Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘சனாதன தர்மம் என்பதில் பிரிவினையோ பாகுபாடோ கிடையாது!’ -துஷ்யந்த் ஸ்ரீதர்
Page 1 of 1
‘சனாதன தர்மம் என்பதில் பிரிவினையோ பாகுபாடோ கிடையாது!’ -துஷ்யந்த் ஸ்ரீதர்
![‘சனாதன தர்மம் என்பதில் பிரிவினையோ பாகுபாடோ கிடையாது!’ -துஷ்யந்த் ஸ்ரீதர் Kalkionline%2F2023-09%2F1537ed98-78f5-4723-a475-2b5b17679a46%2FDhushyanth_sridar_2.jpg?auto=format%2Ccompress&format=webp&w=768&dpr=1](https://gumlet.assettype.com/kalkionline%2F2023-09%2F1537ed98-78f5-4723-a475-2b5b17679a46%2FDhushyanth_sridar_2.jpg?auto=format%2Ccompress&format=webp&w=768&dpr=1.0)
நமக்கு நன்கு அறிமுகமான ஆன்மிக சொற்பொழிவாளர்
துஷ்யந்த் ஸ்ரீதர் - அறிவியலிலிருந்து ஆன்மிகம் வந்தவர்;
வேதங்களையும் புராணங்களையும் பற்றி இந்தக் காலத்துக்கு
ஏற்றபடி, நகைச்சுவை உணர்வைக் கலந்து பேசுபவர்;
குழந்தைகள் முதல் மெத்தப் படித்தவர்கள் வரை, அவரவர்கள்
புரிந்துகொள்ளக் கூடிய, பயனடையக் கூடிய வகையில்
ஹரி கதை சொல்லும் வித்வத் படைத்தவர்.
கல்கி ஆன்லைனில், நமது ‘தீபம்’ பிரிவில் அவருடனான
நேர்காணலைப் பதிவிடுவதில் பெருமிதம் அடைகிறோம். கல்கி
ஆன்லைன் YouTube சேனலுக்கு அவர் அளித்த பிரத்யேக
பேட்டியிலிருந்து ஒருசில துளிகள் இங்கு தொகுப்பாக...
சந்தித்து உரையாடியவர் உஷா ராம்கி.
உஷா:
சனாதன தர்மம் என்பது மனிதர்கள் எல்லோரும் ஒன்று என்று
போதிக்கக்கூடிய ஒரு விஷயம். மனித குலத்துக்குப் பொதுவான
கோட்பாடுகளையும், நெறிகளையும் சொல்லக்கூடியது. அப்படி
இருக்கையில், கோயில், பூஜை, பக்தி என்று அனைத்திலும்
பிரிவினையை உண்டாக்குகிற நிலை இருக்கிறது.
ஒரு வகுப்பு மற்றொரு வகுப்பைத் தாக்குவதாக இருக்கிறது.
இதில் எங்கே தப்பு நடக்கிறது?
துஷ்யந்த்:
சனாதன தர்மம் உலகத்துக்குத் தந்திருக்கும் மிகப்பெரிய
கிரந்தங்கள் பல்வேறு சமூகத்தவரால் அருளப்பட்டது. அதில்
பிரிவினையோ பாகுபாடோ இல்லவே இல்லை.
இப்போது பிரிவினை வருவதற்கு முக்கியக் காரணம், ஒரு
சமூகத்தினர் இன்னொரு சமூகத்தவரை மட்டமாகவோ
அல்லது தன்னை உயர்ந்தவராகவோ காட்டுவதனால்
வருவதுதான்.
இது தவறு; இது சனாதன தர்மத்தில் சொல்லப்படவில்லை.
மேற்கத்திய தேசங்களில் வெள்ளையர்கள், கறுப்பர்கள் என்ற
வேற்றுமை இருக்கிறது. இதுபோன்ற வேற்றுமைகள் எல்லாமே
நாமாக ஏற்படுத்திக் கொண்டவையே தவிர, சனாதன தர்மத்தில்
சொல்லப்பட்டவை அல்ல.
உஷா:
நம் எல்லோர் வீட்டிலேயும் பூஜை அறை இருக்கிறது.
அது எப்படி இருக்க வேண்டும்.
துஷ்யந்த்:
வீடானாலும் கோயிலானாலும் இறைவன் இருப்பது நம்
இருதயத்தில்தான். இது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால்,
அவரை உணர முடிவதில்லை. அதனால் பூஜை அறை ஒன்றை
அமைத்து அதில் இறைவனை வைத்து வழிபடுகிறோம். அதன்
மூலம் இறைவனை உணர்கிறோம்.
பூஜை அறையை முடிந்த வரை சிம்பிளாக வைத்துக்கொள்ளலாம்
என்பது என் அபிப்ராயம். நூற்றுக்கணக்கான படங்களை சேர்த்து
வைத்தீர்களானால், உங்கள் காலத்துக்குப் பிறகு அவற்றை என்ன
செய்வது என்று தெரியாமல் உங்கள் குழந்தைகள் அவற்றைத்
தூக்கி எறிந்துவிட்டால், நீங்கள் பூஜித்து வைத்திருந்த படங்கள்
தெருவில் கிடக்கும்.
இதைத் தவிர்க்க உங்கள் குல தெய்வம், இஷ்ட தெய்வம் போன்ற
ஒன்றிரண்டை வைத்தாலே போதும். இதுபோன்ற கலர் படங்கள்
இல்லாத காலத்தில் நம் மூதாதையர்கள் பூஜிக்கவில்லையா
என்ன?
தீபம் ஏற்றுதல் ரொம்ப விசேஷமான ஒன்று, அதைக் கட்டாயம்
செய்யலாம். இறைவன் ரொம்ப சுலபன், நம்மை கோபிக்க
மாட்டார், நம் பக்தியை எப்படியும் ஏற்றுக் கொள்வார்.
உஷா:
நல்லதைச் செய்பவர்களுக்கு சோதனைகளும், கஷ்டமும் வரும்
போது, ‘இது கர்ம பலன், நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்’
என்பது தெரிந்தாலும், நல்லவராகவே இருக்க வேண்டும் என்ற
வைராக்கியத்தை ஒரு உறுதியுடன் எப்படி வளர்த்துக் கொள்வது?
துஷ்யந்த்:
நம் தெற்கு பாரதத்தில் இருந்த மகான்கள்; பக்தியை வளர்த்தவர்கள்;
தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் தொண்டாற்றியவர்கள்; சனாதன
தர்மத்துக்காகப் போராடியவர்கள் இப்படி நல்லதை மட்டுமே செய்து
தொண்டாற்றியவர்களே
நிறைய துன்பங்களையும், கஷ்டத்தையும் அனுபவித்திருக்கிறார்கள்.
அவர்களே அதற்கு விதிவிலக்கு இல்லை என்கிறபோது, நாமும் இதை
அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்ற பக்குவம் வர வேண்டும்.
அது இறை அருளால் கிடைக்கும்.
நம் பாரத தேசத்தில், சனாதன தர்மம் வேறூன்றி நல்லதை நிலை
நாட்டியதற்கு காரணம், நல்லவற்றைக் காதால் கேட்டு, வாயால் பாடி,
மனதால் சிந்திக்கப் பழகியதால்தான். கஷ்டம் குறைய பல மைல்
தூரம் சென்று பரிகாரம் செய்ய முயல்வதை விட, சுலபமானது
வீட்டிலிருந்தபடியே எவ்வளவுக்கெவ்வளவு நல்லவற்றைக் கேட்க
முடியுமோ அதைச் செய்யலாம்.
அதுவும் இந்த யுட்யூப் காலத்தில், நிறைய பேர் நல்லவற்றை
சொல்லியிருப்பதைக் கேட்க முடியுமே. அதைச் செய்யும்போது,
கஷ்டத்தை எதிர்கொள்ளக்கூடிய வலிமையும், பக்குவமும்
கிடைக்கிறது.
உஷா:
ஆன்மிகத்தையும், நல்ல விஷயத்தையும் கேட்க, படிக்க ரிடையர்
ஆன பிறகுதானே நேரம் கிடைக்கும். அப்போது செய்யத்
தொடங்குவது சரியாக இருக்குமா?
துஷ்யந்த்:
ஒரு வேலைக்குச் சேரும்போது, பிராவிடன்ட் ஃபண்ட் பிடிக்க
ஆரம்பிப்பார்கள். அது ஓய்வு பெறும்வரை சேர்ந்துகொண்டே வரும்.
இறுதியில் அதற்கான பலன் கிடைக்கும். அதுபோல, ஆன்மிக பலத்தை
சிறிய வயதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும். அறுபது வயதுக்கு
மேல் திடீரென்று, நான் உடம்புக்கு வந்து கஷ்டப்படக் கூடாது,
எனது மரணம் இப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் நினைக்கத்
தொடங்குவதற்கு பதிலாக, இளம் வயதிலேயே தினமும் இதற்கு ஐந்து
நிமிடம் ஒதுக்கினால், அது ஓய்வு பெறும் காலத்தில் நமக்கு நல்ல பலன்
தரும்.
சனாதன தர்ம வழி வந்தவராக இருந்தால் ஒரு பகவத் கீதை படிக்கலாம்;
இஸ்லாமியர் குரான் படிக்கலாம்; கிறித்தவர் பைபிள் படிக்கலாம்.
24 மணி நேரத்தில் தினமும் ஐந்து நிமிடம் படித்துக் கொண்டே வந்தால்,
அறுபது வயதில், இறைவன் நமக்கு எதைத் தந்தாலும், நமது கர்மபலன்
எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகி விடுவோம்.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ‘சனாதன தர்மம் என்பதில் பிரிவினையோ பாகுபாடோ கிடையாது!’ -துஷ்யந்த் ஸ்ரீதர்
உஷா:
கடவுளை நாம் பார்க்க முடியாது என்பதால்தான் குரு என்பவர்
இருக்கிறார். அவரிடம் போய் நம் கஷ்டத்தைச் சொல்லி,
அதற்குத் தீர்வு கேட்கிறோம். ஆனால், நாம் தேடிப்போவது
ஒரு மஹான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?
அவர் எப்படிப்பட்டவர் என்பதை எப்படி அறிவது?
துஷ்யந்த்:
‘நாயகன்’ படத்தில் வருவது போல், ‘நீங்க நல்லவரா?
கெட்டவரா?’ என்று கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாது. வேதாந்த
தேசிகர் ஒரு ஆச்சாரியரின் லட்சணங்கள் என்றே சிலவற்றைக்
குறிப்பிடுகிறார். ஆசாரியர் துறவியாக இருக்கவேண்டிய
அவசியமில்லை, துறவி ஆசாரியராய் இருப்பார் என்று சொல்ல
முடியாது.
நம்மிடையே வாழ்ந்த காஞ்சி மஹாபெரியவர் என்று சொல்லக்
கூடிய பரமாச்சாரியாள் போன்று சம்பிரதாயத்தில், பாரம்பர்யமாக
வந்த பல ஆசாரியர்களைப் பின்பற்றுவது நல்லது.
ஆனால், இது பிரச்னைகளுக்கு விரைவான விடை காணும் காலமாக
இருக்கிறது. ‘யார் எனக்கு உடனே இதற்கு உதவி செய்வார்’
என்பதே முக்கியமாகப் போகிறது. நமக்கு அதிசயம் நடக்க
வேண்டும் என்று எதிர்பார்த்து ஒருவரிடம் செல்லும்போது, அவர்
வேறு ஒரு அதிசயத்தைச் செய்துவிட்டு காணாமல்கூட போய்
விடுகிறார்.
மதத்தை ஆதாரமாக வைத்து ஏமாற்றுபவர்களுக்கு, சனாதன
தர்மத்தில் இடம் கிடையாது.
உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை பாவித்துக் கேட்டால்,
ஒரே ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அற்புதம் (MIRACLE)
நடக்க வேண்டும் என்று நம்பாதீர்கள்; ஞானத்தை நம்புங்கள்.
-
நன்றி:
உஷா ராம்கி (தீபம்)
கடவுளை நாம் பார்க்க முடியாது என்பதால்தான் குரு என்பவர்
இருக்கிறார். அவரிடம் போய் நம் கஷ்டத்தைச் சொல்லி,
அதற்குத் தீர்வு கேட்கிறோம். ஆனால், நாம் தேடிப்போவது
ஒரு மஹான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?
அவர் எப்படிப்பட்டவர் என்பதை எப்படி அறிவது?
துஷ்யந்த்:
‘நாயகன்’ படத்தில் வருவது போல், ‘நீங்க நல்லவரா?
கெட்டவரா?’ என்று கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாது. வேதாந்த
தேசிகர் ஒரு ஆச்சாரியரின் லட்சணங்கள் என்றே சிலவற்றைக்
குறிப்பிடுகிறார். ஆசாரியர் துறவியாக இருக்கவேண்டிய
அவசியமில்லை, துறவி ஆசாரியராய் இருப்பார் என்று சொல்ல
முடியாது.
நம்மிடையே வாழ்ந்த காஞ்சி மஹாபெரியவர் என்று சொல்லக்
கூடிய பரமாச்சாரியாள் போன்று சம்பிரதாயத்தில், பாரம்பர்யமாக
வந்த பல ஆசாரியர்களைப் பின்பற்றுவது நல்லது.
ஆனால், இது பிரச்னைகளுக்கு விரைவான விடை காணும் காலமாக
இருக்கிறது. ‘யார் எனக்கு உடனே இதற்கு உதவி செய்வார்’
என்பதே முக்கியமாகப் போகிறது. நமக்கு அதிசயம் நடக்க
வேண்டும் என்று எதிர்பார்த்து ஒருவரிடம் செல்லும்போது, அவர்
வேறு ஒரு அதிசயத்தைச் செய்துவிட்டு காணாமல்கூட போய்
விடுகிறார்.
மதத்தை ஆதாரமாக வைத்து ஏமாற்றுபவர்களுக்கு, சனாதன
தர்மத்தில் இடம் கிடையாது.
உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை பாவித்துக் கேட்டால்,
ஒரே ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அற்புதம் (MIRACLE)
நடக்க வேண்டும் என்று நம்பாதீர்கள்; ஞானத்தை நம்புங்கள்.
-
நன்றி:
உஷா ராம்கி (தீபம்)
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சனாதன ஹிந்து தர்மம்
» சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?
» லவ் ஜிஹாத், மத மாற்றம், சனாதன தர்மம் - நாடு தழுவிய விஸ்வ இந்து பரிஷத் பிரச்சாரம்
» தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது
» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
» சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?
» லவ் ஜிஹாத், மத மாற்றம், சனாதன தர்மம் - நாடு தழுவிய விஸ்வ இந்து பரிஷத் பிரச்சாரம்
» தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது
» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|