ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரிசு!

Go down

வாரிசு! Empty வாரிசு!

Post by சிவா Thu May 20, 2010 11:43 pm

``திலகா... திலகா உள்ள என்னம்மா பண்ணிகிட்டுருக்க?'' என்று குரல் கொடுத்தான் சண்முகம்.

``சொல்லுங்க! அடுப்படியில் வேலையா இருக்கேன்'' என்ற திலகா உள்ளிருந்தே குரல் கொடுத்தாள்.

``நான் டவுண் வரைக்கும் போக வேண்டியிருக்கு. காலை டிபன் வெளியில பார்த்துக்கிறேன். மதியத்துக்கு பத்து பேருக்கு சமைச்சி மாரிகிட்ட கொடுத்தனுப்பு. இன்னைக்கு நம்ம வயல்ல அறுப்பு. நான் வீட்டுக்கு வர மணி ஆறாயிடும். சாப்பிடாம இருக்காத, மாத்திரையை கரெக்டா போட்டுக்க. வரட்டுமா..?''

``சரிங்க. போயிட்டு வாங்க'' என்ற திலகாவிற்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. கணவன் சண்முகத்திற்கு விவசாயத்தில் நல்ல கலை நுணுக்கம். அவனது அயராத உழைப்பால் விளைச்சலில் வெற்றி அவனுக்கே. மேலும் தன் அன்பு மனைவி திலகாவையும் நன்கு கவனித்துக் கொள்வான். ஒரே குறை இதுவரை குழந்தையே இல்லை என்பது தான்.

மருத்துவரிடம் பரிசோதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருவருக்குமே எந்த குறையும் இல்லை. இருப்பினும் நூற்றில் ஒருவருக்கு இப்படித்தான் இருக்கிறது. `கடவுளை நம்புங்க! நிச்சயம் குழந்தை பிறக்கும். இந்த மாத்திரைகளை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வாங்க' என்று தான் சொல்லுகிறார்கள்.

திலகா மறந்தாலும் சண்முகம் அதை மறக்கவே மாட்டான். வயல் வேலைகளையும் முடித்து அவ்வப்போது திலகாவையும் கவனித்துக் கொள்வான். மாத்திரைகளை தவறாமல் எடுத்து கொடுப்பான். இந்த அன்பில் தான் திலகா உருகிப் போவாள்.

ஆனால் மாமியார் அன்னம்மாளோ, சதா கரித்துக் கொட்டிக் கொண்டே இருப்பாள். ``இங்க நான் ஒருத்தி, குத்துக் கல்லாட்டாம் உட்கார்ந்திருக்கேன்... என்னை ஒரு வார்த்தை சாப்பிடச் சொன்னானா? பொண்டாட்டியதான் `தாங்கு தாங்கு'ன்னு தாங்குறான். ஒரு புள்ளையை பெத்துக்குடுக்காத மலடியையே இப்படித் தாங்குறான். நாளைக்கு ஒரு புள்ளையை பெத்துட்டா, ஏதேது... எனக்கு இந்த வீட்ல இடமே இல்ல போலிருக்கு'' என்றவள் ஒரு பெரு மூச்சை விட்டாள்.

``என்ன அத்தை உங்கள நான் கவனிச்சுக்கலையா?''

``இதப்பாருடி... பெத்த மகன், அவனே என்னை உதாசீனப்படுத்துறான். நீ அவனுக்குத் தலையணை மந்திரம் போட்டிருப்ப. என்கிட்ட நல்லவ மாதிரி நடிப்ப. உன்னபத்தி எனக்கு தெரியாதா?''

அதற்குள் அவள் செல்போன் சிணுங்க, ``இதுவேற அப்பப்ப கத்தும். இத கையில எடுத்தான்னா அரைமணி நேரம் கீழே வைக்கமாட்டா'' என்ற அன்னம்மா அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

அப்பா சுந்தரம்தான் போனில் பேசினார். ``உன் தங்கச்சி தியாவை நாளைக்கு பொண்ணு பாக்க வர்றாங்கம்மா. நீயும் மாப்பிள்ளையும் இன்னைக்கு சாயங்காலமே கிளம்பி வந்திடுங்கம்மா.''

``அப்படியா மாப்பிள்ளை என்ன பண்றார்?''

``நம்ம கதிரேசன் மாமா இல்ல.'' அவரோட சொந்தக்காரப் பையன் தாம்மா. ரொம்ப நல்ல குடும்பம். மாப்பிள்ளை வெளிநாட்டுல வேலை பார்க்கிறார்.''

``அப்பா... திவ்யாகிட்ட சொல்லிட்டீங்களா?!''

``என்னம்மா நீ. அவ என்னைக்கு வந்திருக்கா? குழந்தை படிப்பு போயிரும்மா. நீ வந்து ஓ.கே சொல்லும்மா. அப்பதான் தியா கழுத்துல தாலி ஏறும். சரிம்மா... அப்ப நான் வச்சிடுறேன்''.

``சரிப்பா'' என்றாள், திலகா.

நொடியில் விஷயத்தை அறிந்த அன்னம்மாள், தன் கோபத்தை கொட்டத் தொடங்கினாள். ``நான் தெரியாமத்தான் கேட்குறேன். உங்கப்பாவுக்கு எம்புள்ளையின்னா என்ன எளக்காரமா? வீட்டுல எந்த ஒரு தேவைன்னாலும் உடனே போனை போட்டு வரச்சொல்வாரு. இவனும் மாமனார் பேச்சை தட்டாத மருமகனா, இங்க வேலை எவ்வளவு இருந்தாலும், அதையெல்லாம் அப்படியே விட்டுட்டு, உன்னையும் கூட்டிட்டு உடன் போயிடுவான்.

ஏன் உன் பெரிய தங்கச்சி திவ்யா இருக்கால்ல. அவள கூப்பிட வேண்டியதுதானே! அவ எப்படி போவா? கேட்டா எம்புள்ள படிப்பு போயிரும்பா. பத்தாததுக்கு அவ புருஷன் வேற வெளிநாட்டுல இருக்கான். ஆக, அங்க வேலை செய்ய என் மகன் சண்முகம் ஒருத்தன்தான். சமையல் வேலையை பாக்க நீ இருக்க. உனக்கும் ஒரு புள்ள இருந்தால்... இப்படி உன்னையே எதுக்கெடுத்தாலும் கூப்பிட முடியுமா?'' புலம்பிக் கொண்டே சென்றாள் அன்னம்மாள்.

திலகா கூட பிறந்தது இரண்டு தங்கைகள். ``மூத்தவள் திவ்யாவிற்கு திலகா ஓ.கே சொன்னதும்தான் திருமணம் முடிந்தது. இப்போது இளையவளுக்கும் தான்தான் பார்க்க வேண்டும் என்று அப்பா சொல்கிறார். இது தனக்கு தரும் மரியாதையா! இல்லை அவமரியாதையா!'' நினைத்து, நினைத்து குழம்பிப் போனாள் திலகா. மறுநாள் பகல் 12 மணி.

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அனைவருக்கும் காப்பி கொடுத்தாள் தியா. ``திலகா மாப்பிள்ளையை பிடிச்சிருக்காம்மா'' என்று அப்பா சுந்தரம் கேட்டார். ``ம்...ம்..'' தலையாட்டினாள் திலகா. இந்த முறை திலகா முகத்தில் ஒரு மகிழ்ச்சியும் இல்லாமல், மெல்லியதாய் ஒரு சோகம் வந்து ஒட்டிக் கொண்டது. சண்முகம்தான் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தான்.

பையன் வீட்டுக்காரர்களுக்கு பெண்ணை மிகவும் பிடித்துப்போனதால், மறுநாளே மாப்பிள்ளை வீடு பார்க்க வரச்சொல்லிவிட்டு சென்றனர். இதனால் சண்முகமும், திலகாவும் இன்று இரவு தங்க நேர்ந்தது. ``திலகா, வந்ததிலிருந்து, ஏம்மா ஒரு மாதிரியா இருக்க?'' என்றனர் தாயும், தந்தையும்.

``லேசா... தலைவலிப்பா'' என்றாள் திலகா.

``இந்த தைலத்தை தேய்ச்சிட்டு, கொஞ்ச நேரம் படும்மா... எல்லாம் சரியாயிடும்'' என்றாள் தாய் கமலா. திலகாவும் மருந்தை தேய்த்து விட்டு போய் படுத்து விட்டாள். ஆனால் உறக்கமே வரவில்லை. வெறுமனே கண்களை மூடிக் கொண்டாள்.

கூடத்தில் கதிரேசன் மாமாவும், அப்பாவும் பேசிக் கொண்டிருந்தது திலகா காதில் மெல்லியதாய் கேட்டது.

``டேய் சுந்தரம், உன்னைப் பார்த்தால் எனக்கு பெருமையாய் இருக்குடா. உன் மனசு யாருக்கு வரும்? உனக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தையே இல்லை. அப்பதான் ஒரு அனாதை ஆசிரமத்தில் திலகாவை தத்தெடுத்த.. அவளை சீரோடும் சிறப்போடும் நல்லா வளர்த்த.. அப்புறம்தான் உனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திச்சு. இருந்தாலும், நீ திலகா மேல காட்டுற அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்குதடா..''

பலமாக அதிர்ந்தாள் திலகா.

``சத்தம் போட்டு பேசாதடா, திலகா காதுல விழுந்திடப் போகுது. நீ ஆயிரம்தான் சொன்னாலும் திலகாதான் என் உயிர். திலகாவை நான் தத்தெடுத்ததுக்குப் பிறகுதான், எனக்கு திவ்யா, தியான்னு இரண்டு குழந்தைகள் கெடச்சாங்க. இருந்தாலும் என் திலகா கைபட்டதும்தான் எந்த காரியமும் துலங்கும். அதுக்காக திவ்யா, தியா மேல பாசம் இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா திலகாவுக்கு அப்புறம்தான் அவுங்க இரண்டு பேரும். என் திலகா வந்து ஓ.கே. சொன்னாதான் நான் எதுக்குமே சம்மதிப்பேன்.

ஆனா, இதுநாள் வரைக்கும் அவளுக்கு ஒரு குழந்தை இல்லையே. அதை நினைக்கும் போதுதான், என் நெஞ்சே... வெடிச்சிடும் போலிருக்கு. என் திலகா வயித்துப் பிள்ளையை கொஞ்சாமலேயே... இந்த உலகத்தை விட்டு போயிருவேனா?'' குரல் கம்ம, வார்த்தைகள் திரும்பத் தொடங்கின சுந்தரத்துக்கு.

``டேய் அழாதடா. உன் நல்ல மனசுக்கும், திலகாவோட நல்ல குணத்துக்கும் நிச்சயமாய் குழந்தை பிறக்கும். அதை நீ கொஞ்சத்தாண்டா போற!''

``அதுமட்டும் இல்லடா. திலகா வந்ததிலிருந்து அவ முகத்துல துளி மகிழ்ச்சி கூட இல்லடா. இந்த வீடே களையில்லாமல் இருக்குடா. அவ மனசால, ரொம்ப குழம்பிப் போயிருக்கான்னு தெரியுது. அது என்னன்னுதான் தெரியல. ஒருவேளை குழந்தையை நினைச்சிதான் இருக்குமோ? கடவுளே... என் திலகாவிற்கு ஒரு நல்வழியை காட்ட மாட்டியா?'' கண்ணீர் விட்டார் சுந்தரம்.

திலகாவின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர், அவள் தலையணையை முற்றிலுமாக நனைத்திருந்தது. `அப்பா நான் உங்க பிள்ளை இல்லையா? எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லையா? உங்களைப் போயா நான் தப்பா நினைத்தேன். அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா... உங்களிடம் மன்னிப்பு கேட்கக்கூட எனக்கு தகுதியில்லப்பா... ஒரு அனாதையை சீரோடும், சிறப்போடும் வளர்த்து, ஒரு நல்லவன் கையில் பிடிச்சி கொடுத்த உங்களுக்கு விரைவிலே நான் சந்தோசத்தைக் கொடுப்பேன்பா...'

ஆமாம். தன் கணவன் சண்முகத்திடம் கலந்து பேசி விட்டு, விரைவிலேயே ஆசிரமத்தில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தாள், திலகா.
***
- பி.ராஜேஸ்வரி


வாரிசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum