ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்காந்துடன் கூட்டணி-ஜெயலலிதா தீவிரம்: பேச்சுவார்த்தை ஆரம்பம்!

Go down

விஜய்காந்துடன் கூட்டணி-ஜெயலலிதா தீவிரம்: பேச்சுவார்த்தை ஆரம்பம்! Empty விஜய்காந்துடன் கூட்டணி-ஜெயலலிதா தீவிரம்: பேச்சுவார்த்தை ஆரம்பம்!

Post by ரபீக் Tue Jun 08, 2010 4:41 pm

வரும் சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தீவிர முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக அந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தையையும் அதிமுக ஆரம்பித்துவிட்டது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த பின் தேர்தலை முன் கூட்டியே நடத்த திமுக அறிவிப்பை வெளியிடலாம் என்று கருதப்படுகிறது.

அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இதையே கருதுகின்றன. இதனால் தான் திமுகவுடன் வேகமாக கூட்டணி அமைக்க பாமக தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்த திட்டங்களில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டன. மேலும் சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளதால், வெற்றி உறுதி என்ற நினைப்பில் உள்ளது திமுக. இதனால் பல அதிமுக தலைகளும் திமுகவுக்கு தாவ ஆரம்பித்துள்ளன.

இதனால் 2011ல் நடக்கவிருக்கும் இந்தத் தேர்தல் அதிமுக மற்றும் அதன் தலைவி ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் மிக மு்க்கிய தேர்தலாகக் கருதப்படுகிறது.

ஸ்டாலினை அடுத்த முதல்வராக்க திட்டமிட்டுள்ள திமுகவுக்கும் இது மிக மிக முக்கியமான தேர்தல்.

2004ம் ஆண்டு முதல் இரண்டு மக்களவைத் தேர்தல்களி்ல் தோல்வி, ஒரு சட்டசபைத் தேர்தலில் தோல்வி, உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, 11 இடைத் தேர்தல்களில் தொடர் தோல்வி என்று ஜெயலலிதாவுக்கு தோல்விகள் தொடர்ந்து கொண்டுள்ளன.

இந் நிலையில், 1998ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இப்போது இருக்கும் இதே போன்ற மிதப்பில் இருந்த திமுகவை ஒரு மெகா கூட்டணி அமைத்து காலி செய்தது போன்ற, ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார் ஜெயலலிதா.

அந்தத் தேர்தலில் மதிமுக, பாமக, பாஜக, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ், சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி என்று படு 'வெரைட்டியான' கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி கண்டார் ஜெயலலிதா.

ஆனால், அப்போது காங்கிரஸ் தனியாகப் போட்டியிட்டது.

இப்போது காங்கிரஸ் திமுகவை விட்டு விலகி வராது என்பது உறுதியாகிவிட்டதாலும் பாமகவும் திமுக கூட்டணிக்கு அலைய ஆரம்பித்துவிட்டதாலும், எப்படியாவது தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார் ஜெயலலிதா.

மதிமுக, இடதுசாரிகளை வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்தால் திமுக கூட்டணியை தோற்கடிப்பது சாத்தியமே இல்லை என்பதை ஜெயலலிதா உணர்ந்துவிட்டார். இரும்புக் கோட்டையான அதிமுகவை அந்த அளவுக்கு துரு பிடிக்க வைத்துவிட்டார் ஜெயலலிதா.

திமுக- காங்கிரஸ்-பாமக- விடுதலை சிறுத்தைகள் என்ற வலுவான கூட்டணியை எதிர்கொண்டு, தன்னையும் கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேருவது தான் என்று ஜெயலலிதா கருதுகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தல் வரை விஜய்காந்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் தான் இருந்தார் ஜெயலலிதா. இதனால் தான் அவரை குடிகாரர் என்று விமர்சித்தார். பதிலுக்கு ஜெயலலிதா தான் ஊற்றிக் கொடுத்தாரா என்று கேட்டார் விஜய்காந்த்.

ஆனால், இப்போது ஜெயலலிதாவைப் போலவே விஜய்காந்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவருக்கு தொகுதிக்கு ஏற்ப 6 முதல் 10 சதவீத வாக்குகள் கிடைத்தாலும் டெபாசிட்டை காப்பாற்றுவதே கஷ்டமாகி வருகிறது.

அதே நேரத்தில் இவர் பிரிக்கும் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்குப் போக வேண்டியவை. இந்த வாக்குகள் அதிமுகவுக்கு வந்தால் திமுகவை எதி்ர்கொள்வது சிரமமாக இருக்காது என்று ஜெயலலிதா கருதுகிறார்.

விஜய்காந்துடன் எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிடுமாறு ஜெயலலிதாவின் நலம் விரும்பிகளான 'அதிபுத்திசாலி பத்திரிக்கையாளர்' உள்ளிட்டோரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

அதே போல தனித்துப் போட்டி போட்டு போட்டு தோற்று தோற்று வெறுப்பில் இருக்கும் தனது கட்சியினரை உற்சாகப்படுத்தவும் தேர்தல் செலவுகளை சமாளிக்கவும் அதிமுகவுடன் கூட்டணி சேருவதே நல்லது என்று விஜய்காந்தும் கருதுவதாகத் தெரிகிறது.

இதனால் குடி, ஊற்றிக் கொடுத்தது போன்ற சமாச்சாரங்களை அப்படியே மறந்துவிட்டு எப்படியாவது கைகோர்த்துக் கொள்ள அதிமுகவும், தேமுதிகவும் தயாராகிவிட்டன.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தேமுதிக ஓட்டுக்களைப் பிரித்ததால் தான் சுமார் 90 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. அதே போல திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் 'மைனாரிட்டியாக' ஆட்சியைப் பிடிக்க, அதன் வாக்குகளையும் தேமுதிக பிரித்து பல தொகுதிகளில் தோல்விக்கு வழி வகுத்தது தான் காரணம்.

இந் நிலையில் விஜய்காந்துடன் கூட்டு சேர்ந்து நின்றால், பெரும்பாலான தொகுதிகளின் முடிவு தங்களுக்கு சாதகமாக திரும்பி விடும் என்று அதிமுக கருதுகிறது.

அதிமுகவே தானாக விரும்பி கூட்டணி சேர ஆரவம் காட்டுவதால் விஜயகாந்தும் இதற்கு பச்சைக் கொடி காட்டி விட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து இரு கட்சிகளிடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகத் தெரிய வருகிறது.

அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன் எம்பி, சசிகலா, எம்.ராமச்சந்திரன் (நடராஜனின் சகோதரர்) ஆகியோரும் தேமுதிக சார்பில் அவைத்த லைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, மச்சான் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இது குறித்து சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது தேமுதிக 90 தொகுதிகளைக் கேட்டுள்ளனர். அதாவது சுமார், 40 சதவீத இடங்களை தங்களுக்குக் கோரியுள்ளனர் (50 சதவீதம் கேட்டால் ஆட்சியையை கேட்பது போல இருக்கும் என்பதால் 40 கேட்டிருப்பார்கள் போல).

இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுக தரப்பு 15 சதவீத இடங்கள் தருவதாகக் கூறியுள்ளது. கடந்த தேர்தலில் பாமகவுக்கு அதிமுக சார்பில் தரப்பட்டது போல சுமார் 35 இடங்கள் தருவதாக அதிமுக கூறியுள்ளது.

ஆனால், அதை தேமுதிக தரப்பு ஏற்கவில்லையாம். 30 சதவீத இடங்கள்.. அதாவது 70 இடங்களாவது வேண்டும் என்று கோரி வருகின்றனராம்.

ஆனால் அவ்வளவு தொகுதிகளை தர இயலாது என்று அதிமுக தரப்பு கூறியுள்ளது. மதிமுக, இடதுசாரிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதால் 70 சீட்கள் தருவது கஷ்டம் என்று அதிமுக கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து மீண்டும் சந்தித்து பேச்சு நடத்தவும் இரு தரப்பும் முடிவு செய்துள்ளன. 50 முதல் 60 இடங்கள் தந்தால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாம் என்றே தெரிகிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது: கமல்
» விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது: வைகோ
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» கூடன்குளம் மக்களிடம் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சமூக ஆர்வலர் மேதா பட்கர்
» பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்ந்தது, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெயலலிதா சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum