ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டிற்குள் செருப்பணிந்து செல்லுங்கள்

2 posters

Go down

வீட்டிற்குள் செருப்பணிந்து செல்லுங்கள் Empty வீட்டிற்குள் செருப்பணிந்து செல்லுங்கள்

Post by சபீர் Sun May 23, 2010 1:27 pm

அவள் ஒரு ஆசாரசீலமான வயதான மாது. நடக்கும்போது பாதத்தில் சுரீர் என வலிக்கிறது என்றாள். அவளது பாதத்தைப் பரிசோதித்துப் பார்த்தபோது, விரலை அண்டிய பகுதிகளில் தோல் தடித்து சொரசொரப்பாகத் திட்டுத்திட்டாக சில ஆணிக் கூடுகள் தெரிந்தன. இவை நீண்ட காலமாகத் தொல்லை கொடுக்கின்றனவாம்.



`
வெறும் காலுடன் மண் முற்றத்தில் நடப்பீர்களா?' என்று கேட்டபோது `இல்லை, நாங்கள் இருப்பது பிளட்ஸ் வீடு. காலில் மண் படுவதே கிடையாது. வீட்டிலும் மாபிள் பதித்த தரை. அழுக்கே கிடையாது' என்றாள் பெருமையோடு.

அழுக்கினால் ஆணிக் கூடுகள் வளர்வதில்லை. பாதத்தின் சில பகுதிகள் வெறும் தரையில் தொடர்ந்து அழுத்துவதால் அவை தடிப்படைந்து ஆணிக் கூடுகளாக வளர்கின்றன. இறுக்கமான சப்பாத்து அணிபவர்களின் பெருவிரலின் மொளிப்பகுதியில் தோல் தடித்து கட்டைபோல் இருக்குமே அதைப் போலத்தான் இதுவும். `இவ்வாறு தோல் தடிக்காமல் தடுப்பதற்கு வீட்டிற்குள்ளும் எந்நேரமும் மென்மையான பாதணிகளை அணியுங்கள்' என்றேன்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வீட்டிற்குள் செருப்பணிந்து செல்லுங்கள் Empty Re: வீட்டிற்குள் செருப்பணிந்து செல்லுங்கள்

Post by சபீர் Sun May 23, 2010 1:27 pm

`வீட்டிற்குள்ளும் செருப்பா!' அதிர்ந்தாள் அந்த ஆசார மாது.

வீடு புனிதமானதுதான்! ஆயினும் அதைவிட எமது கால் காயப்படாமல் இருப்பது அவசியமல்லவா? எச்சிலும் சலமும் தெளித்துப் புனிதப்பட்ட தெருக்களில், தேய்த்து நடந்த செருப்பை வீட்டுக்குள் அணிய வேண்டியதில்லை. வீட்டுக்குள் உபயோகிப்பதற்கு என தனிச் செருப்பை உபயோகித்தால் வீட்டின் சுகாதாரமும் கெடாது. புனிதமும் காப்பாற்றப்படும் எனத் தெளிவுறுத்திய பின் அரை மனதோடு ஏற்றுக் கொண்டாள்.

மற்றொருவர் நீண்டகால நீரிழிவு நோயாளி. அவரது பாதத்தில் நீண்ட காலமாகப் புண். எத்தனையோ தடவை மருந்து கட்டியும் பிரயோசனம் இல்லை. எவ்வளவோ நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உட்கொண்டும் குணமாகவில்லை. அவரது புண்ணைப் பார்த்தபோது அதுவும் கால் தரையில் அழுத்தும் இடத்தில்தான் இருந்தது. மேலும் பரிசோதித்தபோது அவரது காலில் உணர்வு குறைந்திருப்பது தெரிந்தது. அதாவது நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பாதங்களில் விறைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவுதான் (Diadetic Neuropathy) வலி உணர்வு தெரியாததால் புண்ணை மேலும் அழுத்தி அழுத்தி நடந்ததால் அவரது புண் ஆறவில்லை.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வீட்டிற்குள் செருப்பணிந்து செல்லுங்கள் Empty Re: வீட்டிற்குள் செருப்பணிந்து செல்லுங்கள்

Post by சபீர் Sun May 23, 2010 1:28 pm

எனவே இவருக்கும் செருப்பு அணியுமாறு ஆலோசனை கூறப்பட்டது. அதுவும் எந்நேரமும் அணியுமாறு கூறப்பட்டது. ஆனால் வழமையான பாதணிகள் அல்ல. அவர் நடக்கும்போது புண் உள்ள பாதப் பகுதி தரையில் அண்டவிடாதபடி பாதணி அணியவேண்டும். இது எப்படி சாத்தியமாகும்? புண் உள்ள பகுதிக்குப் பின்புறமாக ஒரு பண்டேஜ் சுருளை விரிக்காமல், உருளைபோல வைத்துக் கட்டினால் அப்பகுதி தரையிலிருந்து சற்று உயர்ந்து நிற்கும். இதனால் புண் அழுத்துப்படாமல் பாதுகாக்கும். விரைவில் குணமாகும்.




இன்னொருவர் காலிலும் புண். பெரிய கட்டுப் போட்டிருந்தார். இவர் எனது நோயாளி அல்ல. ஒருநாள் வீதியில் போகும்போது பார்த்தது. இந்தப் புத்திமானுக்கு நீரிழிவால் புண் வந்து பாதத்தின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்தது தெரிந்தது. இவர் செருப்பு அணிந்திருந்தார்! ஒரு காலில் மட்டும். அதுவும் நல்ல காலில் மட்டும். புண்பட்ட காலானது தெருவில் உள்ள கல்லு முள்ளுகளையும் அழுக்கையும் அளைந்து கொண்டு இன்னொரு புண்ணை அவாவிக் கொண்டு திரிந்தது.



இவரால் விரல்களிடையே கொழுவும் செருப்பு அணியமுடியாது என்பது புரிந்தது. விரல்கள் இல்லாததாலும் பண்டேஜுடன் கொழுவ முடியாததாலும் வழமையான செருப்புகளை அணிய இவரால் முடியாது. பின் புறமாகப் பட்டி வைத்துக் கட்டும் பாதணிகளே உதவும். இவரும் வீட்டில் பிறிதொரு பாதணி அணிய வேண்டியது அவசியமே.

நீரிழிவு நோயாளிகள், பாதத்தில் புண் உள்ளவர்கள் மாத்திரமின்றி, குதிக்கால் வாதம் (Planter Fascitis) போன்று காலில் வேறு நோய் உள்ளவர்களுக்கும் என வெவ்வேறு வகையான பாதணிகள் இருக்கின்றன. இவை அவர்களது நோய்களை தணிக்க உதவும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வீட்டிற்குள் செருப்பணிந்து செல்லுங்கள் Empty Re: வீட்டிற்குள் செருப்பணிந்து செல்லுங்கள்

Post by krishnaamma Mon May 31, 2010 9:04 pm

வீட்டிற்குள் செருப்பு அணிவது மிகவும் சுகாதாரமானது !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டிற்குள் செருப்பணிந்து செல்லுங்கள் Empty Re: வீட்டிற்குள் செருப்பணிந்து செல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum