ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:23 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 3:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா

Go down

ஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா Empty ஹைக்கூ விருந்து நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா

Post by eraeravi Tue Sep 12, 2023 10:57 pm

ஹைக்கூ விருந்து
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா

வானதி பதிப்பகம் .தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17. தொலைபேசி 044- 24342810- 24310769 மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கங்கள் 80 விலை ரூபாய் 80 *

கோபுர நுழைவாயில்

காலங்கள் மூன்று. அருஞ்சுவை கனி மூன்று. வாமனன் அளந்த அடி மூன்று. பாரதத்தை சூழ்ந்துள்ள கடல் மூன்று. மங்கல நாணில் இடப்படும் முடிச்சு மூன்று. தேசியக்கொடியின் வண்ணம் மூன்று. அக்காலம் முதல் இக்காலம் வரை மூன்று என்ற எண் முக்கியத்துவம் பெற்றிருக்க கவி. இரா. இரவி தன் எழுதுகோலை வைத்து சமூகத்திற்கு சாட்டையடி கொடுக்கும் கவிதையின் வரிகளும் மூன்று தான்.

புல்லாங்குழல் முதல் வீணை வரை, எருக்கம்பூ முதல் மல்லிகைப்பூ வரை, அய்யனார் முதல் ஆலகால விஷம் அருந்திய அகிலாண்டேஸ்வரர் வரை, மண்சுவர் முதல் அரண்மனை வரை, இராமன் முதல் இராவணன் வரை, எறும்பு முதல் யானை வரை, புதிரும் விடுகதையுமாய், கேள்விக்குறியும் ஆச்சரியமுமாய், படிமமும் குறியீடுமாய், சித்திரமும் விசித்திரமுமாய் ஹைக்கூ விருந்து என்னும் கவி. இரா. இரவி அவர்களுது நூல் சமூகத்தை ஆதி முதல் அந்தம் வரை அலசி ஆராய்ந்துள்ள விதம் பாராட்டத்தக்க ஒன்றாகும்.

கற்பனையா? காவியமா?

உயர்திணையை விட்டுவிட்டு அஃறிணை, ஆத்திகம் விடுத்து நாத்திகம், ஆடம்பரம் விட்டு எளிமை, அசைவம் விட்டு சைவம், பொய்மை விட்டு உண்மை, அக்காலம் விடுத்து இக்காலம் என வித்தியாசமான கோணத்தில் கவி. இரவியின் எழுதுகோல், கோடாரியாய் அவதாரம் எடுத்த சமூகம் எனும் தோப்பில் உள்ள விஷ விருட்சங்களை வெட்டிச் சாய்க்கின்றது.

நதியோட்டம்

ஹைக்கூ விருந்து என்னும் இந்நூலில் பக்கத்திற்கு பக்கம் வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்து விட்டு செல்கின்றன. தோட்டத்தில் மலரக்கூடிய மலர்களோ இடம் பெயர்ந்து இனம் புரியாமல் கவிஞரின் எழுதுகோலுக்குள் புகுந்து சொற்பூக்களாய் பூத்து குலுங்குகின்றன. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களை கருவாக வைத்துக்கொண்டு, கவிஞர் ன்றே வரிகளில் மூடப்பழக்கவழக்கங்களை முறியடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

நவரத்தினங்களில் முத்து

மிதப்பதாக நினைத்து
மூழ்குபவன்
குடிகாரம் (ப.எண் 16)

சாட்டையடி ஹைக்கூ.

பெருமூச்சு விட்டாள்
தங்க கோபுரம் பார்த்து
முதிர்கன்னி (ப.எண் 18)

நெற்றியடி ஹைக்கூ.

காப்பியம் காவியம்
எல்லாம் ஒரே விலை
பழைய காகித வியாபாரி. (ப.எண் 50)

புதிர் ஹைக்கூ.

மேலிருந்து குதித்தான்
மரணம் இல்லை
நீச்சல் குளம் (ப.எண் 35)

குறியீட்டு ஹைக்கூ.

வேடந்தாங்கல் செல்லாத
தகரப்பறவை
விமானம் (ப.எண் 44)

முரண் ஹைக்கூ.

யாகம் நடந்தது
மழைக்காக
மரங்களை வெட்டி (ப.எண் 12)

மனமார ...

சங்க காலம் முதல் சக மனிதர்கள் வாழும் தற்காலம் வரையுள்ள சமூக சீர்கேடுகளை மூன்றே வரிகளில் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், நச்சு மரங்களின் விழுதுகளையும் வேர்களையும் கவிஞர் இரா. இரவி தம் எழுத்தாணியை வைத்து தகர்த்து எறிந்துள்ளது. வியக்கத்தக்க ஒன்றே செந்தூர் முருகன் கரங்களில் திகழும் வைரவேல் போன்ற இவரது இலக்கியப்படைப்புகள் ஒளிரட்டும் என்று இணையதள நேயர்கள் சார்பில் மனமார வாழ்த்துகின்றோம் ..

eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 09/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum