ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!

+2
kalaimoon70
சிவா
6 posters

Go down

தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Empty தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!

Post by சிவா Mon Apr 12, 2010 12:50 am

சங்க காலத் தமிழர்கள் எவ்வளவு செல்வச் செழிப்பில் மிதந்தார்கள் என்பதை சங்கத் தமிழ்ப் பாடல்கள் விளக்குகின்றன. நூற்றுக் கணக்கான பாடல்களில் பொன்னும் மணியும் (இரத்தினங்கள்) பேசப்படுகின்றன.

அவைகளையெல்லாம் புலவர்களின் மிகையான கூற்றுக்கள் என்று ஒதுக்கி விட்டாலும் சில இடங்களில் குறிப்பான பொருட்கள் பற்றிப் பேசுகின்றனர். அப்படிப்பட்ட பொருட்கள் இயற்கையில் இருந்திருந்தால்தான் புலவர்கள் பாடியிருக்க முடியும். கற்பனையில் உதிக்காது.

யானைத் தந்தத்திலான தாயக்கட்டை பற்றி அகநானூற்றில் ஒரு குறிப்புள்ளது. யானைக்குத் தங்கச் சங்கிலி இருந்ததாக ஐங்குறுநூறு பாடல் (356) கூறுகிறது. இரத்தினக் கேடயம் குறித்து அகம் (369) பாடுகிறது. யானைத் தந்தத்தினாலான உலக்கை இருந்ததாகக் கலித்தொகை (40) பாடிய புலவர் கூறுகிறார்.

வயிரக் குறடு, பொன் சக்கரம் ஆகியன பற்றி மார்க்கண்டேயனார் (புறம் 365) பாடுகிறார். நகைகளின் எடை தாங்காமல் தலை குனியும் பெண் குறித்துக் கலித்தொகையில் (பாடல் 40, பாடல்119) படிக்கலாம். தங்கம், வெள்ளி, நீலமணி, இரும்பு ஆகியன குறித்து உலோச்சனார் (நற்றி 249) பாடுகிறார்.

முத்து, பவளம், வைரம், மணி (நீலக்கல் அல்ல சிவப்புக் கல்) மரகதம் (பச்சைக் கல்) பற்றிப் பாடிய இடங்கள் கணக்கிலடங்கா. தங்கத்தையும் ஏதேனும் ஒரு இரத்தினக் கல்லையும் வைத்துக் கட்டிய அட்டிகை, சங்கிலி குறித்தும் நிறையப் பாடல்கள் உள்ளன. சுமார் 30 இடங்களில் இந்தக் காட்சியைக் காண்கிறோம்.

ஒரு பெண், கோழியை விரட்டுவதற்குக் காதிலுள்ள தங்கக் குண்டலத்தைத் தூக்கி எறிந்த காட்சியும் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் நகையை மீன் கொத்திப் பறவை எடுத்துச் சென்று வேள்விக் கம்பத்தின் மேல் உட்கார்ந்தது யவனர் படகிலுள்ள ஒளிவிளக்குப் போல் இருந்ததாம்.

இரத்தினக் கேடயம்


மணி அணி பலகை, மரக்காழ் நெடுவேல்
பணிவுடை உள்ளமொடு தந்த முன்பின்

-அகம் 369, நக்கீரர்

யானக்கு தங்கச் சங்கிலி

உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்
யானைபிணித்த பொன்புனை கயிற்றின்

-ஐங்குறு - 356

காட்டுத் தீயால் சுட்டழிக்கப்பட்ட பகுதி வழியாக வருகையில் செல்வர் தங்கள் யானைகளைத் தங்கச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். (தமிழில் பொன் என்பது இரும்பையும் குறிக்கும், தங்கத்தையும் குறிக்கும். ஆனால் இங்கே தங்கம் குறிக்கப்படுகிறது).

வயிரக் குறடு

வயிரக் குறட்டின் வயங்குமணி ஆரத்துப்
பொன்னந் திகிரி முன் சமத்து உருட்டி

-புறம் 365 - மார்க்கண்டேயனார்

முன்னர் வாழ்ந்த மன்னர்கள் வயிரக் குறடு வைத்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பொன் சக்கரத்தில் இரத்தினக் கற்களால் ஆன ஆரங்கள் இருந்தன.

இரும்பின் அன்ன இருங்கோட்டுப் புன்னை
நீலத்தன்ன பாசிலை அகந்தோறும்
வெள்ளி அன்ன விளங்கினர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுத்தா உதிர

-நற்றிண 249 - உலோச்சனார்


இந்த வரிகளில் புன்னை மரத்தின் கரிய கிளைகள் இரும்புக்கும், அதன் இலைகள் நீலத்திற்கும், இலைகளின் நடுப்பகுதியில் விளங்கும் கோடுகள் வெள்ளிக்கும், அதன் நறுத்தாக்கள் பொன்னுக்கும் உவமை கூறப்படுகின்றன.


பொன்னும் மணியும் வைரமும் அமைந்த நகை குறித்துப் பதிற்றுப்பத்து கூறும் வரிகள்:

திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்
வயங்குகதிர் வயிரமொடு உளழ்ந்துபூண் சுடர்வர

-ப.பத் 16

முகைவளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின்வயின் ஒச்சி

- கலி 40


சந்தன மரத்தாலான உரலில் முத்துடைய யானைத் தந்தத்தாலான உலக்கையால் மாறி மாறிக் குத்தும் காட்சியைக் கபிலர் இயற்றிய குறிஞ்சிக் கலியில் காண்கிறோம்.


பிரசங் கலந்த வெண்சுவத் தீம்பால்
விரிகதிர்ப் பொன்கலந்து ஒருகை ஏத்திப்
புடப்பில் சுற்றும் பூந்தலச் சிறுகோல்
உண்ணென்று ஒக்குடி புடப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொன்கலப்பு ஒளிப்பத் தந்துற

-நற்றிண 110 - போதனார்


தேனும் பாலும் கலந்த உணவைத் தங்கக் கிணத்தில் கொடுத்தபோது அதை உண்ண மறுத்தாளாம் சிறுமி. அவள் கால்களில் தங்கச் சிலம்பில் முத்துக்கள் இருந்து ஒலித்ததாம். அவளை நரை மூதாட்டி ஒரு சிறு கோலை வைத்து மிரட்டினாளாம். தங்கக் கிண்ணத்தில் பால் ஊட்டும் அளவுக்கு வளம் படைத்தது தமிழர்கள் வாழ்வு.

ஆனால் இதே நேரத்தில் பழந் தமிழ்நாட்டில் பாணர்கள் மற்றும் புலவர்கள் வறுமையால் வாடியதையும் மறுப்பதற்கில்லை. ஆகையால் ஒருபுறம் செல்வச் செழிப்பும், மறுபுறம் வறுமையின் தாண்டவமும் நிலவியது என்றே கருத வேண்டியுள்ளது.

- சுவாமிநாதன்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Empty Re: தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!

Post by kalaimoon70 Mon Apr 12, 2010 1:21 am

அறிந்த நிறத்தை அறியா தமிழ் தத்துவத்தை,சொன்ன வழிமுறையை ,நூல்களை சொன்னமைக்கு நன்றி தல.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Empty Re: தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!

Post by கலைவேந்தன் Mon Apr 12, 2010 9:41 am

நமது எல்லா வளங்களும் கொள்ளைகொள்ளப்பட்டு அழிந்து போய்விட்டதே,,,, [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Empty Re: தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!

Post by நிலாசகி Mon Apr 12, 2010 11:00 am

[You must be registered and logged in to see this image.]


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Empty Re: தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!

Post by சரவணன் Mon Apr 12, 2010 11:03 am

கலை wrote:நமது எல்லா வளங்களும் கொள்ளைகொள்ளப்பட்டு அழிந்து போய்விட்டதே,,,, [You must be registered and logged in to see this image.]

எது நம்முடையதோ அது நம்மிடமே வந்து சேரும். [You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Empty Re: தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!

Post by ப்ரியா Mon Apr 12, 2010 12:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

தங்கம், இரத்தினம், தந்தம்!  தமிழர்களின் செல்வ வளம்! Empty Re: தங்கம், இரத்தினம், தந்தம்! தமிழர்களின் செல்வ வளம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum