ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_m10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10 
Dr.S.Soundarapandian
ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_m10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10 
heezulia
ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_m10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10 
i6appar
ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_m10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10 
Jenila
ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_m10ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு

Go down

ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Empty ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு

Post by தண்டாயுதபாணி Wed Jan 27, 2010 6:23 pm



மனிதன் மனிதனாக வாழ்வதற்காக அவனை நெறிப்படுத்துவதற்காக மனிதனால் அமைக்கப்பெற்ற ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Avun
ஒழுக்க சீலங்களே “மதங்களும,; மத வழிபாட்டுத் தலங்களும்” இதை எந்த ஒரு
புத்தி ஐPவிகளும் மறுப்பதற்கில்லை. இப்படிப்பட்ட மதங்களிலே மிகவும் தொன்மை
வாய்ந்ததாகவும், கீழைத்தேசத்தில் வாழ்கின்ற அநேகமான மக்களால் வழிபடப்பட்டு
வருகின்றதுமாகிய இந்துமதத்தின், மதவழிபாட்டுத்தலங்களாக இருக்கின்ற
ஆலயங்கள் எவ்வளவு தூரம் மக்களை ஆலயவழிபாட்டுக்காக...



இழுத்துக்கொள்கின்றது என்பதை உளவியல் ரீதியான கண்ணோட்டத்தில் இக்கட்டுரையை ஆராய்ந்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.


“மனம் ஒரு குரங்கு” எனும் அடைமொழி சுட்டுவது, குரங்கு எவ்விதம் ஒரு இடத்தில்
தரித்து இருக்காது, ஒரு பொருளை மட்டும் விரும்பி உண்ணாது மரத்துக்கு மரம்,
இடத்துக்கு இடம் தாவித்திரியுமோ அதேபோல் மனித மனங்களும் ஒரு நிலைப்பட்டு
இருக்காமல், அது வாழ்க்கை என்ற வட்டத்தில் இன்ப துன்பங்களுக்கு வசப்பட்டு கோபம், விரக்தி, சந்தோசம்,
எரிச்சல், பொறாமை, அன்பு, பாசம், கவலை போன்ற எல்லாவற்றையும் தனக்குள்ளே
வைத்துக் கொண்டு குரங்கைப் போல தாவித்திரிகின்றன. எனவே, இவற்றை ஒரு
நிலைப்படுத்தி மனதுக்கு அமைதியைக் கொடுப்பதில் இந்த ஆலய வழிபாடு ஒரு முக்கிய மனவமைதிப் பொருளாக இருக்கின்றது என்பதே உளவியலாளர்களின் கருத்து.

சாம்பிராணிப் புகையில் ஒரு வகையான மாங்கல்ய குணம் உள்ளது. அதாவது
மனங்களை பரவசப்படுத்துகின்ற உணர்வு. ஆலயங்களிலே கட்டப்பட்டிருக்கின்ற
மங்கலான மின்குமிழ்
வெளிச்சமும் இந்த சாம்பிராணிப் புகையும், மற்றும் தூப தீபங்களின்
தன்மையும் எமது ஐம்புலன்க~டாக சென்று எமது மனதைப் பரவசப்படுத்தும் அல்லது
இறைவன்பால் சிந்திக்க வைக்கும் இயல்புடையது. இந்த நேரத்தில்த் தான்
எல்லோர் உள்ளங்களிலும்
புத்துணர்வு ஏற்பட்டு, இறைவனைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது. ஆண்டவன்
அருளால் எமது மனதுக்குச் சந்தோசம், நிம்மதி கிடைத்துவிட்டது என்று
கூறுகின்றோம். இங்கு நீங்களே ஒன்றை உணர்வீர்கள் பூசை இல்லாத நேரங்களில் எமக்கு இவ்வாறான ஒரு மனநிலை ஏற்படுவது இல்லை.

குளிர்மை, வெண்மை என்றாலே மக்களின் மனங்கள் நிறைந்துவிடும். அத்தோடு, மரக்கறிச் சாப்பாடு மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதுவும், ஆலயங்களில் பூஜை முடிந்ததும் அங்கு பிரசாதங்களாக ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Avu2
கொடுக்கப்படுகின்ற
சந்தனம், குங்குமம், மஞ்சள் என்பனவற்றை நாங்கள் நெற்றியிலே பூசுகிறோம்.
இங்கு ஒர் உண்மை இருக்கின்றது. என்னவெனில், மனிதனின் நரம்பு
மண்டலங்கள் எல்லாம் நெற்றியிலே குவிவதனால் நெற்றியில் சந்தனத்தைப்
பூசுகின்ற போது அவ்விடம் குளிர்வடைய ஏனைய உடம்பின் எல்லாப் பகுதிகளும்
குளிர்வடைகின்றது. அப்போது, எம் உள்ளத்தில் மனிதம் மறைக்கப்பட்டு, தெய்வீகம் குடிகொள்கின்றது.

ஆண்டவன் மீது கொண்டுள்ள அளவு கடந்த நம்பிக்கை, பிறவிப் பேறான சரீரத்தின் மீது வைத்துள்ள அளவுகடந்த பற்று
எம்மக்களை என்னவெல்லாம் செய்ய வைக்கின்றது. தமது எண்ணங்கள், நோக்கங்கள்,
வேண்டுதல்கள், குறிக்கோள்கள், போன்றவற்றை அடைவதற்காக இறைவனிடம்
கோரிக்கைகளை வைத்து, தமது உடலை வருத்தி நேர்த்திக்கடன் செய்கின்றார்கள்.
குறிப்பாக விரதம் இருத்தல், தீ மிதித்தல், கற்பூரச் சட்டி
ஏந்துதல், அலகு குத்தி காவடியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்ற
நேர்த்திகளைச் செய்து, உடலை வருத்தி ஆண்டவனிடம் மன்றாடினால் தமது
வேதனைகளைக் கண்ணுற்றாவது இறைவன் நிச்சயம் அருள் புரிவான், நிச்சயம் அருள் கிடைக்கும் என்கின்ற மன எண்ணம் அடியவர்களின் நனவிலி மனங்களிலே படிந்திருக்கின்றது.

இறைவனின் உறைவிடமான ஆலயம் சென்று, இறைவனின் திருவடிகளைத் தினமும் மனதார துதிப்பதன் ஊடாக எமக்கு தனு, கரன, புவன, போகங்களும் வந்து சேரும் என்கின்றனர் சமயப்
பெரியார்கள். இந்துக்களும் இதனையே நம்புகின்றனர். இதனையே
ஒளவைப்பிராட்டியார் கூறும் போது “ஓங்கார மூர்த்தியாகவும், பேரறிவே
உருவாகவும் விளங்குகின்ற யானைமுகக் கடவுளாம் விநாயகப் பெருமானின் தாமரை போன்ற திருவடிகளை திரி கரணத்துடன் தினமும் வனங்கித் துதிப்போர்க்கு,

“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்”

என்று உறுதி செய்கின்றார். நாம் தொடர்ந்து ஆலயம் செல்கின்ற போது
ஆலயச் சூழல், ஆலய அமைப்பு, விக்கிரகங்களின் தோற்றம், ஆலயத்தில் இருந்து
வரும் வாசைன (பூக்கள், பூமாலைகள்,
திருநீறு, சந்தனம், குங்குமம், சாம்பிராணி, பந்நீர்) போன்றவற்றின்
ஊடாகவும், ஆலயத்தில் தினமும் நடாத்தப்படும் ஆன்மீகச் சொற்பொழிவுகள்,
பிரசங்கங்கள் ஊடாகவும் எமது மனம் தமக்கு ஓர் “ஆன்மீக பலன்” கிடைத்து
விட்டதாக உணர்கின்றது. இவ்வாறான ஆன்ம பலத்திலிருந்து அபரீதமான சக்தி உருவாகின்றது என்கின்றனர் உளவியலாளர்கள்.

மக்களாகிய எமக்கு ஏற்படுகின்ற உடலியற் காயங்களையும், உளவியற் காயங்களையும் இறைவனின் சந்நிதானம் சென்று, இறைவனின் பாதங்களில் இறக்கி வைத்தால்த் தான் மனம் நிம்மதியடையும், ஏதோ ஒரு வகையான திருப்தி கிடைக்கும். இறைவன் நிச்சயம் எமது மண்றாட்டங்களைத் தீர்த்து வைப்பான் என்கின்ற மன நிலையே எம்மை ஆலயத்துக்கு அழைத்துச் செல்கின்றது என்றால் மிகையாகாது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தியானம் என்கின்ற யோகநெறி பற்றி நோக்குவது பொருத்தப்பாடுடையது. தியானம்
இருப்பதன் மூலம் மன இறுக்கம், மனக் கஸ்ரம், மனப் பாரம் , மனச் சஞ்சலம்,
என்பன தூக்கி வீசப்பட்டு மக்கள் மனங்களின் அச்ச நிலையைப் போக்கி,
தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு நினைவாற்றலையும் வளர்த்துச் செல்கின்றது. நாம்
வாழ்க்கையில் எதிலும் திருப்தி
கொள்ளாது இருப்பவர்கள். ஆனால், தொடர் தியானத்தின் மூலம் புதுப்பொலிவும்,
புத்தூக்கமும் ஏற்படுவதோடு ஆன்ம திருப்தியும் மனதளவிலாவது கிட்டும் என்பதை
மனதில் நிலைநாட்டி வாழ்கின்ற மக்கள் தமது தியானத்துக்கு உகந்த அமைதியான இடமாக ஆலயங்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.

இவர்களில் சிலர் இறைவனின் அருளால்த் தான் தமக்கு மனநிம்மதி ஏற்படுகின்றது என்று
எணணுகின்ற போதும், சிலர் அமைதியான சூழல், அதனால்த் தான் தாம் ஆலயம்
நாடிவருகின்றோம் என்றும் கருதுகின்றனர். இங்கு ஒரு விடயத்தை நாங்கள் நோக்க
வேண்டும். தியானம் செய்வதற்கு குழப்பங்கள் இல்லாத அமைதியான இடம் வேண்டும். அது வீடுகளில் கிடைக்காது. வீட்டில் தியானம் இருக்கின்ற போது புறச் சூழல், இன்ப துன்பங்களின்
தொல்லைகள் என்பன மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் இருப்பதற்கு சிலவேளைகளில்
இடம் தராது. இந்த சூழ் நிலையில் மனம் அமைதியாகவும், நறுமணங்களின்
வாசனையுடனும் தியானம் இருப்பதற்கு ஆலயச் சூழல் மனதுக்கு நிறைவைத் தருகின்றது என்பதுதான் வெளிப்படை உண்மையாக இருக்கின்றது.

உருவச் சிலைகள் அமைத்து வழிபடுகின்ற தன்மை மனதை ஒருநிலைப்படுத்தவும், மக்கள் ஆலயவழிபாட்டில்
விருப்புடன் ஈடுபடவும் பெரிதும் உதவின. இங்கு உருவச் சிலைகள் அமைக்காது
மனக்கண் மூலம் வழிபடுகின்ற வழிபாட்டு முறை இருந்திருந்தால் யாருமே ஆலயம்
செல்ல மாட்டார்கள். சிறந்த முறையில் மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை வழிபடுவதற்கு விக்கிரக அமைப்பு முறை பெரிதும் உதவுகின்றன. இதன் காரணமாகவேதான் ஆலயங்கள் அமைத்து விக்கிரகங்களை பிரதிஸ்ட்டை செய்தார்கள் இங்கு மிகப்பெரிய உளவியல்ப் பின்புலம் காட்டப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததே.

மேலும் வறுமை, போர் என்பன எம்மைத் துரத்தி வரும் போது நாம் இறைவனைத் தேடி ஓடுகிறோம். இறைவன் எங்களைப் பாதுகாக்கின்றான் என்று எங்கள் மனங்களை
நாங்களே திருப்த்திப்படுத்திக் கொள்கின்றோம் “படைத்தவன் படி அளப்பான்.”
என்று கூறி இடையிடையே வியாக்கியானங்களையும் முன்வைக்கின்றோம.; ஆக
மொத்தத்தில், எங்களுடைய உள்ளங்களின் நம்பிக்கையே ஆலய வழிபாடுகளுக்கு முக்கிய காரணம் என்பதையும், மக்கள் ஆலயம் நோக்கி படையெடுக்க முக்கிய கருவி என்பதையும் யாருமே மறுப்பதற்கில்லை.

கட்டுரையை எழுதியவர் : Supakaran.S




ஆலய வழிபாடு: ஓர் உளவியல் நோக்கு Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum