Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத் தெரிந்து கொள்வது எப்படி???
3 posters
Page 1 of 1
கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத் தெரிந்து கொள்வது எப்படி???
ஒரு பெண், கர்ப்பமுற்று அவள் குழந்தை
பெற்றுக் கொள்ளும் வரையான காலத்தை மூன்று பகுதிகளாக நாங்கள் பிரித்துக்
கொள்வோம். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட சில டெஸ்ட்டுகள் செய்துபார்த்து
அதன் மூலம் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஏதும் குறையிருக்கிறதா என்று
கண்காணிப்போம்.
பேறுகாலத்தின் முதல் பகுதியில் செய்யப்படும்
முக்கியமான பரிசோதனைகளில் ரத்தப் பரிசோதனையும் ஒன்று. இந்தப் பரிசோனையில்
கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்த சோகை உள்ளதா, சர்க்கரை நோய் இருக்கிறதா என்பது
போன்ற முக்கியமாக சில விஷயங்களைப் பார்த்து அதை சரிசெய்ய சிகிச்சை
மேற்கொள்வோம்.
சர்க்கரை நோய் என்பது இந்த சமயத்தில் சில பெண்களுக்கு
மரபு ரீதியாகவோ, முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை 4 கிலோவுக்கு
மேல் இருந்தாலோ, வரலாம். தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால் அது குழந்தைக்கு
பலவித குறைபாடுகளை உண்டாக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனால்
இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்டை பேறு
காலத்தின் முதல் பகுதியிலேயே அவசியம் செய்து பார்ப்போம்.
இன்னும்
இதுபோன்ற பல நுணுக்கமாக விஷயங்களையும் கூட ரத்தப் பரிசோதனையில்
கண்டுபிடிக்க முடியும். இதில் மிக முக்கியமான ஒன்று கர்ப்பிணிப் பெண்ணின்
ரத்தத்தில் Rhyping ஐ கண்டுபிடிப்பது. இதுபற்றி விரிவாகப் பார்க்கும் முன்
இன்னொரு தகலைத் தெரிந்து கொள்ளுங்க...
நம் ரத்தத்தில் கி, ஙி, ளி
என்று சில வகைகள் இருப்பது மட்டுமே நமக்கு இதுவரை தெரிந்திருந்தது. ஆனால்
இன்றோ பல ஆராய்ச்சிகளின் முடிவாக டஃப் கெல்லி என்று ரத்தத்தில் இன்று வேறு
பல குரூப்களும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இதில் Rhyping என்பது எங்கே
வந்தது என்று பார்ப்போம்.
சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரே குரூப்
ரத்தம் கொண்ட சிலருக்கு ரத்ததானம் செய்யும்போது அது பொருந்தாமல் போய் வேறு
வகையான ரியாக்ஷன்கள் கொடுத்துக் கொண்டிருந்தது. இருவருக்கும் ஒரே குரூப்
ரத்தமாக இருந்தும் ஏன் இப்படி ஆகிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள். அப்போது
Rhyping என்கிற ஒரு விஷயமே மருத்துவ உலகுக்குத் தெரிய வந்தது. இது ரத்த
குரூப்களில் இன்னொரு சப் பிரிவு. நூறு நபர்களில் 35 பேருக்கு ஸிபி பாஸிடிவ்
ஆகவும், மீதமிருப்பவர்களுக்கு ஸிபி நெகடிவாகவும் இருக்கும். சரி இந்த
சுhலிiபெ க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதையும்
தெரிந்துகொள்ளுங்கள்.
உதாரணமாக கர்ப்பமடைந்த ஒரு பெண்ணின் ரத்தம்
ஸிபி நெகடிவ் ஆக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவருடைய கணவரின்
ரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தால் பிறக்கப்போகும் குழந்தை பெரும்பாலும்
ஸிபி பாஸிடிவ் ஆகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் தனக்கு
சம்பந்தமில்லாத ஒரு வகை ரத்தம் உடலில் இருப்பதை உணரும் அம்மாவின் உடல் அதை
எதிர்க்கும் விதமாக எதிர்ப்பு அணுக்களை உருவாக்கத் தொடங்கும் இந்த அணுக்கள்
அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் உடலுக்குப் போய் மெதுவாக குழந்தையின்
ரத்த அணுக்களை செயலிழக்கச் செய்யும். இதன் காரணமாக குழந்தைக்கு இதயக்
கோளாறுகள் உண்டாகலாம். உடம்பெல்லாம் நீர் கோர்த்துக் கொள்ளக்கூடிய
பிஹ்பீக்ஷீஷீஜீள திஷீமீவணீறீவீள என்கிற நிலை ஏற்படலாம். குழந்தையின்
நார்மலான வளர்ச்சி பாதிக்கப்படலாம். சில சமயம் குழந்தை இறக்கக் கூட
நேரலாம்.
Rhyping பற்றிய இந்தத் தகவல்களைப் படித்ததுமே பயந்து போய்
விடாதீர்கள். பொதுவாகவே இதனால் முதல் குழந்தைக்குப் பெரிய பாதிப்பு
ஏற்படுவதில்லை. முதல் குழந்தையால் தாயின் உடலில் உருவாகும்
எதிர்ப்பணுக்குள், இரண்டாம் அல்லது அதன் பிறகு பிறக்கும்
குழந்தைகளுக்குத்தான் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுத்தும். இந்தப்
பிரச்சினையை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் அதை சரி செய்துவிடலாம்.
இதுபோன்ற மேலும் பல முக்கிய தகவல்களை அறிந்துகொள்ள உதவுவதால்தான் நாம்
கருத்தரித்த உடனேயே ரத்தப் பரிசோதனை செய்கிறோம்.
அம்மாவின் ரத்தம்
Rhyping நெகடிவ் ஆக இருந்தால் மட்டும்தான் பிரச்னை. அதுவே அப்பாவின் ரத்தம்
ஸிபி நெகட்டிவாக இருந்து அம்மாவின் ரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தாலோ
இரண்டு பேருக்குமே ஸிபி நெகடிவ் ஆக இருந்தாலோ பிரச்னை இல்லை.
ஸிபி
நெகடிவ் ஆக இருக்கும்போது அம்மாவுக்கு முதல் குழந்தை ஸிபி பாஸிடிவ் ஆக
பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் பிரசவமான
எழுபத்தியிரண்டு மணி நேரத்துக்குள் தாய்க்கு Antid Immuni Globulin என்கிற
ஊசியைப் போட்டு விட வேண்டும். இது கொஞ்சம் காஸ்ட்லியான ஊசி என்றாலும் இனி
பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு ஆபத்து இல்லாமல் இருக்க இதை தாய்க்குக்
கொடுத்தே ஆக வேண்டும்.
ஸிபி நெகடிவ் உள்ளவர்களுக்கு முதல் பிரசவம்
ஆனால்தான் என்று இல்லை. அபார்ஷன் ஆனாலும்கூட, ஆன உடனே இந்த ஊசியை
அம்மாவுக்குப் போட வேண்டும். கர்ப்ப காலத்தின் போது ரத்தக் கசிவு
ஏற்பட்டாலும் கூட தாய்க்கு இந்த ஊசியைப் போடவேண்டும்.
முன்னெல்லாம்
ஸ்கேன் என்பது பலருக்கும் அவ்வளவாகத் தெரியாத விஷயமாக இருந்தது. இன்று
எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கும் ஸ்கேன்_ஐ ஆரம்பத்தில் கருத்தரித்த
4_5 மாதங்கள் ஆனதும் தான் செய்து வந்தார்கள். ஆனால் இன்றோ கருத்தரித்த
10_12 வாரங்களுக்குள்ளாகவே ஸ்கேன் செய்கிறோம். காரணம் அதில் குழந்தையின்
சில முக்கிய குறைபாடுகளைக் கண்டறிய முடியும்.
உதாரணமாக முதல் ஸ்கேன்
செய்யும்போது குழந்தையின் கழுத்தின் பின்புற சதைப் பகுதியின் தடிமனைத்
தெரிந்துகௌ;ள முடியும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தடிமன்
இவ்வளவுதான் இருக்கமுடியும் என்று ஒரு அளவு இருக்கிறது. அதற்கு அதிகமாகவே
சதையின் அளவு இருந்தால் குழந்தைக்கு மரபு ரீதியாக சில குறைபாடுகள்
இருக்கலாம் என்பது தெரியும். இதுபோன்ற சில குறைபாடுகளைக் கண்டறிந்து அதை
நிவர்த்தி செய்யவோ அல்லது அந்தக் குழந்தையே வேண்டாம் என்று முன்கூட்டியே
எடுக்கவும் கூட இந்த முதல் ஸ்கேன் உதவும்.
ஆனால் சில வீடுகளில்
கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் ஸ்கேன் கூடவே கூடாது என்பார்கள். ஸ்கேனைத்
தள்ளிப்போட்டால் அது பின்னால் பெரிய பிரச்சினைகளை உருவாக்கும்.
இது
தவிர கர்ப்ப காலத்தின் இரண்டாம் பகுதியில் அதாவது 20_22 வாரங்களுக்குள்
இன்னொரு ஸ்கேன் செய்து பார்ப்போம். இதற்குள் குழந்தையின் முக்கிய
உறுப்புகள் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கும். இந்த ஸ்கேன் மூலம் வளர்ச்சி
நார்மலாக உள்ளதா என்று பார்ப்போம். மூன்றாவது ஸ்கேன்_ஐ கர்ப்பகாலத்தின்
மூன்றாம் பகுதியில் செய்து பார்ப்போம். இதை வைத்து மீண்டும் குழந்தையின்
வளர்ச்சியைக் கண்காணிப்போம்.
குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க
பொதுவாக இந்த மூன்று ஸ்கேன்கள் செய்வது வழக்கம். சிலர் அடிக்கடி ஸ்கேன்
செய்து பார்க்கும் வசதியற்றவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் அடிக்கடி
ஸ்கேன் செய்வதை (அது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடுமென)
விரும்பமாட்டார்கள். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கர்ப்பகாலத்தின்
இரண்டாம் பகுதியில் ஒரு ஸ்கேன் செய்து கொண்டால் போதும்.
கர்ப்பமடைந்த
விஷயம் மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதுமே மருத்துவரைச் சந்திப்பது
நல்லது என்பது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதிலிருந்து கருவுக்கு
முப்பத்தி நான்காம் வாரம் ஆகும் வரை ஒவ்வொரு மாதமும் மருத்துவரை தவறாமல்
சந்திக்க வேண்டும். இந்த ஒவ்வொரு சந்திப்பின்போதும் அம்மாவின் பி.பி., எடை
எல்லாம் நார்மலாக உள்ளதா என்று சரி பார்ப்போம். மேலும் கர்ப்பப்பையின் அளவு
மற்றும் வளர்ச்சி ஆகியவையும் சரியானபடி உள்ளதா என்று பார்ப்போம். ஒவ்வொரு
காலகட்டத்தின்போதும் கர்ப்பப்பை இவ்வளவுதான் வளர்ச்சி பெற்றிருக்கும்
என்பது எங்களுக்குத் தெரியும். அதேபோல பனிக்குட நீரின் அளவையும் இந்த
சமயத்தில் சரிபார்ப்போம்.
கர்ப்பகாலத்தின்போது அம்மாவின் உடல் எடை
அதிகரிக்கவே மாட்டேன்கிறது என்று சில வீடுகளில் வருத்தப்பட்டுக்
கொள்வார்கள். கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு சில பெண்களுக்குப்
பெரிதாக வெயிட் போடாது. இதற்குக் காரணம், அதிகப்படியான வாந்தியும் அதன்
காரணமாக தாய்க்கு உணவின் மீது ஏற்படும் வெறுப்பும்தான்.
ஆரம்பக்காலகட்டத்தில்தான் இந்தப் பிரச்னை தலைதூக்குமே ஒழிய, பிறகு எடை
ஏறத்தான் செய்யும். கடைசி பத்து வாரங்களில்தான் குழந்தையின் எடை வேகமாகக்
கூடிப்போகும். காரணம் இந்த சமயத்தில்தான் குழந்தையின் வளர்ச்சியும்
அதிகப்படியாக இருக்கும். பிரசவ காலத்தின்போது மொத்தத்துக்கும் தாயின் எடை
9_12 கிலோ வரை கூடுவதுதான் சரி.
கர்ப்பகாலத்தின் போது அம்மாவின்
பி.பி. நார்மலுக்கும் சற்றே குறைவாகத்தான் இருக்கும். இதனால் பயப்பட
ஒன்றுமில்லை. அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் உடலுக்கு ரத்தம் பாயும்
நிகழ்வால் இப்படி இருக்கும். இது நார்மலான விஷயம்தான்.
Quelle
- Kumutham
பெற்றுக் கொள்ளும் வரையான காலத்தை மூன்று பகுதிகளாக நாங்கள் பிரித்துக்
கொள்வோம். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட சில டெஸ்ட்டுகள் செய்துபார்த்து
அதன் மூலம் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஏதும் குறையிருக்கிறதா என்று
கண்காணிப்போம்.
பேறுகாலத்தின் முதல் பகுதியில் செய்யப்படும்
முக்கியமான பரிசோதனைகளில் ரத்தப் பரிசோதனையும் ஒன்று. இந்தப் பரிசோனையில்
கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்த சோகை உள்ளதா, சர்க்கரை நோய் இருக்கிறதா என்பது
போன்ற முக்கியமாக சில விஷயங்களைப் பார்த்து அதை சரிசெய்ய சிகிச்சை
மேற்கொள்வோம்.
சர்க்கரை நோய் என்பது இந்த சமயத்தில் சில பெண்களுக்கு
மரபு ரீதியாகவோ, முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை 4 கிலோவுக்கு
மேல் இருந்தாலோ, வரலாம். தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால் அது குழந்தைக்கு
பலவித குறைபாடுகளை உண்டாக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனால்
இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்டை பேறு
காலத்தின் முதல் பகுதியிலேயே அவசியம் செய்து பார்ப்போம்.
இன்னும்
இதுபோன்ற பல நுணுக்கமாக விஷயங்களையும் கூட ரத்தப் பரிசோதனையில்
கண்டுபிடிக்க முடியும். இதில் மிக முக்கியமான ஒன்று கர்ப்பிணிப் பெண்ணின்
ரத்தத்தில் Rhyping ஐ கண்டுபிடிப்பது. இதுபற்றி விரிவாகப் பார்க்கும் முன்
இன்னொரு தகலைத் தெரிந்து கொள்ளுங்க...
நம் ரத்தத்தில் கி, ஙி, ளி
என்று சில வகைகள் இருப்பது மட்டுமே நமக்கு இதுவரை தெரிந்திருந்தது. ஆனால்
இன்றோ பல ஆராய்ச்சிகளின் முடிவாக டஃப் கெல்லி என்று ரத்தத்தில் இன்று வேறு
பல குரூப்களும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இதில் Rhyping என்பது எங்கே
வந்தது என்று பார்ப்போம்.
சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரே குரூப்
ரத்தம் கொண்ட சிலருக்கு ரத்ததானம் செய்யும்போது அது பொருந்தாமல் போய் வேறு
வகையான ரியாக்ஷன்கள் கொடுத்துக் கொண்டிருந்தது. இருவருக்கும் ஒரே குரூப்
ரத்தமாக இருந்தும் ஏன் இப்படி ஆகிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள். அப்போது
Rhyping என்கிற ஒரு விஷயமே மருத்துவ உலகுக்குத் தெரிய வந்தது. இது ரத்த
குரூப்களில் இன்னொரு சப் பிரிவு. நூறு நபர்களில் 35 பேருக்கு ஸிபி பாஸிடிவ்
ஆகவும், மீதமிருப்பவர்களுக்கு ஸிபி நெகடிவாகவும் இருக்கும். சரி இந்த
சுhலிiபெ க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதையும்
தெரிந்துகொள்ளுங்கள்.
உதாரணமாக கர்ப்பமடைந்த ஒரு பெண்ணின் ரத்தம்
ஸிபி நெகடிவ் ஆக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவருடைய கணவரின்
ரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தால் பிறக்கப்போகும் குழந்தை பெரும்பாலும்
ஸிபி பாஸிடிவ் ஆகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் தனக்கு
சம்பந்தமில்லாத ஒரு வகை ரத்தம் உடலில் இருப்பதை உணரும் அம்மாவின் உடல் அதை
எதிர்க்கும் விதமாக எதிர்ப்பு அணுக்களை உருவாக்கத் தொடங்கும் இந்த அணுக்கள்
அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் உடலுக்குப் போய் மெதுவாக குழந்தையின்
ரத்த அணுக்களை செயலிழக்கச் செய்யும். இதன் காரணமாக குழந்தைக்கு இதயக்
கோளாறுகள் உண்டாகலாம். உடம்பெல்லாம் நீர் கோர்த்துக் கொள்ளக்கூடிய
பிஹ்பீக்ஷீஷீஜீள திஷீமீவணீறீவீள என்கிற நிலை ஏற்படலாம். குழந்தையின்
நார்மலான வளர்ச்சி பாதிக்கப்படலாம். சில சமயம் குழந்தை இறக்கக் கூட
நேரலாம்.
Rhyping பற்றிய இந்தத் தகவல்களைப் படித்ததுமே பயந்து போய்
விடாதீர்கள். பொதுவாகவே இதனால் முதல் குழந்தைக்குப் பெரிய பாதிப்பு
ஏற்படுவதில்லை. முதல் குழந்தையால் தாயின் உடலில் உருவாகும்
எதிர்ப்பணுக்குள், இரண்டாம் அல்லது அதன் பிறகு பிறக்கும்
குழந்தைகளுக்குத்தான் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுத்தும். இந்தப்
பிரச்சினையை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் அதை சரி செய்துவிடலாம்.
இதுபோன்ற மேலும் பல முக்கிய தகவல்களை அறிந்துகொள்ள உதவுவதால்தான் நாம்
கருத்தரித்த உடனேயே ரத்தப் பரிசோதனை செய்கிறோம்.
அம்மாவின் ரத்தம்
Rhyping நெகடிவ் ஆக இருந்தால் மட்டும்தான் பிரச்னை. அதுவே அப்பாவின் ரத்தம்
ஸிபி நெகட்டிவாக இருந்து அம்மாவின் ரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தாலோ
இரண்டு பேருக்குமே ஸிபி நெகடிவ் ஆக இருந்தாலோ பிரச்னை இல்லை.
ஸிபி
நெகடிவ் ஆக இருக்கும்போது அம்மாவுக்கு முதல் குழந்தை ஸிபி பாஸிடிவ் ஆக
பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் பிரசவமான
எழுபத்தியிரண்டு மணி நேரத்துக்குள் தாய்க்கு Antid Immuni Globulin என்கிற
ஊசியைப் போட்டு விட வேண்டும். இது கொஞ்சம் காஸ்ட்லியான ஊசி என்றாலும் இனி
பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு ஆபத்து இல்லாமல் இருக்க இதை தாய்க்குக்
கொடுத்தே ஆக வேண்டும்.
ஸிபி நெகடிவ் உள்ளவர்களுக்கு முதல் பிரசவம்
ஆனால்தான் என்று இல்லை. அபார்ஷன் ஆனாலும்கூட, ஆன உடனே இந்த ஊசியை
அம்மாவுக்குப் போட வேண்டும். கர்ப்ப காலத்தின் போது ரத்தக் கசிவு
ஏற்பட்டாலும் கூட தாய்க்கு இந்த ஊசியைப் போடவேண்டும்.
முன்னெல்லாம்
ஸ்கேன் என்பது பலருக்கும் அவ்வளவாகத் தெரியாத விஷயமாக இருந்தது. இன்று
எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கும் ஸ்கேன்_ஐ ஆரம்பத்தில் கருத்தரித்த
4_5 மாதங்கள் ஆனதும் தான் செய்து வந்தார்கள். ஆனால் இன்றோ கருத்தரித்த
10_12 வாரங்களுக்குள்ளாகவே ஸ்கேன் செய்கிறோம். காரணம் அதில் குழந்தையின்
சில முக்கிய குறைபாடுகளைக் கண்டறிய முடியும்.
உதாரணமாக முதல் ஸ்கேன்
செய்யும்போது குழந்தையின் கழுத்தின் பின்புற சதைப் பகுதியின் தடிமனைத்
தெரிந்துகௌ;ள முடியும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தடிமன்
இவ்வளவுதான் இருக்கமுடியும் என்று ஒரு அளவு இருக்கிறது. அதற்கு அதிகமாகவே
சதையின் அளவு இருந்தால் குழந்தைக்கு மரபு ரீதியாக சில குறைபாடுகள்
இருக்கலாம் என்பது தெரியும். இதுபோன்ற சில குறைபாடுகளைக் கண்டறிந்து அதை
நிவர்த்தி செய்யவோ அல்லது அந்தக் குழந்தையே வேண்டாம் என்று முன்கூட்டியே
எடுக்கவும் கூட இந்த முதல் ஸ்கேன் உதவும்.
ஆனால் சில வீடுகளில்
கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் ஸ்கேன் கூடவே கூடாது என்பார்கள். ஸ்கேனைத்
தள்ளிப்போட்டால் அது பின்னால் பெரிய பிரச்சினைகளை உருவாக்கும்.
இது
தவிர கர்ப்ப காலத்தின் இரண்டாம் பகுதியில் அதாவது 20_22 வாரங்களுக்குள்
இன்னொரு ஸ்கேன் செய்து பார்ப்போம். இதற்குள் குழந்தையின் முக்கிய
உறுப்புகள் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கும். இந்த ஸ்கேன் மூலம் வளர்ச்சி
நார்மலாக உள்ளதா என்று பார்ப்போம். மூன்றாவது ஸ்கேன்_ஐ கர்ப்பகாலத்தின்
மூன்றாம் பகுதியில் செய்து பார்ப்போம். இதை வைத்து மீண்டும் குழந்தையின்
வளர்ச்சியைக் கண்காணிப்போம்.
குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க
பொதுவாக இந்த மூன்று ஸ்கேன்கள் செய்வது வழக்கம். சிலர் அடிக்கடி ஸ்கேன்
செய்து பார்க்கும் வசதியற்றவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் அடிக்கடி
ஸ்கேன் செய்வதை (அது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடுமென)
விரும்பமாட்டார்கள். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கர்ப்பகாலத்தின்
இரண்டாம் பகுதியில் ஒரு ஸ்கேன் செய்து கொண்டால் போதும்.
கர்ப்பமடைந்த
விஷயம் மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதுமே மருத்துவரைச் சந்திப்பது
நல்லது என்பது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதிலிருந்து கருவுக்கு
முப்பத்தி நான்காம் வாரம் ஆகும் வரை ஒவ்வொரு மாதமும் மருத்துவரை தவறாமல்
சந்திக்க வேண்டும். இந்த ஒவ்வொரு சந்திப்பின்போதும் அம்மாவின் பி.பி., எடை
எல்லாம் நார்மலாக உள்ளதா என்று சரி பார்ப்போம். மேலும் கர்ப்பப்பையின் அளவு
மற்றும் வளர்ச்சி ஆகியவையும் சரியானபடி உள்ளதா என்று பார்ப்போம். ஒவ்வொரு
காலகட்டத்தின்போதும் கர்ப்பப்பை இவ்வளவுதான் வளர்ச்சி பெற்றிருக்கும்
என்பது எங்களுக்குத் தெரியும். அதேபோல பனிக்குட நீரின் அளவையும் இந்த
சமயத்தில் சரிபார்ப்போம்.
கர்ப்பகாலத்தின்போது அம்மாவின் உடல் எடை
அதிகரிக்கவே மாட்டேன்கிறது என்று சில வீடுகளில் வருத்தப்பட்டுக்
கொள்வார்கள். கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு சில பெண்களுக்குப்
பெரிதாக வெயிட் போடாது. இதற்குக் காரணம், அதிகப்படியான வாந்தியும் அதன்
காரணமாக தாய்க்கு உணவின் மீது ஏற்படும் வெறுப்பும்தான்.
ஆரம்பக்காலகட்டத்தில்தான் இந்தப் பிரச்னை தலைதூக்குமே ஒழிய, பிறகு எடை
ஏறத்தான் செய்யும். கடைசி பத்து வாரங்களில்தான் குழந்தையின் எடை வேகமாகக்
கூடிப்போகும். காரணம் இந்த சமயத்தில்தான் குழந்தையின் வளர்ச்சியும்
அதிகப்படியாக இருக்கும். பிரசவ காலத்தின்போது மொத்தத்துக்கும் தாயின் எடை
9_12 கிலோ வரை கூடுவதுதான் சரி.
கர்ப்பகாலத்தின் போது அம்மாவின்
பி.பி. நார்மலுக்கும் சற்றே குறைவாகத்தான் இருக்கும். இதனால் பயப்பட
ஒன்றுமில்லை. அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் உடலுக்கு ரத்தம் பாயும்
நிகழ்வால் இப்படி இருக்கும். இது நார்மலான விஷயம்தான்.
Quelle
- Kumutham
முத்து- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010
Re: கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத் தெரிந்து கொள்வது எப்படி???
படித்தமைக்கு நன்றி முத்துமுத்து wrote:![]()
![கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத் தெரிந்து கொள்வது எப்படி??? 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத் தெரிந்து கொள்வது எப்படி??? 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத் தெரிந்து கொள்வது எப்படி??? 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத் தெரிந்து கொள்வது எப்படி??? 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத் தெரிந்து கொள்வது எப்படி???
அரிய அறியாத்தகவல் நன்றி சம்ஸ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தெரிந்து கொள்வது எப்படி?
» குல தெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி?
» உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வது எப்படி?
» உங்கள் மனசு ஆரோக்கியமா இருக்கா? தெரிந்து கொள்வது எப்படி?
» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
» குல தெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி?
» உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வது எப்படி?
» உங்கள் மனசு ஆரோக்கியமா இருக்கா? தெரிந்து கொள்வது எப்படி?
» பான் அட்டையின் ஸ்டேட்டஸ் Active-ஆக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|