ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம்.

5 posters

Go down

விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். Empty விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம்.

Post by சம்சுதீன் Sun Mar 07, 2010 2:09 am




குர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல்! இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ளடக்கியது. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகள் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது. உலகில் வேறு எந்தநூலும், கொள்கையும் இவ்வாறு சவால் விட்டதாக அல்லது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருப்பதாகவோ அறியமுடியவில்லை.

நிற்க,
திருவாளர் தருமி "மதங்கள்" என்ற தலைப்பில் "இஸ்லாம்-2" குறித்து எழுதி இருந்தார். மனிதவிந்து உற்பத்தியாகுமிடம் குறித்து விந்தையான பதிவு அது! குர்ஆன் வசனம் 86:05-07ஐ மேற்கோள் காட்டி எழுதி இருந்தார்.
5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக!
6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான்
7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.

அவரின் கேள்வி எனனவென்றால், "மனிதன் விந்திலிருந்து படைக்கப் பட்டான் என்று நேரடியாகச் சொல்லாமல் முதுகுத் தண்டிற்கும், விலா எழும்புக்கும் இடையில் இருந்து குதித்து வெளியாகும் நீரினால் படைக்கப்பட்டுள்ளான் என்று ஏன் சொல்ல வேண்டும்?" என்றதோடு "விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ?" என்று அறிவியல்(!) பூர்வமாகக் கேள்வி ஒன்றையும் கேட்டிருந்தார்!
விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். Prostatecancer

அவரின் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் திரும்பத் திரும்ப தெரிவது, இஸ்லாம் குறித்த அரைகுறை தகவல்களுடன் அறிவியலைப் பற்றிய அறியாமையும்தான்!

இது தருமியின் புதிய ஆய்வொன்றுமில்லை. ஏற்கனவே அவர் வேறொரு வசனத்தை எடுத்தெழுதி, அதற்கு விளக்கம் சொல்லப் பட்ட கருத்துதான்:

படைப்புக்கொள்கை: இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம் ? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? - தருமி

பதில் : முதல் மனிதனின் படைப்பையும் அவன் சந்ததியினரின் பிறப்பையும் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் . முதல் மனிதன் இறைவனின் அற்புதங்களால் களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டார் (6:2, 7:12, 15:33, 32:7, 35:11, 55:14) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மனித வளர்ச்சி நிலைகளைப் பற்றி எந்த வேத நூலும் விவரிக்காத வகையில் குர் ஆன் விவரிக்கிறது, பார்க்க: 23:12,13 &14). இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால், நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான்? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?

குர்ஆன் வசனம் 86:07இல் ஒரு குழந்தையின் உருவாக்கத்தில் உள்ள ஒரு பகுதி மட்டும் சொல்லப் படுகிறது. يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்பதற்கு விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேறும் திரவம், கருவுக்கான பகுதி மூலம் என்று சொல்கிறது. இங்குக் கேள்வி என்னவென்றால் விந்து (مَنِيٍّ/SPERM) நேரடியாகச் சொல்லாமல் ஏன் திரவம் (مَاءٍ/FLUID) என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும்? என்பதே!

குர்ஆனின் இன்னொரு வசனத்தில் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒரு துளியாக மனிதன் (مَنِيٍّ) இருக்கவில்லையா?" என்று கேட்கும் குர்ஆன், வசனம் 86:06 இல் திரவம் என்று பொதுமையில் குறிப்பிடுகிறது!

இரண்டும் வெவ்வேறு வடிவிலானவை / நிலைகளைக் கொண்டவை என்ற வேறுபாடு நன்கு தெரிந்திருப்பதால் வெவ்வேறான சொல்லாடல் கையாளப் பட்டுள்ளது. ஆணிடமிருந்து வெளியாகும் தாது (SEMEN) பல்வேறு சுரப்பிகளைக் கடந்து இறுதியில் விந்தாக (SPERM) மாற்றமடைகிறது.

கருவாக்கத்திற்கு ஆணின் விந்து (SPERM) பகுதி மூலமாகும். அந்த விந்து ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்பதும் பொதுவானது.

பொதுவான ஒன்றை குர்ஆன் வெவ்வேறு பதங்களில் குறிப்பிடுவதற்கு வேறுபட்ட காரணம் இருக்க வேண்டும். கர்ப்பத்தில் விந்துத்துளியாக இருக்கவில்லையா? என்று கேட்கும் குர்ஆன், விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேற்றப்பட்ட திரவம் என்று வேறுபடுத்துவது எப்படிச் சாத்தியமாயிற்று?

விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். Male_torso

தாது (SEMEN) என்ற விந்தின் (SPERM) மூலப்பொருள் பற்றி நவீன மருத்துவம் விளக்குகிறது. குர்ஆன் வசனம் 86:06ம் இதைத்தான் சொல்கிறது. நுண்ணாடி (MICROSCOPE) மருத்துவ உபகரணங்களும் சாத்தியமில்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்திராத ஒருவரால் ஒரே விசயத்தை துல்லியமான வெவ்வேறு சொற்களால் விளக்க முடிந்தது?

விந்து (SPERM) ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்று பொதுவாக நம்பப்பட்ட காலத்தில் (சமீபகாலம் வரையிலும்கூட) எல்லோரையும்போல் இருகால்களுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து விந்து வெளியாகிறது என்று சொல்லாமல் "விலா எலும்புக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிருந்து உருவாகும் 'திரவம்' என்று துல்லியமாக வேறுபடுத்திச் சொல்வதன் மூலம் படைப்பின் ரகசியங்களை அறிவித்தவன் படைத்தோன் அல்லாஹ் என்பது இன்னொரு முறை உறுதியாகிறது.

***************************************

தருமியின் பதிவிலும் பின்னூட்டத்திலும் விந்து உற்பத்தியாகுமிடம் விரை (TESTICLE) என திரும்பத் திரும்ப சொல்கிறார்.அவரது பதிவில் பின்னூட்டம் இட்டுள்ள அறிவுசீவிகளும் "ஆமா, ஆமா" என்கின்றனர். நவீன மருத்துவமும் குர்ஆனும் வெவ்வேறு நிலைகளைச் சொல்கின்றன.

தாதுவுடன் (SEMEN) பல்வேறு திரவங்களும், தனிமங்களும் கலந்துள்ளது. SEMINAL VESICLES, PROSTATE GLANDS மற்றும் விரைகளில் சுரக்கும் பிற சுரப்பிகளும் கலந்துதான் விந்தாக ( SPERM ) வெளியேற்றப்படுகிறது. தாதுவுடன் Citric acid, prostaglandin, flavin, ascorbic acid, ergothioneine, cholesterol, phospholipids, fibrinolysin, zinc, phosphatase acid, phosphase, hyaluronidase ஆகிய தனிமங்களுடன் கலந்து விந்தணு fallopian tube நோக்கி நீந்திச் செல்கிறது. இக்கலவைகள் இல்லாமல் பயணிக்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களால் மட்டும் ஆரோக்கியமான கருவாக்கம் சாத்தியமில்லை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.

இருதொடைகளுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து வெளியாகும் விந்தணுவைச் சொல்லாமல், முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்ட பல்வேறு சுரப்பிகளிலிருந்து உருவாகும் தாது (SEMEN) குறித்து இவ்வசனத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
"எல்லாம் தெரிந்த கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?"
என்று தருமி கேட்கிறார். தான் விரும்பும் சொல்லை - அது பிழையாக இருந்தாலும் - தான் நம்பாத கடவுள் சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது அவருக்கே ஓவரா தெரியவில்லை? ;-)

மேலும் முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் என்ன தொடர்பென்றும் தருமி கேட்டுள்ளார். முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்புகளால் ஆணின் தாது விருத்தி/விந்து செலுத்தும் வீரியம் குறையும் என்று முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் உள்ளத் தொடர்பை தற்கால மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன. (Spinal Cord Injury (SCI) என்று கூகிலிட்டால் தொடர்புடைய சுட்டிகள் கிடைக்கும்.)

கருவின் பல்வேறு நிலைகள் குறித்து விளக்கும்போது வெவ்வேறு சொற்களைக் குர்ஆன் ஆளுகின்றது. காட்டாக,
"ஒவ்வொருவனுக்கும் அவன் மனிதனாக (பிறப்பெடுக்கு) முன்னர் ஒரு கால இடைவெளி சென்றுவிடவில்லையா? அக்காலகட்டத்தில் அவன் இன்ன ஒன்றாய் இருந்தான் என்று குறிப்பிட்டுக் கூறவியலா நிலையில் இருக்கவில்லையா?
(பின்னர், ஆண்-பெண்ணின்) கலப்பான விந்திலிருந்து மனிதனைத் திண்ணமாக நாமே படைத்தோம் ..." அல் குர்ஆன் 76:1-2.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். Empty Re: விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம்.

Post by சபீர் Sun Mar 07, 2010 2:13 am

நல்ல தொரு பதிவு சம்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். Empty Re: விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம்.

Post by அப்புகுட்டி Sun Mar 07, 2010 2:15 am

நல்லதோர் தகவல் நன்றி சம்ஸ்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். Empty Re: விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம்.

Post by இளமாறன் Sun Mar 07, 2010 2:16 am

மதங்கள் பொய் சொல்வதில்லை காலத்திற்கேற்ப உப்யோகிக்கும் வார்த்தைகள் மாறுகின்றன விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். 154550 விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். Empty Re: விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம்.

Post by kalaimoon70 Sun Mar 07, 2010 2:17 am

Appukutty wrote:நல்லதோர் தகவல் நன்றி சம்ஸ்


விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். 678642 விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். 678642 விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். 678642 விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம். Empty Re: விந்தின் பிறப்பிடம் திருக்குரானின் விளக்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum