ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு பற்றிய கண்ணோட்டம்!

+5
மஞ்சுபாஷிணி
எஸ்.எம். மபாஸ்
ப்ரியா
ரிபாஸ்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! Empty கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by சிவா Tue Jun 01, 2010 3:47 am

நம்முடைய எண்ணங்களே கனவுகளாக வருகின்றன என்பது சிலரது கருத்து. நாம் நினைக்காத செய்திகள், பார்க்காத பொருட்கள், மனிதர்கள், தெய்வங்கள் கனவில் வருவது உண்டு. இப்படி நாம் காணுகின்ற பொருட்களை ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நேரத்தில் நாம் பார்த்ததாக நினைவும் இருக்கிறது.

மனிதனுடைய வாழ்க்கையில் அவன் செய்யக் ஊடிய தர்மங்களுக்கும், பாவ புண்ணியங்களுக்கும் ஏற்ப பல்லாயிரம் முறை பிறப்பதாக நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன!

"புனரபி ஜனனம் புனரபி மரணம்"

மரணத்திற்குப் பின் ஜனனம், ஜனனத்திற்குப் பின் மரணம். இப்படி ஒவ்வொரு காலத்திலும் மிகச் சாதாரமாக மனிதனிலிருந்து தேவர்கள், அசுரர்கள், ஏன் தெய்வங்களுக்கும் கனவு உண்டானதாக சாஸ்திரங்கள் மூலம் நாம் படித்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.

கனவு என்பது அறிவியல் ரீதியாக பகுத்துப் பார்த்து கொடுக்க முடியாத ஒரு விஷயமாகும்.

பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், அகநானுறு, மனோன்மணியம், கம்பராமாயணம், சிவகசிந்தமணி போன்ற பல்வேறு நுல்களில் கனவுகளைப் பற்றிய செய்திகள் அங்கங்கே அசைக்க முடியாத நம்பிக்கையுடன் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

கனவு என்பது அறிவியலையும் கடந்த விஷயமாகும். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தான் சுடப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக ஒரு கனவு கண்டார்.

வைகறையில் கண்ட கனவு, வைகறை என்றால் விடியற்காலை என்று பொருள். வைகறையில் அவர் கண்ட கனவு. வெள்ளை மாளிகையில் ஒரு குறிப்பிட்ட அறையில், குறிப்பிட்ட நபர்களால் தான் சுடப்பட்டுக் கிடப்பதையும், அந்த இடத்தில் குறிப்பிட்ட சில நபர்களையும் அவர் தன கனவில் கண்டார்.

எழுந்தவுடன் அந்தக் கனவை தன மனைவியிடம் கூறிவிட்டு வழக்கம்போல் தன அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறார்.

மூன்று நாட்கள் கழித்து ஆபிரகாம் லிங்கன்கனவு கண்ட அதே அறையில் சுடப்பட்டு மாண்டார். அவர் கனவில் கண்ட அதே நபர்கள் அந்த இடத்தில் இருந்ததை அவர் மனைவி கண்டார்.

இந்தப் பிரபஞ்ச வாழ்கையில் மனிதன் எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானோ, அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறானோ அது பல தலைமுறைகளுக்கு முன்பு அவன் வாழ்க்கையில் நடந்துவிட்ட ஒரு விசயமாகும்.

அவனுடை அமானுஷ்யமான சக்தி, அவனுடைய ஆற்றல் மிகுந்த மூளை இந்த நிகழ்ச்சிகளை ஈர்ப்பு செய்து அதைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு விஷயம் பகுதிக் கனவாகவும் சொல்லப்படுகிறது!

கனவு என்பது நம்முடைய வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தேவர்கள் வாழ்க்கையிலும், அசுரர்கள் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது!

இராமயணத்தில் இராமரிரம் போர் செய்வதற்கு முன்பாக இராவணனுக்கு ஒரு கனவு ஏற்பட்டது.



தொடரும்....

கனவு பற்றிய கண்ணோட்டம்! Footer_flower


கனவு பற்றிய கண்ணோட்டம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by ரிபாஸ் Tue Jun 01, 2010 10:01 am

அருமையான தகவல் தலைவா வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கனவு பற்றிய கண்ணோட்டம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by ப்ரியா Tue Jun 01, 2010 10:04 am

என்ன கனவு சீக்கிரம் பதிவிடுங்கள் அண்ணலே ...
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by சிவா Tue Jun 01, 2010 12:39 pm

அவருடைய கனவில் இரண்டு பறவைகள் தெரிகின்றன. ஒன்று வெள்ளை நிறத்திலும் மற்றொன்று கருப்பு நிறத்திலும் உள்ள பறவை ஆகும்.

வெள்ளை நிறத்தில் உள்ள பறவை கருப்பு நிறத்தில் உள்ள பறவையை வென்று விடுகிறது.

இந்தக் கனவை தன அரண்மனையிலுள்ள மந்திரிகளிடமும், உயர் அதிகாரிகளிடமும் கூறி அதன் விளக்கத்தைக் கேட்கிறான்.

அதற்கு அவர்கள் வெள்ளைப் பறவையை இராமரகவும், கருப்புப் பறவையை இரவனனாகவும் வைத்து இராமர் உங்களை வெற்றி கொள்ளப் போகிறார் என்பதை அறிவுறுத்தியிருக்கிறது. அந்தக் கனவிற்குக் கட்டாயம் பலன் உண்டு. ஆகவே நீங்கள் போரில் இராமரால் கொல்லப்படுவீர்கள். அதற்கு முன்னதாக அந்தப் போரைத் தடுப்பதற்கு சீதாதேவியை இராமரிடம் ஒப்படைத்து விட்டால் போர் நின்றுவிடும். அதனால் உங்கள் உயிரும் காக்கப்பட்டுவிடும் என்று அறிவுரை கூறினார்கள்.

ஆனால் இந்த அறிவிரையைக் கேட்க மறுத்த இராவணன் அறிவுரை கூறிய அனைவரையும் காவலில் இட்டு துன்புறுத்தினான்.

இறுதியில் அவன் கண்ட கனவு பலித்தது.

இறைப்பூர்வமாக வழிபாட்டில் ஈடுபட்டிருக்கக் கூடியவர்களுக்கு இந்தக் கனவுகள் கட்சிக்காக வரக்கூடிய ஒரு விஷயமல்ல. எதிர்காலத்தில் நடக்ககூடிய விஷயங்களை சொல்லக்கூடிய ஒரு மறைமுகமான சமிக்ஞைகளாக வருகின்றன.

சிலப்பைதிகரத்தில் கோவலன் கொல்லப்படுவதற்கு முன்னாள் கண்ணகி தீய கனவு காண்கிறாள். கோவலனுக்கு மரணம் ஏற்படும் என்கிற செய்தி கனவின் மூலம் அவளுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது.

இராமயணத்தில் இறைவனின் மனைவியாகிய மண்டோதரி இராவணனைப் பற்றி கண்ட கனவு பலித்தது.

சீதை இராமனைப் பிரிவோம் என்று கண்ட கனவு பலித்தது.

இராமயணத்தில் வாலி, தான் கொல்லப்படுவோம் என்று கண்ட கனவும் பலித்தது.

இராவனின் சகோதரன் விபீஷணன் கண்ட கனவும் பலித்தது.

இராம இறவன் யுத்தத்தில் இராவணன் கொல்லப்படுவான் என்பதை இலங்கையில் இருந்த ரிஷிமார்களுக்கும், இராவணன் சபையிலிருந்த மிக முக்கிய குருமார்களுக்கும் கனவு மூலமாகவே உணர்த்தப்பட்டது.

இராமயணத்தில் விபீஷணின் புத்திரி திரிஜடை கண்ட கனவு பின்னொரு நாளில் நனவாக மாறியது.

வாலியின் மனைவி தாரை கண்ட கனவு பலித்தது.

சிலப்பைதிகரத்தில் கோப்பெருந்தேவி கண்ட கனவு பலித்தது.

வரலாற்றில் சக்கரவர்த்தி ஜூலியஸ் சீஸர் கண்ட கனவு சீஸரின் மரணத்தின் போது உறுதிப்படுத்தப் பட்டது.

இப்படி கனவுகளுக்குப் பலன் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. பொதுவாக ஆண்கள் காணக்கூடிய கனவுகளைவிட பெண்கள் காணக்கூடிய கனவுகளுக்கு உடனடி பலன் தெரியும். இதை மேற்கூறிய விஷயங்களிளிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

இப்படி கனவு என்பதற்கு ஒரு திட்டவட்டமான தீர்க்கமான அறிவியல் ரீதியாக ஆதாரப்பூர்வமான விஷயங்களை வரையறுத்துக் கூறமுடியாத நிலை இருக்கின்றது. ஏனெனில் பெருவாரியான கனவுகள் பலித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இப்படி கனவுகள் பலித்துக் கொண்டிருக்கின்றன என்று சொல்லும் நாம் பகலில் காணக்கூடிய கனவு பலிக்காது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து வர இருப்பது.....





கனவு பற்றி இந்து மத சாஸ்திரம் கூறும் உண்மைகள்!


கனவு பற்றிய கண்ணோட்டம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by எஸ்.எம். மபாஸ் Tue Jun 01, 2010 12:44 pm

கனவு...

கனவு கனவாகவே இருந்துவிடாமல்....

தகவலுக்கு நன்றி தலைவா..




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 01, 2010 1:36 pm

கனவு பற்றி இத்தனை விவரங்கள் இப்போது தான் அறிய முடிந்தது சிவா...

எனக்கு நிறைய இதுவரை பார்த்திராத கோவில்கள் எல்லாம் எத்தனையோ தடவை கனவில் வந்து அதன்பின் அந்த கோவிலுக்கு போய் வழிப்பட்டிருக்கேன்...

ஷீர்டி சாய்பாபா

விக்ரமாதித்தன் வழிப்பட்ட பெட்டிகாளியம்மன்

இன்னும் பார்க்காத ஸ்ரீ சைலம் ஆனால் கனவில் இந்த கோவில் வந்தாச்சு...

ரோம்ல ஒரு சர்ச் இதுவும் கனவில் வந்தது...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...

இன்னும் தொடரும்னு போட்டிருக்கீங்க... போடுங்க சிவா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கனவு பற்றிய கண்ணோட்டம்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by சிவா Tue Jun 01, 2010 1:43 pm

மஞ்சுபாஷிணி wrote:கனவு பற்றி இத்தனை விவரங்கள் இப்போது தான் அறிய முடிந்தது சிவா...

எனக்கு நிறைய இதுவரை பார்த்திராத கோவில்கள் எல்லாம் எத்தனையோ தடவை கனவில் வந்து அதன்பின் அந்த கோவிலுக்கு போய் வழிப்பட்டிருக்கேன்...

ஷீர்டி சாய்பாபா

விக்ரமாதித்தன் வழிப்பட்ட பெட்டிகாளியம்மன்

இன்னும் பார்க்காத ஸ்ரீ சைலம் ஆனால் கனவில் இந்த கோவில் வந்தாச்சு...

ரோம்ல ஒரு சர்ச் இதுவும் கனவில் வந்தது...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...

இன்னும் தொடரும்னு போட்டிருக்கீங்க... போடுங்க சிவா...

நிச்சயம் எழுதுகிறேன் மஞ்சுக்கா!!!


கனவு பற்றிய கண்ணோட்டம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by சிவா Wed Jun 02, 2010 1:48 am

கனவு பற்றி இந்துமத சாஸ்திரம் கூறும் உண்மைகள்


இரவு நேரத்தில் அயர்ந்து உறங்குகின்றோம். அந்நேரத்தில் நம்முடைய உடலானது எவ்வித இயக்கமுமின்றி அசைவற்று கீழே கிடக்கிறது! கண் பார்க்க முடியாத நிலையிலும் இருக்கிற நித்திரையில்தான் கனவு வருகிறது! ஆனால் கனவில் மட்டும் நாம் கீட்கிரூம், பார்க்கிறோம், அழுகிறோம், சிரிக்கிறோம். இது எப்படி.

நமது உடம்பை அறிவியலாளர்கள் ஸ்தூல உடம்பு, சூட்சும உடம்பு என இருபாகமாக பிரிக்கிறார்கள்.

அவற்றில் கனவு காணும் நிகழ்ச்சிகளைக் காட்டுவது இந்த ஸ்தூல உடம்பில்லை, சூட்சும உடம்பே ஆகும்.

பெருவாரியாக இந்து மதத்தில் நாம் துங்குபோது நமது சூட்சும உடலானது பல்வேறு இடங்களுக்குச் சென்று வருவதாக சொல்லப்படுகிறது. இது உண்மையுங்கூட. ஆவியுலக ஆராய்ச்சியில் உள்ளவர்களும், அறிவியலாளர்களும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாம் கனவு காணும்போது அசையாது இருக்கும் இந்த ஸ்தூல உடம்பு எவ்விதப் பாதிப்புக்கும் உள்ளாவது இல்லை. ஆனால் ஆவி உடல் என்று வர்ணிக்கப்படும் சூட்சும சரீரம் பலவித பதிப்புக்களுக்கு உள்ளாகிறது.

இந்த சூட்சும உடலுக்குக் கிடைக்கும் பல்வேறு விதமான அனுபவக் கோர்வைகளே நமக்குக் கனவுகளாக காணக்கூடிய உணர்வுகளை உண்டாக்குகின்றன.

இந்த சூட்சும உடல் நாம் தூங்கும்போது நம்முடைய உடலை விட்டு வெளிஎரிஸ் செல்கிறது. வெளிஎரிஸ் செல்லக்கூடிய இந்த சூட்சும உடல் சகலவிதமான சக்திகளையும் பெற்றிருக்கிறது.

இதன் காரணத்தினாலேயே சூட்சும உடலால் பறப்பது, கடவுளைக் காண்பது, பேய்களுடன் உறவாடுவது, விசித்திரமான உலகில் சஞ்சரிப்பது, வித்தியாசமான மனிதர்களுடன் உரையாடுவது, தூரத்திலுள்ள உறவினர்களுடன் உரையாடுவது ஆகிய நிகழ்ச்சிகளை சாதாரணமாக நிகழ்த்த முடிகின்றது.

இந்த ஒழுங்கு நியதிக்குட்பட்ட ஒருவிதமான வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சிகளே நமக்குக் கனவுகளாக தெரிகின்றன என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக நமக்கு நன்மை செய்யக்கூடியவர்கள் வாழ்ந்து மறைந்து போயிருந்தால் அவர்கள் நம் நலன் கருதி நமக்கு ஏற்படப்போகும் பிரச்சனைகளை நமது சூட்சும உடலைத் தொடர்பு கொண்டு கனவின் மூலம் எச்சரிக்கின்றனர் என்றும் நமது இந்து மத சாஸ்திரம் கூறுகிறது.


அடுத்து.......

ஏழு விதமான கனவுகள்


கனவு பற்றிய கண்ணோட்டம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by prashanth Wed Jun 02, 2010 4:47 am

என் கனவில் அடிக்கடி நமீதா வருகிறாள் ,....அப்ப்டடியானால் ...!!!!!?
avatar
prashanth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 26/10/2009

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by ப்ரியா Wed Jun 02, 2010 9:15 am

prashanth wrote:என் கனவில் அடிக்கடி நமீதா வருகிறாள் ,....அப்ப்டடியானால் ...!!!!!?

உமக்கு நிறைய பிரச்சனை இருக்கு ... எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கனவு பற்றிய கண்ணோட்டம்! Empty Re: கனவு பற்றிய கண்ணோட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum