ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா!

4 posters

Go down

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Empty முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா!

Post by சிவா Thu May 20, 2010 3:40 pm

மகாராஜா என்றாலே, இப்படி... அப்படித்தான் இருப்பர் என்று வரலாற்று புத்தகங்களில் படித்திருப்பீர்கள். இப்படி ஒரு மகாராஜா பற்றிய, வித்தியாசமான தகவல்கள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

மத வேறுபாடின்றி, இவர் தாலி கட்டி வாழ்ந்த மனைவியர் 20 பேர்; இவர்களைத் தவிர, அந்தப்புரத்தில் இவர் கூப்பிட்ட குரலுக்கு 23 பேர். இவர்களுடன், இவர் ஆசை தணியவில்லை. தினமும், 'சரக்கும்' வேண்டும்; அதுவும், முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்தால் தான் திருப்தியே வரும்.

இவர் யார் தெரியுமா? பிரிட்டீஷ் ஆதிக்கத்துக்கு முன், ஒன்று பட்ட இந்தியாவில் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தை அமைத்த மகாராஜா ரஞ்சித் சிங். 'தி லாஸ்ட் சன்செட்' என்ற பெயரில், சமீபத்தில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பவரும் வியக்கத்தக்க மனிதர் தான். ஆம்... பாட்டியலா அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங்.

இவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய தகவல்கள்:


கடந்த 1780ல் இருந்து 1839 வரை சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்தவர். பஞ்சாப் மாநிலத்தில் ஆரம்பித்து, லாகூர் வரை, (அப்போது ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்தது) இவர் ஆதிக்கம் தான். இவர் சமாதி, லாகூரில் உள்ளது. 'ஷெர் இ பஞ்சாப்' (பஞ்சாப் சிங்கம்) என்று அழைக்கப்பட்டவர்.

அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் உட்பட, பழமையான சீக்கிய கோவில்கள் கட்டியதில் இவர் பங்கு அதிகம். ஆப்கானிஸ்தானியரை பஞ்சாபில் இருந்து விரட்டியடித்தவர். 1839ல் ரஞ்சித் சிங் இறந்தார். அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. மகாராணி மகதாப் தேவி உட்பட சில ராணிகள், அவருடன் சிதையில் படுத்து உடன்கட்டை ஏறினர்.

ரஞ்சித் சிங்குக்கு பின், அவரின் மகன்களில் கரக்சிங்கிடம் ஆட்சி போனது. ஆனால், 1845ல் கிழக்கிந்திய கம்பெனி மூலம், பிரிட்டீஷ் படை நுழைந்து, அவரை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது.

ரஞ்சித் சிங்குக்கு மொத்தம் 20 மனைவியர்; இவர்களில் ஐவர் சீக்கியர்; மூவர் இந்துக்கள்; இருவர் முஸ்லிம். இவர்களில் கரக்சிங்கின் தாய் மகதாப் தேவி மற்றும் ராஜ் கவுர் இருவரும் வயதில் சீனியர் மனைவிகள். பஞ்சாபில் இருந்த காங்க்ரா ராஜ்ஜியத்தில் ஊடுருவிய கூர்க்கா படையினரை விரட்டி, அந்த குறுநில மன்னன் ராஜா சன்சார் சந்துக்கு உதவினார் ரஞ்சித் சிங்.

இத்தனைக்கும் இருவரும் பரம எதிரிகள்; இந்த போரில் நாட்டை காப்பாற்றி தந்ததால், ரஞ்சித் சிங்குக்கு தன் மகளான மகதாப் தேவியை மணமுடித்து தந்தார் காங்க்ரா மன்னன்.

மனைவிகளைத் தவிர, அந்தப்புரத்தில் 23 அழகிகளை தங்க வைத்திருந்தார் ரஞ்சித் சிங். அவருக்கு எப்போதும் ஆட்டம், பாட்டம் இருக்க வேண்டும்; அதற்காக, 12 முதல் 18 வயது வரை உள்ள, மலை கிராமங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண்கள் நடனம் ஆடுவர். சில காலம் ஆடிய பின், அவர்களுக்கு கிராமங்களை தானமாக தந்து அனுப்பி விடுவார்.

மதுவில் முத்துக்களை அரைத்து குடிப்பதுடன், தனக்கு தனியாகவே ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார் ரஞ்சிங் சிங். இந்த மதுவை, 'திரவ தீ!' என்று அழைப்பர்.

'அவர் குடிக்கும் மதுவை, பிரிட்டீஷ் அரசில் உள்ள எவரும் தொடக்கூட முடியாது; அந்த அளவுக்கு தீ போல உடல் பற்றியெரியும். ஆனால், ரஞ்சித் சிங், அனாயாசமாக குடிப்பார்!' என்று சர்ட்டிபிகேட் தந்திருப்பவர் யார் தெரியுமா? பிரிட்டீஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்ட் ஆக்லாந்து சகோதரி எமிலி ஈடன்.

இவர் திருமணம் செய்த இரு முஸ்லிம் பெண்களில் ஒருவர் மோரன்; இவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் ரஞ்சித். அமிர்தசரஸ் நகரில் பொற்கோவிலுக்கு ரஞ்சித் ஒரு முறை வந்தார். அங்கு பிரார்த்தனை செய்வதை கூட தவிர்த்து, மோரன் வருவதாக தகவல் வந்ததும், அவரை வரவேற்க சென்று விட்டார். இதனால், அதிருப்தி அடைந்த அகாலி தக்த் அமைப்பு, இவருக்கு கண்டனம் தெரிவித்தது.

பார்த்த பெண்களை எல்லாம் திருமணம் செய்வதும், அன்பு காட்டுவதுமாக இருந்த ரஞ்சித் சிங்குக்கு, அத்துடன் ஆசை நிற்கவில்லை. முட்டை வடிவிலான கோகினூர் வைரத்தின் மீது கண் இருந்தது. அந்த வைரத்தின் மதிப்பு 1838லேயே நாலரை கோடி ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதை எப்படியாவது, ஆப்கனில் இருந்து பெற்று விட வேண்டும் என்று திட்டமிட்டார் ரஞ்சித் சிங். ஆப்கான் அமீர் (ராணுவ தளபதி) ஷா சுஜா உல் முல்க், ஒரு முறை குடும்பத்தினர், உறவினருடன், சுற்றுலாவுக்காக வந்திருந்தார்.

அவர்களுக்கு எல்லா ஏற்பாடு களையும் செய்த ரஞ்சித் சிங், கிளம்பும் போது, அவர்களை வீட்டுக் காவலில் வைத்து விட்டார்; வைரத்தை தந்தபின் தான், அவர்களை விடுவித்தார்.

இவரின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பெஷாவர் கவர்னராக இருந்தவர் யர் முகமது. அவரிடம் மிக அழகான பாரசீக குதிரை இருந்தது; அதன் பெயர் லியாலி. அதை பெற வேண்டும் என்று கண் வைத்தார் ரஞ்சித் சிங். அதற்காக, பெஷாவர் கவர்னர் மீது படையெடுத்து, அவரை கொன்றும் விட்டார்; ஆனால், குதிரையை மட்டும் காணவில்லை.

முகமதுக்கு பின், அவரின் இளைய சகோதரன் சுல்தான் முகமது கான், கவர்னராக அமர்ந்தார். 'முதலில் குதிரையை ஒப்படைத்து விடு; இல்லாவிட்டால்...' என்று எச்சரித்தார் ரஞ்சித் சிங். இதனால் வேறு வழியின்றி, பாரசீக குதிரையை ஒப்படைத்தார். இந்த குதிரையை பறிப்பதற்காக, பெஷாவர் கவர்னருடன் நடந்த சண்டையில், 1,500 வீரர்கள் அமர்த்தப்பட்டனர்; செலவு 60 லட்சம் ரூபாய்.

***
வாரமலர்


முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Empty Re: முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா!

Post by srisivaerd Thu May 20, 2010 3:46 pm

என்ன இருந்தாலும் புருேன சுல்தாைன மிஞ்சவில்ைல,, முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Icon_smile
srisivaerd
srisivaerd
பண்பாளர்


பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Empty Re: முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா!

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 4:58 pm

srisivaerd wrote:என்ன இருந்தாலும் புருேன சுல்தாைன மிஞ்சவில்ைல,, முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Icon_smile

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 403484 முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 403484 முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 403484 முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 168300 முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 168300 முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 168300




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Empty Re: முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா!

Post by மஞ்சுபாஷிணி Thu May 20, 2010 5:06 pm

யப்பா இவர் பயாக்ரஃபி படிச்சது பார்க்கும்போது சொன்னது போல புருனே சுல்தானை மிஞ்சவில்லை தான்.. ஆனால் முத்தை அரைத்து தினமும் சாப்பிடுவது ( உடம்புக்கு தங்கபஸ்பம் நல்லது.... முத்து நல்லதா?) டாக்டர் சிவா நீங்க தான் சொல்லனும்...

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு சிவா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Empty Re: முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா!

Post by சிவா Thu May 20, 2010 5:20 pm

மஞ்சுபாஷிணி wrote:யப்பா இவர் பயாக்ரஃபி படிச்சது பார்க்கும்போது சொன்னது போல புருனே சுல்தானை மிஞ்சவில்லை தான்.. ஆனால் முத்தை அரைத்து தினமும் சாப்பிடுவது ( உடம்புக்கு தங்கபஸ்பம் நல்லது.... முத்து நல்லதா?) டாக்டர் சிவா நீங்க தான் சொல்லனும்...

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு சிவா...

தங்க பஸ்பம் குறித்து இங்கு எழுதியுள்ளேன், படித்துப் பார்த்து கருத்துக் கூறுங்கள் தோழி!

http://www.eegarai.net/-f14/-t956.htm


முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Empty Re: முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா!

Post by மஞ்சுபாஷிணி Thu May 20, 2010 5:27 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:யப்பா இவர் பயாக்ரஃபி படிச்சது பார்க்கும்போது சொன்னது போல புருனே சுல்தானை மிஞ்சவில்லை தான்.. ஆனால் முத்தை அரைத்து தினமும் சாப்பிடுவது ( உடம்புக்கு தங்கபஸ்பம் நல்லது.... முத்து நல்லதா?) டாக்டர் சிவா நீங்க தான் சொல்லனும்...

அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு சிவா...

தங்க பஸ்பம் குறித்து இங்கு எழுதியுள்ளேன், படித்துப் பார்த்து கருத்துக் கூறுங்கள் தோழி!

[url=http://www.eegarai.net/-f14/-t956.htm
http://www.eegarai.net/-f14/-t956.htm[/quote[/url]]

அட அட கண்டிப்பா படிச்சிட்டு சொல்றேன்பா.... இப்ப கிளம்பிட்டு இருக்கேன் வீட்டுக்கு... இன்ன்னைக்குள் படிச்சு சொல்றேன்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா! Empty Re: முத்துக்களை அரைத்து, ஒயினில் கலந்து குடித்த மகாராஜா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum