ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..! Empty பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..!

Post by Tamilzhan Thu Jun 04, 2009 4:32 pm

பெண்களைப் பாதிக்கும் அதீத மனநோய் விடுபட என்ன வழி

-இரா மணிகண்டன்-

ரம்யா செய்த காரியத்தைப் பார்த்தால் ஒருவகையில் சிரிப்புதான் வரும். ஆனால் அதில் உள்ள விபரீதத்தை நினைத்தால் மனசு அடித்துக் கொள்ளும்.

இருபது வயதுகூட ஆகாத ரம்யா இப்படியெல்லாம் நடந்துகொள்ளலாமா, என்றுகூட கேட்கத் தோன்றும். ஆனால் நடந்தது எதுவுமே அவருக்குத் தெரியாது என்கிறபோதுதான், அது எவ்வளவு பெரிய ஆபத்து என்று உணர முடிகிறது.

ரம்யா செய்த காரியத்தைப் படித்துவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

எம்.பி.ஏ. பரீட்சைக்குப் படித்துக்கொண்டு இருந்த ரம்யா, அப்படியே அசந்து தூங்கிவிட்டாள். காபி கலந்து எடுத்து வந்த அம்மா, ‘‘அசந்து தூங்குகிறாள். தூங்கட்டும்’’ என்று போய்விட்டார். சிறிதுநேரம் கழித்து மகளை எழுப்பிவிட்டு படிக்கச் சொல்லலாம் என்று வந்தால், படுக்கையில் மகளைக் காணவில்லை. வீடு முழுவதும் தேடியும் ரம்யாவைக் காணவில்லை. வீட்டில் நிறுத்தியிருந்த அவளது சைக்கிளையும் காணவில்லை.

இரவு நேரம் என்பதால் பதற்றம் கூடியது. பாடத்தில் சந்தேகம் கேட்க வகுப்புத் தோழிகள் யாரையாவது தேடிப்போய் விட்டாளோ, என்று எண்ணி ஆளாளுக்கு விசாரித்துப் பார்த்தார்கள். ‘‘வரவில்லை’’ என்ற பதில்தான் வந்தது. நேரமாக ஆக பெற்றோருக்குப் பயம் தொற்றிக்கொண்டது.

சுமார் ஒரு மணி நேரம் கழிந்த பின்னர், தூரத்து உறவினர் ஒருவர் ரம்யாவை அழைத்துவந்து வீட்டில் விட்டார். ரம்யாவின் முகமே ஒரு மாதிரியாக இருந்தது. என்ன, ஏது என்று விசாரித்தபோது, பெற்றோருக்கு அடிவயிறே கலங்கியது.

‘‘ரம்யா ரயில்வே ஸ்டேஷன்ல நின்னுட்டு இருந்தா? ‘என்ன ரம்யா. இங்ஙன இந்த நேரத்துல நிக்கிறே?’ன்னு ரயில்ல இருந்து இறங்கி வந்த நான் கேட்டேன். அதுக்கு அவள் ‘என் ஃப்ரெண்ட் உஷா இந்த ட்ரெயின்ல வர்றதா சொன்னா. அதுதான் அவள கூட்டிட்டுப் போகலாமுன்னு வந்தேன்’னு சொன்னா. உஷாவா, ‘அவளுக்குக் கல்யாணமாகி அமெரிக்கா போயி செட்டிலாகி மூணு மாசமாச்சே! அவ எப்படி தனியா வரப்போறான்?’னு கேட்டதும் ரம்யா முழிச்சா. ஏதோ தப்பு நடந்திருக்குன்னு, ‘ரம்யா நீ எதுவும் பேசாத எங்ககூட வா’ன்னு கூட்டிட்டு வந்துட்டோம்’’ என்றார்கள். ரம்யாவிடம் கேட்டால், ‘ஆமா உஷாதான் வரச் சொன்னா’ என்கிறாளே தவிர, தான் செய்த செயலைப் பற்றி எந்தப் பதற்றமும் இல்லாமல் இருந்தாள். அவளது காதில் உறக்கத்தில் உஷா பேசுவதுபோல் கேட்டிருக்கிறது. அதுதான் அவளை எழுந்து போக வைத்திருக்கிறது.

பிறகுதான் ரம்யாவின் பெற்றோர் உண்மையை ஒப்புக்கொண்டார்கள். ரம்யா இப்படி அடிக்கடி தன்னை யாரோ அழைப்பதாகத் தூக்கத்தில் எழுந்து போய்விடுவதும், அழைத்துவருவதும் சகஜமாகிவிட்டது என்று சொன்னார்கள். இனியும் தாமதித்தால் ரம்யாவின் மனநிலை பாதிக்கக்கூடும் என்று மனநல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துப் போனார்கள். அவளை முற்றிலும் பரிசோதனை செய்த டாக்டர், ‘‘இது ஒரு இனம்புரியாத இன்னல் தரக்கூடிய மனநோய்தான். தங்கள் மனதிற்குள் சில குரல்களை இவர்களால் கேட்கமுடியும். அக்குரல்கள் சொல்கிறபடி அவர்கள் நடந்துகொள்வார்கள். இந்த மாதிரி சமயத்தில் யாராவது பார்த்து தடுத்தால் உண்டு. இல்லாவிட்டால் பெரிய விபரீதமாகிவிடும்’’ என்றார்
.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..! Empty Re: பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..!

Post by Tamilzhan Thu Jun 04, 2009 4:33 pm

டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்நோய்க்கான அறிகுறிகள் மற்றும் இந்நோயின் நடத்தை எப்படி உண்டாகிறது என்று இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பொதுவாக, நம் உடலில் உள்ள வேதிப்பொருட்களின் மாற்றங்களால்தான் பலருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். சிலருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்தால், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும். இன்னும் சிலருக்குப் பரம்பரைத் தன்மையில்கூட மனநோய்கள் வருவதுண்டு. ஆனால் இந்நோய் இந்தக் குறைபாடுகளால் வருவதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தக் குறைபாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தாக்கும்போது, இப்படி நடந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று மட்டுமே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அண்மையில் நடந்த ஆராய்ச்சிகளின்படி, அன்பு இல்லாத, பாசத்தைக் கொட்டி சீராட்டி வளர்க்கப்படாத பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இந்நோய்க்கான வேறு அறிகுறிகள் :

பொதுவாக, காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமில்லாதபடி இவர்கள் நடந்துகொள்வார்கள்.

தங்களுக்குள் எதோ ஒரு குரல் கேட்பதாகவும், அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும் காட்டிக் கொள்வார்கள்.

ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது தெளிவான ஆதாரம் இல்லாமல் பேசுவார்கள். மடக்கிக் கேட்டால், பேச்சைத் துண்டித்துக் கொள்வார்கள். அடிக்கடி நீண்ட நேரம் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

ஒரு சிலர் சகஜமாகப் பேசுவார்கள். தாங்கள் படும் துன்பத்தை முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம்கூட ஒளிவுமறைவு இன்றி சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ‘எல்லாரும் தன்னை ஒதுக்குகிறார்கள். புருஷன் தன்னை கொடுமைப்படுத்துகிறான்’ இப்படிப் பேச்சு இருக்கும்.

ரம்யா மாதிரி மருத்துவப் பரிசோதனைக்கு வந்த நடுத்தரப் பெண் ஒருத்தி, யாரோ தன் காதில் ‘நீ செத்துப் போய்விடு. இந்த உலகத்தில் நீ இருக்காதே. செத்துப்போ’ என்று அடித்துப் பேசுவதாகச் சொல்லிக்கொண்டு வந்தார்.

இந்நோயால் இன்னும் பாதிக்கப்பட்ட சிலர், பெரிய சந்தேகப் பேர்வழியாக இருப்பார்கள். கணவன் எந்த செயலைச் செய்தாலும் அதை சந்தேகப்பட்டுப் பேசி, சண்டையை வரவழைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆண்களைவிட பெண்கள்தான் இந்தப் பாதிப்புக்கு அதிகம் ஆட்படுகிறார்கள்.

அதீத கற்பனைப் பேச்சும், நடத்தையும்கூட இந்நோய்க்கு அறிகுறியாகச் சொல்லப்படுகிறது. ‘மீனம்பாக்கம் விமான நிலையம் இருக்கும் இடம் எங்களது. என் கொள்ளுத் தாத்தாதான் அதை தானமாகக் கொடுத்தார்’ என்பார்கள். எதாவது கல்யாண மண்டபத்தில் தரையைச் சுத்தம் செய்யும் வேலையில் இருப்பார்கள். ‘ஜனாதிபதி என் நெருங்கிய உறவினர்தான். ஏதோ என் போறாத காலம் இப்படி இருக்கேன்’ என்று புலம்புவார்கள்.

இவர்களின் பேச்சில் ஒழுங்கு இருக்கும். கட்டுக்கோப்பு இருக்கும். சில சமயம் நம்பும்படியாகவும் இருக்கும். ஆனால், அது மிகைப்படுத்தப்பட்ட கற்பனையாகவே இருக்கும். இதற்குக் காரணம் எதிராளியைவிட, அவரே கற்பனையை உண்மை என்று நம்புவதன் விளைவுதான்.

இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் ஒரு மருமகள், தன் மாமியார் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் சிரித்துக்கொண்டே இருப்பார் என்று சொல்லப்படுகிறது. அப்பேர்ப்பட்டவர்களின் உணர்வுகள் சூழ்நிலைக்குத் தக்கபடி இருக்காது. எது நடந்தாலும் பேசாமல் இருப்பார்கள். நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருப்பார்கள். உச்சகட்ட நடவடிக்கையின்போது, திடீரென்று மூக்கை நுழைப்பார்கள். அதுதான் பலசமயம் அவருக்கோ எதிராளிக்கோ பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும். உதாரணத்திற்கு சில மருமகள்கள் தீக்குளிப்பதைச் சொல்கிறார்கள்.

மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகள் அதிக அளவு ஒருவரிடத்தில் இருந்தால் அவரை டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் என்கிற மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்ற முடிவுக்கு வரலாம் என்கிறார்கள். இது ஒருவகையில் மனச்சிதைவு நோயை ஒட்டியதுதான். என்றாலும் அதற்குண்டான அறிகுறிகளை வைத்து இதுவும் இந்நோய்தான் என்ற முடிவுக்கு வரமுடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் குணப்படுத்தி விடமுடியும் என்கிறார்கள். மனதளவில் ஆரோக்கிய மாற்றங்கள், உடலளவில் நல்ல உடற்பயிற்சி, அன்பான சுற்றுச்சூழல் இருந்தாலே இதை எளிதில் நிவர்த்தி செய்யமுடியும் என்கிறார்கள்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..! Empty Re: பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..!

Post by Tamilzhan Thu Jun 04, 2009 4:34 pm

எளிதான வழிகள்:

1. வாக்கிங், ஜிம் :
வாக்கிங் கட்டாயம் போகவேண்டும். குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் தொடர் வாக்கிங் அவசியம். வேகமாக நடக்கவேண்டுமே தவிர, ஓடக்கூடாது. இது முக்கியம். நடைப்பயிற்சிதான் உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்துவதாக அமையும். ஜிம்முக்குப் போவது ரொம்ப நல்லது.

2. நல்ல மூடுக்கு வர முயற்சித்தல் : சம்பந்தப்பட்டவரை நல்ல சந்தோஷமான மூடில் இருக்கும்படி செய்யவேண்டும். குடும்பத்தாரின் கனிவான பேச்சு, நண்பர்களின் வாழ்த்துக்கள், உறவினர்களின் பாராட்டுக்கள் அவர் நல்ல மூடுக்கு வர உதவக்கூடிய உத்திகள்.

3. ஒமேகா_3 : இம்மனநிலையில் இருப்பவர்கள் ஒமேகா _ 3 கொழுப்புள்ள மீன்களை உணவில் சேர்த்துக்கொண்டால், அதில் உள்ள அமிலம் மூளையில் உள்ள வேதிப்பொருட்களுடன் கலந்து நல்ல மூட் உருவாக உதவும் என்கிறார்கள். இதற்காக நீங்கள் உங்கள் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசிக்க வேண்டும்.

4. மௌனமாக இருக்கவிடக் கூடாது : இத்தகைய மனநிலை பாதிப்பில் இருப்பவர்கள் அடிக்கடி நீண்ட நேரம் மௌனமாக இருப்பார்கள். உடன் இருப்பவர்கள்தான், அவர்களின் மௌனத்தைக் கலைக்க ஏதாவது செய்யவேண்டும். அவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், பிடித்த நடிகர், நடிகை, அரசியல் தலைவர்கள் பற்றி அவர்களுடன் விவாதிக்கலாம். அவர்களுக்குச் சாதகமாகப் பேசுவது அவசியம்.

5. தனியறையில் தூங்கவிடக் கூடாது : இப்படிப்பட்டவர்களை தனியறையில் தூங்கவிடக் கூடாது. நம் அருகில் அம்மாவோ, தோழியோ இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவர்களை உறக்கத்தில் மற்ற சிந்தனைக்கு அழைத்துச் செல்லாது என்கிறார்கள். தூக்கத்தில் எழுந்து நடந்தால், அவர் எங்கே போகிறார் என்றுதான் பார்ப்போமே என்று அவரைப் பின்தொடர்வது போன்ற விபரீத விளையாட்டுக்களில் ஒருபோதும் இறங்கிவிடாதீர்கள்.

6. யோகா, தியானம் : மனதில்மாற்று எண்ணங்கள் உருவாகாமல் இருக்க முறையான யோகாவும், தியானமும் இவர்களுக்கு உதவும்.

7. பொழுதுபோக்கு : புதிதாக ஏதாவது பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலாம். சுற்றுலா. வயலின், வீணை வாசிக்கக் கற்றுக்கொள்ளுதல், இப்படி பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தால் மூளைக்கும் வேலை கொடுத்ததாகும். மனதிற்கும் உற்சாகமாக இருக்கும். வேறு சிந்தனைகளை உருவாகவிடாமல் இவை தடுக்கும்.

நன்றி - குமுதம்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..! Empty Re: பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..!

Post by ரூபன் Thu Jun 04, 2009 6:44 pm

eegarayil ippadithan oru ponu suthithiriyuthu kavanam
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..! Empty Re: பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..!

Post by geetha Thu Jun 04, 2009 6:58 pm

yara sollreeinga rubain?
avatar
geetha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 01/06/2009

Back to top Go down

பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..! Empty Re: பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..!

Post by ரூபன் Thu Jun 04, 2009 7:14 pm

nan unkala solala

(unmaya sonna iravoda iravaa namma vidda vantha nan enna seyirathu)
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..! Empty Re: பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..!

Post by geetha Thu Jun 04, 2009 8:13 pm

aingayavathu அய்யோ, நான் இல்லை
avatar
geetha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 01/06/2009

Back to top Go down

பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..! Empty Re: பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..!

Post by ரூபன் Thu Jun 04, 2009 8:23 pm

enna kolaiveri ,enna vekam
unkala vida naan vekama ooduren!!!!!!!!!!!!!!!
:pale: :pale: :pale:
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..! Empty Re: பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..!

Post by geetha Thu Jun 04, 2009 8:38 pm

eipad அய்யோ, நான் இல்லை na
runningla ruban1 no 1 winnera vruveeinga சிரி சிரி
avatar
geetha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 01/06/2009

Back to top Go down

பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..! Empty Re: பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..!

Post by ரூபன் Fri Jun 05, 2009 3:14 am

nan 1 vantha unkalukkuthan nanri
nika kalaithuthane naan oodinanan
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..! Empty Re: பெண்களை பாதிக்கும் மனநோய் விடுபட என்ன வழி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum