ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?

Go down

மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Empty மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?

Post by சிவா Thu May 14, 2009 1:46 am

நாம் உடம்பை பற்றிய தெளிவை பெற்றிருத்தல் மிக முக்கியமானதாகின்றது. பணக்கார நாடுகளில் "பி பிட் அவேர்னஸ்" என்கின்ற இயக்கமே உள்ளன. இதற்கு என்ன பொருள் எனில்- உடம்பைப் பற்றிய ஆரோக்கிய விழிப்புணர்ச்சி என்று பொருளாகும். நோயின்றி வாழ இது முக்கியம். அடுத்து- நோயின்றி வாழ நமக்கு உறுதுணையாக எதுவெல்லாம் உதவுகின்றது என்பதை தெரிந்து கொண்டு அதனை கடைபிடிக்க வேண்டும்.

மருந்தின்றி வாழ...

1. உடல் உறுப்புகளை பற்றிய தெளிவு கொள்ளுதல் வேண்டும்.

2. உடல் சுத்தத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

3. தினமும் அதிகாலையில் எழுந் திருப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண் டும்.

4. தொடர்ந்து நடைப் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

5. ஏதேனும் சிறு சிறு உடற் பயிற்சியினை மேற்கொள்வதும் நல்லதே.

6. பசித்து புசி-என்றார்கள் நமது ஆன்றோர்கள். பசி எடுத்து சாப்பிடுவது தேக ஆராக்கியத்திற்கு நல்லது பயக்கும்.

7. இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று மனதில் தோன்றுவது மாதிரி, வயிறு முட்ட சாப்பிடாதீர்கள்.

8. நீங்கள் சாப்பிடும் உணவில்- உப்பு புளிப்பு, காரம் மூன்றும் பாதியளவு இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள்.

9. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

10. பல சிக்கலுக்கு காரணம் மலச்கிக்கல்தான் காரணம். எனவே மலச் சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள பழங்கள் சாப்பிடுங்கள்.

11. எல்லா விதமான சத்தும் சேர்ந்தால்தான் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த சத்துக்களை எல்லாம் நாம் சாப்பிடுகின்ற உணவிலிருந்தே பெறலாம். ஆகவே- நிறைய காய்கறிகள், முளை கட்டிய தானியங்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

12. வாரத்தில் ஒரு நாள் காய்கறியை மட்டுமே உண்டு, வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்கலாம். இது போலவே- மாதத்தில் இரண்டு நாட்கள் பத்து மணி நேரம் தொடர்ந்து உண்ணா விரதம் இருப்பதும் நல்லது.

13. சரியான நேரத்தில் சாப்பிடுகின்ற பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

14. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீரையாவது குடியுங்கள்.

15. உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவுகளை காலத்துடன் அகற்றி கொள்ளுங்கள். இதைத்தான் நமது முன்னோர்கள். வாரம் ஒரு தடவை, தினமும் இரண்டு தடவை, மாதம் நான்கு தடவை என்று சொல்லி வைத்துள் ளனர். அதாவது-தினமும் இரண்டு தடவை என்பது மலம் கழிப்பது, வாரம் ஒரு தடவை என்பது- எண்ணெய் தேய்த்து குளிப்பது (இதையே சனி நீராடு என்று வேறு மாதிரியும் சொல்லி வைத்துள்ளனர்) மாதம் நான்கு தடவை என்பது மனையாளுடன் ஆன தாம்பத்திய உறவை குறிக்கும். இதனை முறைப்படி அனுசரிப்பவர்களுக்கு நோய் அருகில் வர அஞ்சும்.

16. உங்கள் வாழ்க்கையை சந்தோஷ மிக்கதாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சந்தோஷத்திற்கு நோயை அண்டவிடாமல் செய்கின்ற மாயம் தெரியும். சந்தோஷமிக்கவர்களை நோக்கி முதுமை அவ்வளவு சீக்கிரத்தில் வராது என்பதும் உண்மை.

17. வாழ்க்கை நடைமுறைகளை எளிமையானதாக, சுலபமானதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படி உங்கள் வாழ்க்கை சிக்கலற்றதாக இருந்தால் மன அழுத்தம், ரத்த அழுத்தம், மன இறுக்கம் போன்றவை உங்களை நோக்கி தனது சுண்டு விரலைகூட நீட்டாது.

18. எண்ணங்களுக்கும் நமது வாழ்க்கை அமைப்பிற்கும் அரை செ.மீட்டர்கூட இடைவெளி இல்லாத நெருக்கம் இருப்பதாக நமது ஆன்மீக ஞானிகள் மனநல மருத்துவர்கள் எல்லோரும் சொல்கின்றனர். ஆகவே நமது எண்ணங்களை தூய்மை உடையதாக வைத்துக் கொள்ள நாம் பழக்கப்படுத்தி கொள்ள வே ண்டும். உடம்பால் மட்டுமே இந்த காலத்தில் நோய் நொடி வரும் என்று இல்லை. மன நலம் கெட்டுப் போனாலும் உடல் பாதிக்கலாம்.

19. தியானம்- நமது மனதை ஒரு முகப்படுத்தும் ஆற்றலை, சக்தியை தருகின்ற ஒரு ஜீவ கலை. மனதை அலை பாயவிட்டால் அது பல இடைஞ்சல்களுக்கு வாசலாக அமைந்து விடலாம். தியானம் இவற்றை எல்லாம் தடுத்து நம்மை நமது வாழ்க்கையை, நமது செயல்பாடுகளை உறுதியுடன் நம்பிக்கையு டன் முழு ஈடுபாட்டுடன் செய்ய வைக்கின்ற ஒரு ஆதார வித்தை. இந்த தியா னத்தையும், இதுபோலவே நமக்கு பல பன்முக ஆற்றல்களை தருகின்ற, நோய் நொடியின்றி வாழ வைக்கும் கலையாக நமது முன்னோர்கள் கற்று தந்திருக்கின்ற யோகாப்பியாசம் என்கின்ற யோகக் கலையையும் நாம் பயின்று மருந்தின்றி வாழ முயற்சிப்போம்.

20. "விந்து விட்டவன்- நொந்து கெட்டான்"- என்பது முது மொழி. ஒழுக்கமுடன் வாழுகின்ற வாழ்கையை கடை பிடிக்க நமது சித்தர் பெருமக்கள் சொன்ன வைர வரிகள் இவை. இதனையும் நாம் மனதில் வைக்க வேண்டும்.

-மேலே சொல்லியபடி வாழ்வதற்கு இளம் பிராயத்திலிருந்தே ஒரு மனிதன் தயாராகி விட்டால் நிச்சயம் அந்த மனிதன் நோயின்றி நீண்ட நாள் நீடித்த ஆயுளுடன் வாழலாம். உணவை மருந்துபோல பாவித்து உண்பவர்களும், ருசி க்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுபவர்களும் மருந்தின்றி வாழலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
» பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? சிகிச்சை முறைகள் என்ன?
» நிம்மதியான தூக்கம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? சீரற்ற தூக்கத்தால் என்ன ஆபத்து?
» மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும்?
» தும்மல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum