Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am
» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
mini | ||||
balki1949 | ||||
Rathinavelu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Abiraj_26 | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
+4
இளமாறன்
Raja2009
எஸ்.அஸ்லி
சிவா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
சூரியனில் ஒரு வால் நட்சத்திரம் மோதியதால் தெறித்து வீழ்ந்த சிறிய சூரியத்துண்டே இந்த உலகம் என்று கூறப்படுகின்றது. சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து உடைந்து வீழ்ந்த துண்டாக இருப்பதால் உலகம் அக்கினிக் கோளமாகவே இருந்தது.பன்நெடுங்காலமாகச் சோனாமாரியாகப் பெய்த தொடர்மழையால் பூமியின் மேலோடு ஆறிக்குளிர்ந்ததால் புல், பூண்டு, கொடி, செடி, மரம், ஊர்வன, பறப்பன, நடப்பன என உயிர்கைகள் தோன்றின.மனிதன் கடைசியாகவே இந்த உலகத்துக்கு வந்தான். மனிதன் இந்த உலகத்துக்கு மிகப்பிந்தி வந்த போதிலும், தனக்கு விளங்காத புதிராக இருந்தவைகளை தன்னிடம் உள்ள ஆராயும் விசேஷ அறிவைக்கொண்டு ஆராய்ந்து அறிந்து கொண்டான்.வாழும் பூமி பார்வைக்குத் தட்டைபோல் தெரிகிறதே. இதைத்தன் ஆராயும் அறிவைக் கொண்டும் பின் வந்த விஞ்ஞானத்தின் துணை கொண்டும் ஆராய்ந்து பூமி தட்டை இல்லை. கோளவடிவானது என்று கண்டறிந்தான்.
இன்னொரு பெரிய சந்தேகம். ஒளி பாய்ச்சி உலகைப்பகலாக்கும் சூரியன், காலையில் கிழக்கே உதித்துப் பகல் முழுவதும் வானவீதியில் பிரயாணம் செய்து மேற்கில் அஸ்தமிக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தது பிழையானது. வெய்யோன் ஒரேயிடத்தில் கல்லுப்பிள்ளையார் மாதிரி அசையாமல் இருக்க நாம் வாழும் பூமியும் ஏனைய கிரகங்களும் தான் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.வைத்தியத்துறையில் நவீன விஞ்ஞானம் புகுந்து நிகழ்த்தியுள்ள வியத்தகு சாதனைகளைக் கண்டு பூரித்த மனிதன் காலம் காலமாகத்தன் மனத்தை அரித்துக்கொண்டிருக்கும் மனிதன் இறந்த பின் என்ன நிலை அடைகிறான்? என்ற கேள்விக்கு விடைகண்டு பிடித்துவிடல் என்று எண்ணினான். முயன்றான் முடியவில்லை!எல்லாத்துறைகளிலும் ஒளியூட்டிப் பிரகாசிக்கச் செய்யும் விஞ்ஞானம், மனிதன் மிகவும் விரும்பும் இறந்த பின் மனிதர் நிலை என்ன என்பதை ஆராய முன்வருவதாக இல்லை. கம்பியூட்டர், இன்டெர்நெட் என்று மேலும் மேலும் சொகுசு சாதனங்களைக் கண்டறியவே ஆற்றலைச் செலவிட்டு வருகிறது.
இன்னொரு பெரிய சந்தேகம். ஒளி பாய்ச்சி உலகைப்பகலாக்கும் சூரியன், காலையில் கிழக்கே உதித்துப் பகல் முழுவதும் வானவீதியில் பிரயாணம் செய்து மேற்கில் அஸ்தமிக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தது பிழையானது. வெய்யோன் ஒரேயிடத்தில் கல்லுப்பிள்ளையார் மாதிரி அசையாமல் இருக்க நாம் வாழும் பூமியும் ஏனைய கிரகங்களும் தான் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.வைத்தியத்துறையில் நவீன விஞ்ஞானம் புகுந்து நிகழ்த்தியுள்ள வியத்தகு சாதனைகளைக் கண்டு பூரித்த மனிதன் காலம் காலமாகத்தன் மனத்தை அரித்துக்கொண்டிருக்கும் மனிதன் இறந்த பின் என்ன நிலை அடைகிறான்? என்ற கேள்விக்கு விடைகண்டு பிடித்துவிடல் என்று எண்ணினான். முயன்றான் முடியவில்லை!எல்லாத்துறைகளிலும் ஒளியூட்டிப் பிரகாசிக்கச் செய்யும் விஞ்ஞானம், மனிதன் மிகவும் விரும்பும் இறந்த பின் மனிதர் நிலை என்ன என்பதை ஆராய முன்வருவதாக இல்லை. கம்பியூட்டர், இன்டெர்நெட் என்று மேலும் மேலும் சொகுசு சாதனங்களைக் கண்டறியவே ஆற்றலைச் செலவிட்டு வருகிறது.
Last edited by சிவா on Wed Mar 24, 2010 1:25 am; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
சமயக் கருத்துக்கள்
உலகில் நடமாடித் திரியும் மனிதன் இறந்தால் உயிர் என்னவாகும்? எங்கே போகும் என்பது ஆராய்வுக்குரியதே. பாரப் பொருள்கள் இந்த மண்ணில் கிடக்க கடதாசி, பஞ்சு, புகை போன்ற இலேசானவைகள் ஆகாயத்தை நோக்கி மேலே மேலே உயர்ந்து செல்வதையே காண்கிறோம்.இந்த வகையில் பார உடலை விட்டு வெளியேறிய இலேசான உயிர் ஆகாயத்தை நோக்கியே செல்லும் என்று காலம், காலமாக நம்பப்பட்டு வருகிறது.மனிதன் இறந்தபின் வானலோகத்திலுள்ள நீதி தேவன் முன்கொண்டு போய் நிறுத்தப்பட்டு, விசாரித்து இருக்கும் புண்ணிய - பாப நிலைகளுக்கேற்ப சுவர்க்கம், நரகங்களை அனுபவித்து மிஞ்சும் இருவினைகளுக்கமைய அரசனாகவோ ஆண்டியாகவோ இந்த மண்ணுலகில் பிறக் நேரும் என்று சமயங்கள் கூறுகின்றன.
இற்றைக்கு நாலாயிரம் வருட காலப்பகுதியில் எகிப்தில் மாபெரும் பேரரசை நிறுவிய மாவீரன் துத்தார்காமன், அவன் மகன் பெருமை மிகு ரமேசஸ் இவர்கள் இறந்தபோது இவர்கள் உடல்களை வாசனையூட்டிக்கெடாமல் பதனிடுவதற்கு ஏராளமான பொருள் செலவிடப்பட்டதுடன் இரவு பகல் என்றில்லாமல் அறிஞர்களும் நிபுணர்களும் கடுமையாக உழைத்தனர்.சிதைந்து அழியும் உடல்களுக்கு இவ்வளவு செலவு, கடுமு; முயற்சியும் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, ஹ{ரோ டெட்டல் என்ற எகிப்திய ஞானி ~~இறந்த ஒவ்வொரு உயிரும் ஓரிசிஸ் என்ற கடவுள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு சுவர்க்கம், நரகங்களை அனுபவித்து தங்கள உடல்களுக்குள் மிண்டும் புகுந்து இன்பங்களை நுகரும் சந்தர்ப்பங்கள் வரலாம் என்றே உடல்களைப் பாதுகாக்கிறோம்|| என்றனராம்.இறந்தாலும் உயிர்த்து எழுந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்து வந்ததைப் ~பிரமிட்டுகள்| எனும் கூராம் கோபுர சவ அடக்கங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
உலகில் நடமாடித் திரியும் மனிதன் இறந்தால் உயிர் என்னவாகும்? எங்கே போகும் என்பது ஆராய்வுக்குரியதே. பாரப் பொருள்கள் இந்த மண்ணில் கிடக்க கடதாசி, பஞ்சு, புகை போன்ற இலேசானவைகள் ஆகாயத்தை நோக்கி மேலே மேலே உயர்ந்து செல்வதையே காண்கிறோம்.இந்த வகையில் பார உடலை விட்டு வெளியேறிய இலேசான உயிர் ஆகாயத்தை நோக்கியே செல்லும் என்று காலம், காலமாக நம்பப்பட்டு வருகிறது.மனிதன் இறந்தபின் வானலோகத்திலுள்ள நீதி தேவன் முன்கொண்டு போய் நிறுத்தப்பட்டு, விசாரித்து இருக்கும் புண்ணிய - பாப நிலைகளுக்கேற்ப சுவர்க்கம், நரகங்களை அனுபவித்து மிஞ்சும் இருவினைகளுக்கமைய அரசனாகவோ ஆண்டியாகவோ இந்த மண்ணுலகில் பிறக் நேரும் என்று சமயங்கள் கூறுகின்றன.
இற்றைக்கு நாலாயிரம் வருட காலப்பகுதியில் எகிப்தில் மாபெரும் பேரரசை நிறுவிய மாவீரன் துத்தார்காமன், அவன் மகன் பெருமை மிகு ரமேசஸ் இவர்கள் இறந்தபோது இவர்கள் உடல்களை வாசனையூட்டிக்கெடாமல் பதனிடுவதற்கு ஏராளமான பொருள் செலவிடப்பட்டதுடன் இரவு பகல் என்றில்லாமல் அறிஞர்களும் நிபுணர்களும் கடுமையாக உழைத்தனர்.சிதைந்து அழியும் உடல்களுக்கு இவ்வளவு செலவு, கடுமு; முயற்சியும் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, ஹ{ரோ டெட்டல் என்ற எகிப்திய ஞானி ~~இறந்த ஒவ்வொரு உயிரும் ஓரிசிஸ் என்ற கடவுள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு சுவர்க்கம், நரகங்களை அனுபவித்து தங்கள உடல்களுக்குள் மிண்டும் புகுந்து இன்பங்களை நுகரும் சந்தர்ப்பங்கள் வரலாம் என்றே உடல்களைப் பாதுகாக்கிறோம்|| என்றனராம்.இறந்தாலும் உயிர்த்து எழுந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்து வந்ததைப் ~பிரமிட்டுகள்| எனும் கூராம் கோபுர சவ அடக்கங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
இறந்த பின் மனிதர்கள் அடையும் நிலை
பன்மொழிப் பேரறிஞர் மறைமலை அடிகள், இறந்தபின் மனித உயிர்கள் அடையும் நிலை என்ற தலைப்பிட்டு ஒரு நூல் எழுதி இருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உள்ளதைச் சுருக்கி இங்கே தருகிறேன்.
அமெரிக்காவில் யூலியா - எல்லன் என்ற இரு பெண்கள் சினேகிதிகளாக இருந்து வந்தனர். நோய் கண்டு யூலியா இறந்துபோனாள். சவ அடக்கம் முடிந்த மறுநாள் எல்லன் படுக்கையருகே யூலியா சிரித்துக்கொண்டு நிற்பதைக் கண்டு பயந்தாள். தோழியின் கனவு தொடர்ந்ததால் அங்கே இருக்கப்பயந்து, இங்கிலாந்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றாள். அங்கேயும் இக்கனவு வந்தது.ஒரு பத்திரிகைஆசிரியர் இறந்தவர்களுடன் பேசுவதில் வல்லவர். இறந்தவர்களுடன் பேசும்பொழுதே எல்லாவற்றையும் எழுதும் ஆற்றலுள்ளவர். எல்லன் அந்த ஆசிரியரிடம் போய் தனக்கு நேரும் எல்லாவற்றையும் கூறினார்.அந்தப்பெண் உன்னிடம் ஏதோ கதைக்க விரும்புகிறாள். என்று சொன்ன அவர் யூலியாவுடன் கதைக்க எல்லா ஒழுங்குகளும் செய்து, அவளைக் கூப்பிட்டார். அவள் வந்து தோழி எலலனுடன் கதைத்தாள். எலலாவற்றையும் ஆசிரியரின் கை எழுதியது.
எல்லன்! நான் இறந்துவிட்டேன். என் பிரேத உடலைச் சுற்றி இருக்கும் நீங்கள் என் பரிவைப் பற்றிக் கதைக்கிறீர்கள். அழுகிறீர்கள். நானோ வீட்டு முகட்டுக்குச் சமீபமாக மிதந்து கொண்டிருக்கிறேன். உன்னோடு பேசவிரும்புகிறேன். முடியவில்லை.வெள்ளை உடை அணிந்த ஒருவர் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என் தோளில் தொட்டு, ~போவோம்| என்று சொல்வதுபோல் இருந்தது. வீட்டின் உள்ளில் இருந்து முற்றத்துக்கு வந்தோம். அங்குள்ள ஒழுங்கையின் வேலிக்கட்டைகளி; முன் இறந்த என் எறவினர் பலர் இருக்கக்கண்டேன்.நாங்கள் மேலே, மேலே உயர்ந்து கருமையாக இருக்கும் வானத்துக்கு வந்து காற்றையும் விட வேகமாகச் செல்லத் தொடங்கினோம். எத்திசை சென்றோம் என்று என்னால் சொல்ல முடியவில்லை. பல உலகங்களை கண நேரத்தில் கடந்து வந்திருப்போம் என்று எண்ணுகிறேன்.ஒரு மாபெரும் சக்திகூடிய வேகத்தில் இழுத்துச் செல்வது போல இருந்தது. கருமையான பலர் குப்புறக்கிடந்து நழுவிச் செல்வதைக் கண்டேன். அவர்கள் யார் என்று யாரிடம் கேட்டுத் தொநிது கொள்வது? என்னுடன் வருவது என்னைப்போல் ஒரு மனித உயிரா? இல்லையா என்று கூடத்தெரிந்துகொள்ள முடியவில்லை. அதன் பக்கம் பார்க்கவே பயமாக இருந்தது. ஒரு ஊமை போலவே வந்தது.
நாங்கள் மின்னல் வேகத்தில் சென்று கொண்டுதான இருந்தோம். அது பெரும் வெளி. இது ஒரு பெரிய நகரமா என்று என்னால் சொல்லமுடியவில்லை. அழகான வீடு. இதுதான் நான் இருக்கவேண்டிய வீடு என்று உணர்கிறேன்.இறந்ததால் எல்லன் நான் ஒரு கடுமையையும் காணவில்லை மறை மலை அடிகள் எழுதிய நூலில் யூல்யா கூறுவதைப் பார்த்தால், இறப்பைப் பற்றி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஊரும் வீடும் இருக்கிறது.இருண்ட குகைக்குள்ளால் செல்வதுபோல்...
இறந்தவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதைக் கண்டறிய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்கே இருந்து இந்த ஆராய்ச்சியைத் தொடங்குவது? ஒரு தரம் இறந்த உயர்கள் செல்லும் உலகத்துக்குச் சென்று இந்த மண்ணுலகிற்குத் திரும்பி வரமுடியுமானால் எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்கிவிடலாம்.மனிதர்கள் வாழும் இந்த உலகிற்கும், இறந்த உயிர்கள் போகும் அவ்வுலகுக்கும் இடையே ஒரு மாயத்திரைபோட்டு மறைத்து வைத்திருக்கிறதே, அதனால் வைத்திய நிபுணர்க்ள, வேதியல் விற்பன்னர்கள், டாக்டர்கள் இவர் இறந்துவிட்டார் என்று உத்தியோகபூர்வமாக ஊர்ஜிதம் செய்த நோயாளர், பின்பு அபூர்வமாகப் பிழைத்தெழுந்தவர்களை விசாரித்து, ஆராய்ந்து, இறப்பவர்கள் என்ன ஆகிறார்கள்? அவர்களின் உயரிகள் போகும் உலகங்களில் இந்த மண்ணுலகம் போல் ஊர், வீடுகள் உண்டா? என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பன்மொழிப் பேரறிஞர் மறைமலை அடிகள், இறந்தபின் மனித உயிர்கள் அடையும் நிலை என்ற தலைப்பிட்டு ஒரு நூல் எழுதி இருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உள்ளதைச் சுருக்கி இங்கே தருகிறேன்.
அமெரிக்காவில் யூலியா - எல்லன் என்ற இரு பெண்கள் சினேகிதிகளாக இருந்து வந்தனர். நோய் கண்டு யூலியா இறந்துபோனாள். சவ அடக்கம் முடிந்த மறுநாள் எல்லன் படுக்கையருகே யூலியா சிரித்துக்கொண்டு நிற்பதைக் கண்டு பயந்தாள். தோழியின் கனவு தொடர்ந்ததால் அங்கே இருக்கப்பயந்து, இங்கிலாந்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றாள். அங்கேயும் இக்கனவு வந்தது.ஒரு பத்திரிகைஆசிரியர் இறந்தவர்களுடன் பேசுவதில் வல்லவர். இறந்தவர்களுடன் பேசும்பொழுதே எல்லாவற்றையும் எழுதும் ஆற்றலுள்ளவர். எல்லன் அந்த ஆசிரியரிடம் போய் தனக்கு நேரும் எல்லாவற்றையும் கூறினார்.அந்தப்பெண் உன்னிடம் ஏதோ கதைக்க விரும்புகிறாள். என்று சொன்ன அவர் யூலியாவுடன் கதைக்க எல்லா ஒழுங்குகளும் செய்து, அவளைக் கூப்பிட்டார். அவள் வந்து தோழி எலலனுடன் கதைத்தாள். எலலாவற்றையும் ஆசிரியரின் கை எழுதியது.
எல்லன்! நான் இறந்துவிட்டேன். என் பிரேத உடலைச் சுற்றி இருக்கும் நீங்கள் என் பரிவைப் பற்றிக் கதைக்கிறீர்கள். அழுகிறீர்கள். நானோ வீட்டு முகட்டுக்குச் சமீபமாக மிதந்து கொண்டிருக்கிறேன். உன்னோடு பேசவிரும்புகிறேன். முடியவில்லை.வெள்ளை உடை அணிந்த ஒருவர் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என் தோளில் தொட்டு, ~போவோம்| என்று சொல்வதுபோல் இருந்தது. வீட்டின் உள்ளில் இருந்து முற்றத்துக்கு வந்தோம். அங்குள்ள ஒழுங்கையின் வேலிக்கட்டைகளி; முன் இறந்த என் எறவினர் பலர் இருக்கக்கண்டேன்.நாங்கள் மேலே, மேலே உயர்ந்து கருமையாக இருக்கும் வானத்துக்கு வந்து காற்றையும் விட வேகமாகச் செல்லத் தொடங்கினோம். எத்திசை சென்றோம் என்று என்னால் சொல்ல முடியவில்லை. பல உலகங்களை கண நேரத்தில் கடந்து வந்திருப்போம் என்று எண்ணுகிறேன்.ஒரு மாபெரும் சக்திகூடிய வேகத்தில் இழுத்துச் செல்வது போல இருந்தது. கருமையான பலர் குப்புறக்கிடந்து நழுவிச் செல்வதைக் கண்டேன். அவர்கள் யார் என்று யாரிடம் கேட்டுத் தொநிது கொள்வது? என்னுடன் வருவது என்னைப்போல் ஒரு மனித உயிரா? இல்லையா என்று கூடத்தெரிந்துகொள்ள முடியவில்லை. அதன் பக்கம் பார்க்கவே பயமாக இருந்தது. ஒரு ஊமை போலவே வந்தது.
நாங்கள் மின்னல் வேகத்தில் சென்று கொண்டுதான இருந்தோம். அது பெரும் வெளி. இது ஒரு பெரிய நகரமா என்று என்னால் சொல்லமுடியவில்லை. அழகான வீடு. இதுதான் நான் இருக்கவேண்டிய வீடு என்று உணர்கிறேன்.இறந்ததால் எல்லன் நான் ஒரு கடுமையையும் காணவில்லை மறை மலை அடிகள் எழுதிய நூலில் யூல்யா கூறுவதைப் பார்த்தால், இறப்பைப் பற்றி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஊரும் வீடும் இருக்கிறது.இருண்ட குகைக்குள்ளால் செல்வதுபோல்...
இறந்தவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதைக் கண்டறிய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எங்கே இருந்து இந்த ஆராய்ச்சியைத் தொடங்குவது? ஒரு தரம் இறந்த உயர்கள் செல்லும் உலகத்துக்குச் சென்று இந்த மண்ணுலகிற்குத் திரும்பி வரமுடியுமானால் எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்கிவிடலாம்.மனிதர்கள் வாழும் இந்த உலகிற்கும், இறந்த உயிர்கள் போகும் அவ்வுலகுக்கும் இடையே ஒரு மாயத்திரைபோட்டு மறைத்து வைத்திருக்கிறதே, அதனால் வைத்திய நிபுணர்க்ள, வேதியல் விற்பன்னர்கள், டாக்டர்கள் இவர் இறந்துவிட்டார் என்று உத்தியோகபூர்வமாக ஊர்ஜிதம் செய்த நோயாளர், பின்பு அபூர்வமாகப் பிழைத்தெழுந்தவர்களை விசாரித்து, ஆராய்ந்து, இறப்பவர்கள் என்ன ஆகிறார்கள்? அவர்களின் உயரிகள் போகும் உலகங்களில் இந்த மண்ணுலகம் போல் ஊர், வீடுகள் உண்டா? என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
தஞ்சை மாவட்டத்தைப் பிறப்பிடமாக உடையவர், பலதுறைக் கல்வி கற்றலில் பட்டங்கள் பல பெற்றவர். இன்னும் அறிவை விசாலமாக்கிக்கொள்ள அமெரிக்க சென்று விஞ்ஞான வேதியல் அறிவாளியாகி நாடு திரும்பிய டாக்கடர் எம்.எஸ்.உதயமூர்த்தி, இறந்தவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதைக் கண்டறிய, செத்துப்பிழைத்தவர்களை விசாரித்து ஆராய்ந்து வருவதுடன், ஆத்மதரிசனம் என்றொரு நூலையும் எழுதி உள்ளார்.இவர் விசாரித்தவர்களில் பெரும்பாலோர் ஒரு இருண்ட குகை;குள்ளால் செல்வதுபோல் இருந்ததாகவும், முடிவில் கண்ட ஆனந்த மயமான பேரொளியை விட்டுப்பிரிய மனமில்லாமல் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
செத்துப்பிழைத்தவர்கள் கூறிய பேரோளி பற்றி டாக்டர் பின்வருமாறு கூறுகிறார்.இராமலிங்க வள்ளலார் கண்ட அருட்சோதியோ, காலம் எல்லாம் உச்சினியில் இருந்து அரசோச்சிய பர்த்துரு கிரி மகாராசா பட்டினத்தனடிகளைக் கண்டதும், அரசைத் தூக்கியெறிந்துவிட்டு அடிகளின் சீடராகி ஆத்மஜோதியை நெற்றிக்கு நேர்காணுவது எக்காலம் என்று ஏங்குகிறாரே, அமராபதிக்குப் போனாலும்அமெரிக்காவுக்குப் போனாலும் ஆன்மிகத்துக்கு வழிகாட்டும் இந்தியத் திருநாட்டின்மகான்களை எண்ணி, எண்ணியே என்மனம் பெருமிதம் அடைகிறது என்கிறார்.
புது உலகமான அமெரிக்காவில் பிறந்து, புதியவைகளைக் கண்டறியும் ஆராயும், ஆர்வமுள்ள வைத்திய நிபுணர் மூடி மரணம் என்ற மறைப்புக்குப் பின்னால் இறந்தவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதைக் கண்டறிய, மரணித்துட் பிழைத்தவர்களை விசாரித்து வந்தார்.இவரின் ஆராய்வால் கிடைத்தவை டாக்டர் உதயமூர்த்திக்கு கிடைத்தவையையே ஒத்திருந்தன. ஒருவர் கூறினார்:-
ஒரு இருண்ட குகைக்குள்ளால் சென்றேன். அங்கு நான் கண்ட கருணைம்போல் விரிந்தது. என்வாழ்க்கையில் நடைபெற்ற துரும்புச் சம்பவங்களும் அதில் இருந்தன. வாழ்ந்தது போதுமா? இன்னும் ஏதேதோ பேசுவது போல் இருந்தது.இன்னும் உன் வாழ்க்கையை நன்றாகச் சீர் செய்துகொண்டு வா என்று பேரொளி கூறுவது போல் இருந்தது. கஷ்டப்பட்டுக் கண்ணைத்திறந்து பார்த்தேன். இந்தத் துயர்மிகுந்த உலகித்துக்கு வந்திருப்பதைக் கண்டேன் என்று கூறிஉள்ளார்.
செத்துப்பிழைத்தவர்கள் கூறிய பேரோளி பற்றி டாக்டர் பின்வருமாறு கூறுகிறார்.இராமலிங்க வள்ளலார் கண்ட அருட்சோதியோ, காலம் எல்லாம் உச்சினியில் இருந்து அரசோச்சிய பர்த்துரு கிரி மகாராசா பட்டினத்தனடிகளைக் கண்டதும், அரசைத் தூக்கியெறிந்துவிட்டு அடிகளின் சீடராகி ஆத்மஜோதியை நெற்றிக்கு நேர்காணுவது எக்காலம் என்று ஏங்குகிறாரே, அமராபதிக்குப் போனாலும்அமெரிக்காவுக்குப் போனாலும் ஆன்மிகத்துக்கு வழிகாட்டும் இந்தியத் திருநாட்டின்மகான்களை எண்ணி, எண்ணியே என்மனம் பெருமிதம் அடைகிறது என்கிறார்.
புது உலகமான அமெரிக்காவில் பிறந்து, புதியவைகளைக் கண்டறியும் ஆராயும், ஆர்வமுள்ள வைத்திய நிபுணர் மூடி மரணம் என்ற மறைப்புக்குப் பின்னால் இறந்தவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதைக் கண்டறிய, மரணித்துட் பிழைத்தவர்களை விசாரித்து வந்தார்.இவரின் ஆராய்வால் கிடைத்தவை டாக்டர் உதயமூர்த்திக்கு கிடைத்தவையையே ஒத்திருந்தன. ஒருவர் கூறினார்:-
ஒரு இருண்ட குகைக்குள்ளால் சென்றேன். அங்கு நான் கண்ட கருணைம்போல் விரிந்தது. என்வாழ்க்கையில் நடைபெற்ற துரும்புச் சம்பவங்களும் அதில் இருந்தன. வாழ்ந்தது போதுமா? இன்னும் ஏதேதோ பேசுவது போல் இருந்தது.இன்னும் உன் வாழ்க்கையை நன்றாகச் சீர் செய்துகொண்டு வா என்று பேரொளி கூறுவது போல் இருந்தது. கஷ்டப்பட்டுக் கண்ணைத்திறந்து பார்த்தேன். இந்தத் துயர்மிகுந்த உலகித்துக்கு வந்திருப்பதைக் கண்டேன் என்று கூறிஉள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
இன்னும் பல அறிஞர்கள் இந்த ஆராய்வில் இறங்கி உள்ளனர். எல்லோரும் ஒத்த முடிவுதான் ஏற்படும் போல் இருக்கிறது. இந்த மண்ணுலகில் மனிதர்கள் இருப்பதற்கு ஊர்கள், வீடுகள் இருப்பதுபோல் விண்ணுலகிலும் வசதிகள் உண்டா? என்பதை இதுவரை நடந்த ஆராய்வுகள் தெளிவுபடுத்வில்லை.
ஆயினும் மறை மலை அடிகள் எழுதிய மரணத்தின் பின் மனிதர் நிலை என்ற நூலில் யூலியாவுக்கு வானரோகத்தில் நல்ல வசதிகள் உடைய ஊரும், வீடும் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கின்றது. பொருளைக்கொண்டு வாழும் இந்த மண்ணுலகம் போல் மனிதர்களுக்கு அருளைக்கொண்டு வாழ வேண்டிய இன்னொரு அவ்வுலகமும் இருக்கிறது என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார்.இந்த இரு உலகங்கள் மட்டுமின்றி, ஈரேழு பதிநான்கு உலகங்கள் இருக்கின்றன என்று புராணங்கள் சுறுகின்றன.ஈரேழு புவனங்கள் படைத்தவன் என்று கண்ணனைப் போற்றும் ஒரு பாடல் கூறுகிறது.
உயர வானத்தில் கோடாக நட்சத்திரக் கூட்டங்கள் தோன்றும், ஆகாய கங்கை என்ற பால் வீதிக்கப்பால் கணக்கற்ற கூரியக்குடும்பங்கள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு சூரியக்குடும்பத்திலும் நாம் வாழும் உலகம் போல் உயிரினம் வாழும் உலகங்கள் இருக்கின்றன.அந்த மேலுலகங்களில் மனிதர்களை விடச் சக்தியும் அறிவும் மிகுந்த கருடர், காந்தருவர், கிம்புரடர், கினரர், வசுகள், அஸ்வினி தேவதைகள், கினனரர் வித்தியாதரர்கள் என எண்ணிறந்த தேவ இனங்கள் வாழுகின்றன.தேவ இனங்கள் வான ஊர்திகளில் அபூர்வமாக இந்த மண்ணுலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
இப்போது பறக்கும் தட்டுகளில் வருபவர்களும், வேற்றுக்கிரக வாசிகளே.பறக்கும் தட்டுக்கள் பற்றிய கதை நேற்று, இன்று ஏற்பட்ட கதையல்ல. பல்லாயிரம் வருட காலமாக வானில் மனிதனை விட அறிவும் திறனும் உள்ளவர்கள் வாழ்கின்றனர் என மக்கள் திடமாக நம்பி வந்தனர்.மேற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த டோகோ நாட்டை சேர்ந்தவர்களிடம் வான இயல் பற்றிய தகவல்களை எப்படி உங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது என்று கேட்டபோது, வானஊர்திகளில் வரும் வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து தான் தெரிந்து கொள்கிறோம் என்று கூறினார்களாம்.
ஆயினும் மறை மலை அடிகள் எழுதிய மரணத்தின் பின் மனிதர் நிலை என்ற நூலில் யூலியாவுக்கு வானரோகத்தில் நல்ல வசதிகள் உடைய ஊரும், வீடும் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கின்றது. பொருளைக்கொண்டு வாழும் இந்த மண்ணுலகம் போல் மனிதர்களுக்கு அருளைக்கொண்டு வாழ வேண்டிய இன்னொரு அவ்வுலகமும் இருக்கிறது என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார்.இந்த இரு உலகங்கள் மட்டுமின்றி, ஈரேழு பதிநான்கு உலகங்கள் இருக்கின்றன என்று புராணங்கள் சுறுகின்றன.ஈரேழு புவனங்கள் படைத்தவன் என்று கண்ணனைப் போற்றும் ஒரு பாடல் கூறுகிறது.
உயர வானத்தில் கோடாக நட்சத்திரக் கூட்டங்கள் தோன்றும், ஆகாய கங்கை என்ற பால் வீதிக்கப்பால் கணக்கற்ற கூரியக்குடும்பங்கள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு சூரியக்குடும்பத்திலும் நாம் வாழும் உலகம் போல் உயிரினம் வாழும் உலகங்கள் இருக்கின்றன.அந்த மேலுலகங்களில் மனிதர்களை விடச் சக்தியும் அறிவும் மிகுந்த கருடர், காந்தருவர், கிம்புரடர், கினரர், வசுகள், அஸ்வினி தேவதைகள், கினனரர் வித்தியாதரர்கள் என எண்ணிறந்த தேவ இனங்கள் வாழுகின்றன.தேவ இனங்கள் வான ஊர்திகளில் அபூர்வமாக இந்த மண்ணுலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
இப்போது பறக்கும் தட்டுகளில் வருபவர்களும், வேற்றுக்கிரக வாசிகளே.பறக்கும் தட்டுக்கள் பற்றிய கதை நேற்று, இன்று ஏற்பட்ட கதையல்ல. பல்லாயிரம் வருட காலமாக வானில் மனிதனை விட அறிவும் திறனும் உள்ளவர்கள் வாழ்கின்றனர் என மக்கள் திடமாக நம்பி வந்தனர்.மேற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த டோகோ நாட்டை சேர்ந்தவர்களிடம் வான இயல் பற்றிய தகவல்களை எப்படி உங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது என்று கேட்டபோது, வானஊர்திகளில் வரும் வேற்றுக்கிரக வாசிகளிடம் இருந்து தான் தெரிந்து கொள்கிறோம் என்று கூறினார்களாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
சிவா அவர்களூக்கு,
அரிய செய்திகள். நன்றிகள் பல.
திரு கோஷ் எழுதிய "Life after death" என்ற புத்தகம் தங்களிடம் இருக்கிறதா? என்னுடைய ஆசிரியரிடத்தில் இருந்ததை முன்னம் பார்த்திருக்கிறேன்.
ராஜா
அரிய செய்திகள். நன்றிகள் பல.
திரு கோஷ் எழுதிய "Life after death" என்ற புத்தகம் தங்களிடம் இருக்கிறதா? என்னுடைய ஆசிரியரிடத்தில் இருந்ததை முன்னம் பார்த்திருக்கிறேன்.
ராஜா
Raja2009- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
Raja2009 wrote:சிவா அவர்களூக்கு,
அரிய செய்திகள். நன்றிகள் பல.
திரு கோஷ் எழுதிய "Life after death" என்ற புத்தகம் தங்களிடம் இருக்கிறதா? என்னுடைய ஆசிரியரிடத்தில் இருந்ததை முன்னம் பார்த்திருக்கிறேன்.
ராஜா
http://www.spiritwritings.com/LifeAfterDeathHyslop.pdf
இந்த புத்தகமா ராஜா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
இப்படி எல்லாம் வேற இருக்கா ? ஆமா எங்க போக போறோம் இறந்த பிறகு?
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இறப்பிற்குப் பின் உயிரின் நிலை என்ன?
இவ்வளவு இருக்கா
தர்ஷினி- இளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இறந்தபின் உயிரின் நிலை
» இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?
» தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம்: போருக்கு பின் தமிழர்களின் நிலை குறித்து அதிர்ச்சி தகவல்
» அதிமுகவின் நிலை என்ன?
» மைக்ரோசாப்டின் தற்போதைய நிலை என்ன ???
» இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?
» தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம்: போருக்கு பின் தமிழர்களின் நிலை குறித்து அதிர்ச்சி தகவல்
» அதிமுகவின் நிலை என்ன?
» மைக்ரோசாப்டின் தற்போதைய நிலை என்ன ???
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|