ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Poll_c10 
VENKUSADAS
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Poll_c10 
VENKUSADAS
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Poll_c10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Poll_m10பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Empty பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Post by சாந்தன் Thu Feb 11, 2010 1:10 pm


கேழ்வரகிலே நெய் வடியவதுன்னா
கேட்பவனுக்கு
புத்தி எங்கே போச்சு?



பலர் பலவற்றை பல விதமாக கூறலாம் அதை அப்படியே நாம் நம்பாமல், ஏன்?
எதர்க்கு? எப்படி? என சிந்திக்க வேண்டும். இதை சாக்கரட்டீஸ்சும்,தந்தை
பெரியாரும்,வள்ளுவர் தன் குறளில்
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள்
மெய்பொளுள் காண்பதறிவு
என்று கூரி யுள்ளார்

இந்த கருத்தை
யெல்லாம் விளக்கும் விதமாக தான்
<கேழ்வரகிலே> என்ற பழமொழியை
படிக்காத நம் முன்னோர்கள் பயண படுத்தினர்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Empty Re: பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Post by சாந்தன் Thu Feb 11, 2010 1:11 pm

கடைதேங்காயை
எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானாம்.


ஈகை ஒரு
மனிதனுக்கு சிறப்பைத் தரும். ஒருவன் தனது வருவாயில் ஒரு சிறு
பகுதியைசேமிப்பது எப்படி நல்லதோ,அதுபோலவே ஒரு பகுதியை தர்ம்ம்செய்வதும்
நல்லது.அதுவும் நம்முடைய சுய வருவாயில் செய்யப்பட்ட வேண்டும். அடுத்தவன்
பொருளை எடுத்து மற்றவருக்கு தருவது தானம் ஆகாது.இந்த கருத்தை தான்
இப்பழமொழி உனர்த்துகிறது.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Empty Re: பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Post by சாந்தன் Thu Feb 11, 2010 1:12 pm

கிழிஞ்ச சேலையும் புழுங்கரிசி தின்ன வாயும்
சும்மா இருக்காது.


சேலை
பழசாகி விட்டால் கிழிந்து கொன்டே இருக்கும் நின்றால்,உட்கார்ந்தால் கூட
கிழியும்.
கிராமத்தில் சிலர் புழுங்கல் அரிசியை சதா வாயில் அடக்கி
மெல்லுவார்கள்.இந்த பழக்கத்தால் அவர்கள் வாய் சதா அசை
போட்டுகொண்டே
இருக்கும்.

இந்த வாய் மெல்லுதலுக்கு வேறு ஒரு கருத்தும்
உண்டு
அது.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Empty Re: பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Post by சாந்தன் Thu Feb 11, 2010 1:12 pm

சும்மா இருந்த வாய்க்கு
கொஞ்சம் அவல்
கிடைத்த மாதிரி.
.

சாதாரணமாகவே
(வாய் சதா அசை) பிறர்
பற்றி பொல்லாங்கு பேசும் ஒருவனுக்கு
அவனை
பற்றி செய்தி கிடைத்துவிட்டால்
கேட்கவா வேண்டும்?
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Empty Re: பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Post by சாந்தன் Thu Feb 11, 2010 1:13 pm

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு
காலம் வரும்.


ஆ-நெய்க்கு-
பூ-நெய்க்கு - என்றால் ஆவினம் (பசு) பசுவின் பாலில் இருந்து
கிடைக்கக்கூடிய நெய்யை இளமைக் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு
வனப்பு ஏற்படும்.பூநெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேனை முதுமைக்
காலத்தில் சப்பிட்டால் உடலுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என்பதை
உணர்த்தவே இந்த பழமொழி பிற்காலத்தில் உருமாரியது..

யானைக்கு ஒரு
காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்என உருமாறியது.
வலிமை யானவனுக்கு
ஒரு நேரம் வந்தால் எளிமையானவனுக்கும் ஒரு நேரம் வரும் என்பதே இதன் பொருள்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Empty Re: பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Post by சாந்தன் Thu Feb 11, 2010 1:14 pm

கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை
வைக்காதே!

இந்த பழமொழி
உருமாறியிருக்கிறது. கப்பல் கவிழ்ந்து நீ ஏழையாகி விட்டாலும் அதற்க்காக
மனம் நொந்து கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட்டால் போன பணமும்,
செல்வமும் திரும்பவா வந்துவிடும்.இது ஒரு கருத்து.மற்றொறு கருத்து.
கன்னம்
என்பதுமுகத்தில் உள்ள கன்னம் அல்ல."கன்னக்கோல்"
கப்பல் கடலில் முழ்கி
பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டாலும் நீ
மீண்டும் உழைத்து சம்பாதிக்க
வேண்டுமே தவிர, கன்னக்கோல்
வைத்து திருடி பிழைக்கக் கூடாது.
"கன்னக்கோல்"-அந்தக்
காலத்தில் திருடர்கள் கன்னக்கோலைப் பயன்படுத்தி சுவற்றில் ஒட்டை போட்டு
திருடுவார்கள்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Empty Re: பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Post by சாந்தன் Thu Feb 11, 2010 1:14 pm

பந்திக்கு முந்து, படைக்கு பிந்து’

இந்த பழமொழி உருமாறி இருக்கிறது.சாப்பாட்டிற்கு
முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும், கடைசியில் சென்றால் சில வகைப்
பதார்த்தங்கள் கிடைக்காது என்பதால்,பந்திக்கு முந்தவேண்டும், சண்டை
ச்ச்சரவுகள் ஏற்படும்பொழுது நாம் பிந்திச்சென்று விடவேண்டும். என்று எண்ணத்
தோன்றும்.
இது உண்மையல்ல!

சாப்பிடுவதாற்க்கு நம் கை (வலது
கை)முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில்(போர் புரியும் நேரம்)இடக்கையில்
வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம்.
எவ்வளவு
தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச்
செல்லும்.இதுவே பந்திக்கு முந்தும்,படைக்கு பிந்தும்என்று சொல்கின்றார்கள்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Empty Re: பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Post by நிலாசகி Thu Feb 11, 2010 1:14 pm

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் 677196
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Empty Re: பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Post by சாந்தன் Thu Feb 11, 2010 1:15 pm

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று
கொல்லும்.


இதற்கு
தெய்வம் பொறுத்திருந்து கொல்லும் என்பது பொருளாய் சொல்ல படுகிறது.
ஆனால், இதற்கு, ஒருவன் பல நற்காரியங்களை செய்திருப்பினும், ஒரு
தவறிழைத்தனானால் அரசன் அன்று செய்த தவற்றிக்கு தகுந்த தண்டனையை மற்ற
நற்செயற்களை பாராமல் வழங்குவான், ஆனால் தெய்வமோ, நன்மை தீமை இரண்டையும்
அறிந்து, சீர் தூக்கி சமநிலைபடுத்தி தீமை அதிகமானால் தண்டனையும் நன்மை
அதிமாயின் சுகத்தையும் அளிக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Empty Re: பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Post by சாந்தன் Thu Feb 11, 2010 1:16 pm

அடியாத மாடு படியாது
ஒரு மாடு அடங்காமல் துள்ளித் திரிந்து கொண்டும்
மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டும் இருந்தால்
அந்த மாட்டை
கம்பால் அடித்து நம் கட்டளைக்குப் பணியும்படி
செய்ய வேண்டும்.அடிக்காமல்
தடவிக்கொடுத்து வளர்த்தோமேயானால் அது நம் கட்டளைக்கு பணியாது. என்று
எண்ணத் தோன்றும். இது உண்மையல்ல!
இப்பழமொழி மாட்டின் மூலம் நமக்குச்
சொன்னதாகும். அதாவது நம் மனமென்னும் மாட்டை (அடங்காத)அடக்காமல்
அதன்போக்கிற்கு விட்டுவிட்டோமேயானால் நம்எதிர்காலம் என்பது
சூன்யமாகிவிடும். என்பதால், நம் மனதை அவ்வப்போது எது தவறு எது சரி
என்பதையறிந்து மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள் Empty Re: பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum