ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்தி கிடைக்க... (ஆன்மிகம்)

4 posters

Go down

முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Empty முக்தி கிடைக்க... (ஆன்மிகம்)

Post by இளமாறன் Wed Apr 21, 2010 1:00 am

முக்தி கிடைக்க... (ஆன்மிகம்)
- வைரம் ராஜகோபால் ஞானானந்தம்
தராசு முள் நேராக, ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரண்டு பக்கத்துத் தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும். தட்டுகளில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், தராசு முள் நேராக நிற்காமல், இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் ஆடிக் கொண்டிருக்கும். அது போல, மனம் ஒரே நிலையில் இருக்க, மனதின் அடித்தளத்தில் விருப்பு, வெறுப்பு இருக்கக் கூடாது. அதில் ஏற்றத் தாழ்வு இருப்பின், மனமும் அலைபாயும்.ஒரு தட்டில் ஆசைகள்
அனைத்தையும் வைத்து, மற்றொரு தட்டில் பக்தி என்பதை வைத்துப் பார்த்தால், பக்தியே பளுவானது, வலுவானது என்று கூறினர். மற்ற விஷயங்களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசை வைத்தால், அவனையே பிடித்து விடலாம். சரணடைந்தவர்களை அவன் உதறித் தள்ளுவதில்லை; கை தூக்கி விடுகிறான் என்று பெரியோர் சொல்லி இருக்கின்றனர். பக்தி செய்து சரணடைந்தால், பகவான் முக்தியளிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

நமக்கு இப்போது கிடைத்துள்ள மனிதப் பிறவி, புதிதாக, முதன் முதலாகக் கிடைத்ததல்ல; இதற்கு முன் எத்தனையோ பிறவி எடுத்தாகி விட்டது. இந்த ஆத்மா அழிவற்றது. அது மேலும், கீழும் போய் போய் வருகிறது. இப்படியே போயும், வந்துமிருந்தால் எப்படி? இதற்கு முன் பிறவி என்னவென்று தெரியாது. உலகில் எத்தனையோ ஜீவராசிகள் அவைகளில் ஒன்றாகவும் இருந்திருக்கலாம்; அப்படிப்பட்ட இழிந்த பிறவி ஏற்பட்டதற்கும் கர்மா தான் காரணம் என்கின்றனர். கர்ம வினை தீர்ந்து புண்ணிய பலன் ஏதாவது இருந்தால், இன்னும் கொஞ்சம் உயர்ந்த ஜென்மா கிடைக்கிறது.
இப்படி புண்ணிய பலன் கூடுதலாக, கூடுதலாக, பட்சி, விலங்கு, பசு, மனிதன் என்று வரிசையாக பிறவி வரும். மனித ஜென்மாவில் கூட, எத்தனையோ மனித ஜென்மா எடுத்து புண்ணியம் சேர்ந்திருந்தால், மனித ஜென்மாவிலும் சுகபோகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புண்ணிய காரியம் செய்வதற்கும் பிராப்தம் இருக்க வேண்டும்;
அது இல்லாவிடில் மனம் அதில் ஈடுபடாமல், வேறு எதிலோ தான் ஈடுபடும்.

புண்ணிய காரியம் என்றால் தான - தர்மங்கள் என்பது மட்டுமல்ல... தெய்வ பக்தி, தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்த ஸ்நானம் இவைகளுக்கும் புண்ணியம் உண்டு. இதையும் தவிர, மகான்கள் தரிசனம், பெரிய புண்ணியம் என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் இப்போது மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். இதற்கு முன் ஜென்மாவில் நாம் மேற்கூறிய எதையாவது செய்திருக்கலாம்; மகா புருஷர்களை தரிசித்திருக்கலாம்; எல்லா காலங்களிலும் மகா புருஷர்கள் இருந்திருக்கின்றனர். ஏதோ ஒரு காலத்தில், யாரோ ஒருவரை நாம் தரிசித்திருக்கலாம்; வணங்கி இருக்கலாம். அது நமக்கு தெரியா விட்டாலும் கூட, இப்போது கிடைத்துள்ள மனித ஜென்மாவையும், அனுபவிக்கும் சுகங்களையும் வைத்துப் பார்த்தால், இதற்கு முன் யாரையோ தரிசித்த புண்ணியம் தான் காரணம் என்று யூகிக்கலாம். அதே போல இந்த ஜென்மாவிலும் இப்போதுள்ள மகான்களையும் தரிசித்து வணங்கி விட்டால், தெய்வ பக்தி செய்து வந்தால், அடுத்த பிறவி இன்னும் சிறப்பாக இருக்கும்! பிறவியே இல்லை என்ற நிலைக்கு நாம் இப்போது பக்குவமாகவில்லை என்றே சொல்லலாம்.
உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு, சர்வமும் ஈஸ்வர மயம், எல்லாமே பரம் பொருள் என்று எண்ணுகிற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்ற மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும் என்கின்றனர். இப்போது அதன் எல்லைக்கோடு வரையிலாவது போக முடியுமா என்பது தான் கேள்வி.
இப்படி மகான்கள் தரிசனம், தெய்வ பக்தி இவைகளை விருத்தி செய்து கொண்டே போனால், எப்போதோ, எந்தக் காலத்திலோ பகவானோடு சேர்ந்து விடலாம் என்கின்றனர். முயற்சி செய்ய வேண்டும்; நம்பிக்கை இருக்க வேண்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Empty Re: முக்தி கிடைக்க... (ஆன்மிகம்)

Post by கலைவேந்தன் Wed Apr 21, 2010 1:15 am

ஏனுங் சாமி.... எங்களுக்கு இந்த பத்தி முத்தி பத்தியெல்லாம் தெரியாதுங் சாமி...

மனுச சேவை செய்யச்சொல்லோ கடவுள் அவருக்கு பக்கத்துல நம்மை வெச்சுக்குவார்னு சொல்ரதை கேட்டுஇருக்கோம் சாமியோவ்...

அது போதாதுங்ளா சாமி...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Empty Re: முக்தி கிடைக்க... (ஆன்மிகம்)

Post by Aathira Wed Apr 21, 2010 1:24 am

//உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு, சர்வமும் ஈஸ்வர மயம், எல்லாமே பரம் பொருள் என்று எண்ணுகிற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்ற மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும் என்கின்றன//

இதெல்லாம் மேலே இருக்கர மனுச சேவை செய்யரவரால முடியுமா.. நல்லாத்தான் சொன்னீங்க..வைரம் அவர்களே...(சிரிக்க மட்டும்) சிரி சிரி சிரி


முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Aமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Aமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Tமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Hமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Iமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Rமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Aமுக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Empty Re: முக்தி கிடைக்க... (ஆன்மிகம்)

Post by சரவணன் Wed Apr 21, 2010 1:33 am

முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) 677196 ........... முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) 678642 .......... முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) 154550


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முக்தி கிடைக்க... (ஆன்மிகம்) Empty Re: முக்தி கிடைக்க... (ஆன்மிகம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum