

யோசிச்சுண்டே இருந்ததுலே நேரம் போனதே தெரியல. அவசர அவசரமா சிங்காரிச்சிக்கிறேன்.ஆறு மணி போல அவாள்ளாம் வந்தா. நான் காபி எடுத்துண்டு போனேன். எல்லாம் முடிஞ்சு வழக்கம் போல 'போய் லெட்டர் போடறோம்னு' சொல்லிட்டு போனா. எனக்கு இதுவும் பழைய லிஸ்டுல சேர்ந்துடுமோனு ஏனோ தோணித்து. அப்படி எல்லாம் ஆகக்கூடாதுன்னு ஆண்டவனை வேண்டிண்டேன்.

இப்பெல்லாம் நான் ஸ்கூலுக்கு நடந்து போறச்ச, அக்கம் பக்கம் இருக்கறவா ஒரு மாதிரி பேசறது புரியறது. நான் யார் கூடவோ தொடர்பு வச்சுண்டிருக்கேனாம்.அதான் எல்லா வரணும் தட்டிண்டே போறதாம். ஏன்தான் இவாள்ளாம் இப்படிப் பேசறாளோ, இந்த சமூகத்தில கல்யாணம் ஆகாதவா எல்லாரும் இப்படிப்பட்ட
பேச்சுகளை எதிர்கொண்டுதான் ஆகணுமோ?

நான் இந்த புது ஆத்துக்கு குடி வந்து ரெண்டு மாசமாறது. அக்காகிட்ட கோவிச்சுண்டு எல்லாம் நான் தனியா வந்துடல. கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கிற வீட்ல கல்யாணமாகாத முதிர்கன்னியா நானுமிருந்தா என்னாகும்னு நினைச்சுப் பார்த்தேன். அப்புறம் என்னால உஷாவோட கல்யாணம் தள்ளிப்போச்சுன்னா, கடவுளே, வேண்டாமே. ஊராரெல்லாம் இப்படிப் பேச ஆரம்பிச்சது தெரிஞ்சதும்தான் நான் இப்படி முடிவு பண்ணினேன். ஆரம்பத்துல அக்கா அதிகமா கோவிச்சிண்டா. அப்புறம் எல்லாம் சரியாயிடுத்து. நான் சரியாக்கிட்டேன். நம்மால மத்தவாளுக்கு கெடுதி வரதுன்னா, அவாகிட்ட இருந்து

தூர விலகி போறதுதானே நியாயம்…?

இப்பல்லாம் ஸ்கூல் முடிஞ்சதும், சாயந்திர நேரத்துல வயசான படிக்காதவாளுக்கு எல்லாம், நான் எழுதப் படிக்கச் சொல்லித் தரேன். நடுநடுவே, இந்த சுந்தர் பையன் வந்து குறுக்கிடுவான். ஆனா அதுவும் சந்தோசமாத்தான் இருக்கும். அட, சுந்தர் யாருன்னு சொல்லலியோ? சுந்தருக்கு ஒண்ணரை வயசாறது. குழந்தைகள்
ஆசிரம் ஒண்ணுலேந்து தத்து எடுத்துண்டேன். சுந்தர் படு சுட்டி தெரியுமோ? சிரிக்கறச்ச கன்னத்துல விழற குழிய பார்த்துண்டே இருக்கலாம். இப்பல்லாம் ஸ்கூல் விட்டு நடந்து வர்றச்ச, எதிரே எந்த கல்யாண ஜோடி வந்தாலும் மனசு சஞ்சலப்படறதே இல்ல. ஏன்னா, இப்ப நான் ஒரு குழந்தையோட தாய் இல்லையா?


நன்றி:

குழந்தையின் தாய்

செல்வராஜ் ஜெகதீசன்

http://www.vallinam.com.my/issue18/story1.html


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அழுகையை நிறுத்துவதற்காக குழந்தையின் வாயில் சிகரட்டை வைத்த தாய்
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» ஐஸ்வர்யா ராயின் குழந்தையின் புகைப்படம் அவர்களது குடும்பத்தால் வெளியிடப்பட்டது (குழந்தையின் படம் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum