ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் திறமையை வளர்ப்பது எப்படி?

2 posters

Go down

நம் திறமையை வளர்ப்பது எப்படி? Empty நம் திறமையை வளர்ப்பது எப்படி?

Post by சிவா Thu Apr 16, 2009 4:37 pm

நாம் ஒரு பெரிய சாதனையை செய்ய முற்படும்போது திறமை, தகுதி, உழைப்பு அனைத்தும் சரியாக இருந்தும்கூட வெற்றியை நழுவ விடுகிறோம். இது நம் விதி, சூழ்நிலை சரியில்லை என்றெல்லாம் காரணம் காட்டி நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் நாம் புற விஷயங்களில் வெற்றிக்கு தகுதி உடையவராய் ஆனதைப்போல், மனதளவில் வெற்றிக்கு தகுதி உடையவராய் ஆகாததே நம் தோல்விக்கு காரணம் என்பதை நாம் உணர்வதில்லை.

நம் மனதை வெற்றிக்கு தகுதி உடையதாய் ஆக்குவது எப்படி என்பதை இன்று ஒரு தகவல் பகுதி மூலம் அறிந்து கொள்வோம்.


வெளிமனம்-உள்மனம்


நம் எல்லோருக்கும் மனதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன.

1. வெளிமனம் நினைவு மனம் - புறமனம். ,

2. உள்மனம் ஆழ் மனம், சப் கான்ஷியஸ் மைண்ட். நாம் வெளிமனதின் மூலமாகவே இப்போது நினைப்பதையும் பேசு வதையும் செய்கிறோம்.


உள்மனம் என்பது நாம் பிறந்தது முதல் இந்தக்கணம் வரை நம் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களின் பதிவுகளையும் அடக்கியது. உள்மனதின் சக்தி அபாரமானது. உதாரணமாக கடலில் மிதக்கும் பணிப்பாறை சிறிது மட்டும் வெளியே தெரியும். அது வெளிமனம். ஒரு மலையளவு பனிப்பாறை கடலுக்குள் மூழ்கியே இருக்கும் அது உள்மனம்.

உள் மனதின் சக்தியைப்பெற்றவர்கள் பல சாதனைகளை செய்யலாம். ஆனால் வெளி மனம் நாம் எளிதில் உள்மனதோடு தொடர்பு கொள்ள முடியாதபடி தடுத்துவிடுகிறது. அப்போதும் கூட

1. மிக மிக ஆழ்ந்து சிந்திக்கும் போது,

2. மிக ஆழ்ந்து ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும்போது,

3. தியா னத்தின்போது,

4. தூக்கம் கண்களைச் சுற்றி ஒரு அரைத்தூக்க நிலையில் இருக்கும்போது

5. காலையில் படுக்கையில் விழிப்பு வந்ததும் வராதிருக்கும் அரை விழிப்பு நிலை யில் நாம் உள்மனதோடு தொடர்புகொள்ள முடியும்.


சரி, ஒரு மனிதனின் வெற்றிக்கும் தோல் விக்கும் உள்மனம் காரணமாவதை ஓர் உதாரணத்துடன் பார்ப்போம். ஓர் இளைஞன் சிறந்த பேச்சாளராக ஆகவேண்டும் என்று ஆசைப் படுகிறான். அதாவது அவனுடைய வெளிமனம் ஆசைப்படுகிறது. அருமையான கருத்துக்களை திரட்டி, நன்றாக பேசுவதற்கு பயிற்சி எடுத்து கொள்கிறான். பேச்சுக்கலையில் தோல்வியடைகிறான். இது எதனால்? அவனுடைய உள் மன தின் அவநம்பிக்கையால் உள்மனம் என்ன நினைக்கிறது என்பதை நம்மால்-அதாவது நம்முடைய வெளிமனதால் உணர முடியாது. .

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உள் மனதில் அவனைப்பற்றி ஓர் உருவகம் - ஓர் இமேஜ் படிந்திருக்கும். அதற்கு ஏற்ப அவன் நடவடிக்கை கள் அமைகின்றன. இந்த இமேஜ் ஒவ்வொருவருக் கும் அவரவர் சிறுவயதில் 14 வயதுக்குள் அமைந்துவிடுகிறது. நான் இதுவரை மேடையில் பேசியதில்லை. எனக்கு அவ்வளவாக பேச்சு வராது. எனவே நான் சிறந்த பேச்சாளராக முடியாது என்று அந்த இளைஞனின் உள்மனதில் அவனைப்பற்றிய இமேஜ் படிந்திருக்கும். அதன் விளைவாகவே அவன் மேடைப்பேச்சில் தோல்வியடைகிறான்.

சரி. அது உண்மைதானா? உண்மையிலேயே அந்த இளைஞனுக்கு பேச்சாளராக தகுதி இல்லையா? அப்படியல்ல. நிச்சயம் அவனுக்கு தகுதி இருக்கிறது. தகுதி இருப்பதால்தான் ஆசை வருகிறது. சிறு வயதில், பெரியவர்கள் நம்மிடம் அதைச் செய்யாதே. இதைச்செய்யாதே என்று எதிர்மறையாக கூறி, கூறி நமது திறமைகளைப் பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மையை நமக்குள் உருவாக்கிவிடுகிறார்கள். ஆகவே அவனுடைய உள் மனதின் இமேஜில் பேச்சாளராக முடியாது என்ற கருத்தே படிந்திருக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம் திறமையை வளர்ப்பது எப்படி? Empty Re: நம் திறமையை வளர்ப்பது எப்படி?

Post by சிவா Thu Apr 16, 2009 4:55 pm



கற்பனை செய்க


அவன் தன் உள்மனதை தான் சிறந்த பேச்சாளர்தான் என்று நம்பவைத்தால் அவன் நிச்சயம் வெற்றிபெற்றுவிடுவான். இதை எப்படி செய்வது?
அவன் தன் பேச்சுத்திறமையை நிரூபிக்கும் வகையில் நடந்த சம்பவங்களை அடிக்கடி நினைத்துப்பார்க்க வேண்டும். அவன் பேச்சை கேட்டவர்கள் யாராவது பாராட்டியது, அவன் சிறுவயதில் ஏதாவது பேச்சுப்போட்டியில் பரிசு வாங்கியது போன்ற சம்பவங்கள். அவன் சிறந்த பேச்சாளராகிவிட்டதைப்போலவும் பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் மேடையில் பேசி கைதட்டல் வாங்குவதைப்போலவும் மனதில் மனப்படங்களை கற்பனை செய்து, அவற்றை உணர்ந்து அனுபவித்து பார்க்கவேண்டும். இவை ஆழ்மனப்பதிவுகளாக உள் மனதில் பதிவாகின்றன.

வெளிமனம் மூலம் பேச்சாளர் ஆவதற்கு படித்தல், பேச்சுப்பயிற்சி போன்றவற்றை கையாண்டு வரும் அதே நேரத்தில், தன் உள் மனதையும் தயார்படுத்திக்கொண்டு வந்தால் அந்த இளைஞன் நிச்சயம் வெற்றிபெற முடியும்.

நீங்கள் எந்தத் துறையில் சாதனை படைக்க விரும்புகிறீர்களோ அந்தத்துறையில் சாதனை செய்து வெற்றி பெற்று விட்டதாகவே கனவு கண்டு அதை ஆழ்மனதில் பதியவையுங்கள். உதாரணமாக பேச்சாளர் ஆக விரும்புபவர்கள், நான் ஒரு சிறந்த பேச்சாளன் என்றால் மிக அற்புதமாக மேடையில் பேச முடியும் என்பது போன்ற நேர்மறை- பாசிடிவ்-எண்ணங்களை ஆழ்மனதில் பதிய வைக்கவேண்டும். இதை சுய கட்டளை - ஆட்டே சஜஷன் என்பார்கள் அதற்கான வழிமுறை.

வெற்றி பாதையில் செல்ல...

1. இரவு தூங்கச்செல்லும் முன் கண்களை மூடி படுத்துக்கொண்டே உடல் முழுவதும் தளர்வாக இருக்கச்செய்க. 1 முதல் 10 வரை எண்ணுக. இப்போது சுயமனோவசியம் செய்யப் பட்ட நிலை. இப்போது உங்கள் நம்பிக்கை மிகுந்த எண்ணங்களை திரும்பத்திரும்ப கூறுங்கள்.

2. உறக்கத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட அரை விழிப்பு நிலையில் - பாசிட்டிவ் எண்ணங்களை ஆழ்மனதில் விதையுங்கள்.


ஒரு முக்கியமான விஷயம்

1. நீங்கள் கூறும் வாக்கியம் பாசிட்டிவாக இருக்கவேண்டும். நெகடிவாக இருக்கக்கூடாது. உ.ம். நான் மேடையில் உளறமாட்டேன் என்று கூறக் கூடாது.

2. நிகழ்காலத்தில் வாக்கியத்தை அமையுங்கள். உ.ம். மேடையில் அற்புதமாக பேசும் சக்தி எனக்கு இருக்கிறது.


இதுபோன்று உங்கள் உள்மனதை தயார் செய்துவிட்டால் அது உங்களுக்கு வேண்டிய ஆற்றலை அள்ளித்தரும். நீங்கள் நடக்க வேண்டிய வெற்றிப்பாதையில் உங்கள் உள்மனமே உங்களை வழி நடத்திச்செல்லும்.

வெற்றி உங்களுக்கே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நம் திறமையை வளர்ப்பது எப்படி? Empty Re: நம் திறமையை வளர்ப்பது எப்படி?

Post by Tamilzhan Thu Apr 16, 2009 5:19 pm

வெற்றி நிச்சயம்...!!!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நம் திறமையை வளர்ப்பது எப்படி? Empty Re: நம் திறமையை வளர்ப்பது எப்படி?

Post by Guest Thu Jul 02, 2009 7:20 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

நம் திறமையை வளர்ப்பது எப்படி? Empty Re: நம் திறமையை வளர்ப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum