Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
நிகழ்நிலை நிர்வாகிகள்
விபத்துள்ளான விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்ன துணை விமானி!
5 posters
Page 1 of 1
விபத்துள்ளான விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்ன துணை விமானி!
மங்களூரில் விபத்தில் சிக்கிய விமானத்தை தரையிறக்கும் முன், அது மிக அதிக வேகத்தில் பறந்ததால், அதை தரையிறக்க வேண்டாம் என்று விமானியிடம் துணை விமானி 2 முறை கூறியுள்ளார். ஆனால், அதைக் கேட்காமல் தரையிறக்கியதால் தான் விபத்து நடந்ததாகத் தெரிகிறது.
மங்களூர் விமான நிலையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் ஓடுதளமான ரன்வே ஒரு மலையின் மீது தான் அமைந்துள்ளது. ரன்வேயின் இரு முனைகளிலும மலைப் பள்ளத்தாக்குகள் உள்ளன. இதனால் இந்த ரன்வே, table-top runway என்று அழைக்கப்படுகிறது. இதில் விமானத்தை தரையிறக்க அதிக அனுபவம் வேண்டும்.
கடந்த 22ம் தேதி துபாயிலிருந்து இங்கு தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரன்வேயில் ஓடி, நிற்காமல், மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து வெடித்துச் சிதறி 158 பேர் பலியாயினர்.
அதன் கருப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டு இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இந்த விமானத்தின் காக்பிட்டில், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல், மங்களூர் விமான நிலைய தரைக்கப்பாட்டு மையத்திலும் பதிவாகியுள்ளது.
இந்த உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.
விமானத்தை தரையிறக்க இங்கிலாந்தைச் சேர்ந்த விமானியான கேப்டன் ஸ்லாட்கோ குளுசிகா முயன்றபோது, வேண்டாம் என்று தடுத்துள்ளார் துணை விமானியான அலுவாலியா. அப்போது விமானம் 800 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
விமானம் அதிக வேகத்தில் தரையிறங்க முயன்றதாலோ அல்லது உயரத்தை போதிய அளவுக்குக் குறைக்காமல் ரன்வேயை அடைய பைலட் முயன்றதாலோ அவரை அலுவாலியா தடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
இரண்டு முறை கேப்டனை தடுத்த அலுவாலியா, இன்னொரு முறை வானில் வட்டமடித்துவிட்டு தரையிறங்க முயற்சி்க்கலாம் என்று கூறியுள்ளது தரைக்கப்ப்டடு மையத்தில் பதிவாகியுள்ளது.
இவ்வளவு வேகத்தில் தரையிறக்கினால், விமானத்தை ரன்வேக்குள் நிறுத்துவது கடினம், அது மலையில் உருண்டுவிட வாய்ப்புள்ளதை உணர்ந்து அலுவாலியா, கேப்டனைத் தடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால், அந்த கோரிக்கையை கேப்டன் நிராகரித்துவிட்டு விமானத்தை தரையிறக்கியபோது தான் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் ரன்வேயின் ஆரம்பத்திலேயே தரையிறங்காமல் 2,000 அடி தள்ளி தரையிறங்கியது. அப்போது விமானத்தை ரன்வேயில் நிறுத்த முடியாது என்பதை கேப்டன் உணர்ந்ததாலோ என்னவோ மீண்டும் டேக்-ஆப் செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், அதற்குள் டயர்கள் வெடித்து, விமானம் கட்டுப்பாட்டை இழந்துவிட, ரன்வேயைத் தாண்டி ஓடி, பள்ளத்தாக்கில் உருண்டுள்ளது.
விபத்துக்குள்ளான இந்த போயிங் 737 விமானத்தை தரையிறக்கிய 4,500 முதல் 5,000 அடி தூரத்திலேயே நிறுத்திவிட முடியும். 2,000 அடி தள்ளி இறங்கியிருந்தாலும் ரன்வேயில் மிச்சமிருந்த 6000 அடி தூரத்தில் அதை நிறுததியிருக்க முடியும். ஆனாலும், அதை ஏன் மீண்டும் டேக்-ஆப் செய்ய விமானிகள் முயன்றனர் என்பது கேள்வியாக உள்ளது.
மேலும் துணை விமானி அலுவாலியா ஏன் விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்னார் என்பது கருப்புப் பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதன் மூலமே துல்லியமாக அறிய முடியும் என்றும் விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.
மங்களூர் விமான நிலையத்தி்ற்கு கேப்டன் குளுசிகா 19 முறையும் துணை விமனியான அலுவாலியா 66 முறையும் விமானங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அலுவாலியா மங்களூரில் வசித்தவரும் ஆவார். இம்மாத இறுதியில் கேப்டனாக பதவி உயர்வு பெற இருந்தார். ஏர் இந்தியாவில் சேரும் முன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
அமெரிக்கா செல்லும் கருப்புப் பெட்டி:
இந் நிலையில் இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மிகுந்த சேதமடைந்துள்ளதால் அதிலிருந்து விவரங்களைப் பெற, அதை அமெரிக்காவில் உள்ள போயிங் விமான நிறுவன தலைமையகத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ரன்வே நீளம் அதிகரிப்பு:
இதற்கிடையே மங்களூர் விமான நிலையத்தின் ஓடுதளத்தின் நீளம் மேலும் 1000 அடி அதிகரிக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.
8,000 அடி நீளமான இந்த ஓடுதளம் 9,000 அடியாக அதிகரிக்கப்படவுள்ளது.
மங்களூர் விமான நிலையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் ஓடுதளமான ரன்வே ஒரு மலையின் மீது தான் அமைந்துள்ளது. ரன்வேயின் இரு முனைகளிலும மலைப் பள்ளத்தாக்குகள் உள்ளன. இதனால் இந்த ரன்வே, table-top runway என்று அழைக்கப்படுகிறது. இதில் விமானத்தை தரையிறக்க அதிக அனுபவம் வேண்டும்.
கடந்த 22ம் தேதி துபாயிலிருந்து இங்கு தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரன்வேயில் ஓடி, நிற்காமல், மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து வெடித்துச் சிதறி 158 பேர் பலியாயினர்.
அதன் கருப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டு இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இந்த விமானத்தின் காக்பிட்டில், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல், மங்களூர் விமான நிலைய தரைக்கப்பாட்டு மையத்திலும் பதிவாகியுள்ளது.
இந்த உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.
விமானத்தை தரையிறக்க இங்கிலாந்தைச் சேர்ந்த விமானியான கேப்டன் ஸ்லாட்கோ குளுசிகா முயன்றபோது, வேண்டாம் என்று தடுத்துள்ளார் துணை விமானியான அலுவாலியா. அப்போது விமானம் 800 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
விமானம் அதிக வேகத்தில் தரையிறங்க முயன்றதாலோ அல்லது உயரத்தை போதிய அளவுக்குக் குறைக்காமல் ரன்வேயை அடைய பைலட் முயன்றதாலோ அவரை அலுவாலியா தடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
இரண்டு முறை கேப்டனை தடுத்த அலுவாலியா, இன்னொரு முறை வானில் வட்டமடித்துவிட்டு தரையிறங்க முயற்சி்க்கலாம் என்று கூறியுள்ளது தரைக்கப்ப்டடு மையத்தில் பதிவாகியுள்ளது.
இவ்வளவு வேகத்தில் தரையிறக்கினால், விமானத்தை ரன்வேக்குள் நிறுத்துவது கடினம், அது மலையில் உருண்டுவிட வாய்ப்புள்ளதை உணர்ந்து அலுவாலியா, கேப்டனைத் தடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால், அந்த கோரிக்கையை கேப்டன் நிராகரித்துவிட்டு விமானத்தை தரையிறக்கியபோது தான் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் ரன்வேயின் ஆரம்பத்திலேயே தரையிறங்காமல் 2,000 அடி தள்ளி தரையிறங்கியது. அப்போது விமானத்தை ரன்வேயில் நிறுத்த முடியாது என்பதை கேப்டன் உணர்ந்ததாலோ என்னவோ மீண்டும் டேக்-ஆப் செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், அதற்குள் டயர்கள் வெடித்து, விமானம் கட்டுப்பாட்டை இழந்துவிட, ரன்வேயைத் தாண்டி ஓடி, பள்ளத்தாக்கில் உருண்டுள்ளது.
விபத்துக்குள்ளான இந்த போயிங் 737 விமானத்தை தரையிறக்கிய 4,500 முதல் 5,000 அடி தூரத்திலேயே நிறுத்திவிட முடியும். 2,000 அடி தள்ளி இறங்கியிருந்தாலும் ரன்வேயில் மிச்சமிருந்த 6000 அடி தூரத்தில் அதை நிறுததியிருக்க முடியும். ஆனாலும், அதை ஏன் மீண்டும் டேக்-ஆப் செய்ய விமானிகள் முயன்றனர் என்பது கேள்வியாக உள்ளது.
மேலும் துணை விமானி அலுவாலியா ஏன் விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்னார் என்பது கருப்புப் பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதன் மூலமே துல்லியமாக அறிய முடியும் என்றும் விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.
மங்களூர் விமான நிலையத்தி்ற்கு கேப்டன் குளுசிகா 19 முறையும் துணை விமனியான அலுவாலியா 66 முறையும் விமானங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அலுவாலியா மங்களூரில் வசித்தவரும் ஆவார். இம்மாத இறுதியில் கேப்டனாக பதவி உயர்வு பெற இருந்தார். ஏர் இந்தியாவில் சேரும் முன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
அமெரிக்கா செல்லும் கருப்புப் பெட்டி:
இந் நிலையில் இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மிகுந்த சேதமடைந்துள்ளதால் அதிலிருந்து விவரங்களைப் பெற, அதை அமெரிக்காவில் உள்ள போயிங் விமான நிறுவன தலைமையகத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ரன்வே நீளம் அதிகரிப்பு:
இதற்கிடையே மங்களூர் விமான நிலையத்தின் ஓடுதளத்தின் நீளம் மேலும் 1000 அடி அதிகரிக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.
8,000 அடி நீளமான இந்த ஓடுதளம் 9,000 அடியாக அதிகரிக்கப்படவுள்ளது.
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விபத்துள்ளான விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்ன துணை விமானி!
விதியை அலுவாலியா வால் வெல்ல முடியல ! பாவம் !!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விபத்துள்ளான விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்ன துணை விமானி!
விதியை யாரால் மாற்றமுடியும் இன்னாருக்கு இன்னது என்று எழுதிவைத்துவிட்டான் இறைவன்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: விபத்துள்ளான விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்ன துணை விமானி!
ஆமாம் நீங்கள் சொல்வது சரிசபீர் wrote:விதியை யாரால் மாற்றமுடியும் இன்னாருக்கு இன்னது என்று எழுதிவைத்துவிட்டான் இறைவன்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010
Re: விபத்துள்ளான விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்ன துணை விமானி!
சபீர் wrote:விதியை யாரால் மாற்றமுடியும் இன்னாருக்கு இன்னது என்று எழுதிவைத்துவிட்டான் இறைவன்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» குடிபோதையில் விமானத்தை ஓட்டிய விமானி
» ஷிப்ட் முடிந்ததால் பாதிவழியில் விமானத்தை விட்டுச்சென்ற ஏர்இந்தியா விமானி!
» கால்களால் விமானத்தை இயக்க உரிமம் பெற்ற முதல் பெண் விமானி ஜெசிகா..
» விமான பணிப்பெண்ணை கற்பழித்த துணை விமானி கைது
» போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
» ஷிப்ட் முடிந்ததால் பாதிவழியில் விமானத்தை விட்டுச்சென்ற ஏர்இந்தியா விமானி!
» கால்களால் விமானத்தை இயக்க உரிமம் பெற்ற முதல் பெண் விமானி ஜெசிகா..
» விமான பணிப்பெண்ணை கற்பழித்த துணை விமானி கைது
» போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|