Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது
4 posters
Page 1 of 1
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது
அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது சாதனைக்குடும்பம்!
ஏப்ரல் 04,2010,00:00 IST
குடும்பத்தில் அத்தனை பேரும் டாக்டர்கள், இன்ஜினியர்கள் அம்மா படிக்காதவர். அப்பாதான் எங்கள் டியூசன் மாஸ்டர். எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அவரே தேர்வு வைப்பார். தேர்வு நேரங்களில் இரவு பகல் பாராமல் கண்விழித்து எங்களை தயார் செய்வார்.
பெருமையும், சிறுமையும் பெற்றோர் வளர்ப்பில் வருவது உண்டு. பெற்றோர் குணத்தில் வருவதும் உண்டு. தந்தை மகனுக்கு செய்யும் கடமை அறிவை கொடுப்பது. மகன் தந்தைக்கு செய்யும் கடமை அவர் கொடுத்த அறிவால் பிறர் புகழ வாழ்வது. இந்த இரண்டு கடமைகளும் சரியாக பின்பற்றப்படும் போது சிறுமைக்கு இடம் இல்லை. எல்லாம் பெருமையே. தன் தந்தையின் அயராத உழைப்பினால் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் அடுத்து அடுத்து டாக்டர்களாகி, இன்ஜினியர்களாகி சாதனை படைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகில் உள்ளது கோட்டூர். முன்னாள் ராணுவ வீரர் மாயாண்டி. மறைந்த இவருக்கு நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் உள்ளனர். இவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண் டாக்டர்கள். அடுத்தடுத்து இவர்கள் குடும்ப வாரிசுகள் அனைவரும் டாக்டர்களாக உள்ளனர். மாயாண்டியின் மூத்த மகள், இந்த ஊரின் முதல் பெண் டாக்டர் சகுந்தலாபாரதி கூறியதாவது: எங்க அப்பா இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டவர். அதனால் நாட்டுப் பற்றும், கல்வியின் முக்கியத்துவத்தையும் சிறு வயதில் இருந்தே எங்களுக்குள் விதைத்தார். நான் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம்.
பாத்திமா கல்லூரியில் பி.யூ.சி., படித்து கொண்டிருந்த போது, எங்கள் ஊரில் இருந்த படிப்பறிவு இல்லாத ஒரு தாத்தா அப்பாவிடம், 'பொண்ணு ஐ.ஏ.எஸ்., படிச்சு சமூக சேவை செய்யுறதக் காட்டிலும், பல உயிர்களை பிழைக்க வைக்கிற டாக்டருக்கு படிக்க வையுடா ' என்றார். அதிலிருந்து நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார். பி.யூ.சி.,யில் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றதால் எளிதாக எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்தது. எம்.டி., படிப்பில் முதலிடம் பெற்றேன். பல்வேறு பகுதிகளில் பணியாற்றி விட்டு, சென்னையில் சூப்பிரண்டாக 15 வருடம் பணியாற்றினேன். என் கணவர் தலைமை செயலகத்தில் சார்பு செயலாளராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். என்மகன் விஜயஆனந்த், தேனி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். பெண் ராணிசுகன்யா சென்னை மருத்துவக் கல்லூரியில் பெத்தாலஜிஸ்ட்டாக உள்ளார்.
எங்கள் அப்பா அரசுத் துறையில் பணியாற்றியதால் எங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. எங்கள் ஆறு பேருக்கும் வயது வித்தியாசம் பெரிய அளவில் இல்லாததால், தொடர்ந்து வந்த படிப்பு செலவில் அப்பா கஷ்டப்பட்டார். தம்பி அசோக்குமார் எம்.பி.பி.எஸ்., முடித்து விட்டு தேனியில் மருத்துவமனை வைத்துள்ளார். அவரின் பெண் வித்யா போடி அரசு மருத்துவமனையில் டாக்டர். இன்னொரு பெண் அஸ்வினி பல் டாக்டராக உள்ளார். இரண்டு மருமகன்களும் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளனர். தங்கை ஜெயலட்சுமி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை டாக்டராக உள்ளார். அவரின் மகள் அஸ்வினி பல் டாக்டராக உள்ளார். மூத்த சகோதரன் சவுந்தராஜன் திருச்சி 'பெல்' நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ளார். அவரின் இரு பிள்ளைகளும் எம்.இ., படித்தவர்கள். அடுத்த சகோதரர் சந்திரசேகர் ஆடிட்டர். அவரின் பெண் ரோகினி மும்பை டாடா நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பையன்கள் பி.இ., படித்தவர்கள். கடைசி தம்பி வாசுதேவ பிரபாகரன் மத்திய அரசு பணியில் உள்ளார். மகன்களும் எம்.இ., முடித்து விட்டனர். என் அப்பாவின் கனவு நிறைவேறிவிட்டது. தற்போது என்னால் முடிந்த அளவு கல்வி என்று வருபவருக்கு உதவி செய்கிறேன் என்றார்.
தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைமை டாக்டர் ஜெயலட்சுமி கூறியதாவது: அம்மா படிக்காதவர். அப்பாதான் எங்கள் டியூசன் மாஸ்டர். எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அவரே தேர்வு வைப்பார். தேர்வு நேரங்களில் இரவு பகல் பாராமல் கண்விழித்து எங்களை தயார் செய்வார். சிறுவயதில் கொடுக்கப்பட்ட பயிற்சியினால் தான் நான் சாதிக்க முடிந்தது என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய டாக்டர் அசோக்குமார், 'எந்த பொருளாதார கஷ்டத்தையும் உணர முடியாத அளவு அப்பா எங்களை வளர்த்தார்,' என்று கண்கலங்கினார்.நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். அறிவு சார்ந்த பெற்றோர் ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமம். பெற்றோரின் விருப்பம் அறிந்து செயல்பட்டு சாதித்த இந்த குடும்பம் ஒரு சாதனைக்குடும்பம் தானே.
ஏப்ரல் 04,2010,00:00 IST
குடும்பத்தில் அத்தனை பேரும் டாக்டர்கள், இன்ஜினியர்கள் அம்மா படிக்காதவர். அப்பாதான் எங்கள் டியூசன் மாஸ்டர். எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அவரே தேர்வு வைப்பார். தேர்வு நேரங்களில் இரவு பகல் பாராமல் கண்விழித்து எங்களை தயார் செய்வார்.
பெருமையும், சிறுமையும் பெற்றோர் வளர்ப்பில் வருவது உண்டு. பெற்றோர் குணத்தில் வருவதும் உண்டு. தந்தை மகனுக்கு செய்யும் கடமை அறிவை கொடுப்பது. மகன் தந்தைக்கு செய்யும் கடமை அவர் கொடுத்த அறிவால் பிறர் புகழ வாழ்வது. இந்த இரண்டு கடமைகளும் சரியாக பின்பற்றப்படும் போது சிறுமைக்கு இடம் இல்லை. எல்லாம் பெருமையே. தன் தந்தையின் அயராத உழைப்பினால் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் அடுத்து அடுத்து டாக்டர்களாகி, இன்ஜினியர்களாகி சாதனை படைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகில் உள்ளது கோட்டூர். முன்னாள் ராணுவ வீரர் மாயாண்டி. மறைந்த இவருக்கு நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் உள்ளனர். இவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண் டாக்டர்கள். அடுத்தடுத்து இவர்கள் குடும்ப வாரிசுகள் அனைவரும் டாக்டர்களாக உள்ளனர். மாயாண்டியின் மூத்த மகள், இந்த ஊரின் முதல் பெண் டாக்டர் சகுந்தலாபாரதி கூறியதாவது: எங்க அப்பா இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டவர். அதனால் நாட்டுப் பற்றும், கல்வியின் முக்கியத்துவத்தையும் சிறு வயதில் இருந்தே எங்களுக்குள் விதைத்தார். நான் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பது அவர் விருப்பம்.
பாத்திமா கல்லூரியில் பி.யூ.சி., படித்து கொண்டிருந்த போது, எங்கள் ஊரில் இருந்த படிப்பறிவு இல்லாத ஒரு தாத்தா அப்பாவிடம், 'பொண்ணு ஐ.ஏ.எஸ்., படிச்சு சமூக சேவை செய்யுறதக் காட்டிலும், பல உயிர்களை பிழைக்க வைக்கிற டாக்டருக்கு படிக்க வையுடா ' என்றார். அதிலிருந்து நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதில் அப்பா உறுதியாக இருந்தார். பி.யூ.சி.,யில் கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றதால் எளிதாக எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்தது. எம்.டி., படிப்பில் முதலிடம் பெற்றேன். பல்வேறு பகுதிகளில் பணியாற்றி விட்டு, சென்னையில் சூப்பிரண்டாக 15 வருடம் பணியாற்றினேன். என் கணவர் தலைமை செயலகத்தில் சார்பு செயலாளராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். என்மகன் விஜயஆனந்த், தேனி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். பெண் ராணிசுகன்யா சென்னை மருத்துவக் கல்லூரியில் பெத்தாலஜிஸ்ட்டாக உள்ளார்.
எங்கள் அப்பா அரசுத் துறையில் பணியாற்றியதால் எங்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. எங்கள் ஆறு பேருக்கும் வயது வித்தியாசம் பெரிய அளவில் இல்லாததால், தொடர்ந்து வந்த படிப்பு செலவில் அப்பா கஷ்டப்பட்டார். தம்பி அசோக்குமார் எம்.பி.பி.எஸ்., முடித்து விட்டு தேனியில் மருத்துவமனை வைத்துள்ளார். அவரின் பெண் வித்யா போடி அரசு மருத்துவமனையில் டாக்டர். இன்னொரு பெண் அஸ்வினி பல் டாக்டராக உள்ளார். இரண்டு மருமகன்களும் அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளனர். தங்கை ஜெயலட்சுமி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை டாக்டராக உள்ளார். அவரின் மகள் அஸ்வினி பல் டாக்டராக உள்ளார். மூத்த சகோதரன் சவுந்தராஜன் திருச்சி 'பெல்' நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ளார். அவரின் இரு பிள்ளைகளும் எம்.இ., படித்தவர்கள். அடுத்த சகோதரர் சந்திரசேகர் ஆடிட்டர். அவரின் பெண் ரோகினி மும்பை டாடா நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பையன்கள் பி.இ., படித்தவர்கள். கடைசி தம்பி வாசுதேவ பிரபாகரன் மத்திய அரசு பணியில் உள்ளார். மகன்களும் எம்.இ., முடித்து விட்டனர். என் அப்பாவின் கனவு நிறைவேறிவிட்டது. தற்போது என்னால் முடிந்த அளவு கல்வி என்று வருபவருக்கு உதவி செய்கிறேன் என்றார்.
தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைமை டாக்டர் ஜெயலட்சுமி கூறியதாவது: அம்மா படிக்காதவர். அப்பாதான் எங்கள் டியூசன் மாஸ்டர். எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அவரே தேர்வு வைப்பார். தேர்வு நேரங்களில் இரவு பகல் பாராமல் கண்விழித்து எங்களை தயார் செய்வார். சிறுவயதில் கொடுக்கப்பட்ட பயிற்சியினால் தான் நான் சாதிக்க முடிந்தது என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய டாக்டர் அசோக்குமார், 'எந்த பொருளாதார கஷ்டத்தையும் உணர முடியாத அளவு அப்பா எங்களை வளர்த்தார்,' என்று கண்கலங்கினார்.நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். அறிவு சார்ந்த பெற்றோர் ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமம். பெற்றோரின் விருப்பம் அறிந்து செயல்பட்டு சாதித்த இந்த குடும்பம் ஒரு சாதனைக்குடும்பம் தானே.
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது
அருமையான சாதனைக்குடும்பம் பகிர்வுக்கு நன்றி தோழரே!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது
வாழ்த்துவோம் இவரை .வேண்டுவோம் இவரை போல இன்னும் நம் சகோதர ,
சகோதரிகள் வருவதற்கு! தகவலுக்கு நன்றி தோழரே !
சகோதரிகள் வருவதற்கு! தகவலுக்கு நன்றி தோழரே !
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அப்பாவின் உழைப்பும் திட்டமிடலும்... உருவானது
அருமையான சாதனைக்குடும்பம் பகிர்வுக்கு நன்றி தோழரே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» அழுத்தமான நம்பிக்கையும், உழைப்பும் வெற்றிக்கு வழி கோலும் !!
» ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!
» சிங்களமொழி உருவானது எப்படி?
» கொட்டியது சாக்லெட் உருவானது ஏ டி எம்
» இந்தியா உருவானது எப்படி?
» ஆக்டோபஸின் ஞானமும் அலட்சியம் செய்யப்படும் உழைப்பும்!
» சிங்களமொழி உருவானது எப்படி?
» கொட்டியது சாக்லெட் உருவானது ஏ டி எம்
» இந்தியா உருவானது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|