Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............
4 posters
Page 1 of 1
விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............
விஜய் டீ வி யில் நேற்று முதல் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகவுள்ள லிட்டில் ஜீனியஸ் தொடரில் முதல் வாரமே ஒரு அதிர்ச்சி...தமிழ் நாட்டில் இத்தனை அரசு பள்ளிகள்(ஆதாரம்:http://www.schools.tn.nic.in/SS/SS1to5.pdf)இருந்தும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இருந்து மட்டுமே குழந்தைகளை தேர்வு செய்து கேள்விகள் அனைத்தையும் ஆங்கிலத்திலேயே கேட்டு கடுப்படிக்கிறார்கள்.....இதை பற்றிய தங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிரேன்.
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............
இது வேதனையான விடயம் மட்டுமல்ல வெட்கப்பட வேண்டிய விடயம்.
நம் முதல்வரோ மேடைக்கு சென்றால் அகநானூறு புறநாறு என்று பேசுகிறார்,
வீட்டிற்கு வந்தால் முன்னூறு நானூறு (சரக்கு) போட்டுவிட்டு, மானாட மயிலாட பார்க்கிறார்.
உண்மையில் தமிழ் பற்று உள்ளவர் என்றால் அவரது குடும்ப தொலைக்காட்ச்சியே இப்படி செய்யுமா?
வேதனை..ச்சே. நம் கிராமத்து பிள்ளைகளா, அரசு பள்ளியிலே படிக்கும் மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............
திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............
mmani15646 wrote:திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.
மெட்ரிகுலேசன் பள்ளிகள் வருவதற்கும், பல தனியார் கல்லூரிகள் வருவதற்கும் காரணம் இந்த கருணாநிதி தான்.அவர் என்னிடம் வராதீர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கல்விக்கட்டணம்
வசூளித்துக்கொல்லுங்கள் என்று தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உரிமை வழங்கி
விட்டார்.
பணக்கார & நடுத்தர வர்க்கத்தினர் (எப்படியோ பாடுபட்டு) மெட்ரிகுலேசன்
பள்ளிகளை தங்களது பிள்ளைகளை சேர்க்கின்றனர். ஆனால் விவசாயிகள்,
கூலித்தொழிலாளர்கள் (ஏழைகள்) அரசுப்பள்ளிகளை தங்களது பிள்ளைகளை
சேர்க்கின்றனர்.
அரசு பள்ளிகளின் நிலை, கல்வித்தரம் என்ன என்று நான் சொல்லத்தேவை,உங்களுக்கே தெரியும். காமராஜர் போன்று இன்னொரு மாமனிதர் வரவேண்டும்...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............
mmani15646 wrote:திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.
நானும் ஒரு அரசு பள்ளி மாணவன் ..தற்போது பொறியாளராக உள்ள்ளேன்............
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............
asokan80 wrote:mmani15646 wrote:திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.
நானும் ஒரு அரசு பள்ளி மாணவன் ..தற்போது பொறியாளராக உள்ள்ளேன்............
வடை, அப்பளம், முறுக்கு எல்லாம் பொறிப்பீர்களா??
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............
என் நண்பர் ஒருவரின் குமுறல்.......
தேர்ச்சி கண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்து கல்லூரிகளில் சேர தேடி அலைகிறார்கள். தோல்வி கண்டவர்கள் துவண்டுபோய் வேதனை அடைகிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி அளிக்கும் "மகத்தான" பணியை ஆற்றும் கடமையுள்ள தமிழக அரசு மகிழவும் வேண்டாம்; வேதனைப்படவும் தேவையில்லை. மாறாக வெட்கப்பட வேண்டும்.
இது காட்டமான விமர்சனமாகக் கூட இருக்கலாம். வெளிப்படையான மனநிலையில் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் சென்ற ஆண்டு மாநில அளவில் முதல் மூன்று இடத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே.
ஆக, முதல் மூன்று இடப் பட்டியலில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இடம்பெறவில்லை. ஏன்? இதற்கு யார் பொறுப்பேற்பது? யார் குற்றவாளி? இந்த நிலைக்கு முதலில் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இரண்டாவதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
மாணவர்களின் நிலைக்கு ஆசிரியர்களையும் அரசையும் குற்றம் சாற்றுவது எந்தவிதத்தில் நியாயம் என்று வினவலாம்.
என் நினைவில் பதிந்த நிகழ்வை உங்களுக்குச் சொல்கிறேன். அரசு பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர், அவரின் மகனைத் தனியாருக்குச் சொந்தமான மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்திருந்தார். அவரிடம் பேசும்போது, 'அரசு பள்ளியில் பணியாற்றும் நீங்கள், உங்கள் மகனை அதே பள்ளியில் சேர்த்திருக்கலாமே' என்றேன். அதற்கு ஆசிரியர் சொன்ன விடை, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 'அரசு பள்ளிக்கூடத்தில் நண்பகல்வேளை உணவு உண்ணும் போது பன்றிகளும் மாணவர்களும் ஒன்றாக இருக்கும் நிலை உள்ளது. அந்தப் பள்ளியில் என் மகனைச் சேர்த்தால், நான் சரியாகப் படிக்காததற்கு என் அப்பாதான் காரணம் என்று எதிர்காலத்தில் அவன் சொல்வான், அப்பழியை நான் ஏற்க விரும்பவில்லை' என்றார்.
ஆசிரியர்கள் உட்படப் படித்தவர்களின் இந்த நிலைதான். இந்த நிலையை மாற்ற முயற்சிக்காது வெறுமனே பேசும் இந்த மாதிரி ஆட்களால்தான், 12-ஆம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் ஒரு இடத்தைக்கூட அரசு பள்ளி மாணவர்கள் பெறாததற்குக் காரணம்.
'மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்கள் இடம்பெறவில்லையே' என்று ஆசிரியர்களிடம் கேட்டால், 'அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி, அதுங்க திருந்தாதுங்க, யாருக்கு என்ன விதியோ அதுதான் நடக்கும்' என்று சொல்வார்கள். மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தரும் பொறுப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்களைப்பற்றி நிலையான ஒரு எண்ணத்தை வைத்திருக்கின்றனர். இந்த மனநிலையில் மாற்றம் வராதவரை மாநில அளவில், மாவட்ட அளவிலான பட்டியலில் ஒரு மாணவரின் பெயர்கூட சேராது.
தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் இரண்டு, மூன்று மடங்கு அதிகம்.. புதிதாக எதையும் படிக்காமல் எப்போதோ படித்த பாடத்தை மனப்பாடமாக வகுப்பறையில் ஒப்பித்துவிட்டு நேரத்தை கழிக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அக்கறையின்றி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் போக்கில் மாற்றம் வரவேண்டும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் ஏழைகள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். படிக்காமல் வெயிலிலும் மழையிலும் உழைக்கும் நம் வாழ்க்கை குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்று பெற்றோர்கல் அனைவரும் எண்ணுகின்றனர். படிக்காத வறியவர்களின் குழந்தைகள், பள்ளியில் சேர்க்கப்படும்போதே ஏ, பி, சி, டி... சொல்லிக்கொண்டே சேர்வார்களா? இருக்கவே இருக்காது. எதுவும் தெரியாமல் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் கற்பித்து வல்லவர்களாக மாற்றவேண்டும். அதைவிட்டுவிட்டுப் படிக்காத வறியவர்களின் பிள்ளை வளர்ந்த சூழல்தான் சரியில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாற்றுவது எப்படி நியாயமாக இருக்கும்.
தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அதனை ஏற்று நடத்துகிறவர்களுக்கு எப்படியாவது பாடுபட்டு வெற்றியை அடைய வேண்டும் என்று உள்ள உறுதியுடன் வேலை செய்கின்றனர். அந்த இலக்கையும் அடைகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கூறும்போது, சென்ற கல்வியாண்டில் நான் கற்பிக்கும் பாடத்தில் நல்ல தேர்ச்சி காட்டினால் மட்டுமே, ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு தேர்வு முடிவு எப்படி இருக்குமோ? அச்சமாக இருக்கிறது என்று சொன்னார்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த அச்சம் சிறிதும் கிடையாது. காரணம், மாணவர்கள் தேர்ச்சி அடைந்தால் என்ன, தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன.. எப்படி இருந்தாலும், அரசு அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கி வருகிறது.
பள்ளிக்கு வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி, பாடம் கற்பித்தாலும் சரி, கற்பிக்காமல் இருந்தாலும் சரி, மாதந்தோறும் ஊதியம் மட்டும் வாங்கிவிடலாம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு பெறலாம். தனியார் பள்ளி நிருவாகத்தின் கட்டளைக்கு அஞ்சி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் தனியார் ஆசிரியர்களிடம் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பாடம் கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரும். படித்ததற்கு ஊதியம் தருகிறார்கள்.. அந்தப்பணத்தைத் தனியார் பள்ளிகளுக்குக் கட்டணமாகச் செலுத்தி நம் பிள்ளைகளுக்கு மட்டும் தரமான கல்வி கிடைக்கச் செய்கிறோம் என்பதான போக்கை அரசு பள்ளி ஆசிரியர்கள் மாற்றிக்கொள்வார்கள்.
ஆசிரியர்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு கடுமையான சில முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும். அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. அரசு பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எண்ணம்.
அடுத்து அரசின் பொறுப்பு என்ன? தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஏறக்குறைய ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இவ்வளவு தொகை செலவிட்டும் ஒருவரைக்கூட மாநிலப் பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை. அரசு நிதி ஓதுக்கிச் செலவிட்டுத் திட்டங்களைத் தீட்டினால் மட்டும் போதாது. அந்தத் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே இருக்கும் இடைவெளியையும் அரசு போக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஒரு கல்வியாண்டின் பாதி ஆண்டுவரை மாணவர்களின் தரத்தை அரசு மதிப்பிட்டு, பெரும் வெற்றிக்கான இலக்கை அடைவதற்குத் தடையாக இருப்பவர்கள் ஆசிரியர்களா? அல்லது மாணவர்களா? என்பதை அறிய வேண்டும். கல்வியில் மாணவர்கள் பின்தங்கியுள்ளதற்கு மாணவர்கள் காரணம் என்றால் அதனைத் தீர்ப்பதற்குப் புதிய திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள்தான் காரணம் என்றால் அத்தகையை ஆசிரியர்களைக் களையெடுக்க வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்தால் மாணவர்களின் கல்வி மேம்படும்.
இல்லையெனில் தனியாருடன் போட்டிப்போடமுடியாத நிலையில் அரசு பள்ளிகள் இருந்துகொண்டேதான் இருக்கும். குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடையும் மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் அரசு உதவித்தொகை பெறுகிறவர்களாக மட்டுமே இருப்பார்கள்.
முத்தாய்ப்பாக ஒன்று சொல்ல வேண்டுமெனில் அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்திவரும் சமச்சீர்கல்வியைத் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும்.
இல்லையெனில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களுக்கான பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் இல்லை என்ற நிலையை எண்ணித் தமிழக அரசு வெட்கப்பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும்.
தேர்ச்சி கண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்து கல்லூரிகளில் சேர தேடி அலைகிறார்கள். தோல்வி கண்டவர்கள் துவண்டுபோய் வேதனை அடைகிறார்கள். ஆனால், தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குக் கல்வி அளிக்கும் "மகத்தான" பணியை ஆற்றும் கடமையுள்ள தமிழக அரசு மகிழவும் வேண்டாம்; வேதனைப்படவும் தேவையில்லை. மாறாக வெட்கப்பட வேண்டும்.
இது காட்டமான விமர்சனமாகக் கூட இருக்கலாம். வெளிப்படையான மனநிலையில் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் சென்ற ஆண்டு மாநில அளவில் முதல் மூன்று இடத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளே.
ஆக, முதல் மூன்று இடப் பட்டியலில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இடம்பெறவில்லை. ஏன்? இதற்கு யார் பொறுப்பேற்பது? யார் குற்றவாளி? இந்த நிலைக்கு முதலில் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இரண்டாவதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொறுப்பேற்க வேண்டும்.
மாணவர்களின் நிலைக்கு ஆசிரியர்களையும் அரசையும் குற்றம் சாற்றுவது எந்தவிதத்தில் நியாயம் என்று வினவலாம்.
என் நினைவில் பதிந்த நிகழ்வை உங்களுக்குச் சொல்கிறேன். அரசு பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர், அவரின் மகனைத் தனியாருக்குச் சொந்தமான மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்திருந்தார். அவரிடம் பேசும்போது, 'அரசு பள்ளியில் பணியாற்றும் நீங்கள், உங்கள் மகனை அதே பள்ளியில் சேர்த்திருக்கலாமே' என்றேன். அதற்கு ஆசிரியர் சொன்ன விடை, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 'அரசு பள்ளிக்கூடத்தில் நண்பகல்வேளை உணவு உண்ணும் போது பன்றிகளும் மாணவர்களும் ஒன்றாக இருக்கும் நிலை உள்ளது. அந்தப் பள்ளியில் என் மகனைச் சேர்த்தால், நான் சரியாகப் படிக்காததற்கு என் அப்பாதான் காரணம் என்று எதிர்காலத்தில் அவன் சொல்வான், அப்பழியை நான் ஏற்க விரும்பவில்லை' என்றார்.
ஆசிரியர்கள் உட்படப் படித்தவர்களின் இந்த நிலைதான். இந்த நிலையை மாற்ற முயற்சிக்காது வெறுமனே பேசும் இந்த மாதிரி ஆட்களால்தான், 12-ஆம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் ஒரு இடத்தைக்கூட அரசு பள்ளி மாணவர்கள் பெறாததற்குக் காரணம்.
'மாநில அளவில் அரசு பள்ளி மாணவர்கள் இடம்பெறவில்லையே' என்று ஆசிரியர்களிடம் கேட்டால், 'அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி, அதுங்க திருந்தாதுங்க, யாருக்கு என்ன விதியோ அதுதான் நடக்கும்' என்று சொல்வார்கள். மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தரும் பொறுப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்களைப்பற்றி நிலையான ஒரு எண்ணத்தை வைத்திருக்கின்றனர். இந்த மனநிலையில் மாற்றம் வராதவரை மாநில அளவில், மாவட்ட அளவிலான பட்டியலில் ஒரு மாணவரின் பெயர்கூட சேராது.
தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் இரண்டு, மூன்று மடங்கு அதிகம்.. புதிதாக எதையும் படிக்காமல் எப்போதோ படித்த பாடத்தை மனப்பாடமாக வகுப்பறையில் ஒப்பித்துவிட்டு நேரத்தை கழிக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அக்கறையின்றி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் போக்கில் மாற்றம் வரவேண்டும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் ஏழைகள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். படிக்காமல் வெயிலிலும் மழையிலும் உழைக்கும் நம் வாழ்க்கை குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்று பெற்றோர்கல் அனைவரும் எண்ணுகின்றனர். படிக்காத வறியவர்களின் குழந்தைகள், பள்ளியில் சேர்க்கப்படும்போதே ஏ, பி, சி, டி... சொல்லிக்கொண்டே சேர்வார்களா? இருக்கவே இருக்காது. எதுவும் தெரியாமல் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் கற்பித்து வல்லவர்களாக மாற்றவேண்டும். அதைவிட்டுவிட்டுப் படிக்காத வறியவர்களின் பிள்ளை வளர்ந்த சூழல்தான் சரியில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாற்றுவது எப்படி நியாயமாக இருக்கும்.
தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அதனை ஏற்று நடத்துகிறவர்களுக்கு எப்படியாவது பாடுபட்டு வெற்றியை அடைய வேண்டும் என்று உள்ள உறுதியுடன் வேலை செய்கின்றனர். அந்த இலக்கையும் அடைகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் கூறும்போது, சென்ற கல்வியாண்டில் நான் கற்பிக்கும் பாடத்தில் நல்ல தேர்ச்சி காட்டினால் மட்டுமே, ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டு தேர்வு முடிவு எப்படி இருக்குமோ? அச்சமாக இருக்கிறது என்று சொன்னார்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த அச்சம் சிறிதும் கிடையாது. காரணம், மாணவர்கள் தேர்ச்சி அடைந்தால் என்ன, தேர்ச்சி பெறவில்லை என்றால் என்ன.. எப்படி இருந்தாலும், அரசு அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கி வருகிறது.
பள்ளிக்கு வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி, பாடம் கற்பித்தாலும் சரி, கற்பிக்காமல் இருந்தாலும் சரி, மாதந்தோறும் ஊதியம் மட்டும் வாங்கிவிடலாம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு பெறலாம். தனியார் பள்ளி நிருவாகத்தின் கட்டளைக்கு அஞ்சி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் தனியார் ஆசிரியர்களிடம் இருந்து அரசு பள்ளி ஆசிரியர்களும் பாடம் கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரும். படித்ததற்கு ஊதியம் தருகிறார்கள்.. அந்தப்பணத்தைத் தனியார் பள்ளிகளுக்குக் கட்டணமாகச் செலுத்தி நம் பிள்ளைகளுக்கு மட்டும் தரமான கல்வி கிடைக்கச் செய்கிறோம் என்பதான போக்கை அரசு பள்ளி ஆசிரியர்கள் மாற்றிக்கொள்வார்கள்.
ஆசிரியர்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு கடுமையான சில முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும். அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. அரசு பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும். குறிப்பாக, ஆசிரியர்களாக இருந்தால் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு விதிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எண்ணம்.
அடுத்து அரசின் பொறுப்பு என்ன? தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஏறக்குறைய ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கியது. இவ்வளவு தொகை செலவிட்டும் ஒருவரைக்கூட மாநிலப் பட்டியலில் இடம்பெறச் செய்யவில்லை. அரசு நிதி ஓதுக்கிச் செலவிட்டுத் திட்டங்களைத் தீட்டினால் மட்டும் போதாது. அந்தத் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியையும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே இருக்கும் இடைவெளியையும் அரசு போக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஒரு கல்வியாண்டின் பாதி ஆண்டுவரை மாணவர்களின் தரத்தை அரசு மதிப்பிட்டு, பெரும் வெற்றிக்கான இலக்கை அடைவதற்குத் தடையாக இருப்பவர்கள் ஆசிரியர்களா? அல்லது மாணவர்களா? என்பதை அறிய வேண்டும். கல்வியில் மாணவர்கள் பின்தங்கியுள்ளதற்கு மாணவர்கள் காரணம் என்றால் அதனைத் தீர்ப்பதற்குப் புதிய திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள்தான் காரணம் என்றால் அத்தகையை ஆசிரியர்களைக் களையெடுக்க வேண்டும். இத்தகைய செயல்களைச் செய்தால் மாணவர்களின் கல்வி மேம்படும்.
இல்லையெனில் தனியாருடன் போட்டிப்போடமுடியாத நிலையில் அரசு பள்ளிகள் இருந்துகொண்டேதான் இருக்கும். குறைந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடையும் மாணவர்கள், வேலைவாய்ப்பின்றி வெறும் அரசு உதவித்தொகை பெறுகிறவர்களாக மட்டுமே இருப்பார்கள்.
முத்தாய்ப்பாக ஒன்று சொல்ல வேண்டுமெனில் அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்திவரும் சமச்சீர்கல்வியைத் தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும்.
இல்லையெனில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களுக்கான பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் இல்லை என்ற நிலையை எண்ணித் தமிழக அரசு வெட்கப்பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டும்.
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............
சரவணன் wrote:asokan80 wrote:mmani15646 wrote:திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.
நானும் ஒரு அரசு பள்ளி மாணவன் ..தற்போது பொறியாளராக உள்ள்ளேன்............
வடை, அப்பளம், முறுக்கு எல்லாம் பொறிப்பீர்களா??
இது போதுமா.....
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............
asokan80 wrote:mmani15646 wrote:திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.
நானும் ஒரு அரசு பள்ளி மாணவன் ..தற்போது பொறியாளராக உள்ள்ளேன்............
நல்லது அசோகன். தங்கள் வயது தெரியாது. என்னுடைய மெயில் idக் கொண்டு என் வயதை அறிந்து கொள்ளலாம். நான் காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் கிராமத்தில் அப்போதைய District Board High Schoolலிலும் பின்னர் காஞ்சிபுரம் Municipal High School ம் தமிழ் வழிக்கல்வி பயின்றேன். பின்னர் தொலைத்தொடர்புத் துறையில் சேர்ந்து அஞ்சல்வழிக்கல்வியில் B.Com படித்து பதவி உயர்வு பெற்று Chief Accounts Officer ஆக ஓய்வு பெற்றேன்.
நாங்கள் படிக்கும் போது ஆசிரியர்களிடம் dedication இருந்தது. எல்லாத்துறைகளிலும் பரவிவிட்ட ஒழுக்கமின்மை ஊழல் ஆசிரியர்களிடமும் குடியேறிவிட்டது.
இதனை இளைய சமுதாயம் களைய முற்படவேண்டும்.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: விஜய் டீ வி யில் ஒளிபரப்பாகும் லிட்டில் ஜீனியஸ்............
mmani15646 wrote:திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ் வியாபாரத்திற்குத்தான். தி்முக ஆட்சிக்கு வருமுன் (1967) அரசுப்பள்ளிகளே தமிழ் வழிக்கல்வியை அளித்து முண்ணனியில் இருந்தது. அதில் படித்துத்தான் சிறந்த நிர்வாகிகளும் மருத்துவர்களும் பொறியாளர்களும் தமிழகத்தில் தோன்றினர். தமிழ் தமிழ் என்று போலியாக முழங்கி அதிக ஆங்கில வழிக்கல்வியைக் கொண்டுவந்தது கருணாநிதி, எம.ஜியார், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான்.
இதை நான் ஆமோதிக்கிறேன். ஐயா மணி சொல்வது போல , இந்த திராவிட கட்சிகள் வந்த பிறகு தமிழ்நாட்டில் சில கோடீசுவரர்கள் உருவாகி உள்ளனரே தவிர , தமிழ்நாடு இன்னும் 1967 க்கு முன்னரான காலகட்டத்தில் தான் இருக்கிறது.
Similar topics
» விஜய் டிவியில் தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் ‘வேலைக்காரன்’ மற்றும் ‘அருவி’
» அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்!
» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
» ஜீனியஸ் ஸ்ரீனிவாஸ்
» அரசு கேபிள் டி.வி.யில் விரைவில் சன், விஜய் சேனல்கள்!
» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
» ஜீனியஸ் ஸ்ரீனிவாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|