ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Empty பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்

Post by sathyan Sun Apr 04, 2010 10:17 pm

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
ஏப்ரல் 04,2010,00:14 IST





பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் TblHumanTrust_37236750126


கோவை : சிறு வயதில் தந்தையை இழந்த ஏழை மாணவன், கல்லூரிகளில் இரவு நேர செக்யூரிட்டி வேலை செய்து, தனது இரண்டு தம்பிகளை படிக்க வைத்து வருகிறார். கோவை 'வழிகாட்டி' நிகழ்ச்சியில் இவரது உருக்கமான கதையைக் கேட்ட பார்வையாளர்கள் கண் கலங்கினர்.

'தினமலர்' நாளிதழ், புதிய தலைமுறை வார இதழ் மற்றும் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கான 'வழிகாட்டி' நிகழ்ச்சி, கோவையில் நடந்து வருகிறது. நேற்று வங்கிக் கடன்கள் பற்றி விளக்கும் நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம் என அறிவிக்கப்பட்டது. அப்போது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எழுந்த ரமேஷ் எனும் மாணவர், கல்விக் கடன் கிடைக்காததால், தான் விரும்பிய வேளாண் படிப்பை படிக்க முடியவில்லை என்றும், தற்போது பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டு டிப்ளமோ படிப்பதாகவும் கூறினார். அவருக்கு தேவையான உதவிகள் செய்வதாக பாரத வங்கி அதிகாரி விஜயராஜ் உறுதி அளித்தார். அந்த மாணவனின் தன்னம்பிக்கை, தைரியத்தைப் பாராட்டிய 'வழிகாட்டி' நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அவரை மேடைக்கு வரவழைத்து பாராட்டினர்.

அப்போது அந்த மாணவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தாலுகா தளவாய்புரம் கிராமத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தின் மூத்த மகன் நான். எனக்கு இரண்டு தம்பிகள். சிறு வயதில் தந்தை இறந்து விட்டார். கண் பார்வை குறைந்த அம்மா, விவசாய கூலி வேலை பார்த்து எங்களை வளர்க்கிறார். உறவினர் எவரும் உதவவில்லை. தெரு விளக்கில் படிப்பதைக் கண்டு ஊரார் கிண்டல் செய்வர். இதனால், எப்படியும் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென மனதுக்குள் வைராக்கியம் வந்தது. குடும்ப வறுமை காரணமாக, படிக்கும் போது அம்மாவுடன் கூலி வேலைகளுக்கு சென்று தினமும் 20 ரூபாய் சம்பாதிப்பேன். கட்டட வேலைக்கு சென்றால் 40, 50 ரூபாய் கிடைக்கும்.

கூலி வேலைக்கு சென்றதால் பல நாட்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. படித்தே ஆக வேண்டும் என்ற என் அம்மாவின் வற்புறுத்தலால், நெல்லையில் உள்ள கிறிஸ்தவ அன்பு இல்லத்தில் தங்கி படித்தேன். அங்கு புழு, வண்டு கலந்த உணவு வழங்கப்பட்டாலும், குடும்ப நிலைமைக்காக சகித்துக் கொண்டு படித்தேன். ப்பல் பொறியாளர் மதிவாணன், பாதிரியார் பிரான்சிஸ் ஆகியோரின் உதவியால் 924 மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 பாஸ் செய்தேன். ஆனால், வேளாண் பல்கலை, பல் மருத்துவர் படிப்புகளில் சேர இடம் கிடைத்தும், பணம் இல்லாததால் சேர முடியவில்லை. இன்று கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 'டிப்ளமோ இன் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்' இறுதியாண்டு படிக்கிறேன். வளாக நேர்காணலில் 8,000 ரூபாய் சம்பளம் பெற தேர்வு பெற்று விட்டேன்.

எனது இரண்டாவது தம்பியை இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜி., டிப்ளமோவும், மூன்றாவது தம்பியை சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளியில் பத்தாவதும் படிக்க வைக்கிறேன். இங்குள்ள ஒரு விடுதியில் தங்கி படிக்கிறோம். கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தனியார் கல்லூரிகளில் இரவு நேர 'செக்யூரிட்டி' பணி, பேப்பர் போடுவது, கூரியர், ஓட்டல், பேன்சி கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பணிபுரிந்து சம்பாதிக்கிறேன். தேர்வு நாட்களில் பணியில் இருந்து நின்று விடுவேன்.

செக்யூரிட்டி பணியில் அமைதியாக இரவில் படிக்க முடியும் என்பதால் அப்பணிகளில் அதிக நாட்கள் ஈடுபட்டேன். இப்படி சம்பாதித்து தான் எங்கள் கல்வி செலவுகளை சமாளிக்கிறோம். சிரமத்துக்கு மத்தியில் தனியாக 'ஹார்டுவேர் நெட்வொர்க்கிங்' படிப்பையும் முடித்துள்ளேன். வறுமையின் உச்சத்தை பார்த்த எங்களுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். கோவில் உண்டியல்களில் பணம் போடுவதற்கு பதில், உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு உதவுவதே எனக்கு விருப்பம். ஆடம்பரமாக பணத்தைச் செலவிடுபவர்களைக் கண்டால், சங்கடமாக இருக்கும். இன்று எங்கள் அம்மாவுக்கு 53 வயது. இன்னும் கிராமத்தில் கூலி வேலை தான் செய்கிறார். சீக்கிரம் வேலையில் சேர்ந்து, அவருக்கு கண் பார்வையை மீட்டுக் கொடுக்க வேண்டும். அவரை கடைசி வரை நல்லபடியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது என் லட்சியம். எங்கள் குடும்பத்தை கேலி செய்தவர்கள் முன்னிலையில் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும்.

நம்பிக்கை, உழைப்பு இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதை ஒரு புத்தகத்தில் படித்தேன். அதன்படி, ஒழுக்கமான குணங்களுடன் நம்பிக்கையுடன் கடினமாக உழைக்கிறேன். நல்ல வேலைக்கு சென்ற பின், நிறைய ஏழைகள் படிக்க உதவ வேண்டும்; அதற்கான சக்தியை கடவுள் எனக்கு தர வேண்டும். இவ்வாறு ரமேஷ் கூறினார்.

அவரது உருக்கமான, தன்னம்பிக்கை தெறிக்கும் பேச்சைக் கேட்ட பார்வையாளர்கள் கண் கலங்கினர். ரமேஷின் பேச்சைக் கேட்ட அயல்நாட்டு கல்வி ஆலோசகர் பால் செல்லக்குமார், மாணவருக்கு 10,000 ரூபாய் வழங்குவதாக மேடையில் அறிவித்தார். திருப்பூரைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவர் 5,000 ரூபாயும், சுகந்தி என்பவர் 1,001 ரூபாயும் வழங்கி, மாணவரின் தளராத தன்னம்பிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Empty Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்

Post by சரவணன் Sun Apr 04, 2010 10:25 pm

இந்த மாணவன் வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் பெற இறைவனை வேண்டுகிறேன்!!!

தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,

தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.

வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!


Last edited by பிச்ச on Mon Apr 05, 2010 1:10 am; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Empty Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்

Post by சிவா Sun Apr 04, 2010 10:33 pm

பிச்ச wrote:இந்த மாணவன் வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் பெற இறைவனை வாழ்த்துகிறேன்!!!

தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,

தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.

வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!

வழிமொழிகிறேன்...........! மகிழ்ச்சி


பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Empty Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்

Post by sathyan Sun Apr 04, 2010 10:35 pm

இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Empty Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்

Post by சரவணன் Sun Apr 04, 2010 10:36 pm

sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது

கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....

இல்லை ஆனந்த கண்ணீரா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Empty Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்

Post by sathyan Sun Apr 04, 2010 10:41 pm

பிச்ச wrote:
sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது

கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....

இல்லை ஆனந்த கண்ணீரா?


பிச்ச யோவ் இதையுமா காமெடி பனுவ பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 56667 பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 56667
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Empty Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்

Post by சரவணன் Sun Apr 04, 2010 11:00 pm

sathyan wrote:
பிச்ச wrote:
sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது

கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....

இல்லை ஆனந்த கண்ணீரா?

பிச்ச யோவ் இதையுமா காமெடி பனுவ பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 56667 பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 56667
சாரி தல.
உள்ளுக்குள்ள எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 440806


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Empty Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்

Post by sathyan Sun Apr 04, 2010 11:03 pm

பிச்ச wrote:
sathyan wrote:
பிச்ச wrote:
sathyan wrote:இந்த செய்தியை நான் படித்த பொது என் கண்கள் என்னை அறியாமல் குளமானது

கோடையில் வற்றிய குளம் போல அத சொல்லுங்க, அத சொல்லுங்க மொதல்ல....

இல்லை ஆனந்த கண்ணீரா?

பிச்ச யோவ் இதையுமா காமெடி பனுவ பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 56667 பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 56667
சாரி தல.
உள்ளுக்குள்ள எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 440806


பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 154550 பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் 154550
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Empty Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்

Post by ramesh.vait Sun Apr 04, 2010 11:53 pm

கோவில் உண்டியல்களில் பணம் போடுவதற்கு பதில், உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களுக்கு உதவுவதே எனக்கு விருப்பம். ஆடம்பரமாக பணத்தைச் செலவிடுபவர்களைக் கண்டால், சங்கடமாக இருக்கும். - இது தான் வறுமை அனுபவங்கள்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Empty Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்

Post by அப்புகுட்டி Mon Apr 05, 2010 1:03 am

பிச்ச wrote:இந்த மாணவன் வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் பெற இறைவனை வாழ்த்துகிறேன்!!!

தண்ணி, தம்மு அம்மு(பெண்கள்) என்று சுற்றும் மாணவர்கள் மத்தியில் இது போன்ற மாணவர்களை பார்க்கும் போது,

தன்னம்பிக்கை என்றால் என்ன என்று உணரமுடிகிறது.

வெற்றி வாகை சூடுவாய் நண்பா!
வாழ்த்துகள்!!!

அந்த பையன வாழ்த்திறத்த விட்டுட்டு என்னமோ பண்ணிக்கிட்டு இருக்கு இந்த பிச்ச


பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர் Empty Re: பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum