ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும்

+2
இளமாறன்
சபீர்
6 posters

Go down

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் Empty இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும்

Post by சபீர் Tue Feb 23, 2010 7:02 pm

நவீன காலத்து அடிமைகளை விடுவிப்போம்.


வளைகுடா நாடுகளில்

வேலை
செய்யும் அனைபேரும், கணிசமானவர்கள் வீடுகளில் வாகன ஓட்டுனர் வேலை செய்பவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் கிட்டத்தட்ட

அடிமைகளைப் போல் தான் வாழ்ந்து வருகின்றனர். பெரிய மாளிகைகளின் மூலையில் இருக்கும் ஒரு சின்ன ரூம்தான் இவர்களது

உலகம். ரூபாய் 6000/7000 சம்பளத்தில் ஆரம்பிக்கும் அரபுலக வாழ்க்கை, 10 ஆண்டுகள் ஒரே வீட்டில் இருந்தால் 15000- வரை ஆகும். 10- 20%

நபர்களுக்குத்
தான் இந்த வாய்ப்பும் கிட்டும். 20% சகோதரர்கள் வேறு கம்பெனிக்கோ, ஊருக்கோ சென்று விடுவார்கள். மீதம் இருப்பவர்கள் அதே

நிலையில், குடும்பத்தை பிரிந்து, எதோ கொடுக்கும் உணவை உண்டு, குடும்பங்களை விட்டு வருடக் கணக்கில் பிரிந்து, மொபைல்

ஃபோனில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வாழ்க்கையில் பலர் சூழ்நிலைக் கைதிகளாகவும், சந்தர்ப்ப குற்றவாளிகளாகவும், வெகு

சிலர்
தவ்ஹீத்வாதிகளாகவும் இருக்கின்றார்கள். நவீன உலக கலாச்சாரத்தின் சீரழிவுகளின் தாக்கம் இன்று எழை, எளிய மக்களைத் தான்

முதலில் தாக்கும் என்பது எதார்த்தம். அதற்கேற்ப இவர்களில் பலர் பல துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். இதில் வெளியே சொல்ல

முடியாத இன்னல்களை ஏற்றுக் கொண்டு இருப்பவர்கள் வீட்டு வேலை செய்யும் ஹவுஸ் மெயிட் என்ற இளம் பெண்களே

.
இதில் தமிழ் பேசுபவர்கள் குறைவு. அண்மையில் உலகில் பணக்கார நாடு ஒன்றில் நடந்த சில உண்மை நிகழ்வுகளை

தங்கள் முன் வைப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். இதற்கு இன்றைய சூழலில் என்ன தீர்வு என்பதையும் சற்று நோக்குவோம்.



1) திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை ஒரு விளையாட்டு விபத்தில் சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் (நிஜமான துப்பாக்கி) காலின் மேல் பகுதியில் சுட்டு விட்டான். இவரது விதி குண்டு காலில் பாய்ந்தது. இவரை 4 மாதங்கள் வீட்டு சிறையில் வைத்து, உடல்நிலை சரியான பின் வெளியே விடப் பட்டார். அதையும் தாங்கிக் கொண்டு தான் நம் சகோதரர் ஜெயக்குமார் இருந்துள்ளார். ஆனால் தான் செய்யாத குற்றத்திற்காக வீட்டு சிறையில் இருந்த அந்த 4 மாதங்களுக்கு, " நீ தான் வேலையே செய்ய வில்லையே அதனால் உனக்கு சம்பளம் கிடையாது " என்று முதலாளி சொன்னவுடன் தான் ஜெயக்குமாருக்கு கோபம் வந்து, இந்திய தூதரகத்தை தமுமுக மூலம் அணுகினார். வெகு விரைவில் இவர் ஊர் வருவார். இன்ஷா அல்லாஹ்.

2) மற்றொருவர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சத்தம் போட்டு பேசுவதற்குக் கூட பயப் படுபவர். இவர் கடந்த 10 மாதங்களாக வெறும் 20தினார்கள் (ரூபாய்3200) சம்பளத்திற்கு வேலை செய்துள்ளார். சில தினங்களுக்கு முன் இவரை கழுத்தைப் பிடித்து நெரித்ததால், இவரால் தற்போது பேச இயலவில்லை. இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்று டாக்டரை சந்தித்து விட்டார். ஒரு கோளாறும் இல்லை என்று மருத்துவர் கூறும் நிலை. ஆனால் பேச முடியவில்லை. லேசாக தொண்டையில் வலி இருக்கின்றது. இவர் வேலை செய்யும் வீட்டில் 8 பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளார்கள். எஜமானி அம்மாவும் வேலைக்கு செல்வார். காலை 7.30 மணிக்கு வண்டியை எடுப்பவர் இரவு 8 மணி வரை நிப்பாட்ட இயலாது. பேசுவதற்குக் கூடப் பயப்படுபவர் தன்னுடைய சூழலை வெளியே சொல்லாமல் மறுபடியும் பம்பரமாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். அருகில் இருக்கும் நம் சகோதரர்கள் தான் நமக்கு ஃபோன் செய்தார்கள்.

3) மற்றும் ஒரு ஆந்திரா சகோதரரது (அப்துல் ரஹீம்) சோக நிகழ்வு. இவர் 10 மாதங்களுக்கு முன் வீட்டு வேலை விசா ரூபாய்80000/- கொடுத்து வாங்கியுள்ளார்.

இடைத் தரகர் (ஆந்திரா பெண்மணி) ஒருவரை நம்பி அப்துல் ரஹீம் பணத்தைக் கொடுத்துள்ளார். விசா கொடுக்கும் ஸ்பான்சரை (இந்த நாட்டுக் காரரை) அப்துல் ரஹீம் பார்த்தது கூட இல்லை. இது அடிப்படையிலேயே இந்த நாட்டு சட்டத்திற்கு எதிரான செயல். வீட்டு வேலை விசாவில் இருந்து கொண்டு வேறு வெளிவேலைகளைப் பார்ப்பது சட்டப் படி குற்றமாகும். அதுவும் தன்னுடைய விசா ஸ்பான்சர் யாரென்று தெரியாமலேயே வேலை பார்ப்பது இன்னும் பிரச்னைக் குரிய செயலாகும். கடந்த காலங்களில் இது ஒரு பெரிய குற்றமாக கருதப் படவில்லை. ஆனால் தற்போது எல்லா வளைகுடா அரசாங்கங்களும் வெளிநாட்டினர் வேலை செய்வதில் உள்ள சட்டங்களை கடினமாக்கிக் கொண்டு வருகின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற மற்ற நாடுகளில் வெளிநாடுகளில் இருந்து படித்தவர்கள், வல்லுனர்கள் மட்டுமே சுலபமாக வேலை செய்ய உள்ளே வர இயலும். அங்கெல்லாம் வாகன ஓட்டுனர் என்ற வேலையே இல்லை என்றுதான் கூற வேண்டும். அப்துல் ரஹீமின் இடைத் தரகர், ஆந்திரா பெண்மணி நம் சகோதரரையும் ஏமாற்றி, விசா கொடுத்த இந்த நாட்டுக் காரரையும் ஏமாற்றியுள்ளார். விசா கொடுத்தவர் தனக்கு சேர வேண்டிய பணம் 6 மாதங்களாகியும் வந்து சேராததால், போலிஸில் தன்னுடைய வேலை ஆள் வீட்டை விட்டு ஓடி விட்டதாகப் புகார் கொடுத்து விட்டார். போலிஸ் இவரை பிடித்து சிறையில் அடைத்து விட்டது. இந்த சூழலில் விசா ஸ்பான்சர் தான் தன் வேலை ஆளுக்கு முழுப் பொறுப்பு. ஆனால் நம் சகோதரருக்கு அவர் யாரென்றே தெரியாது. விசா ஸ்பான்சரின் வீட்டு முகவரிக்கு சென்று பார்த்தால், அங்கே வீடே இல்லை. வீடு இருந்ததற்கான அடையாளம் மட்டுமே இருந்தது. பின்னர் போலிஸ் அதிகாரியைச் சந்தித்து நடந்ததைச் சொல்லி, அவர் உதவி செய்யும் எண்ணம் இருப்பவராக இருந்ததால், சில நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் ஊர் திரும்புவார்.


இப்படி தொடர் கதைகளாக பல சோக நிகழ்வுகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் நம் சகோதரர்களின் அறியாமையும், எப்படியாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற ஆவலும், இடைத் தரகர்களின் பேராசையும் தான் ஆகும். எனவே இதைப் பற்றிய விழிப்புணர்வை நம் சகோதரர்கள் மத்தியில் நாம் கொண்டு வர வேண்டும். எந்த நோயும் வரும் முன் காப்பதே சாலச் சிறந்ததாக அமையும். எனவே இத்தகைய வேலைக்கு வரும் சூழலை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா ஒளிர்ந்து விட்டதோ இல்லையே, உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் ஊரிலேயே இன்றைய சூழலில் ரூபாய் 10000/- சம்பாதிக்க நிறைய நல்ல வழிகள் உள்ளன. மனைவி மக்களோடு கூழானாலும் குடும்பத்துடன் குடித்து வாழலாம்.


இதற்கு வாய்ப்பே இல்லை, வெளிநாட்டில் டிரைவர் வேலை தான் வேண்டும் என்றால் அதை இந்திய சட்ட விதிமுறைகளுக்கு முழுதும் உட்பட்டு வந்தால் தான், பின் ஏற்படும் பிரச்னைகளை சட்டப்படி சந்திக்க இயலும். தற்போதுள்ள சட்டங்களைச் சரியாக புரிந்து அதன்படி வந்தால்தான், இந்திய தூதரகம் பின்னர் ஏற்படும் சிக்கல்களில் சுலபமாக தன் அதிகாரத்தை பயன் படுத்த இயலும். உதாரணமாக தற்போதுள்ள ஒரு சட்டம், படிக்காதவர்கள் எந்த வேலைக்கு வந்தாலும், முதலில் சரியான கான்ட்ராக்ட் (வேலை ஒப்பந்தம்) இல்லாமல் வர இயலாது. சட்டப் படி இந்தியர்களுக்கு குறைந்தது ரூபாய்10000/- சம்பளம் கொடுத்தால் தான் ஒப்பந்தமே எழுத இயலும். இந்த ஒப்பந்தத்தை வெளி நாட்டில் உள்ள இந்திய தூதரகம் சரி பார்த்து, ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் வழங்க அது ஒரு தொகையை வசூல் செய்து வைத்துக் கொள்கிறது. இந்த தொகை பின்னர் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு ஊர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த நபருக்கு எளிதாக விமான டிக்கட் எடுத்து ஊருக்கு இந்திய தூதரகம் அனுப்பி விடும். தற்போது டிக்கட்டிற்காக பல மாதங்கள் பலர் சிறையில் வாடும் நிலையே உள்ளது.

அடுத்ததாக வேலை செய்யும் ஸ்பானசரும், விசா கொடுத்தவரும் ஒரே ஆளாக அல்லது குறைந்த பட்சம் ஒரே குடும்பத்தினராக இருக்க வேண்டும். இடைத் தரகர்களை நம்பி எங்கோ விசா எடுத்து விட்டு, வேறு எங்கோ வேலை செய்வது சட்டப் படி குற்றமாகும். இதில் பல சூழலில் படித்தவர்களும் ஏமாறுகின்றனர். எந்த வேலை செய்யப் போகிறோமோ அதற்கு சம்பந்தம் உள்ள விசாவிலேதான் வர வேண்டும். உதாரணமாக ஒரு முடி திருத்தும் கடையில் வேலை செய்பவரின் விசாவில் உள்ள தொழிலைப் பார்த்தால், தோட்டக்காரர் என்று இருந்தால் அதுவும் குற்றமே ஆகும். அண்மையில் ஒரு சின்ன வளைகுடா நாட்டில் 600 போலி நிறுவனங்களை கண்டு பிடித்துள்ளார்கள். அதாவது அப்படி ஒரு கம்பெனியே உண்மையில் இயங்கவில்லை. ஆனால் அந்த கம்பெனியில் வேலை செய்வது போல் 100 பேர்கள் எங்கோ, எதோ வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். இதற்கும் நம் சகோதரர்கள் பலர் பலியாகி உள்ளனர்.



40 ஆண்டுகளுக்கு முன் வளைகுடா நாடுகளில் யாரும் எந்த வேலையும் செய்ய இயலும். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் திறமை இருந்தவர்கள் எல்லோரும் சம்பாதித்தார்கள். நம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த இட ஒதுக்கீடு என்று கூட இந்த வாய்ப்பை கூறலாம். ஆனால் இதை பயன் படுத்தி, நம்மவர்கள் அடுத்த தலைமுறையை கல்வியில் உயர்த்த வேண்டும். காலச் சக்கரம் சுழல்வதில் எதிர் திசையிலும் செல்ல வேண்டி இருக்கும். அதற்கும் நம்மையும், நம் சந்ததியினரையும் தயார் செய்ய வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் எங்கும், எப்போதும், எந்நிலையிலும் நேர்வழி காட்டுவானாக




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் Empty Re: இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும்

Post by இளமாறன் Tue Feb 23, 2010 7:21 pm

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 154550 இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் Empty Re: இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும்

Post by kalaimoon70 Tue Feb 23, 2010 7:49 pm

நம்மவர்கள் அடுத்த தலைமுறையை கல்வியில் உயர்த்த
வேண்டும். காலச் சக்கரம் சுழல்வதில் எதிர் திசையிலும் செல்ல வேண்டி
இருக்கும். அதற்கும் நம்மையும், நம் சந்ததியினரையும் தயார் செய்ய
வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் எங்கும், எப்போதும், எந்நிலையிலும்
நேர்வழி காட்டுவானாக.


இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642 இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642 இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் Empty Re: இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும்

Post by சபீர் Tue Feb 23, 2010 9:37 pm

நன்றிஇதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642


Last edited by சபீர் on Tue Feb 23, 2010 9:41 pm; edited 1 time in total




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் Empty Re: இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும்

Post by சபீர் Tue Feb 23, 2010 9:38 pm

1


Last edited by சபீர் on Wed Feb 24, 2010 1:25 am; edited 1 time in total




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் Empty Re: இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும்

Post by சபீர் Tue Feb 23, 2010 9:41 pm

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642 இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642 இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642


Last edited by சபீர் on Wed Feb 24, 2010 1:25 am; edited 1 time in total




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் Empty Re: இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும்

Post by வழிப்போக்கன் Tue Feb 23, 2010 10:45 pm

விழிப்புணர்வூட்டும் கட்டுரைக்கு நன்றிகள் இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 677196 ஆன்மீகத்திற்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லையே இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் Icon_eek
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் Empty Re: இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும்

Post by Aathira Tue Feb 23, 2010 11:15 pm

[quote="kalaimoon70"]நம்மவர்கள் அடுத்த தலைமுறையை கல்வியில் உயர்த்த
வேண்டும். காலச் சக்கரம் சுழல்வதில் எதிர் திசையிலும் செல்ல வேண்டி
இருக்கும். அதற்கும் நம்மையும், நம் சந்ததியினரையும் தயார் செய்ய
வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் எங்கும், எப்போதும், எந்நிலையிலும்
நேர்வழி காட்டுவானாக.


இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642 இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642 இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 678642





இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 677196 இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 677196 இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 677196 இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 677196 இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 677196 இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் Empty Re: இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும்

Post by அப்புகுட்டி Tue Feb 23, 2010 11:22 pm

40 ஆண்டுகளுக்கு முன் வளைகுடா நாடுகளில் யாரும் எந்த வேலையும் செய்ய இயலும். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் திறமை இருந்தவர்கள் எல்லோரும் சம்பாதித்தார்கள். நம் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த இட ஒதுக்கீடு என்று கூட இந்த வாய்ப்பை கூறலாம். ஆனால் இதை பயன் படுத்தி, நம்மவர்கள் அடுத்த தலைமுறையை கல்வியில் உயர்த்த வேண்டும். காலச் சக்கரம் சுழல்வதில் எதிர் திசையிலும் செல்ல வேண்டி இருக்கும். அதற்கும் நம்மையும், நம் சந்ததியினரையும் தயார் செய்ய வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் எங்கும், எப்போதும், எந்நிலையிலும் நேர்வழி காட்டுவானாக

கவலையும் தந்தது ஒரு நின்மதியும் தந்தது நன்றி நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும் Empty Re: இதனை அனைபேரும் கட்டாயம் படிக்கவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» யானை (Elephant)-அனைபேரும் தெரிந்திருக்க வேண்டிய விடயம்
» அவசியம் அனைபேரும் தெரிந்திருக்க வேண்டிய வி்டயம் இது...தேனீக்கள் (Honey Bee)
» ஈகரை நேயர்கள் அனைபரும் இதை படிக்கவும் கட்டாயம்
» உன் கண்கள் ( எப்படி தானம் செய்வது ) இரண்டால்..?- கட்டாயம் படிக்கவும்
» கீரிப்பிள்ளை (Mangoose)-நம் அனைபேரும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum