Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!
3 posters
Page 1 of 1
'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!
!['பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்! Vikatan%2F2019-05%2F62cdae0d-2622-4c7d-94da-3857665c7cc2%2F111394_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1](https://gumlet.vikatan.com/vikatan%2F2019-05%2F62cdae0d-2622-4c7d-94da-3857665c7cc2%2F111394_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1.0)
ஒரு பெண்ணுக்கு வளையல் காப்பு நிகழ்ச்சி நடந்தது.
வளையல் போட்டு வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆசி வழங்கும்
பேரில் கணிசமான கூட்டம் அங்கே கூடியிருந்தது. எல்லாரும் அந்தப்
பெண்ணுக்கு வளையலை அணிந்துவிட்டு, வாயில் சர்க்கரையையும்
அள்ளிப் போட்டு விட்டு சொன்ன செய்தி சர்க்கரையைக் கூட
கசப்பாய் மாற்றிவிட்டது.
"இந்தா பாருமா! சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளையைப்
பெற்றுத்தரணும்!" ஏற்கெனவே அந்தப் பெண்ணின் கணவன்
"ஆண் பிள்ளை பிறந்தால்தான் என் வீட்டுக்கு வர வேண்டும் இல்லை
எனில், உன் அப்பா வீட்டோடவே இருந்து விடு!" என்று சொன்ன
வார்த்தைகள் அவளுக்குள் ஒரு பிரளயத்தை நடத்திக் கொண்டிருக்க
வந்தவர்கள் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சினார்கள்.
இந்த வார்த்தைகளைச் சொல்லிப் போனவர்கள் எல்லாம் ஊர்ப்பக்கம்
'கட்டுகளத்திகள்' என்று மரியதையோடு அழைக்கப்படும் வயதில்
முதிர்ந்த பெண்கள்! இது ஏதோ பெண்ணடிமை காலத்தில்
சொல்லப்பட்ட வார்த்தைகளும் அல்ல. நாகரிகம் மிகுந்த இந்தக்
காலத்திலும் ஒவ்வொரு பெண்ணிடமும் சொல்லப்படும் வலி மிகுந்த
வார்த்தைகள்.
குழந்தை பெறுவது ஆண் பெண் இருபாலரும் சம்பந்தப்பட்ட ஒரு
விஷயம் ! இதில் பெண்ணை மட்டும் சாடுவதும் அதுவும் பெண் குழந்தை
வேண்டாம், ஆண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று வேண்டுவதும்
எவ்வளவு பெரிய அறியாமை!
பொதுவாக, பெண்ணியம் பேசுபவர்கள் முன் வைக்கும் கருத்து
ஆண்களால்தாம் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்று!
ஆனால், இன்று பல பெண்கள் தாங்கள் அடிமையாய் இருப்பதுதாம்
தங்களின் கற்புக்கும், வாழ்க்கைக்கும் பாதுகாப்பு என்ற நினைப்பதுதான்
அவர்களை இன்னும் அடிமையாய் வைத்திருக்கிறது.
தங்களின் மீதான அடக்குமுறையையே இத்தனை யுகங்கள் அடிமையாய்
இருந்தும் பெரும்பாலான பெண்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.
இந்தச் சமூகமும், அவளைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அவளை,
அடிமைத் தளையைப் பூண்டு கொள்வதுதான் பெண்ணின் பிறவிப் பயன்
என்னும் மடமையைப் போதித்துக்கொண்டிருக்கிறது.
எப்பொழுது ஒரு பெண் பூப்படைகிறாளோ அன்றிலிருந்து அவளுக்குப்
படிப்பிக்கப்படும் வாழ்க்கை பாடம் என்ன தெரியுமா! திருமணம் செய்து
வைக்கப்படும் இடம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களை
நீ சகித்துக்கொள்ள வேண்டும். கணவன் எப்படி இருந்தாலும் அங்குதான்
உன் வாழ்க்கை!
ஒரு வேளை நீ வாழாவெட்டியாகத் திரும்பி வந்தால் இந்தச் சமூகம் எங்கள்
வளர்ப்பைத்தான் குறை சொல்லும். இப்படியான படிப்பினைகளை
நேரடியாகச் சொல்லாவிட்டாலும் நீட்டி முழக்கி ஒவ்வொரு நாளும் அந்தப்
பெண்ணுக்குச் சொல்லிப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
அவளின் அம்மாவும் தன் அடிமை வாழ்க்கை மூலம் தன் மகளுக்கு
எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டும் அதே
சமயத்தில் அந்தக் குடும்பத்தின் தலைவராக இருக்கும் அப்பாவும் தன் ஆண்
பிள்ளைக்கு எப்படிப்பட்ட ஆணாதிக்கத்தைப் பெண்கள்மீது செலுத்த
வேண்டும் என்பதை தன் மனைவியை அடக்கி ஆள்வதன் மூலம் காட்டுகிறார்.
காலம் காலமாய் ஆண் பெண் வேறுபாட்டையும், பெண்ணடிமையையும்,
ஆணாதிக்கத்தையும் இன்றுவரை நிலைக்கச் செய்வது இந்த
போதனைகள்தாம். இதனை படிப்பு கொடுத்து மாற்றி விடலாம் என்று
பலபேர் நினைத்தனர். இன்று எத்தனையோ பெண்கள் படித்துவிட்டார்கள்.
வேலைக்குப் போகிறார்கள். ஆண் பெண் பாலின விகிதம் எவ்வளவோ
உயர்ந்திருக்கிறது. ஆனால், மாற்றத்தின் வேகம் திருப்தியாக இல்லையே!
மொத்தமாக எந்த ஒரு பெண்ணையும் இந்தச் சமூகம் அவளின் பிறப்பு
முதல் இறப்பு வரை அவளுக்கான வாழ்க்கையை வாழவிடுவதே இல்லை.
ஒருவேளை இதையெல்லாம் ஏன் என்று ஒருத்தி பகுத்தறிவுடன் கேள்வி
கேட்டால் அவளை திமிர் பிடித்தவள் ! வீட்டுக்கு அடங்காதவள் ! என்று
முத்திரை குத்த தயங்காத சமுகத்தில் தானே நாம் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
இன்று பெண்ணடிமை வாதம் மாறிவிட்டது என்று யாராவது சொல்ல
முன்வந்தால் அவர்கள் கடைக்கோடி கிராமங்களை இன்னும் முழுமையாய்
படிக்கவில்லை என்பதே பதிலாக இருக்க முடியும்.
பெண்களுக்கு வெறும் பாலியல் கொடுமை மட்டும் பிரச்னையல்ல
உடலளவிலும் மனதளவிலும் இந்தச் சமூகம் நிதம் நிதம் ஏற்படுத்தும்
வலிகள் அதிகம்! ஆனால், அதையும் அமைதியோடு ஏற்பதே பெருமை
என்று போராடிக்கொண்டிருக்கிறது இந்தப் பெண் சமூகமும்!
இதிலிருந்து எல்லாம் வெளியே வர ஒரே வழி பெண்களே தங்களின்
பிரச்னையைப் புரிந்துகொண்டு சமூகம் என்ன நினைக்குமோ? என்று
பயந்து ஒடுங்கக் கூடாது. அதைவிட மிக முக்கியமானது பெண் என்பதில்
பெருமைகொள்ள வேண்டும்.
அந்த மனநிலைதான் பெண்ணியத்தின் முதல் படி.
இந்த வேலை பெண்ணான என்னாலும் செய்ய முடியும், தனக்குப் பெண்
குழந்தை பிறப்பதில் பெருமை, பெண் குழந்தை எனப் பேதம் பார்க்க
மாட்டேன் என்கிற மன உறுதிகளைப் பெற வேண்டும்.
இவ்வாறு நினைக்கும் சகப் பெண்களை மதித்து, அவர்களோடு இணைந்து
பணியாற்ற வேண்டும். அப்போதே சமூகத்தில் மாற்றத்தை எதிர்பார்க்க
முடியும்.
-
நன்றி-இர.ஏஞ்சலின் ரெனிட்டா (விகடன்)
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!
ஒரு பெண் கர்பம் ஆவதற்கு எப்பிடி ஆன் முக்கியமோ
அதே போல் பிறக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ
அதுவும் ஆணின் விந்தணுக்களின் தன்மை பொறுத்தே.
அதே போல் பிறக்கும் குழந்தை ஆணோ பெண்ணோ
அதுவும் ஆணின் விந்தணுக்களின் தன்மை பொறுத்தே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!
அறியாமை என்ற இருள்.
Print out கடவுள் தான் உரிமையாளர்![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Print out கடவுள் தான் உரிமையாளர்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023
Re: 'பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்!
மொத்தமாக எந்த ஒரு பெண்ணையும் இந்தச் சமூகம் அவளின் பிறப்பு
முதல் இறப்பு வரை அவளுக்கான வாழ்க்கையை வாழவிடுவதே இல்லை.
ஒருவேளை இதையெல்லாம் ஏன் என்று ஒருத்தி பகுத்தறிவுடன் கேள்வி
கேட்டால் அவளை திமிர் பிடித்தவள் ! வீட்டுக்கு அடங்காதவள் ! என்று
முத்திரை குத்த தயங்காத சமுகத்தில் தானே நாம் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
பெண் அல்லது ஆண் இருவரும் இப்படி பட்ட பிரச்சனை வருவது வழக்கம். சமுதாய சிந்தனை அறிவு கல்வி அன்பு பொது நல சிந்தனை இப்படி பல காரணங்கள்!['பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்! 1757813334](/users/1813/71/41/02/smiles/1757813334.gif)
முதல் இறப்பு வரை அவளுக்கான வாழ்க்கையை வாழவிடுவதே இல்லை.
ஒருவேளை இதையெல்லாம் ஏன் என்று ஒருத்தி பகுத்தறிவுடன் கேள்வி
கேட்டால் அவளை திமிர் பிடித்தவள் ! வீட்டுக்கு அடங்காதவள் ! என்று
முத்திரை குத்த தயங்காத சமுகத்தில் தானே நாம் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
பெண் அல்லது ஆண் இருவரும் இப்படி பட்ட பிரச்சனை வருவது வழக்கம். சமுதாய சிந்தனை அறிவு கல்வி அன்பு பொது நல சிந்தனை இப்படி பல காரணங்கள்
!['பெண்' எனப் பெருமை கொள்வதில் தொடங்குகிறது பெண்ணியம்! 1757813334](/users/1813/71/41/02/smiles/1757813334.gif)
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 10/09/2023
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...
» ஏழை வீட்டுப் பெண் மருமகளாக வந்ததில் பெருமை: நடிகர் வடிவேலு
» தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.
» யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம்
» போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
» ஏழை வீட்டுப் பெண் மருமகளாக வந்ததில் பெருமை: நடிகர் வடிவேலு
» தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.
» யூடியூப் பகிர்வு: பெண் சக்தியின் பெருமை சொல்லும் 'வுமன் எச்டூஓ' குறும்படம்
» போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|