Latest topics
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’by ayyasamy ram Today at 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு
+7
jahubar
pgasok
கலைவேந்தன்
பாரதிப்பிரியன்
Aathira
சரவணன்
சிவா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு
சங்கத் தமிழ்ப் புலவர்கள் கூறும் புவியியல் தகவல்களைப் (GEOGRAPHICAL FACTS) படிப்போர், அவர்களுடைய பரந்த அறிவை எண்ணி வியப்பார்கள்.
'குமரி முதல் இமயம் வரை' என்று இன்று நாம் பயன்படுத்தும் சொற்றொடரை முரஞ்சியூர் முடிநாகராயர், ஆலந்தூர்க்கிழார், காரிக்கிழார், குறுங்கோழியூர்க்கிழார், முடமோசியார், பரணர், குமட்டுர்க் கண்ணனார் முதலிய புலவர்கள் பயன்படுத்துகின்றனர்.
உலகிலேயே உயரமான மலை இமயமலை என்பது, இன்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உயரத்தை அளப்பதற்கு நவீன விஞ்ஞானக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே, மிக உயரமான மலை இமயம் என்பதைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனால் தமிழ் மன்னர்களை, "இமயம் போல வாழ்க" என்று வாழ்த்தினர்.
உதியஞ் சேரலாதனை முருஞ்சியூர் முடிநாகராயரும் (புறம் 2), விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழாரும் (புறம் 166), கோப்பெருஞ்சோழனை புல்லாற்றூர் எயிற்றியனாரும் (புறம் 214) இவ்வாறு வாழ்த்துகின்றனர்.
"அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற்றுஞ்சும் பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே" (புறம் 2)
............... நெடுவரைக் கசவளர் இமயம்போல,
நிலீஇயர் அத்தை, நீ நிலமிசையானே (புறம் 166)
................ இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை
நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே (புறம் 214)
ஏறக்குறைய 25 இடங்களில் இமயத்தைப் புகழ்ந்து பாடுகின்றனர் சங்கப் புலவர்கள். அது மட்டுமல்ல, பரணர் என்ற புலவர் இமயமலைக் காட்சிகளைத் தத்ரூபமாக வருணிக்கிறார். அதிலுள்ள புகழ்பெற்ற "பொற்கோடு" என்ற சிகரத்தையும் பல புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"காஞ்சன சிருங்கம்" என்று வடமொழியில் கூறப்படும் இது மருவி, "கஞ்சன் ஜங்கா" என்று இன்று அழைக்கப்படுகிறது.
"பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன" (பரணர், புறம் 369)
"ஆரியர் அலறத்தாக்கி, பேர் இசைத் தொன்று
முதிர் வடவரை வணங்குவில் பொறித்து" (பரணர், அகம் 396)
"கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை
எல்லை இமயமாகத் தென்னங்குமரியோ டாயிடை அரசர்" (பரணர், ப.பத் 43)
இதில் "கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை" என்பது காளிதாசனின் "தேவதாத்மா ஹிமாலய:" என்ற வரியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. குமரி முதல் இமயம் வரை உள்ள பகுதிகளை பரணர் அறிந்திருந்தார். குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவரும் (ப.பத் 11) இதே கருத்தைப் பாடியுள்ளார். இமய மலையிலுள்ள அன்னப் பறவைகளையும் பரணர் (நற்.356) வருணிக்கிறார்.
உலகிலேயே அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றான சிரபுஞ்சியும் (மேகாலயா, இந்தியா) இமயமலைத் தொடரில்தான் உள்ளது. இதை அறிந்துதானோ என்னவோ சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாராட்டும் ஆலத்தூர்க்கிழார் இவ்வாறு கூறுகிறார் :-
"சான்றோர் செய்த நன்றுண்டாயின் இமயத்து ஈண்டி
இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே!" (புறம் 34)
"இந்த உலகத்தில் சான்றோர் செய்த நன்மை இருக்குமாயின், இமயமலையில் திரண்டு இனிய ஓசையை உண்டாக்கிவரும் பெரிய மேகம் பெய்த நுட்பமான மழைத் துளிகளைவிடப் பலகாலம் வாழ்வாயாக" என்று ஆலத்தூர்க்கிழார் வாழ்த்துகிறார்.
கடல் பற்றி பரணர் கூறும் கருத்தும் அற்புதமானது. கடலில் மழை மேகங்கள் எவ்வளவு உண்டானாலும் நீர் அளவு குறையாது. கடலில் எவ்வளவு நதிகள் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டினாலும் கடல் நிரம்பி வழியாது.
"மழை கொளக் குறையா புனல்புக நிறையா" (ப.பத் 45)
பலரும் சிந்தித்துப் பார்க்காத புவியியல் உண்மை இது. பல்லாயிரக்கணக்கான ஆறுகள் ஒவ்வொரு நிமிடமும் பலகோடி கனஅடி நீரைக் கொட்டிய போதிலும் கடல் நிறைவதில்லை. அதே போலக் கடலிலிருந்து எவ்வளவு மழை மேகம் திரண்டாலும் கடல் குறைவதில்லை. இது இயற்கை நியதி.
தமிழர்கள் எந்த அளவுக்கு பூமியை உற்றுக் கண்காணித்தனர் என்பதற்கு இது ஒரு சான்று. கப்பலைத் தாக்கி அழிக்கும் மீன் வகைகள் பற்றியும் பரணர் குறிப்பிடுகிறார்.
'தனம் தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இரவின் குப்பை அன்ன' (அகம் 152)
பிண்டன் என்பவனின் படை, தங்கம் கொண்டு வரும் கப்பலைத் தாக்கி அழிக்கும் இரால் மீன் கூட்டம் போன்றது என்று இதற்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.
ஒரு வகைக் கடற்புழுக்கள் கப்பலின் அடியில் ஒட்டிக் கொண்டு கப்பலையே அரித்து அழித்து விடும் என்று தற்கால விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பரணர் குறிப்பிடும் 'இரவின் குப்பை' இத்தகைய வகைக் கடற்புழுக்களா என்பது ஆராய வேண்டிய தகவலாகும்.
- ச. சாமிநாதன், தமிழ் ஆசிரியர்
'குமரி முதல் இமயம் வரை' என்று இன்று நாம் பயன்படுத்தும் சொற்றொடரை முரஞ்சியூர் முடிநாகராயர், ஆலந்தூர்க்கிழார், காரிக்கிழார், குறுங்கோழியூர்க்கிழார், முடமோசியார், பரணர், குமட்டுர்க் கண்ணனார் முதலிய புலவர்கள் பயன்படுத்துகின்றனர்.
உலகிலேயே உயரமான மலை இமயமலை என்பது, இன்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உயரத்தை அளப்பதற்கு நவீன விஞ்ஞானக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே, மிக உயரமான மலை இமயம் என்பதைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனால் தமிழ் மன்னர்களை, "இமயம் போல வாழ்க" என்று வாழ்த்தினர்.
உதியஞ் சேரலாதனை முருஞ்சியூர் முடிநாகராயரும் (புறம் 2), விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழாரும் (புறம் 166), கோப்பெருஞ்சோழனை புல்லாற்றூர் எயிற்றியனாரும் (புறம் 214) இவ்வாறு வாழ்த்துகின்றனர்.
"அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற்றுஞ்சும் பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே" (புறம் 2)
............... நெடுவரைக் கசவளர் இமயம்போல,
நிலீஇயர் அத்தை, நீ நிலமிசையானே (புறம் 166)
................ இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை
நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே (புறம் 214)
ஏறக்குறைய 25 இடங்களில் இமயத்தைப் புகழ்ந்து பாடுகின்றனர் சங்கப் புலவர்கள். அது மட்டுமல்ல, பரணர் என்ற புலவர் இமயமலைக் காட்சிகளைத் தத்ரூபமாக வருணிக்கிறார். அதிலுள்ள புகழ்பெற்ற "பொற்கோடு" என்ற சிகரத்தையும் பல புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
"காஞ்சன சிருங்கம்" என்று வடமொழியில் கூறப்படும் இது மருவி, "கஞ்சன் ஜங்கா" என்று இன்று அழைக்கப்படுகிறது.
"பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன" (பரணர், புறம் 369)
"ஆரியர் அலறத்தாக்கி, பேர் இசைத் தொன்று
முதிர் வடவரை வணங்குவில் பொறித்து" (பரணர், அகம் 396)
"கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை
எல்லை இமயமாகத் தென்னங்குமரியோ டாயிடை அரசர்" (பரணர், ப.பத் 43)
இதில் "கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை" என்பது காளிதாசனின் "தேவதாத்மா ஹிமாலய:" என்ற வரியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. குமரி முதல் இமயம் வரை உள்ள பகுதிகளை பரணர் அறிந்திருந்தார். குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவரும் (ப.பத் 11) இதே கருத்தைப் பாடியுள்ளார். இமய மலையிலுள்ள அன்னப் பறவைகளையும் பரணர் (நற்.356) வருணிக்கிறார்.
உலகிலேயே அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றான சிரபுஞ்சியும் (மேகாலயா, இந்தியா) இமயமலைத் தொடரில்தான் உள்ளது. இதை அறிந்துதானோ என்னவோ சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாராட்டும் ஆலத்தூர்க்கிழார் இவ்வாறு கூறுகிறார் :-
"சான்றோர் செய்த நன்றுண்டாயின் இமயத்து ஈண்டி
இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே!" (புறம் 34)
"இந்த உலகத்தில் சான்றோர் செய்த நன்மை இருக்குமாயின், இமயமலையில் திரண்டு இனிய ஓசையை உண்டாக்கிவரும் பெரிய மேகம் பெய்த நுட்பமான மழைத் துளிகளைவிடப் பலகாலம் வாழ்வாயாக" என்று ஆலத்தூர்க்கிழார் வாழ்த்துகிறார்.
கடல் பற்றி பரணர் கூறும் கருத்தும் அற்புதமானது. கடலில் மழை மேகங்கள் எவ்வளவு உண்டானாலும் நீர் அளவு குறையாது. கடலில் எவ்வளவு நதிகள் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டினாலும் கடல் நிரம்பி வழியாது.
"மழை கொளக் குறையா புனல்புக நிறையா" (ப.பத் 45)
பலரும் சிந்தித்துப் பார்க்காத புவியியல் உண்மை இது. பல்லாயிரக்கணக்கான ஆறுகள் ஒவ்வொரு நிமிடமும் பலகோடி கனஅடி நீரைக் கொட்டிய போதிலும் கடல் நிறைவதில்லை. அதே போலக் கடலிலிருந்து எவ்வளவு மழை மேகம் திரண்டாலும் கடல் குறைவதில்லை. இது இயற்கை நியதி.
தமிழர்கள் எந்த அளவுக்கு பூமியை உற்றுக் கண்காணித்தனர் என்பதற்கு இது ஒரு சான்று. கப்பலைத் தாக்கி அழிக்கும் மீன் வகைகள் பற்றியும் பரணர் குறிப்பிடுகிறார்.
'தனம் தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இரவின் குப்பை அன்ன' (அகம் 152)
பிண்டன் என்பவனின் படை, தங்கம் கொண்டு வரும் கப்பலைத் தாக்கி அழிக்கும் இரால் மீன் கூட்டம் போன்றது என்று இதற்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.
ஒரு வகைக் கடற்புழுக்கள் கப்பலின் அடியில் ஒட்டிக் கொண்டு கப்பலையே அரித்து அழித்து விடும் என்று தற்கால விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பரணர் குறிப்பிடும் 'இரவின் குப்பை' இத்தகைய வகைக் கடற்புழுக்களா என்பது ஆராய வேண்டிய தகவலாகும்.
- ச. சாமிநாதன், தமிழ் ஆசிரியர்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு
[You must be registered and logged in to see this image.]
தமிழன் என்று சொல்வோம்,
தலை நிமிர்ந்து செல்வோம்!
தமிழன் என்று சொல்வோம்,
தலை நிமிர்ந்து செல்வோம்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு
பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.]
தமிழன் என்று சொல்வோம்,
தலை நிமிர்ந்து செல்வோம்!
[You must be registered and logged in to see this image.]
Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு
வியக்க வைக்கும் தமிழனின் பரந்த அறிவை மெச்சுவோம்...
புயம் விடைக்க பெருமிதத்துடன் நடைபோடுவோம்.... [You must be registered and logged in to see this image.]
புயம் விடைக்க பெருமிதத்துடன் நடைபோடுவோம்.... [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு
அன்றைய புஷ்பக விமானம் இன்றைய விமானம் அன்றைய கவச குண்டலம் இன்றைய புல்லட் புரூப்
pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு
வாழ்க தமிழ் வளர்க தமிழன்..
jahubar- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு
பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.]
தமிழன் என்று சொல்வோம்,
தலை நிமிர்ந்து செல்வோம்!
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு
[You must be registered and logged in to see this image.]maniajith007 wrote:தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
» ’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின்
» குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு
» அற்புதமான நடை, ஆழ்ந்த கருத்துக்கள், அபாரமான கவிநயம் வளமான கற்பனை…!
» இதை பாருங்கள்...இப்படித்தான் அமெரிக்கா புவியியல் சொல்லித்தருகிறது
» ’7ஆம் அறிவு’ தமிழர்களின் பெருமையை பேசும்! – உதயநிதி ஸ்டாலின்
» குஜராத்தில் அபாரமான வளர்ச்சி: மோடிக்கு அமெரிக்கா பாராட்டு
» அற்புதமான நடை, ஆழ்ந்த கருத்துக்கள், அபாரமான கவிநயம் வளமான கற்பனை…!
» இதை பாருங்கள்...இப்படித்தான் அமெரிக்கா புவியியல் சொல்லித்தருகிறது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|