ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை நகம் பற்றி ( மருத்துவம் )

Go down

கை நகம் பற்றி ( மருத்துவம் ) Empty கை நகம் பற்றி ( மருத்துவம் )

Post by தாமு Tue Feb 09, 2010 1:19 pm

கை நகம் பற்றி ( மருத்துவம் ) Sundara-ramaswamy'உன் கை நகம் கவிதையா......' என சுந்தர ராமசாமி 'பசுவய்யா' என்ற புனை பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தார்.

உங்கள் கை நகங்கள் கவிதையா இல்லை கதறி ஓட வைக்கும் அலங்கோலமா?

சற்றுப் படித்துப்பாருங்கள். நகங்களின் அழகு எல்லோருக்கும் அவசியம். எனினும் பெண்களுக்கு அதன் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

'இரா இராவாக இவளுக்கு நித்திரையில்லை. விரல் நுனி வீங்கிக் கொதிக்குது' என்றாள் அம்மா. வேதனையில் முகம் சுளித்துக் கொண்டிருந்த மகள் ஒரு பள்ளி மாணவி. பெருவிரலின் நகத்திற்குப் பக்கமாக தோல் சிவந்து வீங்கியிருந்தது. விசாரித்துப் பார்த்ததில் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவள் எனத் தெரிந்தது.

இதற்கு மாறாக பல தாய்மார்களின் விரல் நகங்களும் தடித்து சொர சொரப்பாகி அசிங்கமாகத் தோன்றுவதுண்டு. அத்துடன் அவற்றில் இடையிடையே சீழ் பிடித்து வலிக்கவும் செய்வதுண்டு.

இவை இரண்டுமே நகச்சுற்றுகள்தான். ஆயினும் பல வேறுபாடுகள் உண்டு. பள்ளி மாணவியில் தோன்றியது திடீரென ஏற்பட்ட நோய். அதனை





Acute paronychia என்பார்கள். இது விரைவில் மாறிவிடும். மீண்டும் வராது நீங்கள் காப்பாற்றினால் நகத்தின் அழகைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

மாறாக அம்மாவில் ஏற்பட்டது நாட்பட்ட நகச்சுற்று





(Chronic paronychia) எனப்படும். குணப்படுத்துவதற்கு சற்றுக் கடினமானது.

திடீரெனத் தோன்றும் நகச்சுற்று

கை நகம் பற்றி ( மருத்துவம் ) Paronychea
நகத்தைச் சுற்றியுள்ள மென்மையான தோலில் கிருமி தொற்றுவதாலேயே ஏற்படுகிறது. திடீரென அவ்விடத்தில் உள்ள தோல் சிவத்து வீங்கி வலியை ஏற்படுத்தும். சிலவேளைகளில் மஞ்சளாக சீழ் அதற்குள் தோன்றலாம்.

கடிப்பதால் மட்டும் நகச்சுற்று வருவதில்லை. நகம் கத்தரிக்கும் போது ஆழமாக வெட்டுவது, மாறாக நகத்தை நீளமாக வளரக்கும் போது காயம் ஏற்படுவது, கை சூப்புவது, சமையல் வேலை, தோட்ட வேலை போன்ற வேலைகளின் போது நகக் கண்ணில் காயம் ஏற்படுவதால் ஏற்படுகிறது. காயம் பட்ட இடத்தில் பக்டிரியா, பங்கசு கிருமிகள் தொற்றுவதாலேயே சீழ் பிடித்து வலியை ஏற்படுத்துகிறது.

நகச்சுற்று ஏற்பட்டால் நீங்கள் செய்யக் கூடியது என்ன? கொதியுள்ள நகத்தை சுடுநீரில் தினமும் 2 -3 தடவைகள் ஆழத்தி சில நிமிடங்கள் வைத்திருக்க வலி தணியும். ஆயினும் வலி தணியவில்லை எனில் மருத்துவரைக் காண வேண்டும்.

அவர் அதற்குரிய நுண்ணுயிர் கொல்லி மருந்து தருவார்.

கை நகம் பற்றி ( மருத்துவம் ) Paronychea.Inscision
மிக அதிகமாக இருந்தால் அவ்விடத்தை மரக்கச் செய்ய ஊசி மருந்து போட்டு. சீழை அகற்றவும் கூடும்.

நாட்பட்ட நகச்சுற்று






(Chronic paronychia)

கை நகம் பற்றி ( மருத்துவம் ) Paronychea.1
இது சிறிது சிறிதாக தோன்றி, நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் வகையாகும். ஒரு விரலின் நகத்தைச் சுற்றி மட்டுமின்றிப் பல நகங்களுக்கும் பரவக் கூடும். ஆயினும் திடீரேன ஏற்படும் நகச்சுற்று போல கடுமையான வேதனையை ஏற்படுத்துவதில்லை என்பதால் பலரும் அலட்சியம் செய்துவிடுவதுண்டு.

இடையிடையே சீழ் பிடித்து ஆறிவிடும்.

அவ்வாறு நீண்ட காலம் நீடிப்பதால் நகமானது கீழுள்ள நகப்படுக்கையில் பிரிந்து விடுவதும் உண்டு. அத்துடன் நகத்தின் மேற்பகுதியில் தடிப்புகள் தோன்றி அது தன் இயல்பான வழுவழுப்பான அழகிய தோற்றத்தை இழந்துவிடும்.


கை நகம் பற்றி ( மருத்துவம் ) Paronychea.2
நகத்தின் நிறமும் மஞ்சள் அல்லது சாம்பல் பூத்ததாக மாறிவிடும். அவ்வாறு ஏற்பட்டால் நகம் மீண்டும் வளர்ந்து தனது இயல்பான தோற்றத்தை மீண்டும் பெற ஒரு வருடம் கூட ஆகலாம்.

பொதுவாக அடிக்கடி கையை நனைக்க வேண்டிய தேவையுள்ள பண்ணைத் தொழிலாளர்கள், மீனவர்கள், சமையல் வேலை செய்பவர்களில் இத்தகைய நாட்பட்ட நகச்சுற்று அதிகம் ஏற்படுகிறது.

எக்ஸிமா, சொறியாசிச் போன்ற நோய் உள்ளவர்களிலும் இவ்வாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

கை நகம் பற்றி ( மருத்துவம் ) Paronychea.4
அதேபோல நீரிழிவு நோயுள்ளவர்களிலும் தோன்றுவதற்கு வாய்ப்பு அதிகம்.

இதற்கான சிகிச்சை இலகுவானதல்ல. நோயுள்ளவர்கள் தங்கள் சருமத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடிய பொருள்களில் கைகள் தொடர்புறாது காப்பது அவசியம். நீண்ட நேரம் கைகள் நீரில் ஊறுவதைத் தவிர்க்க வேண்டும். நகம் வெட்டும்போது அருகில் உள்ள சருமத்திற்கு சற்றும் காயம் ஏற்படாதவாறு கவனமாக வெட்ட வேண்டும். விரல் சூப்புவதைத் தவிர்க்க வேண்டும். பொருத்தமான கையுறைகளை உபயோகிக்க வேண்டும்.

கை நகம் பற்றி ( மருத்துவம் ) Paronycheaஅவதானிக்க வேண்டியவை

அடிக்கடி நகச்சுற்று வருபவர்கள் அவதானிக்க வேண்டியவை

1. நகத்தையும் நகத்தைச் சுற்றியுள்ள சருமத்தையும் கவனமாகப் பேண வேண்டும்.
2. நகம் மற்றும் விரல் நுனிகளில் காயங்கள் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் நகம் மிக ஆறுதலாக வளருகிறது. காயம் ஏற்பட்டால் குணமடைய மாதக் கணக்கில் நேரம் எடுக்கும்.
3. நகம் கடிப்பது அறவே கூடாது. நகக்கண்களையும் சுத்தமாக வைத்திருப்து அவசியம்
4. கைகளை இயலுமானவரை ஈரப்பிடிப்பின்றி வெதுவெதுப்பாக வைத்திருங்கள்.
5. மண், சாணி, போன்ற எந்த அழுக்கான வேலை செய்தாலும், வேலை முடிந்ததும் சோப்பிட்டுக் கழுவுங்கள். கழுவும்போது நகக்கண்களுக்குள் சோப் தன்மை நீங்கும் வண்ணம் செம்மையாகக் கழுவ வேண்டும். பின் மென்மையான துவாயால் ஈரலிப்பை அகற்றுங்கள்.
6. உங்கள் சருமம் இயற்கையாகவே வரட்சியானது எனில் அவற்றில் நுண் வெடிப்புகள் ஏற்பட்டு கிருமி தொற்றக் கூடும். அத்தகையவர்கள் அவற்றை வரட்சியின்றி வைத்திருக்க மொயிஸ்டரைசிங் கிறீம்





(Moisturising Cream) உபயோகிப்பது அவசியம். அல்லது லோசன்





(Lotion) உபயோகிக்க வேண்டும்.
7. ஸ்பிரிட், டெட்டோல் போன்றவற்றை உபயோகித்து சுத்தப்படுத்துவது கூடாது.

இவற்றிக்கு குணம் அடையாவிட்டால் மருத்துவ ஆலேசனை பெறுவது அவசியம் எனச் சொல்ல வேண்டுமா?

சிங்கார நகம் வேண்டுமா, சீழ் பித்த நகம் வேண்டுமா? உங்கள் அக்கறையிலும், பராமரிப்பிலும்தான் பெருமளவு தங்கியுள்ளது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன். கை நகம் பற்றி ( மருத்துவம் ) 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum