ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் தமிழர் இயக்கத்தில் தலைவன், தொண்டன் என்ற கருமாந்திரம் இருக்காது - சீ்மான்

Go down

நாம் தமிழர் இயக்கத்தில் தலைவன், தொண்டன் என்ற கருமாந்திரம் இருக்காது - சீ்மான் Empty நாம் தமிழர் இயக்கத்தில் தலைவன், தொண்டன் என்ற கருமாந்திரம் இருக்காது - சீ்மான்

Post by ரபீக் Tue May 18, 2010 10:46 am

நாம் தமிழர் கட்சியில் தமிழர் என்பது தான் முன்நிற்கும். துண்டு போடுவது, ரூபாய் கொடுப்பது, வாழ்த்தி கத்துவது, தலைவர், தொண்டர் போன்ற கருமாந்திரங்கள் எல்லாம் இருக்காது என்று கூறியுள்ளார் சீமான்.

நாம் தமிழர் இயக்கம் இன்று முதல் அரசியல் இயக்கமாக உருவெடுக்கிறது. இதற்கான விழா மாநாடாக இன்று மதுரையில் நடைபெறுகிறது.

இன்று மாலை 4 மணியளவில் மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள முத்துக்குமார் அரங்கத்தில் நாம் தமிழர் இயக்க மாநாடு நடைபெறுகிறது.

இது குறித்து சீமான் நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நாம் தமிழர் அமைப்பு அரசியல் கட்சியாக தொடக்கமாகிறது. தமிழர்களை பல்வேறு வகைகளில் ஏமாற்றி வஞ்சிக்கிற சக்திகளின் பிடியிலிருந்து விடுவிக்க ஒரு புரட்சி அமைப்பாக இது செயல்படும். இது ஒரு மாற்று அரசியல் புரட்சியை நடத்துகிற இயக்கமாக மலரும். சாதி, சமயங்களை கடந்து இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் இந்த கட்சியில் இணைய வேண்டும்.

இலங்கையில் வீரத்துடன் போராடி சதிகாரர்களின் சூழ்ச்சியால் வீழ்ந்து போய் இருக்கிறது. இனி தமிழன் எழவே மாட்டான் என்று சிங்களன் எக்காளமிடுகிறான். இந்திய தேசமும் இதே நினைப்பில் இருந்தது;இருக்கிறது. வீரத்தமிழினம் ஒரு போதும் வீழாது என்பதை நாங்கள் இந்த உலகத்திற்கு நிரூபித்துக்காட்டுவோம். மீண்டும், மீண்டும் எழுவோம்.

முள்ளி வாய்க்காலில் போராடி முடித்த பல்லாயிரம் தமிழர்களை பலி கொடுத்த இந்த கருப்பு தினத்தில் நாம் தமிழர் அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுக்கிறது.

கட்சி தொடங்கும் இந்த நாளில் மதுரையில் நடக்கும் இந்த மாநாடு தமிழ் இன எழுச்சி மாநாடாக, தமிழர் அரசியல் மாநாடாக இருக்கும். தமிழின எதிரிகளையும், தமிழர்களின் வீழ்ச்சிக்கு துணை போனவர்களையும், வீழ்ச்சிக்கு துணை போனவர்களுக்கு துணை நின்ற இனத்துரோகிகளுக்கும் எங்கள் உணர்வுகளை காட்டும் மாநாடாக இது அமையும்.

ஆஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய மதகுரு கொலை செய்யப்பட்டார். அதற்கு பதிலடியாக பஞ்சாப்பில் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான பொதுச்சொத்துக்கள் சீக்கியர்களால் சூறையாடப்பட்டன.

தமிழன் இது போல் எந்த பொதுச்சொத்தையும் சூறையாடுவதில்லை. ஆனால் எந்த கேடும் எவருக்கும் நினைக்காத தமிழனை வீழ்த்த பல சக்திகள் சதிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் உலகஅளவில் தமிழினத்தை வளர விடக்கூடாது, அழிக்க வேண்டும் என்று எல்லா சதிகளும் நடக்கிறது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில், ஈழத்தில் நடந்த படுகொலை போர்க்குற்ற நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க இரண்டு நாள் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த தமிழ்நாட்டில் காயம் பட்டு வந்தவர்களுக்கு சிகிச்சை பெறக்கூட அனுமதியில்லை.வயதான, சுயநினைவு சரியாக இல்லாத நிலையில் சிகிச்சைக்காக வந்த பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டிருக்கிறார்.

எங்கே போனது மனிதநேயம்? வெட்கக்கேடு. தமிழன் என்றால் அவ்வளவு மட்டமானவர்களாய் ஆகி விட்டோமா? தமிழர்கள் அனைவரும் குடும்பம், குடும்பமாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாநாட்டில் உலக அளவில் மலேசியாவிலிருந்து பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி மற்றும் உள்நாட்டில் பொதுதளத்தில் இருந்து தமிழருவி மணியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கட்சியில் தமிழர் என்பது தான் முன்நிற்கும். துண்டு போடுவது, ரூபாய் கொடுப்பது, வாழ்த்தி கத்துவது,தலைவர், தொண்டர் போன்ற கருமாந்திரங்கள் எல்லாம் இருக்காது.

நாங்கள் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை உருவாகும் போது தேர்தலில் நின்று அதிகாரத்தை கைப்பற்றுவோம். அதுவரை மக்கள் இயக்கமாக, மக்களின் பிரச்சனைகளுக்காகவும், மொழி இனத்திற்கு பாதிப்பு வந்தால் அவற்றை எதிர்த்து போராடக்கூடிய இயக்கமாக இருக்கும்.

அமைப்பு ரீதியாக உலக அளவில் செயல்படும் ஒரு கட்சியாக இருக்கும். உலகின் எல்லா நாடுகளிலும் நாம் தமிழர் இயக்கத்திற்காக செயல்படுபவர்கள் இருக்கிறார்கள். இதற்கான தலைமை இடமாக தமிழ்நாடு இருக்கும். ஒரே இனம், ஒரே மொழி என்பது தான் எங்கள் குறிக்கோள் என்றார்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum