ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் - மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்

2 posters

Go down

தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் -  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்  Empty தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் - மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்

Post by சிவா Fri Sep 01, 2023 5:22 pm

தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் -  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்  Uk9BrQf

கொல்கத்தாவில் உள்ள மருத்துவர்களைக் குறிவைத்து, புதிதாக தற்கொலை மோசடி ஒன்று நடந்து வருகிறது. இது குறித்து சைபர் பிரிவு காவல்துறையினர் மக்களை எச்சரித்துள்ளனர்.

முன்பு, விடியோ காலில் ஆடைகளின்றி ஒரு நபர் பேசி அதனை போட்டோவாக எடுத்து மிரட்டும் மோசடி நடைபெற்று வந்தது. தற்போதும் நடக்கிறது. என்ன பொதுமக்கள் சற்று எச்சரிக்கையாக இருந்து வருகிறார்கள்.

தற்போது, அதே விடியோ கால் முறையில், மருத்துவர்கள் மற்றும் நடுத்தர சம்பளம் வாங்குவோரைக் குறி வைத்து மோசடியாளர்கள் புதிய மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

முதலில், ஆன்லைன் மூலம் நேர்காணல் அல்லது ஆலோசனை என்ற பெயரில், விடியோ காலில் ஒரு பெண் யாரேனும் ஒருவரை அழைத்துப் பேசுகிறார். பேசி முடிந்ததும், அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியான செய்திகளுடன் அழைப்பை துண்டிக்கிறார். பிறகுதான் ஆரம்பிக்கிறது துயரம்.

சில மணி நேரங்களில், அழைப்பை மேற்கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்டதாக, அழைக்கப்பட்ட நபருக்கு போன் வருகிறது. உங்களிடம் பேசிய சில மணி நேரங்களில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று மிரட்டி, தற்கொலை செய்து கொண்டதற்கான மருத்துவச் சான்றிதழும் அனுப்பி வைக்கப்படுகிறது.

நேரடியாக மோசடியாளர்கள் மிரட்டி பணம் கேட்பதெல்லாம் இல்லை. அதற்கும் மேல் சென்று, அடுத்து ஒருவர் காவலர் என்று அழைத்துப் பேசுகிறார். பிறகு, விசாரணைக்கு அழைப்பதாக நீதிமன்ற சம்மனை வாட்ஸ்ஆப்பில் அனுப்புகிறார்கள். நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து தப்பிக்க காவலர் கேட்கும் தொகையை அந்த நபர் கொடுக்க வேண்டியதாகிறது.

இப்படி ஒரு புகாருடன் சைபர் கிரைம் காவல்துறையினரை ஆகஸ்ட் மாதத்தில் தொடர்பு கொண்ட இருவரும் கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர்களாம். இந்தப் புகாரில் 22 வயதான ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார்.

எனவே, இதுபோன்ற தற்கொலை மிரட்டல் மோசடிகளும் நடப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், எந்த மோசடியில் சிக்கிக் கொண்டாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக காவல்துறையினரை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் -  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் -  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்  Empty Re: தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் - மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்

Post by T.N.Balasubramanian Fri Sep 01, 2023 5:27 pm

பணம் எப்பிடி எப்பிடி எல்லாம் சம்பாதிக்கலாம் என ஒரு முதுகலை பட்டம் தருமளவிற்கு
யுக்திகள் படைத்த மனித கூட்டம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் -  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்  Empty Re: தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் - மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்

Post by சிவா Fri Sep 01, 2023 5:33 pm

T.N.Balasubramanian wrote:பணம் எப்பிடி எப்பிடி எல்லாம் சம்பாதிக்கலாம் என ஒரு முதுகலை பட்டம் தருமளவிற்கு
யுக்திகள் படைத்த மனித கூட்டம்.


ஈவு இரக்கமின்றி மற்றவர் உழைப்பைச் சுரண்டும் இவர்கள் எந்தவகை பிறவிகள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.


தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் -  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் -  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்  Empty Re: தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் - மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்

Post by சிவா Fri Sep 01, 2023 5:43 pm

ஹனி-டிராப் மோசடிகளில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?



தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் -  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்  Hey_want_to

அண்மைக்காலமாக சென்னையில் ஹனி-டிராப் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், சைபர் பிரிவு காவல்துறையினர் மக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது.

ஹனி-டிராப் மோசடிகளில் சிக்கிக் கொண்டால் பணத்தைக் கொடுத்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல், உடனடியாக சைபர் பிரிவு காவல்துறையினரை நாடலாம் என்றும், சைபர் பிரிவு இணையதள முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பெரும்பாலும் குற்றவாளிகள் வெளிநாடுகள் அல்லது வெளி மாநிலங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சென்னையில் கிட்டத்தட்ட 40 பேர் சைபர் பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாகவே, இதுபோன்ற ஹனி-டிராப் மோசடிகளில் சிக்கிக் கொண்டவர்கள், தங்களைப் பற்றி தவறாக வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் பணம் கொடுக்க நினைக்கிறார்கள். ஆனால், யாரும் இதுபோன்று பணம் கொடுத்து ஏமாற வேண்டாம், உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையின் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை நாடலாம் என்றும், இலவச அழைப்பு எண் 1930-ஐ தொடர்பு கொண்டு தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்ஆப் அல்லது முகநூல் மெசெஞ்ஜர் மூலமாக விடியோ கால் வந்தால் அதனை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. காரணம், சில நபர்கள், இந்த விடியோ கால் மூலம் அழைப்பு விடுப்பார்கள். மோசடியாளர்கள், ஒரு பெண்ணின் ஆடையில்லாத் புகைப்படத்துடன் அழைப்பு விடுத்து அதனை ரெக்கார்டிங் செய்து கொண்டு, போனை எடுத்தவருக்கு மிரட்டல் விடுப்பார்கள்.

அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்த விடியோவை அனுப்பிவிடுவோம் என்று மிரட்டுவார்கள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்டு மிரட்டுவார்களே தவிர, அவர்கள் பணம் கொடுத்ததும் உங்களை விட்டுவிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம் என்கிறார்கள் காவல்துறையினர்.

இதுபோல விதவிதமாக கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மிரட்டல் விடுப்பார்கள். ஒரு சிலர் முதலில் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு பிறகும் மிரட்டல் வரும்போதுதான் சைபர் காவல்துறையை நாடுகிறார்கள். எனவே, இதுபோன்ற மோசடிகளில் சிக்கினால் பயப்பட வேண்டாம், உடனடியாக புகார் கொடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.


தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் -  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் -  மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்  Empty Re: தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் - மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா வைரஸ்: அடுத்த 8 நாட்கள் மிக முக்கியமானது; மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க முதல்-மந்திரி அறிவுறுத்தல்
» அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிரான வன்முறை: காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து இழுத்துச் சென்ற கும்பல்
» எஸ்.எம்.எஸ் மூலம் மோசடி-நைஜீரியக் கும்பல் மீது குவியும் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum