ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வ மலி தமிழ் நாடு --

2 posters

Go down

செல்வ மலி தமிழ் நாடு -- Empty செல்வ மலி தமிழ் நாடு --

Post by sugumaran Sun Jun 23, 2024 12:28 pm



செல்வ மலி தமிழ் நாடு -- DQnwnid

வரலாற்றின் பிற்காலத்தவர்களான கருதப்படும் பல்லவர்கள் காலத்திலேயே அவர்கள் இரட்டைப் பாய்விரித்த கப்பல்களையும் பயன் படுத்தி கடல் சார் வாணிகத்தில் ஈடுபடுத்தியிருந்தனர் .
சேரநாட்டுக் கடற்கரையில் அமைந்திருந்த துறைமுகங்களில்வந்து தங்கிய கிரேக்கக் கப்பல்கள் மிகவும் பெரியவை .
ஹிப்பாலஸ் மூலம் பருவக்காற்றுகளின் பயனை அறிந்தபிறகு ரோமாபுரியின் வாணிகம்
ஓங்கி உச்ச நிலையை எட்டிற்று . செல்வஞ் செழித்த ரோமாபுரிப்பிரபுக்கள் முதலீடு செய்து மிகவும் பெரிய மரக்கலங்களைக் கட்டுவித்தார்கள் . வாணிகத்தின் வளர்ச்சிக்கேற்ப அக் கப்பல்களின்எண்ணிக்கையும் அளவும் பெருகிக்கொண்டே போயின . எகிப்தியரும் கப்பல் கட்டும் கலையில் சளைத்தவர்களல்லர் . இந்தியசமுத்திரத்தைக் கடந்து செல்லுமளவுக்கு மிகப் பெரிய கப்பல்களை அவர்கள் ஓட்டினர் . எகிப்தியர் செலுத்திய கப்பல்கள்சிலவற்றிற்கு ஏழு பாய்மரங்கள்விரிக்கப்பட்டிருந்தனவாம் .
தமிழகத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பலவகை
யான பண்டங்கள் ஏற்றுமதியாயின . நமது மேற்குத்தொடர்ச்சி மலைகளின் காடுகளில் கிடைத்த புலி , சிறுத்தை , யானை ,குரங்கு , மயில் , கிளி , வேட்டை நாய்கள் ஆகியவற்றைத் தமிழகம் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது .
தமிழகத்து வேட்டை நாய்கள் , தரத்தில்மேலானவை என அயல் நாடுகளில் மிகவும் பாராட்டப்பெற்றன .மருது சகோதரர்கள் 1000 கோம்பை நாய்கள் கொண்ட ஒரு படையே வைத்து ஐரோப்பியர்கள் மிரளச்செய்தனர்
புலிகள் ஒரு வேளை வடஇந்தியாவிலிருந்தும் ஏற்றுமதியாகியிருக்கக்கூடும் . ஆனால் , யானைகள் தமிழகததில் மட்டுந்தான்அதிகம் உயிர்வாழ்ந்தன . ஆகையால் , யானைகள் ஐரோப்பிய நாடுகளுக்குக்குத் தமிழகத்திலிருந்துதான் போயிருக்க வேண்டும் .
அயல் நாட்டினர் சில வகை பாம்பினங்களையும் தமிழகத்தில் இருந்து கொள்முதல் செய்தனர் . இந்தியாவிலிருந்து இறக்குமதியான ஒன்பதடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்றைந் தாம் எகிப்தில் கண்டதாக ஸ்டிராபோ எழுதியுள்ளார் .
சேரநாட்டுக் காடுகளில் பலவகையான , மிகவும் நீண்ட பாம்புகள் மலிந்து கிடந்தன . எனவே ,சேர நாட்டுத் துறைமுகங்கள் மூலம் இப் பாம்புகள் ஏற்றுமதி
யாயின என்று ஊகிக்கலாம்
கிளியோபாட்ரா கூட ஒரு விஷ பாம்பை கடிக்கவிட்டு உயிரைத்துறந்ததாக வரலாறு கூறுகிறது .
மேலை நாட்டினர் தமிழகத்தில்வாணிகம் செய்த பண்டங்களில் மிகவும் விலையுயர்ந்தவை
யானைத் தந்தங்களும் முத்துகளுமேயாம் .
தமிழகம் ஏற்றுமதி செய்த சரக்குகளில் சாலச் சிறந்தவை
இலவங்கம் , மிளகு , இஞ்சி , ஏலம் , அரிசி , நுண்வகைத்துணிகள்
, தேக்கு , கருங்காலி , நூக்கு , சந்தனம் ஆகிய கட்டட
மரவகைகள் முதலியன . மிளகும் இஞ்சியும் மருந்துகள் செய்யப்பயன்பட்டன . ஹிப்பாகிரேட்டஸ் என்ற புகழ் பெற்ற கிரேக்கமருத்துவர் கி . மு . ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் . அவர்இந்திய மருத்துவ முறைகளையும் , மருந்து வகைகளையும்கையாண்டு வந்தார் . அவர் மிளகை இந்திய மருந்து என்றே
குறிப்பிடுகின்றார் .
நல்லெண்ணெயின் பயனைக் கிரேக்கர்கள்கி . மு . ஐந்தாம் நூற்றாண்டிலேயே நன்கு அறிந்திருந்தனர் . நல்லெண்ணெய் பண்டைய தமிழரின் உணவுப் பண்டங்களுள்ஒன்றாகும் . ரோமரும் நல்லெண்ணெயை இறக்குமதி செய்தார்களா என்பது தெரியவில்லை .ஆதாரக்குறிப்புகள் இல்லை ஆனால் எள் ங்குகிடைக்க வாய்ப்பில்லை
தமிழகத்துக் கருங்காலி மரங்கள் ரோமாபுரியில் பெருமளவில் விற்பனையாயின அவைகளைக்கொண்டு பெரிய வணிகக்கப்பல்களின் பாயமரத்தைச் செய்தால் அவைகளில் கடலில் செல்லும் பொது இடி மின்னல் தாக்கி அழிக்காது என்ற தமிழர்களின் ரகசியம்அறிவு அவர்களிடம் போனது . அதனால் கருங்காலி மரத்திற்கு பெரிய வணிகசந்தைஅங்கு இருந்தது
பாரசீகவளைகுடாத் துறைமுகங்களில் தமிழகத்துத் தேக்கு மரங்களைக்கொண்டு கப்பல்கள் கட்டினார்கள் . தேக்கு மரங்கள் சேரநாட்டுக் காடுகளிலிருந்தும்
கன்னட நாட்டிலிருந்தும் வெட்டிஏற்றுமதி செய்யப்பட்டவை என்பதில் ஐயமில்லை .
தமிழகம் மேலைநாடுகளுடன் கொண்டிருந்த வாணிகத்தொடர்பைப்பற்றிச் சங்க இலக்கியங்களில் பல சான்றுகள்காணப்படுகின்றன .
. பல யவனர்கள்தமிழக மன்னர் அரண்மனைகளில் கைவினைக் கம்மியராகவும் .கோட்டைக்கு காவற்காரராகவும் பணிபுரிந்தனர் .
யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல் பொன் செய் புனைகலத் தேந்தி நாளும் ஒண்டொடிமகளிர் மடுப்ப ... ---
யவனர் நல்ல குப்பிகளில் கொணர்ந்து தந்த நறுமணம் கமழும் குளிர்ந்த மதுவைப் பொன் வளையல்களையணித்த இளம் பெண்கள் பூவேலை செய்யப்பட்ட பொற்கிண்ணங்களில் ஊட்டுவிக்கின்றனர் என்று புறநானூற்றுச் செய்யுள்ஒன்று கூறுகின்றது அவர்கள் ரோமாபுரி அழகிகள் என்று கூறுபவர்களும் உண்டு
சுள்ளி அம் பேரியாற்றுவெண் நுரை.
கலங்க யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்துகறியொடு பெயரும் வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ ...
ஒடிந்தமரச் சுள்ளிகளை ஏந்தி வரும் பேரியாற்றில் குமிழ்த்தெழும்வெள்ளை வெளேரென்று மின்னியநுரைகள் கலங்கும்படி யவனர் செய்து முற்றிய அழகிய வேலைப்பாடமைந்த உறுதியான மரக்கலங்கள் பொன்னைக்கொண்டு வந்து கொட்டிவிட்டுமிளகு மூட்டைகளை ஏந்திச்செல்லும் பேரொலி எழும் வளம்மிகுந்த முசிறிப்பட்டினம் ...) என்றுஎன்று அகநானூறுகுறிப்பிடுகிறது
மேலைநாடுகளுடன் மட்டுமின்றிக் கீழைநாடுகளான சீனம் ,மலேசியா , ஜாவா ( சாவகம் ) , வடபோர்னியா ஆகிய நாடுகளுடனும் நமது வணிகம் நடைபெற்றது
பிலிப்பீன் தீவுகளில் அண்மையில் நடைபெற்ற அகழ்
வாராய்ச்சிகளில் இரும்புக்காலப் புதைபொருள்கள் பல கண்டு பிடிக்கப்பட்டுள்ளன . அவற்றுள் கத்திகள் , கோடாரிகள் , ஈட்டிகள் போன்ற கருவிகள் அனைத்தையும் கி . மு , முதலாம்
ஆயிரம் ஆண்டில் தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த கருவிகளைப் பெரிதும் ஒத்துள்ளன .
சீனம் , சாவகம் போன்ற கீழைநாடுகளுடன் மேற்கொண்டிருந்த வாணிகத் தொடர்பின் பழைமையைஇச்சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன .
கிழக்காசிய நாடுகளுக்கும் ரோமாபுரிக்குமிடையே நடைபெற்று வந்த கடல் வாணிகத்தில் தமிழகமும் பெரும்பங்கு ஏற்றுவந்தது . சீனம் , மலேசியா , சாவகம் முதலிய நாடுகளிலிருந்து
தமிழகம் பண்டங்களைக் கொள் முதல் செய்து அவற்றை மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தது .
மேலை நாடுகளுடன்தமிழகம் கொண்டிருந்த கடல் வாணிகம் குன்றிய பிறகு கீழை
நாடுகளுடனான அதன் வாணிகம் மேலும் மேலும் வளர்ந்துவரலாயிற்று . தமிழகத்து மக்கள் இந் நாடுகளில் பல குடியேற்றங்களை அமைத்துக்கொண்டனர் ; இந் நாடுகளுடன் அரசியல்
தொடர்புகளைப் பெருக்கிக்கொண்டனர் ; இங்கெல்லாம் தம்நாகரிகத்தையும் பண்பாடுகளையும் பரப்பினர் .
ஒரு நாட்டு மக்கள் கடல் கடந்து சென்று அயல்நாடுகளில் தங்கி வாணிகம் செய்துவர வேண்டுமாயின் அந் நாட்டில்உள்நாட்டு வாணிகம் மிகவும் செழிப்பான முறையில் நடைபெற்று வந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை .
பெரும்பாலான உள்நாட்டு வணிகம் தமிழ் நாட்டின் ஆறுகளை பயன்படுத்தியே நடைபெற்றியிருக்கவேண்டும் அத்தகைய பட்டினங்களில் வாழ்ந்தவர்களே பட்டினவர் எனப்பட்டவர்கள் இந்நாளில் அவர்கள் உள்நாட்டு மீனவர்களாக மாறிப்போனார்கள்
அப்படி வந்து சேர்ந்த சா த்துகளை உள்நாட்டிற்கு மக்கள் ஏற்றிச் செல்வார்கள் எனவே இவ்வாறு ,அப்போது தமிழகத்தின் உள்நாட்டு வாணிகம்செழித்தோங்கியிருந்ததுஎனலாம் .
தமிழகத்து வணிகர்கள் கூட்டங் கூட்டமாகக் கூடிக்கொண்டு , வண்டிகளிலும் பொதிமாடுகளின் மேலும் தம்பண்டங்களை ஏற்றிச் சென்று ஊரூராகவிலை கூறுவர் .
இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் மலிந்து கிடக்கின்றன .
உள்நாட்டு வாணிகத்தில் பெரும்பாலும் பண்டமாற்று முறையே வழங்கி வந்தது .
தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்குமிடையே கி . மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே மிகப் பெரிய அளவுக்கு வாணிகம்நடைபெற்றுவந்தது . தமிழகத்தில் ஊர்கள் சில பண்டங்களின் உற்பத்தியில் சிறந்து விளங்கின . பாண்டி நாட்டு முத்துகளைப்பற்றி மெகஸ்தனிஸ் மிகவும் புகழ்ந்து பேசுகின்றார் .
கொறக்கை தாமிரவருருணி , பாண்டிய கவாடம் ஆகிய இடங்களில் கிடைத்த முத்துகளும் , மதுரையில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைவகைகளும்கௌடிலியரின் அருத்தசாத்திரத்தில் புகழிடம் பெற்று விளங்குகின்றன . உறையூர் , பருத்தி நெசவில் பேர்பெற்று விளங்கிற்று .
தமிழகத்துப் பண்டங்கள் வடநாட்டுக்கு வங்கக் கடல் வழியாகவே சென்றன ;தரை வழியாக நடைபெற்ற வாணிகம் மிகவும்குறைவுதான் .
இந்தக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான செய்திகள் தரவுகள் வரலாற்று ஆய்வாளர் திரு கே கே பிள்ளை அவர்கள் எழுதியபுகழ்பெற்ற தமிழக மக்கள் வரலாறும் பண்பாடும்எனும் ஒரு சிறந்த நூலில் இடம் பெற்றவை
அண்ணாமலை சுகுமாரன் 22/6/2022Repost 22/6/2024
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

செல்வ மலி தமிழ் நாடு -- Empty Re: செல்வ மலி தமிழ் நாடு --

Post by Dr.S.Soundarapandian Sun Jun 23, 2024 1:14 pm

“கொறக்கை தாமிரவருருணி , பாண்டிய கவாடம் ஆகிய இடங்களில் கிடைத்த முத்துகளும் , மதுரையில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைவகைகளும்கௌடிலியரின் அருத்தசாத்திரத்தில் புகழிடம் பெற்று விளங்குகின்றன .” -

சுகுமாரன் சூப்பர் !
இத்தகைய ஆய்வுகளை இத்துடன் விட்டுவிடக் கூடாது ! தொடரவேண்டும் !
தமிழக அரசு தற்போது அகழாய்வுகளைத் தொடர்ந்து செய்து வருவது பாராட்டத் தக்கது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum