ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்!

5 posters

Go down

நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Empty நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்!

Post by சிவா Wed Apr 14, 2010 4:55 am

ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்கள் இன்னும் நமது நீதிபதிகளின் மேசை மேலமர்ந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதானிருக்கிறது. இதைத் தவறாகப் பொருள்படுத்த வேண்டியதில்லை. பல நாடுகள் ஆங்கிலேயச் சட்டத்தை அடிப்படையாக வைத்தே தங்களது நீதித்துறையைச் செப்பனிட்டு வளர்த்தன. ஆனால் சில ஆங்கிலேயச் சட்டங்கள் இன்று தேவையற்றுப் போயும் நடைமுறையில் அமலாகிக் கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு Criminal law amendment act - ஐ சொல்லலாம்.

இரண்டாவது உலக யுத்த சமயத்தில், மகாத்மா காந்தி தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கினார். யுத்தத்தை எதிர்த்து ஒருவர் பொது இடத்தில் பிரச்சாரம் செய்வார். அவரைக் கைது செய்து சிறையிலடைத்தாலும், வன்முறை எதிலும் ஈடுபடாத காரணத்தினால் சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளி வந்து மீண்டும் பிரச்சாரம் செய்வார். இதைத் தவிர்ப்பதற்காக அன்றைய ஆங்கிலேய அரசு, இவ்வாறு கைதானவர்கள் ஜாமீனில் வெளிவராமல் தடுக்க 'Criminal law amendment act' ஐ அறிமுகப்படுத்தியது. இன்றைக்கும் அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருவது யாரை ஒடுக்க ?...

அடிப்படையில் ஆங்கிலேய காலத்துச் சட்டத்தைச் சார்ந்திருந்தாலும், நமது சட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் நலம் சார்ந்த சட்டங்கள் இந்திய விடுதலைக்குப் பின்பே உருவாக்கப்பட்டவை. அப்பொழுதெல்லாம் ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை. வ. உ.சி. க்கு விதிக்கப்பட்ட இரண்டு ஜென்ம தண்டனை என்பது நாற்பது வருட கடுங்காவல் தண்டனையே ஆகும். இப்பொழுது ஆயுள் தண்டனை பதினான்கு ஆண்டு சிறை வாசமாகக் குறைக்கப்பட்டுவிட்டது. சாட்டையடி போன்ற ஈவிரக்கமற்ற தண்டனைகளும் ஒழிக்கப்பட்டு விட்டன. சர்வசாதாரணமாய்ப் புழங்கிக் கொண்டிருந்த தூக்கு தண்டனை இப்பொழுது மிகவும் அரிய குற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. (ஆனால், இன்னமும் எடுத்ததற்கெல்லாம் தூக்குதண்டனை கொடுத்து அதை ஒரு கேலிப் பொருளாக மாற்றிய, மாற்றிக் கொண்டிருக்கும் பெருமை திரைப்படங்களுக்கு உண்டு) அப்படியும் மக்கள் நம்பிக்கையை நீதிமன்றங்கள் இழந்து வருகின்றன. மேம்படுத்துதல் நடைபெறாத எந்தத் துறையும் ஒட்டடை படிந்தே காணப்படும். இன்றைய நீதித்துறை, வழக்குகளை விசாரிக்க ஏற்படுத்தும் காலதாமதம் எதனால் ஏற்படுகிறது?

சாதாரணமாகக் கொலை வழக்குகள் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் போன்றவை துரிதமாக நடைபெறும். (அப்படியும் 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு' முடிவதற்குள் இரு தேர்தல் காலம் முடிவடைந்து விட்டது). சாதாரண வழக்குகள் சவ்வு போல இழுத்துக்கொண்டே போகும். சாதாரணமாக ஒரு பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட வழக்கு முடிவதற்குப் பத்து ஆண்டுகளாகின்றன.

இந்தியச் சட்டத்தில் விரைவில் வழக்கை முடிப்பதற்கு எவ்வித வழியும் இல்லை. ஆனால் வழக்கைத் தாமதப்படுத்த அநேக வழிகள் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் வழக்குகள் குறைவாய் இருந்தன. அப்பொழுது கடைப்பிடிக்கப்பட்ட நீதிமன்ற நடைமுறைகள் இன்றைக்குப் பயன்படாது. எனினும் ஆங்கிலேயர் காலத்து நீதிமன்ற நடைமுறைகளே இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஒரு வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கு எண் வழங்குவதற்கு இந்திய நீதிமன்றத்திற்கு ஒரு மாத காலம் தேவைப்படுகிறது. அதற்குப் பின் அனுப்பப்படும் சம்மன்களை எதிர்த்தரப்பு, நிர்வாக ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து 'எதிர்த்தரப்பினர் ஊரில் இல்லை' எனச் சொல்ல வைத்து, ஆறு மாதத்திலிருந்து ஓராண்டு வரை இழுத்தடிக்கலாம். 'வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லை' என்றோ, 'வழக்கில் ஈடுபடுத்தப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை' என்றோ ஆயிரமாயிரம் பொய் சொல்லி 'வாய்தா' க்கள் வாங்கலாம்.

நீதிமன்றம் தொடங்கிப் பத்தரை மணி முதல் பன்னிரெண்டரை மணி வரை இரண்டு மணி நேரம் நீதிபதி வழக்கு எண் போடுதல், தேதி கொடுத்தல் போன்ற பணிகளுக்கே சரியாகப் போய் விடுகிறது. இது போன்ற நிர்வாகப்பணிகள் நீதிபதியின் பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும். வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தல் என்பது மட்டுமே நீதிபதியின் பணியாக இருக்க வேண்டும்.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழக்குத் தொடங்குவதற்கு ஒரு மாத கால அவகாசமும், முடிவதற்கு ஓராண்டு கால அவகாசமும் மட்டுமே தரப்படுகின்றன. வழக்கில் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராகவில்லையெனில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படும்.

வழக்குகள் தூரிதமாக நடைபெற மக்கள் நீதிமன்றங்கள் என்றழைக்கப்பட்ட 'லோக் அதாலத்' அறிமுகப்படுத்தப்பட்டது என்னவோ உண்மை. ஆனால், இரு தரப்பினரும் விரும்பினால் மட்டுமே வழக்கினை 'லோக் அதாலத்தில்' நடத்த முடியும். இதனால் பெரும்பாலான வழக்குகள் வழக்கமான நீதிமன்றங்களிலேயே நடைபெறுகின்றன.

நவீன விஞ்ஞான வளர்ச்சியைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாதது நீதித்துறை பற்றிய மற்றொரு குறையாகும். இந்திய சாட்சிய சட்டம் (Indian evidence act) மாற்றப்பட வேண்டியது காலத்தின் தேவையாகிறது. ஜெராக்ஸ் பிரதிகளை எதிர்த்தரப்பு ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே நீதிமன்றம் சாட்சியமாக அங்கீகரிக்கும். விடியோ பதிவுகள் போன்றவை இரண்டாம் தர சாட்சியமாகக் கருதப்படுமே தவிர முதன்மை சாட்சியாக (Primary evidence) ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. தீர்ப்பு நகல்களை நீதிமன்றத்திலிருந்து பெறுவதற்கே கூட சில நேரங்களில் ஏழெட்டு மாதங்களாகி விடுகின்றன.

D.T.P. போன்ற நவீன வசதிகளை உபயோகப்படுத்தினால் உத்தரவு நகல்கள் ஓரிரு வாரங்களில் தயாராகிவிடும். உயர்நீதிமன்றத்தில் பெயில் கொடுப்பதற்கு அச்சடிக்கப்பட்ட 'format' உபயோகப்படுத்துகிறார்கள். அதை எல்லா நீதிமன்றங்களும் கடைப்பிடிக்கலாம்.

நீதிமன்றத்தில் உடனடியாகக் களைந்தெறியப்பட வேண்டியவைகளில் முதன்மையானது ஊழல். உச்ச நீதிமன்றத்திலிருந்து பெஞ்ச் நீதிமன்றம் வரை ஊழல் என்பது தலைவிரித்தாடுகிறது. நீதிபதியின் தேர்வுக்கு அவரது குணத்தை விட செல்வாக்கே கருத்தில் கொள்ளப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

நீதித்துறையை ஆராய்வதற்கென பல கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படும் பொழுது செய்தித்தாள்களில் இடம் பெறுவதைத் தவிர இந்தக் கமிஷன்கள் பெரும்பாலும் மக்கள் தொடர்பற்றே இருக்கின்றன. பல ஊர்களில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் கருத்துகள் கேட்டறியப்படாமலே கமிஷன்கள் செயல்படுவது எவ்வித நன்மையையும் பயக்கப் போவதில்லை. தேங்கிக் கிடக்கும் வழக்குகள், கமிஷன் அறிக்கைகளைக் கிடப்பில் போடுவது போன்றவற்றை மாற்றவே இன்னும் அரசாங்கம் முயலாதபொழுது அரசாங்க அமைப்பின் மேம்பாட்டைப் பற்றிப் பேசுவது அரசியல் நகைச்சுவையாகிவிட்டது.


நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Empty Re: நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்!

Post by சிவா Wed Apr 14, 2010 4:56 am

மக்களைப் பற்றிய அக்கறை கொண்ட எந்தவொரு சமுதாய அரசியலமைப்பும் தனது குறைகளை நிவர்த்தி செய்தபடி மேலும் மேலும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கும். அரசியலமைப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யாத இந்திய அரசாங்கம், சில விஷயங்களில் எவ்வளவு வேகமாய்ச் செயல்படுகிறது என்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணத்திற்குப் பஞ்சாப் தீவிரவாதிகளின் நவீன ஆயுதங்களை எதிர்கொள்ள அம் மாநிலக் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட ஸ்டென் துப்பாக்கிகள் இன்று எல்லா மாநிலக் காவல்துறையினர் கைகளிலும் காணக் கிடைக்கிறது!

ரப்பர், பிளாஸ்டிக் குண்டுகள், தண்ணீர் பீரங்கி என்று பொதுமக்களிடையே அதிகம் சேதத்தை, உயிர்ப்பலியை ஏற்படுத்தாத ஆயுதங்களை வெளிநாட்டுக் காவல்துறையினர் பயன்படுத்தும்போது, இங்கிலாந்து இறக்குமதிச் சட்டங்களை இன்னமும் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் நாம், பொதுமக்களுக்கெதிராகக் காவல்துறையினர் கையாளும் வன்முறை ஆயுதங்களுக்கு மட்டும் இன்னமும் விடை கொடுக்காமல் இருப்பது வன்முறைக்கு மேலும் வித்திடுவதாய் அமையாதா?

சந்தேகப்படும்படி இருப்பவர்களை சுட்டுக் கொல்ல வழிவகுக்கும் 'Supperssion of Disturbances Act', சொந்த நாட்டு மக்கள் மேலேயே ராணுவத்தை ஏவ வகை செய்யும் 'Armedforces (Special Powers)Act) இதற்கும் பஞ்சாப் தீவிரவாதிகளையே அரசாங்கம் மேற்கோள் காட்டியது - அரசாங்கத்தின் சுறுசுறுப்பிற்கு அத்தாட்சி. 'Armed forces (special powers) Act' ஆர்டிக்கல் இருபத்தி ஒன்றை மீறி அமைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது செவிடன் காதில் ஊதிய சங்காய் முடியும். இந்தியர்களின் அடிப்படை உரிமையைப் பற்றி சிறிதளவும் யோசிக்காத பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் 'இராணுவத்தை நாட்டு மக்களுக்கு எதிராகத் திருப்பும் பாணி' இன்றும் புதிய சட்டங்களின் மூலமாய் நிலவி வருவது இந்திய ஜனநாயக நாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள சவாலே. தடா (Terrorist and disruptive activities (prevention) Act) சட்டம் இன்று வழக்கொழிந்து போனாலும், இச்சட்டத்தைக் கையிலெடுத்த அரசாங்கம் மக்கள் நலனில் எவ்வளவு தூரம் அக்கறையுடையதாய் இருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது.

'மக்கள்நலன்' என்பதைப் பற்றிய இந்திய அரசியலமைப்பு முன்னுரை (Constitution Preamble), மக்கள் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் வகுக்கப்பட்டுள்ள இந்திய சட்ட அமைப்பு மூன்றாவது நான்காவது பிரிவுகள் எவ்வித ஆக்கபூர்வமான மாற்றத்தையும் காணாது இருக்கும் நிலையில் மக்களை நோக்கிய அரசாங்கத்தின் வன்முறை அதிகரித்து வருகின்றன.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அதிலாபாத் மாவட்டம் 3 லட்சம் பழங்குடி மக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி மக்கள், நில ஆக்கிரமிப்பாளர்களால் துரத்தப்பட்டு இன்று மாவட்ட மக்கள் தொகையில் 17 சதவீதமே உள்ளனர். இத்தகைய 'குழு இடமாற்றங்கள்' நடைபெறாமல் தடுப்பதே இந்திய அரசின் கடமைகளில் ஒன்று என வரையறுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நிலங்களை நில ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றுவது மாவட்ட ஆட்சியாளரின் பொறுப்பு. இவை நடைபெறாதபொழுது, பழங்குடி மக்கள் நக்ஸலைட் இயக்கத்தை நோக்கிக் கவர்ந்திழுக்கப்பட்டது எவ்வித வியப்பையும் ஊட்டவில்லை. புதிய மாவட்ட ஆட்சியாளர் 'Scheduled areas land transfer regulation Act 1959' அமுல்படுத்தத் தொடங்கியவுடன் அவர் நக்ஸலைட்டுகளுக்குச் சாதகமாக இருக்கிறார் என்று பழங்குடியினர் அல்லாதவர்களும், எல்லாப் பாராளுமன்றக் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. பழங்குடி இளைஞனைப் பிடித்து வந்து சுட்டுக் கொன்று நக்ஸலைட்டுகளைச் சுட்டுக் கொன்றோம் என்று கதைகட்டும் காவல்துறையினர் எதிர்த்ததற்காக அந்த மாவட்ட ஆட்சியாளர் அதிலாபாத் மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டார்.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஓய்னம் கிராமத்தில் 'அசாம் ரைபிள்ஸ்' என்னும் இராணுவப் பிரிவு பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேரைக் கொன்றது. பத்து பெண்கள் பாலியல் சித்ரவதைக்குள்ளானார்கள். நூறு வீடுகளும், சர்ச்சுகளும் அழிக்கப்பட்டன.

இச் சம்பவத்திற்குப் பிறகு சேனாபதி மாவட்டத்தினுள் அம் மாவட்ட ஆட்சியாளர், காவல்துறைக் கண்காணிப்பாளர் நுழைவதைக் கூட தடை செய்ய 'அசாம் ரைபிள்ஸ்' பிரிவினால் முடிந்தது. குவாஹாத்தி உயர்நீதி மன்ற ஆணையின் பேரில் இம்பால் செக்ஷன்ஸ் நீதிமன்றம் இச் சம்பவத்திற்கு சாட்சியங்களைத் திரட்ட முயன்ற பொழுது, சாட்சியங்களைக் கடத்துவதும், வழக்கறிஞர்களை மிரட்டுவதும், அவர்கள் வீட்டைப் பரிசோதிப்பதுமாக 'அசாம் ரைபிள்ஸ்' பிரிவு தொல்லை கொடுத்துக் கொண்டேதான் இருந்தது.

'Armed forces (Special Powers) Act. 1958, Criminal Law amendent Act, 1908, 1932, 1938, 1952, 1961, 1983 என தொடர்ச்சியாக இந்திய அரசாங்கம் காவல்துறையினருக்கும் இராணுவத்தினருக்கும் மேன்மேலும் அதிகாரங்கள் வழங்கும் நிலையில் இந்திய நீதிமன்றங்களில் ஒரு வழக்கு தொடங்கி அதற்கு எண் கொடுக்கப்படுவதற்கு ஒரு மாதமும், சம்மன்கள் கொடுக்கப்படுவதற்கு ஒரு ஆண்டு வரையிலும் இழுத்தடிப்பும், அதன்பின் வாய்தாக்கள் மேல் வாய்தாக்களாய்த் தீர்ப்பு வழங்கப்பட பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். இந்நிலையில் ஊழலும் அதிகாரப் துஷ்பிரயோகங்களும் மிகுந்து வருவது இயற்கையே.

தகவல் உதவி : உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ச. செந்தில்நாதன், எஸ்.வி. ராஜதுரை. 'THE LAWYERS' இதழ்


நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Empty Re: நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்!

Post by Aathira Wed Apr 14, 2010 5:19 am

நல்ல தெளிவான விரிவான வழக்கறிஞர் செந்தில்நாதனின் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! 154550 நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! 678642


நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Aநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Aநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Tநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Hநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Iநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Rநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Aநீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Empty Re: நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்!

Post by kalaimoon70 Wed Apr 14, 2010 6:29 am

Aathira wrote:நல்ல தெளிவான விரிவான் வழக்கறிஞர் செந்தில்நாதனின் கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! 154550 நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! 678642
சியர்ஸ் சியர்ஸ் நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010

Back to top Go down

நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Empty Re: நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்!

Post by ரிபாஸ் Wed Apr 14, 2010 6:30 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Empty Re: நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்!

Post by சபீர் Fri Apr 16, 2010 4:48 pm

சிறந்த முறையில் வழக்கறிஞர் செந்தில்நாதனின் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்! Empty Re: நீதிமன்றம் + அரசியலமைப்புச் சட்டம் = தவறாய்ப்போன கணிதம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆண்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டிய தருணம் இது: தில்லி நீதிமன்றம்
» அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்
» கணிதம் தோன்றிய வரலாறு
» ஒரே நாடு ஒரே தேர்தல்: அரசியலமைப்புச் சவால்கள்
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum