Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள்
+9
வழிப்போக்கன்
உதயசுதா
கோவை ராம்
anbu0072
nandhtiha
kalaimoon70
Manik
கலைவேந்தன்
kirupairajah
13 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள்
இந்தியா இல்லாமல் ஈழத் தமிழர்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்பதே எம்மிடையே இப்போதும் வாழும் இந்திய தாசர்களின் கருத்தாக உள்ளது. இந்தியா ஊடான ஈழத் தமிழர் நலன்கள் என்பது எப்போதுமே சாத்தியமானது அல்ல என்பதை தெற்காசிய அரசியலைப் புரிந்து கொள்பவர்கள் நிட்சயமாக ஏற்றுக் கொள்வார்கள். |
இந்தியா என்ற பிரமாண்டத்தையும், அதன்மீது ஈழத் தமிழர்கள் கொண்டிருந்த காதலுமே நடந்து முடிந்த அத்தனை அவலங்களுக்கும் காரணம் என்பதை இந்த இந்திய தாசர்கள் உணர்ந்து கொள்ள மறுத்தே வருகின்றார்கள். பிரமாண்டத்தை மட்டும் வைத்து பயம் கொள்வதும், அதனை வெல்ல முடியாத சக்தியாக நம்பி வணங்குவதுமான பண்டைய கால மனிதர்களின் எண்ணங்களிலிருந்து நாம் முற்றாக விடுபடவேண்டும். பிரமாண்டங்களை எல்லாம் வெல்லும் சக்தி மிக்க மனிதாகள் வாழும் உலகில் நாமும் வாழ்கின்றோம் என்ற நம்பிக்கை எமக்குள் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பேட்டை ரௌடிக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கும் கோழைத்தனத்திலிருந்து நாம் வெளிவர வேண்டும். ஆம், தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்துவதற்காகவே ஈழத் தமிழர்களை அச்சத்திலேயே வைத்திருக்க விழையும் இந்தியாவுக்கும், தனது புஜபல அராஜக கொடூரங்கள் மூலம் மக்களை அச்சுறுத்தித் தன் இருப்பை நிலைநிறுத்த முயலும் பேட்டை ரௌடிக்கும் அதிகம் வேறுபாட்டைக் காண முடியவில்லை. ஆனால், இந்தியாவின் பிரமாண்டத்தை ஈழத் தமிழர்களைத் தவிர இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாடும், எந்த இனமும் அச்சத்துடன் நோக்கவில்லை. பாகிஸ்தான் இந்தியாவுடன் இரண்டு போர்களை நடாத்தி முடித்துள்ளது. அதனால், இந்தியாவின் பிரமாண்டத்தை முறியடித்து காஷ்மீரின் ஒரு பகுதியைக் கைப்பற்றவும் முடிந்திருக்கின்றது. சீனா இந்தியாவை விடவும் பிரமாண்டமானது. எனவே, இந்திய சீன யுத்தத்தில் இந்தியா உரிமை கோரும் பெரும் பகுதியை சீனா தனதாக்கியதை எமது ஆய்வுக்குள் கொண்டுவர முடியாது. பாகிஸ்தானால் ஏற்படக்கூடிய நீண்டகால ஆபத்தைக் காரணமாகக் கொண்டு, இந்தியா வங்காளதேசத்தை உருவாக்கிக் கொடுத்திருந்தாலும், அந்த நாடும் இந்தியாவின் பிரமாண்டத்திற்கு அடி பணியாமலேயே நிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்குள் சிறைபட்டுக் கிடந்த நேபாளமும் இந்திய எதிர் நிலைப்பாட்டை எடுத்துவிட்டது. பூட்டானின் அரசியலில் இந்தியா செல்லாக்காசாகவே உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ள தீபெத் இந்தியாவின் கையாலாகாத்தனத்தின் அடையாளமாகவே உள்ளது. சீனாவின் செல்வாக்கை அதிகமாகக் கொண்டுள்ள சிங்கள தேசத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நகர்வுக்குரிய சந்தர்ப்பமாக சிங்கள - தமிழ் முரண்பாட்டைக் கையாண்ட இந்தியா, தன்னை நம்பிய ஈழத் தமிழர்களை சிங்களத்தை குளிர்த்திப்படுத்தும் வேள்விக் கடாக்களாக்கி, பெரும் பேரழிவுகளையும் நடாத்தி முடித்துள்ளது. ஆக, சிங்கள தேசம் சீனாவின் கையில் முற்றாக விழுந்துவிடாமல் தக்கவைப்பதற்கான ஆயுதமாகவே ஈழத் தமிழர்கள் இந்தியாவால் பயன்படுத்தப்பட்டு வருகின்றார்கள். பயன்படுத்தப்பட இருக்கின்றார்கள். இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளும், இனங்களும் இந்தியாவைப் புரிந்து கொண்டது போல் ஈழத் தமிழர்களும் இந்தியாவைப் புரிந்து கொண்டு தமது அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவைத் தவிர்த்துவிட்டு, ஈழத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது என்ற கருத்தைத் திணிக்க முயல்பவர்கள் கடந்த காலங்களில் ஈழத் தமிழர்கள் இந்தியாவால் அடைந்த நன்மைகளைப் பட்டியலிட வேண்டும். இந்தியா என்ற பிரமாண்டத்தையும், தமிழகம் ஊடான ஈழத் தமிழர்களின் பாசப் பிணைப்பையும் கண்டு சிங்கள மக்கள் மத்தியில் உருவான அச்சமே சிங்கள - தமிழ் இன முரண்பாடாகக் கூர்மையடைந்தது. அந்த இன முரண்பாட்டினூடாகத் தனது பிராந்திய வல்லாதிக்க நலனை அடைய முனைந்த இந்தியாவால் ஈழத் தமிழர்கள் இத்தனை அழிவுக்கும் உள்ளானார்கள். இந்திய - சீன பிராந்திய வல்லாதிக்க கபடியாட்டத்தில் சீனாவின் கரம் பற்றி சிங்களவர்கள் தப்பித்துக் கொள்ள, ஈழத் தமிழர்கள் இந்தியாவை நம்பிச் சிதையுண்டு போன கதை நீடித்தே செல்கின்றது. நாங்கள் சோணமிட்ட குதிரைகள் போல் இந்தியா ஊடாகத்தான் எமது நலன்களைப் பேண முடியும் என்ற இந்திய தாசர்களின் கருத்தை முதலில் நாம் முழுதாக நிராகரிக்க வேண்டும். இந்தியா என்ற பிரமாண்டத்தை இலங்கை உட்பட அதைச் சுற்றியுள்ள நாடுகள் எதிர்கொள்வது போலவே நாமும் அதனை எதிர்கொள்ள வேண்டும். இந்தியா ஊடான ஈழத் தமிழர் நலன்கள் என்பது எப்போதுமே சாத்தியமானது அல்ல என்பதை தெற்காசிய அரசியலைப் புரிந்து கொள்பவர்கள் நிட்சயமாக ஏற்றுக் கொள்வார்கள். ஈழத் தமிழர்களைப் பகடைக்காய்களாக நகர்த்தி இலங்கைத் தீவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியா முயல்வது போலவே, சீனாவைக் கருவியாகக் கொண்டு சிங்கள தேசம் அதனை முறியடிக்கும் சமன்பாட்டைத் தொடரவே போகின்றது. சீனாவின் வேகமான செயல்திறனுக்கும் நகர்வுகளுக்கும் ஈடாக நகரமுடியாத இந்தியா குள்ளநரி வேடத்தில் நின்றே காரியமாற்ற முனைகின்றது. இது எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு சாத்தியமாக அமையப் போவதில்லை. சிங்கள தேசத்தின் இன அழிப்பு யுத்தத்திற்குத் துணை வழங்கிய இந்தியா, அந்த யுத்த காலத்தின் கொடுமைகளை சர்வதேச அரங்கில் விசாரணைக்குக் கொண்டுவர மேற்குலகம் மேற்கொண்ட முயற்சிகளைக்கூடத் தனது பரம வைரிகளான சீனாவுடனும் பாக்கிஸ்தானுடனும் இணைந்து தடுத்து நிறுத்திய கொடூரத்தினை ஈழத் தமிழர்கள் என்றுமே மறந்துவிட முடியாது. எனவே, ஈழத் தமிழர்கள் தமது அரசியல் இலக்கை வென்றெடுக்க இந்தியாவைத் தாண்டிச் சிந்திக்க வேண்டும். ஈழத் தமிழர்களது ஆயுத பலம் சிதைக்கப்பட்ட பின்னர் உருவான வெற்றிடமும், அச்ச நிலையும் அவர்களது அரசியற் பலமான தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இந்தியாவின் கரங்களுக்குள் புதைத்து விட்டது. சிங்கள தேசத்தைப் போலவே, இந்தியாவின் கைகளுக்கெட்டாத பலமாக புலம்பெயர் தமிழர்களே உள்ளனர். சிங்கள தேசம் போலவே தமது நலனை வென்றெடுக்க இந்தியாவும் புலம்பெயர் தமிழர்களுக்கு வலை விரிக்க ஆரம்பித்துவிட்டது. புலம்பெயர் தமிழர்களை வென்றெடுக்காமல் மேற்கொள்ளப்படும் எந்த நகர்வும் முற்றுப்பெறப் போவதில்லை என்பதை இந்தியாவும் உணர்ந்தே உள்ளது. புலம்பெயர் தேசங்களிலுள்ள இந்திய தாசர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டு மரியாதைப்படுத்தப்படுவதுடன், புலம்பெயர் தேசங்களில் இந்திய பிரமிப்புக்களை ஏற்படுத்தும்படியும் பணிக்கப்பட்டு வருகின்றார்கள். இதற்கான வழங்கல்களும் தாராளமாகவே திறந்து விடப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான மேற்குலகின் அழுத்தங்களும், பெருளாதார ரீதியான தடங்கல்களும் அதிகரித்துச் செல்வது புலம்பெயர் தமிழர்களை மட்டுமல்லாது, தமிழீழ மக்களையும் மேற்குலகை நோக்கி நகர்த்திவிடும் என்ற அச்சம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. தனது பிரமாண்டமான சந்தை வாய்ப்பைப் பயன்படுத்தி மேற்குலகைக் கட்டி வைத்திருந்த இந்தியாவிற்கு, ஈழத் தமிழர்கள் மீதான மீதான தேற்குலகின் அனுதாபப் பார்வையைத் தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு சிங்கள அரசின் கொடூரங்கள் அதிகரித்தே வருகின்றது. இதனால், தனது பிராந்திய நலன் சார்ந்த தமிழீழத் தளம் தன்னை விட்டு நிரந்தரமாக விட்டுப் போகாமல் இருப்பதற்காக ஈழத் தமிழர்கள் தலையில் மீண்டும் மிளகாய் அரைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. புலம்பெயர் தமிழீழ மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்கவும், புதிதான பல ஒட்டுக் குழுக்களைப் பிரசவிக்கவும், புதிய வரதராஜப்பெருமாள்களை புலம்பெயர் தமிழர்களுக்குத் தலைமை ஏற்க வைக்கவும் இந்தியா தொடர் பிரயத்தனங்களை மேற்கொள்ளப் போகின்றது. சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். |
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள் Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள்
இலங்கைத்தமிழர் நம்மினத்தவர் அவருக்கு இடையூறு நிகழ்கிறதே என்னும் ஆதங்கம் எமக்கு நிறையவே உண்டு.
ஆனால் அதற்காக இந்திய மேலாண்மையை தரம் குறைத்து பதியும் இது போல வெற்றுப்புலம்பல்களை ஏற்பதற்கில்லை.
துவேஷத்தில் விளைந்த துஷ்டத்தனமான பதிவு இது.
எந்த நிலைப்பாட்டை எடுக்கும் போதும் ஆயிரமாயிரம் சாத்தியங்களை ஆலோசித்தே எந்த நாடும் நடந்துகொள்ளும்.
இந்தியாவை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் இந்த பதிவு வேதனை அளிக்கிறது.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஆனால் அதற்காக இந்திய மேலாண்மையை தரம் குறைத்து பதியும் இது போல வெற்றுப்புலம்பல்களை ஏற்பதற்கில்லை.
துவேஷத்தில் விளைந்த துஷ்டத்தனமான பதிவு இது.
எந்த நிலைப்பாட்டை எடுக்கும் போதும் ஆயிரமாயிரம் சாத்தியங்களை ஆலோசித்தே எந்த நாடும் நடந்துகொள்ளும்.
இந்தியாவை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் இந்த பதிவு வேதனை அளிக்கிறது.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள்
எதையும் பதியும் முன்னர் படித்துவிட்டு பதிவது நலம்.
இது உங்கள் சொந்த கருத்தாயின் இதற்கு பதில் சொல்ல நான் தயார்.
எங்கிருந்தோ எடுத்து ஒட்டி இருப்பின் அது மிகவும் வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியது.
இப்படி துவேஷம் விளைவிப்பதால் நல்லது நடந்துவிடும் என்று எதிர்பார்த்தால் அது கண்டிப்பாக வீண் எண்ணம் என்பதை இக்கட்டுரையாளர் புரிந்துகொள்ள வேண்டும்.
இது உங்கள் சொந்த கருத்தாயின் இதற்கு பதில் சொல்ல நான் தயார்.
எங்கிருந்தோ எடுத்து ஒட்டி இருப்பின் அது மிகவும் வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரியது.
இப்படி துவேஷம் விளைவிப்பதால் நல்லது நடந்துவிடும் என்று எதிர்பார்த்தால் அது கண்டிப்பாக வீண் எண்ணம் என்பதை இக்கட்டுரையாளர் புரிந்துகொள்ள வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள்
கலை wrote:இலங்கைத்தமிழர் நம்மினத்தவர் அவருக்கு இடையூறு நிகழ்கிறதே என்னும் ஆதங்கம் எமக்கு நிறையவே உண்டு.
ஆனால் அதற்காக இந்திய மேலாண்மையை தரம் குறைத்து பதியும் இது போல வெற்றுப்புலம்பல்களை ஏற்பதற்கில்லை.
துவேஷத்தில் விளைந்த துஷ்டத்தனமான பதிவு இது.
எந்த நிலைப்பாட்டை எடுக்கும் போதும் ஆயிரமாயிரம் சாத்தியங்களை ஆலோசித்தே எந்த நாடும் நடந்துகொள்ளும்.
இந்தியாவை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் இந்த பதிவு வேதனை அளிக்கிறது.![]()
அண்ணா இது அவரின் மட்டுமல்ல அனைவரின் வேதனையும் கூட அதற்காக அவர் சொல்லும் விசயத்திற்காக வருந்தக்கூடாது அண்ணா இனி என்ன என்று பார்ப்போம்
![சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள் 440806](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள்
எந்த நிலைப்பாட்டை எடுக்கும் போதும் ஆயிரமாயிரம் சாத்தியங்களை ஆலோசித்தே எந்த நாடும் நடந்துகொள்ளும்.
இந்தியாவை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் இந்த பதிவு வேதனை அளிக்கிறது.
இப்படி துவேஷம் விளைவிப்பதால் நல்லது நடந்துவிடும் என்று எதிர்பார்த்தால்
அது கண்டிப்பாக வீண் எண்ணம் என்பதை இக்கட்டுரையாளர் புரிந்துகொள்ள
வேண்டும்.
இந்தியாவை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் இந்த பதிவு வேதனை அளிக்கிறது.
இப்படி துவேஷம் விளைவிப்பதால் நல்லது நடந்துவிடும் என்று எதிர்பார்த்தால்
அது கண்டிப்பாக வீண் எண்ணம் என்பதை இக்கட்டுரையாளர் புரிந்துகொள்ள
வேண்டும்.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள்
கலை wrote:இலங்கைத்தமிழர் நம்மினத்தவர் அவருக்கு இடையூறு நிகழ்கிறதே என்னும் ஆதங்கம் எமக்கு நிறையவே உண்டு.
ஆனால் அதற்காக இந்திய மேலாண்மையை தரம் குறைத்து பதியும் இது போல வெற்றுப்புலம்பல்களை ஏற்பதற்கில்லை.
துவேஷத்தில் விளைந்த துஷ்டத்தனமான பதிவு இது.
எந்த நிலைப்பாட்டை எடுக்கும் போதும் ஆயிரமாயிரம் சாத்தியங்களை ஆலோசித்தே எந்த நாடும் நடந்துகொள்ளும்.
இந்தியாவை மிகவும் கேவலமாக சித்தரிக்கும் இந்த பதிவு வேதனை அளிக்கிறது.![]()
இது எனது சொந்த கருத்து இல்லை, இணையத்தில் இருந்தது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள் Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள்
நன்றி உங்கள் கருத்தை வழங்கியமைக்கு...! ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள்
வணக்கம்
'இந்திய மேலாண்மை. நகைப்புக்குரிய ஒன்று. இந்திய மேலாண்மை என்றோ இத்தாலிக்கு அடகு வைக்கப் பட்டு விட்டது. பொம்மை பிரதமரை வைத்து நடத்தப் படுவதும் யாவரும் அறிந்ததே. குட்ரோசியைத் தப்பிக்க விட்ட போது இந்த மேலாண்மை எங்கே போனது? இந்தியர்கள் எல்லோரும் துரோகிகள் அல்லர். ஈழத்தமிழர்களுக்காகக் கண்ணீர் வடிக்கின்றவர்களை நான் அறிவேன், மலேஷியாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது இந்திய மேலாண்மை என்ன செய்தது? கிழக்கு வங்காளத்தில் இனப் படுகொலை நடந்தபோது என்ன ஆயிற்று? ஈழத்தமிழர்கள் இன்றும் இந்தியாவை மதிக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் நிலைப் பாடு என்ன?
நந்திதா
'இந்திய மேலாண்மை. நகைப்புக்குரிய ஒன்று. இந்திய மேலாண்மை என்றோ இத்தாலிக்கு அடகு வைக்கப் பட்டு விட்டது. பொம்மை பிரதமரை வைத்து நடத்தப் படுவதும் யாவரும் அறிந்ததே. குட்ரோசியைத் தப்பிக்க விட்ட போது இந்த மேலாண்மை எங்கே போனது? இந்தியர்கள் எல்லோரும் துரோகிகள் அல்லர். ஈழத்தமிழர்களுக்காகக் கண்ணீர் வடிக்கின்றவர்களை நான் அறிவேன், மலேஷியாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது இந்திய மேலாண்மை என்ன செய்தது? கிழக்கு வங்காளத்தில் இனப் படுகொலை நடந்தபோது என்ன ஆயிற்று? ஈழத்தமிழர்கள் இன்றும் இந்தியாவை மதிக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் நிலைப் பாடு என்ன?
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள்
இந்தியா முன்பே வங்கதேசம் மற்றும் காஸ்மீர் சம்பவங்களில் இன்றுவரை
தீவிரவாதிகளின் வன்முறைக்கு பதில் சொல்லிக்கொண்டுள்ளது வடக்கில். மத்திய
இந்தியாவில் நக்சல் பிரச்னை உள்ளது. ஓரளவு அமைதி உள்ள இடம்
தென்னிந்தியாதான். இங்கும் பத்மநாப ,ராஜிவ்காந்தி என்று கொலைவெறி கொண்டு
ஆடியது யார்?. இந்திர காந்தி காட்டிய ஆதரவுக்கு நல்ல பரிசு கொடுத்தது
யார்?. இவ்வளவுக்கு பின்பும் இந்தியா மீது குறை சொல்ல என்ன நியாயம் உள்ளது
உங்களிடம்?. இந்தியா யார் மீதும் மேலாண்மை செலுத்தவில்லை . காந்தீய
வழியில் செல்லவே நாங்கள் விரும்புகிறோம். ஆனாலும் அனைவரும்
சீண்டிப்பார்க்கிறார்கள். இந்திராகாந்தி கொலையில் லட்சக்கணக்கான
சீக்கியர்கள் பாதிப்படைந்தனர். ஆனால் ராஜீவ் கொலையில் தமிழர்களுக்கு இங்கு
பாதிப்பில்லை. ஏனென்றால் கொலையாளி இலங்கையை சேர்ந்த தமிழன். இந்தியதமிழன்
அல்ல என்பதால்தான். ஆக உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் செய்ததால்தான்
மீண்டும் உதவி கிடைக்காமல் போனது என்பதை ஞாபகம் வைத்து பேசினால் போதும்.
இந்தியா என்றாலே எல்லோருக்கும் கேவலமாக தெரிவது வேதனையாகத்தான்உள்ளது.
தீவிரவாதிகளின் வன்முறைக்கு பதில் சொல்லிக்கொண்டுள்ளது வடக்கில். மத்திய
இந்தியாவில் நக்சல் பிரச்னை உள்ளது. ஓரளவு அமைதி உள்ள இடம்
தென்னிந்தியாதான். இங்கும் பத்மநாப ,ராஜிவ்காந்தி என்று கொலைவெறி கொண்டு
ஆடியது யார்?. இந்திர காந்தி காட்டிய ஆதரவுக்கு நல்ல பரிசு கொடுத்தது
யார்?. இவ்வளவுக்கு பின்பும் இந்தியா மீது குறை சொல்ல என்ன நியாயம் உள்ளது
உங்களிடம்?. இந்தியா யார் மீதும் மேலாண்மை செலுத்தவில்லை . காந்தீய
வழியில் செல்லவே நாங்கள் விரும்புகிறோம். ஆனாலும் அனைவரும்
சீண்டிப்பார்க்கிறார்கள். இந்திராகாந்தி கொலையில் லட்சக்கணக்கான
சீக்கியர்கள் பாதிப்படைந்தனர். ஆனால் ராஜீவ் கொலையில் தமிழர்களுக்கு இங்கு
பாதிப்பில்லை. ஏனென்றால் கொலையாளி இலங்கையை சேர்ந்த தமிழன். இந்தியதமிழன்
அல்ல என்பதால்தான். ஆக உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் செய்ததால்தான்
மீண்டும் உதவி கிடைக்காமல் போனது என்பதை ஞாபகம் வைத்து பேசினால் போதும்.
இந்தியா என்றாலே எல்லோருக்கும் கேவலமாக தெரிவது வேதனையாகத்தான்உள்ளது.
anbu0072- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 16/01/2010
Re: சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள்
தனது சுயநல இந்திய மேலாதிக்க திட்டங்களுக்கு தாளம்போட மறுத்த புலிகளையும் ஏனைய இயக்கங்களையும் தூண்டிவிட்டு தங்களுக்குள் அடிபட நயவஞ்சக சதிசெய்து வெற்றி கண்டது இந்தியாவின் உளவு அமைப்பு றோ.
இந்திய ஆமி இலங்கையில் வந்து செய்த கொடுமைகட்கு அளவே இல்லை, அவனை யார் அனுப்பியது? இந்திய இலங்கை ஒப்பந்தம் யார் செய்தது? எதற்காக செய்தது? தங்களது மேலாதிக்க நலனுக்காக எம்மக்களை பகடைக்காய பாவித்தவன் ராஜிவ், அவனுக்கு தண்டனை கொடுக்கத்தான் வேண்டும்.
இந்திராகாந்தி தமிழர்கட்கு நல்லது செய்தார் என்பதில் ஐயமில்லை, ஆனால் ராஜிவ் அன்னையின் வழியில் செல்லவில்லை
இந்திய ஆமி இலங்கையில் வந்து செய்த கொடுமைகட்கு அளவே இல்லை, அவனை யார் அனுப்பியது? இந்திய இலங்கை ஒப்பந்தம் யார் செய்தது? எதற்காக செய்தது? தங்களது மேலாதிக்க நலனுக்காக எம்மக்களை பகடைக்காய பாவித்தவன் ராஜிவ், அவனுக்கு தண்டனை கொடுக்கத்தான் வேண்டும்.
இந்திராகாந்தி தமிழர்கட்கு நல்லது செய்தார் என்பதில் ஐயமில்லை, ஆனால் ராஜிவ் அன்னையின் வழியில் செல்லவில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிங்கள எதிரிகளை விடவும் இந்தியத் துரோகிகள் ஆபத்தானவர்கள் Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேசத் துரோகிகள்!
» எதிரிகளை காட்டிக் கொடுக்கும் கண்ணாடி
» எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே ஆபத்தானவர்கள் !
» எதிரிகளை பிடிக்கும்
» தேசத் துரோகிகள்!
» எதிரிகளை காட்டிக் கொடுக்கும் கண்ணாடி
» எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே ஆபத்தானவர்கள் !
» எதிரிகளை பிடிக்கும்
» தேசத் துரோகிகள்!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|