ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

3 posters

Go down

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Empty மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

Post by சரவணன் Sat May 29, 2010 6:38 pm

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?
அதிகாரப்பூர்வ மதங்களான இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ, யூத. புத்த, சமண, சீக்கிய மதங்கள் எதுவுமே அசைவ உணவினை அனுமதிக்காததோடு அங்கீகரிக்கவும் இல்லை.


இயேசு கிறிஸ்து.
மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Jesus_198

இயேசுநாதர் அன்பு, கருணையினை அதிகம் உபதேசித்தார்.

மனித உருவில் இறைவனான அவர் சம்பந்தப்பட்ட திரு உருவ படங்களில் அவரது கையில் உள்ள ஆடு எவ்வளவு அன்புடன் அரவணைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் அன்பு கனிந்த பார்வையிலும் நாம் புரிந்து கொள்ளலாம்.

அத்தகையவர் அந்த ஆட்டினை கொன்று தின்னும் செயலை போதித்திருப்பாரா அல்லது கண்டித்திருப்பாரா?

நிச்சயமாக அன்பின் மறு உருவத்தை அவர் மூலம்காணும் அவர் கோட்பாடுகளின் வழி நடக்கும் மக்கள் அசைவத்தை தவிர்த்து ஆக வேண்டும்.இயேசு ஒரு போதும் மாமிசம் உண்ணவில்லை.

பல கிறிஸ்தவர்களுக்கு அசைவம் உண்பதை தவிர்ப்பதில் இடையூறாக இருப்பது கிறிஸ்து மாமிசம் உண்டார் என்ற தவறான நம்பிக்கை.

ஆனால் புதிய ஏற்பாட்டின் படி கிரேக்க மொழி மூலத்தை சற்று ஆழ்ந்து கவனிக்கும்போது உணவு அல்லது உண்ணுதல் என்று பொருட்படும் வார்த்தைகளும் மற்றும் டீராஃபி (TROPHE) பிராம் (BROME) என்ற வார்த்தைகளுமே தவறாக மாமிசம் என்னும் பொருள்படும் மீட் (MEAT) என்ற ஆங்கில வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டின் படி பல இடங்களில் உண்ண என்று பொருள் படும் பாகோ ((BHAGO) கிரேக்க வார்த்தை மாமிசம் என்ற பொருளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

உண்மையில் மாமிசத்தை குறிக்கும் கிரேக்க வார்த்தை கிரியஸ் (KRIYAS) என்பதாகும். அந்த வார்த்தை கிறிஸ்துவுடன் தொடர்புடைய எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. புதிய ஏற்பாட்டில் இயேசு மாமிசம் உண்டதற்கு எந்த அத்தாட்சியமும் இல்லை.

மேலும் யூதர்களின் நசரையேர் பிரிவினர் இன்னும் தாவர உணவை உண்பவர்களாகவே உள்ளனர். ஏசுவும் தன்னை நசரையேன் என்று பிரகடனப்படுத்தியுள்ள அவர் அசைவ உணவை உண்ணாததை உறுதிப்படுத்துகிறது.

அசைவம் உண்பதை நிராகரிக்கும் சான்றுகள்.

1) சாம்ஸ் (PSALMS)) 145.9-ல் இறைவன் எல்லோருக்கும் நல்லவர் அவருடைய எல்லா படைப்புகளிலும் இரக்கம் உடையவர் என்று குறிப்பிடபட்டுள்ளது


2) ஏலாஹில் (EZEKIEL) 47.12 ல் உன்னுடைய உணவாக பழங்களாகட்டும், மருந்தாக விதைகளாகட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3) இசையா (ISAIAH ) 1ஃ11ல் நான் எரிக்கப்பட்ட ஆடுகளாலும் கொல்லப்பட்ட விலங்குகளின் கொழுப்பாலும் நிரப்பபட்டுள்ளேன். நான் எருது மற்றும் ஆடுகளின் இரத்தத்தில் சந்தோஷப்படவில்லை என்றும் 1:15ல் நீ
சொல்லும் இரத்தத்தில் சந்தோஷப்படவில்லை என்றும் 1:15ல் நீ சொல்லும் பிரார்த்தனைகளை நான் ஏற்பதில்லை, ஏனெனில் உன்னுடைய கரங்கள் இரத்தம் பழந்ததாக உள்ளது. என்றும் 66:3ல் ஒரு எருதைக் கொல்வது மனிதனைக் கொல்வதற்கு சமமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


4) எக்ஸோடாஸ் (EXODUS ) 20:13ல் நீ கொல்லாதிருப்பாயாக என்று குறிப்பிடப்படபடுகிறது.

(நன்றி - ISCON ULAGAM)


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Empty Re: மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

Post by சரவணன் Sat May 29, 2010 6:40 pm

புத்தர்

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Buddha1

மற்ற உயிர்களுக்கு பயம் உண்டாகாமல் இருக்க என் சீடர்கள் எவரும் மாமிசம் உண்ணலாகாது.

புத்திசாலிகளின் உணவு சாதுக்களின் உணவாக இருக்கட்டும். மாமிசம்
கலவாதிருக்கட்டும். நான் புலாலை உண்பதை எவ்விதத்தும் எந்நிலையிலும். எந்த
சூழலிலும் அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

தம்மப்பாதாவில் யாரொருவர் சொந்த மகிழ்ச்சியினை விரும்புகிறார்களோ இவர்களை
போலவே மகிழ்ச்சியினை நாடும் மற்ற உயிர்களை தண்டிக்கவோ கொல்லவோ செய்தால்
இப்பிறவிக்கு பின் மகிழ்ச்சியினை அடைவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


சமண மதக்கோட்பாடுகள்
108 வகையான ஹிம்சைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அஹிம்சையே சமண மதத்தின்
அடிப்படைக்கோட்பாடு மற்ற உயிர்களுக்கு கேடு செய்ய சிந்தனை, சொல், செயல்
இவற்றால் ஈடுபடுவதும் பாவமாகிறது, அப்படி இருக்கையில் மாமிசத்திற்காக ஓர்
உயிரைக்கொல்வது பற்றி பேசுவதற்கே இடமில்லை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Empty Re: மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

Post by சரவணன் Sat May 29, 2010 6:41 pm

இஸ்லாமிய மதம்
குர்-ஆன் சுரா 36, பதங்கள் 33.34.35-ல்

அவர்களுக்கு வறண்ட பூமி அடையாளமாக அளிக்கப்பட்டது.

நாங்கள் அதை உயிர்ப்பித்தோம். அவர்கள் உண்ணும் வண்ணம் அதிலிருந்து
தானியங்களை உண்டாக்கினோம்.
பேரீச்சம்பழம் மற்றும் திராட்சை தோட்டங்களை அங்கு உருவாக்கினோம். அவற்றில் இருந்து கிடைக்கும் பழங்களை உண்ணட்டும்,

பின் அவர்கள் நன்றி சொல்ல மாட்டார்களா? என்று கூறப்பட்டுள்ளது.

(இங்கே தாவர உணவினையே குறிப்பிட்டிருப்பதால் அசைவ உணவை குறிப்பிடபடவில்லை என்பது தெரிகிறது)
இறைத்தூதர் முகமது நபி விலங்குகளை ஊனப்படுத்தாதே என்றும் தன்னை விட
கீழ்ப்பட்ட உயிர்களுக்கு கருணை காட்டுபவர் தனக்கே கருணை காட்டுகிறார்
என்று கூறியள்ளார்.

குர்-ஆன் சுரா 6 பதம் 38ல்

இந்த பூமியில் உள்ள மிருகங்களும் இரண்டு இறக்கைகளுடன் வானில் பறக்கும்
பறவைகளும் உனக்கு மற்ற மக்களை போன்றவர்களே என்று குறிப்பிடப்படுகிறது.


அசைவத்தினை தவிர்த்த சூஃபி சாதுக்கள்


தூய்மை, துறவு, இரக்கம் கொண்ட வாழ்க்கை வாழ்ந்தனர். மேலும் அசைவம்
முழுதும் தவிர்த்த எளிமையான உணவினை மட்டுமே உண்டனர். இவர்களில் அன்பு,
.கருணை, ஒழுக்கம், தவநெறி. கொண்ட கீழ்க்கண்ட பெரியோர்கள்

1) ஸேக் இஸ்மாயில்

2) க்வாஜா மைதீன் சிஸ்டி

3) ஹசரத் நிசாமுதீன் அவுலியா

4) பூ அலி கொலண்டர்

5) ஸா இனையட்

6) மீர் தட்

7) ஸா அப்துல் கரீம் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவா.

நம் முன்னாள் இந்தியக்குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் கூட அசைவம் தவிர்த்த சைவ உணவாளரே என்பதும் குறிப்பிடதக்கது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Empty Re: மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

Post by சரவணன் Sat May 29, 2010 6:41 pm

பத்ம புராணம்.

பதங்கள் 3, 31, .25, 28 மற்ற உயிர்களை துன்பபடுத்தும் மனிதர்கள் வேதங்களை ஓதினாலும் தவறுகள் செய்தாலும் தான தர்மங்கள் செய்தாலும். சொர்க்கத்திற்கு போவதில்லை.

ஏனெனில் அஹிம்சையே மிகப்பெரிய புண்ணியம் அதுவே பெரிய தவம். அதுவே பெரிய தானம். இவ்வாறு முனிவர்கள் கூறியுள்ளனர்.

கர்மா நியதிக் கொள்கையின்படி சிறு உயிரோ அல்லது பெரிய உயிரோ எதுவாயினும் அதை அறிந்தோ.அறியாமலோ கொல்பவர்கள் அவைகளாலயே ஒரு நாள் கொல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Empty Re: மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

Post by சரவணன் Sat May 29, 2010 6:44 pm

பகவத் கீதை:
மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? God-krishna

பதம் 9ஃ26ல்

பகவான் கிருஷ்ணர் ஒருவர் எனக்கு அன்புடனும் பக்தியுடனும். இலையோ. பழமோ,
பூவோ அல்லது நீரோ அளித்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுகிறார்.
தாவர உணவையே அளிக்குமாறு கூறினாரே தவிர எந்த இடத்திலும் தனக்கு அசைவ
உணவினை அளிக்குமாறு கூறவில்லை.

ஸ்ரீ மத் பாகவதம்.


பதம் 1ஃ17ஃ38ல் கலி என்னும் பாவ புருசன் குடியிருக்கும் நான்கு
இடங்களில் மாமிசம் உண்ணும் இடமும் ஒன்று என கூறப்பட்டுள்ளது. ஏனெனில்
மாமிசம் உண்ணும் இடத்தில் கருணை மனப்பான்மை அடியோடு அழிவதால் கலியின்
கேடுகள் அவர்களை அடைகிறது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Empty Re: மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

Post by சரவணன் Sat May 29, 2010 6:45 pm

மனுசம்ஹிதை.
5ஃ51
மிருக வதையினை அனுமதிப்பவர்கள். கொல்பவர். கூறுபோடுபவர். வாங்குபவர்.விற்பவர். சமைப்பவர். பரிமாறுபவர் உண்பவர் ஆகிய அனைவரும் கொன்றவர்களாக கருதப்படுவர்.

திருக்குறள்
திருவள்ளுவர் அவர்களால் எழுதப்பட்டுள்ள திருக்குறள் என்ற உலகம் முழுவதும் தமிழ்மறை என ஒத்துக்கொள்ளப்பட்ட அந்த நூலில் புலால் மறுப்பு பற்றி ஒரு அதிகாரம் முழுவதும் புலால் உண்பதைச் சாடி குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அதிகார எண் 26
251)
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்கனம் ஆளும் அருள்
252)
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பார்க்கு
253)
படைகொண்டார் நெஞ்சம்போது நன்று ஊக்கானது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்
254)
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்
255)
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணுத்தல் செய்யாது அளறு
256)
தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன் தருவார் இல்
257)
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண் அது உணர்வர்ப்பெறின்



258)
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

259)
அவிசொரிந்து ஆயிரம் வெட்டலின் ஒன்றன்
உயிர்செருத்து உண்ணாமை நன்று
260)
கொல்லான் புலாலை மறுத்தானை கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

வள்ளுவரின் வரிசையில் எத்தனையோ ஈரடிச் செய்யுள்கள் தந்த எத்தனையோ மென் மக்களுள் ஒருவரான அவ்வை முனி தனது கொன்றை வேந்தன் நீதி நூலில் குறள் எண் 58. 63 இரண்ழலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

58) நோன்பென்பதுவே கொன்றுதின் னாமை.

பொருள்:
ஓர் உயிரைக் கொன்று அதன் இறைச்சியினை தின்னாதிருப்பதே புண்ணியம் பெருக்கும் சிறந்த விரதமாகும்.

63) புலையும், கொலையும் களவும் தவிர்

இழிவான இறைச்சி உண்பதையும் (ஐந்து மா பாதகச்செயல்களுள்) மாபாதகச்செயலான கொலை செய்வதையும் நெஞ்சத்தைக் கெடுக்கும் வஞ்சகச் செயலாகிய திருட்டையும் கைக்கொள்ளாதே.

இதுபோன்று உலகின் மறை அத்தனையிலும் உணர்த்தும் ஒரே நெறியாகிய கொல்லாமையினை பற்றி மாபாதகச்செயல்களுள் மிகப்பெரியதென இதனையே வற்யுறுத்தி மக்கள் அறியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆன்மீக அடிப்படை செய்திகளும் உணர்வுக்கோட்பாட்ழல் உறுதியாய்ப் பற்றிடும் செய்திகளும் உடல் விஞ்ஞான அணுக் கோட்பாட்டின்படி ஆதாரச்செய்திகளாயும் விரிந்த வண்ணம் புலால் மறுப்புக்கொள்கை தொடர்ந்து வர இருப்பது இறைவனுக்குச் செய்யும் ஒரு தொண்டாய் ஸ்வார்த்தம் சத் சங்கம் எண்ணுவதாய் அமையும் என்பதே இப்போதைய இறுதிச்செய்தி.

Courtesy: swartham sathsangam @ maharishipathanjali.blogspot.com


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Empty Re: மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

Post by பாரதிப்பிரியன் Sat May 29, 2010 6:59 pm

பகிர்வுக்கு நன்றி, நல்லதொரு விடயம்..கட்டாயம் தெரிந்திருக்கவேண்டியது.
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Empty Re: மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

Post by சரவணன் Sat May 29, 2010 7:07 pm

பாரதிப்பிரியன் wrote:பகிர்வுக்கு நன்றி, நல்லதொரு விடயம்..கட்டாயம் தெரிந்திருக்கவேண்டியது.
மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? 678642 மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? 678642 மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Empty Re: மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

Post by ஹாசிம் Sat May 29, 2010 7:24 pm

பிச்ச wrote:
இஸ்லாமிய மதம்
குர்-ஆன் சுரா 36, பதங்கள் 33.34.35-ல்

அவர்களுக்கு வறண்ட பூமி அடையாளமாக அளிக்கப்பட்டது.

நாங்கள் அதை உயிர்ப்பித்தோம். அவர்கள் உண்ணும் வண்ணம் அதிலிருந்து
தானியங்களை உண்டாக்கினோம்.
பேரீச்சம்பழம் மற்றும் திராட்சை தோட்டங்களை அங்கு உருவாக்கினோம். அவற்றில் இருந்து கிடைக்கும் பழங்களை உண்ணட்டும்,

பின் அவர்கள் நன்றி சொல்ல மாட்டார்களா? என்று கூறப்பட்டுள்ளது.

(இங்கே தாவர உணவினையே குறிப்பிட்டிருப்பதால் அசைவ உணவை குறிப்பிடபடவில்லை என்பது தெரிகிறது)
இறைத்தூதர் முகமது நபி விலங்குகளை ஊனப்படுத்தாதே என்றும் தன்னை விட
கீழ்ப்பட்ட உயிர்களுக்கு கருணை காட்டுபவர் தனக்கே கருணை காட்டுகிறார்
என்று கூறியள்ளார்.

குர்-ஆன் சுரா 6 பதம் 38ல்

இந்த பூமியில் உள்ள மிருகங்களும் இரண்டு இறக்கைகளுடன் வானில் பறக்கும்
பறவைகளும் உனக்கு மற்ற மக்களை போன்றவர்களே என்று குறிப்பிடப்படுகிறது.


அசைவத்தினை தவிர்த்த சூஃபி சாதுக்கள்


தூய்மை, துறவு, இரக்கம் கொண்ட வாழ்க்கை வாழ்ந்தனர். மேலும் அசைவம்
முழுதும் தவிர்த்த எளிமையான உணவினை மட்டுமே உண்டனர். இவர்களில் அன்பு,
.கருணை, ஒழுக்கம், தவநெறி. கொண்ட கீழ்க்கண்ட பெரியோர்கள்

1) ஸேக் இஸ்மாயில்

2) க்வாஜா மைதீன் சிஸ்டி

3) ஹசரத் நிசாமுதீன் அவுலியா

4) பூ அலி கொலண்டர்

5) ஸா இனையட்

6) மீர் தட்

7) ஸா அப்துல் கரீம் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவா.

நம் முன்னாள் இந்தியக்குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் கூட அசைவம் தவிர்த்த சைவ உணவாளரே என்பதும் குறிப்பிடதக்கது.

நண்பா அருமையான பதிவுதான் ஆனால் இஸ்லாத்தைப்பொறுத்தவரை இறைச்சி உண்பதை தடைசெய்யவில்லை அதற்கான ஆதாரத்தை குர்ஆனிலிருந்தே தருகிறேன்
இப்பதிவு உங்களை திருத்துவதோ குறைகாண்பதோ நோக்கமல்ல உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக மற்றும் இதற்காக நீங்கள் இட்ட ஆதாராம் போதாது என்பதற்காகவும் இஸ்லாத்தைப்பொறுத்தவரை அசைவம் ஆதரிக்கப்படுகிறது என்பதை எத்திவைக்கும் நோக்கத்தில் பதிகிறேன்

சூறா52: 22அத்தியாயத்தில் இறைவன் குறிப்பிடுகிறான் இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும் நாம் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருப்போம்

இவ்வாறு அதிகமதிகம் குறிப்பிடப்படுகிறது
உங்கள் சந்தேகம் தீர்க்க கீழ்உள்ள தளத்தைப்பார்க்கவும்
மற்ற மதங்கள் போதித்தவைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா ஏற்றுக்கொள்கிறேன்

http://www.tamililquran.com/filesearch.asp?R1=V1&search_term=%2Ciwr%3Brp&cmdSearch=NjLf

இந்தத்தளத்தின் முகப்புக்குச்சென்று நீங்கள் ஆராய்ச்சி செய்து பாருங்கள் அதிகமான விடையங்கள் கிடைக்கும்


நேசமுடன் ஹாசிம்
மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Empty Re: மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

Post by சரவணன் Sat May 29, 2010 7:28 pm

ஹாசிம் wrote:
நண்பா அருமையான பதிவுதான் ஆனால் இஸ்லாத்தைப்பொறுத்தவரை இறைச்சி உண்பதை தடைசெய்யவில்லை அதற்கான ஆதாரத்தை குர்ஆனிலிருந்தே தருகிறேன்
இப்பதிவு உங்களை திருத்துவதோ குறைகாண்பதோ நோக்கமல்ல உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக மற்றும் இதற்காக நீங்கள் இட்ட ஆதாராம் போதாது என்பதற்காகவும் இஸ்லாத்தைப்பொறுத்தவரை அசைவம் ஆதரிக்கப்படுகிறது என்பதை எத்திவைக்கும் நோக்கத்தில் பதிகிறேன்

சூறா52: 22அத்தியாயத்தில் இறைவன் குறிப்பிடுகிறான் இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும் நாம் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருப்போம்

இவ்வாறு அதிகமதிகம் குறிப்பிடப்படுகிறது
உங்கள் சந்தேகம் தீர்க்க கீழ்உள்ள தளத்தைப்பார்க்கவும்
மற்ற மதங்கள் போதித்தவைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா ஏற்றுக்கொள்கிறேன்

http://www.tamililquran.com/filesearch.asp?R1=V1&search_term=%2Ciwr%3Brp&cmdSearch=NjLf

இந்தத்தளத்தின் முகப்புக்குச்சென்று நீங்கள் ஆராய்ச்சி செய்து பாருங்கள் அதிகமான விடையங்கள் கிடைக்கும்
மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? 678642 மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா? Empty Re: மதங்கள் அசைவத்தை போதிக்கின்றனவா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum